Jump to content

விஷ ஊஷி விவகாரம்; வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல்


Recommended Posts

விஷ ஊஷி விவகாரம்; வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல்

 

விஷ ஊஷி விவகாரம்; வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல்

 

விஷ ஊஷி விவகாரம் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊஷி ஏற்றப்பட்டதாக சிலர் கூறுவது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் தாம் பிரபல்யம் அடைவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக வேறு சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சர்வதேச வைத்தியர்கள் குழு அவசியம் என்று கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டுள்ள போதிலும் சில் அவற்றை இன்னும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

http://tamil.adaderana.lk/news.php?nid=83065&mode=lead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விச ஊசி பரிசோதனை வேண்டாம் என்று கூறும் வடமாகாண சபை உறுப்பினர்கள் புல்லுருவிகள் - அடிவருடிகள் - தெரு நாய்கள் - கேடுகெட்ட மிருக ஜென்மங்கள் -  சிங்கள அரசின் கைப்பொம்மைகள்.  போராளிகளுக்கு பரிசோதனை நடத்துவதுவதால் பலரது சந்தேகங்கள் தீர வாய்ப்புள்ளதே தவிர இவர்களுக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு வில்லன்களும் எங்களுக்கையே இருக்கிறாங்கள்...பிறகேன் சிங்களவனை நோவான்...:(

Link to comment
Share on other sites

விசஊசியும் .....வில்லங்கமும்!!!

 
EX-ltte.jpg
 

காலத்துக்கு காலம் ; கிழமைக்கு கிழமை ஏதோ ஒரு "விசயம்" பரபரப்பாய் பேசப்படவேண்டும்.அப்படி பேசப்படும் அல்லது கிழறப்படும் விடயங்கள் அண்மையகாலமாக அதிகரித்துவிட்டது.

அப்படி பரபரப்பாய் கிழறப்பட்ட; அல்லது கிழறப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியவிடயம் தான் “விச ஊசி”.
 
உண்மையில் “விச ஊசி” ஏற்றப்பட்டதா? என்ற மர்மகேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறது.ஆனால் இந்த விடயத்தினை கிழறிக்கொண்டிருக்கும் சிலருக்கு “விசர் ஊசி”ஏற்றப்பட்டிருப்பது தெளிவாகத்தெரிகிறது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர்; பல ஆயிரம் விடுதலைப்புலிகளின் போராளிகள் சரணடைந்தார்கள்.
அதில் பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டுவிடார்கள்.
புனர்வாழ்வில் பலர் சித்திரவதைக்கு உள்ளானார்கள் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என சுதந்திரமான சர்வதேச ஆய்வுகள்(International independent research) கூறுகின்றன.

"Freedom of Torture" என்ற சர்வதேச ஆய்வு மையம் தனது ஆய்வுகளின் முடிவின் இறுதியில் பல உண்மைகளை “புட்டுப்புட்டு”
வைத்திருக்கிறது. சுமார் 350 பணியாளர்களின் உதவியோடு இயங்கும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது.


அந்த தொண்டு நிறுவனத்தின் ஆவணங்களை இந்த இணைப்பில் பாருங்கள்.

https://www.freedomfromtorture.org/sites/default/files/documents/update_on_post_conflict_torture_may_2016.pdf

லண்டனைத்தளமாகக்கொண்டியங்கும் இந்த அமைப்பின் இணையத்தில்
2009 இல் இருந்து இன்றுவரை சிறிலங்காவில் நிகழ்ந்த பல “துன்புறுத்தல் சம்பவங்களை” பட்டியலிட்டுள்ளது.

2009 இல் இருந்து 2016 வரை சுமார் 1750 துன்புறுத்தல் முறைப்பாடுகளை அந்த அமைப்பு பெற்றுக்கொண்டிருக்கிறது.அவற்றில் சுமார் 148 பேரை தெரிவுசெய்து;
“Tainted Peace" என்ற தலைப்பில் ஒரு ஆழமான ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

அதன் இணைப்பு இங்கே:
https://www.freedomfromtorture.org/features/8481

2009 இல் இருந்து 2015 வரை சுமார் 250 பேருக்கு சட்டபூர்வமான மருத்துவவியல் பரிசோதனையையும்( Medico-Legal Reports-MLRs) செய்துள்ளார்கள்.

எந்த ஒரு இடத்திலும் அவர்கள் இந்த “விச ஊசி” “விச உணவு” பற்றிய வாக்குமூலங்களை சித்திரவதைக்கு உள்ளானவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லவில்லை.

அதன் முழுவிபரங்களையும் அவர்களின் இணையத்தில் பார்வையிடலாம்.

இனி முக்கியவிடயத்துக்கு வருவோம்.

அண்மைய காலமாக விடுதலைப்புலிகளின் போராளிகளின் மரணத்தில் “சந்தேகம்” எழுந்துள்ளது. இந்த சந்தேகம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணிப்பொறுப்பாளர் தமிழினியின் மரணத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழினி “புற்றுநோயால்” இறக்கவில்லை அவருக்கு “விச ஊசி” அல்லது “தொற்றுநோய் கிருமி” ஏற்றப்பட்டிருக்கலாம் என ஒரு சிலர் ”புரளியை”கிளப்பிவிட்டார்கள். அது புரளியா? அல்லது உண்மையா ? என கண்டுபிடிப்பதற்குள் தொடர்சியான போராளிகளின் மரணம் அந்த விடயத்தினை இன்னும் பேசுபொருளாக்கி முக்கிய விவகாரமாக்கியது.

சுமார் 20 வருடங்களாக பல யுத்தங்களில் காயமடைந்து விழுப்புண்களை சுமந்த தமிழினி 2009 இல் புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்படார். அதன் பின் ஒரு சில வருடங்களில் வெளியில் வந்த அவர் 2014இல் நோயாளியாக அவதிப்பட்டார். 2015 இல் புற்றுநோய் கண்டறியப்பட்டு இறந்துபோனார்.

இவர் பல மருத்துவ பரிசோதனைகளை இலங்கையின் பல வைத்தியசாலைகளில் சிங்கள,தமிழ் மருத்துவர்களிடம் செய்துள்ளார். 
தமிழினியின் மரணம் புற்றுநோய்தான் என மருத்துவச்சான்றிதழ் சொல்கிறது.அது போலியானது என்பது ஒரு சிலரின் சந்தேகம்.
சரி அது போலியான மருத்துவச்சான்றிதழாக கூட இருக்கட்டும்.

 ஆனால் தமிழினி உயிரோடு இருந்தபோது புலம்பெயர் தேசத்தில் பலரோடு பேசி இருந்தார். இந்த “விச ஊசி” பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை .
அப்படிப்பேசியிருந்தால் இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழம்பியிருக்கும்.

தமிழினியின் மரணத்துக்கு முன்னும் பின்னும்  பிறகு சுமார் 100இக்கும் அதிகமான  போராளிகள்  நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்கள். அதாவது சுமார் 6 வருடங்களில் இந்தச்சாவுகள் உத்தியோகபூர்வமற்றதாக சுமார் 100 ஆக இருக்கலாம் எனச்சொல்லப்படுகிறது.

அதாவது சுமார் 20 பேர் ஒரு வருடத்தில் இறந்திருக்கலாம் என்பது எடுகோள்.
இந்தச்சாவு வீதம் என்பது 2009 இக்கு பின்னராக போரினால் காயமடைந்து ; அந்த விழுப்புண்களின் காரணமாக சாவடைந்த சாதாரண பொதுமக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிகக்குறைவானது.

அதற்கும் மேல் விளக்கமாக சொல்வதானால்;
2009 இக்கு முன்னர் விடுதலைப்புலிகளில் இருந்த போராளிகளில் சண்டையில் “விழுப்புண்” அடைந்து அதன் காரணமாக சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகமானது.குண்டுச்சன்னங்கள் தலைகளில் ஏறி அல்லது வயிற்றில் ஏறி அதை சத்திரசிகிச்சை செய்து எடுக்கமுடியாத நிலையில் ஏற்புத்தாவி சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகம்.

இறுதிப்போரில் “பொஸ்பரஸ் குண்டுகள்” மற்றும் “இரசாயண ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சில ஆதாரங்களும் இனங்காணப்பட்டுள்ளன. சிறிலங்கா இதை மறுத்தாலும்; அப்படியான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கடைசி யுத்தத்தில் பாவிக்கப்பட்டிருப்பதற்கான ஆதரங்கள் உள்ளதாக சுதந்திர சர்வதேச அமைப்புகள் ( Independent international agencies) தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு இந்த “இரசாயண குண்டுகளின்” தாக்கம் நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அந்த “இரசாயண குண்டுகளின்” துண்டுகள்( piece) அவர்களின் உடம்பில் இருந்தால் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

பல  போராளிகள் இந்த நோய் அறிகுறிகள் இருந்தால்; அதற்கான பரிசோதனையை செய்தும் சத்திர சிகிச்சை செய்தும் பூரண குணம் அடைந்து தங்களின் இயல்பு வாழ்க்கையினை வாழ்கிறார்கள்.

ஒரு சில  போராளிகள் இப்போதும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான பிரத்தியேக சிகிச்சை ( specialist treatment) செய்தால் அவர்களும் பூரண குணமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

 போராளிகளின் நோய்கள் பெரும்பாலும் உடல் ரீதியானதாக(physical) இருப்பதை விட மனரீதியான அழுத்தங்கள்தான் (Mental Depression) அதிகமாக காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன.
உடல் ரீதியாக சிறு காயங்களுக்கு உட்பட்ட அவர்களை மன அழுத்தங்கள் மேலும் கடும் நோயாளிகள் ஆக்குகின்றன.

போரின் பின்னரான புனர்வாழ்வு காலத்தில்   போராளிகளுக்கான  மன அழுத்த சிகிச்சையோ( psychological Treatment) அல்லது ஆற்றுப்படுத்தல்களோ
( counselling) போதியளவு வழங்கப்படவில்லை. போதியளவு என்று சொல்வதை விட “முற்றாக வழங்கப்படவில்லை” என்றுக்கூடச்சொல்லலாம்.

பல இன்னல்களையும் சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும்(Trauma and torture)  மன அழுத்தங்களையும் தாண்டி வந்த இவர்களை முறையான பராமரிப்பு செய்ய தவறிவிட்ட குற்றத்தினை செய்த தரப்பாக;

1. இலங்கை அரசாங்கம்
2.தமிழ் அரசியல் தலைமைகள்
3.புலம்பெயர் சமூகம்

இருக்கின்றன.

இதில் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்த நிலைதான் இன்றும் காணப்படுகிறது. ஏனெனில் போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக சொல்லும் அவர்கள் போரின் பின்னரான நடவடிக்கைகள் இப்போதும் ”விமர்சனத்துக்கும் விசாரணைக்கும்” உட்பட்டவையாக காணப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட போராளிகளை யார் கவனிப்பது? அல்லது அவர்களில் யார்  அக்கறை காடுவது? என்ற கேள்விக்கான விடைக்கு இரண்டு பதில்கள் முக்கியமானவை.

புலம்பெயர் சமூகமும்; தமிழ் அரசியல் தலைமைகளும் நிச்சயமாக இந்த விடயத்தில் முக்கிய கவனமெடுத்து செயற்படவேண்டும்.

”விச ஊசி” அல்லது “ விச உணவு” என்ற சொற்பதங்கள் மிகவும் கூரிய வார்த்தைகள்(sensitive words). இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
சொல்லிவிட்டு கடந்துபோய் வேறு வேலையைப்பார்க்கும் சாதாரண பிரச்சினை அல்ல. இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட விடயம்( sensitive issue).பல ஆயிரம் உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம். பல ஆயிரம் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

சில நுண்ணிய விவகாரங்களை கையாளும் விதம் எப்படி? என்று தெரியாத ஒரு சிலரின் கைகளில் இந்த விடயம் போய்ச்சேர்ந்து இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அவர்களில் முக்கியமானவர்கள்.....

1.சுயலாப அரசியல்வாதிகள்
2.அநாமதேய தமிழ் இணையங்கள்
3.சமூக வலைப்பதிவர்கள்

சுயலாப அரசியல்வாதிகளின் கைகளில் இந்த விடயம் போய்ச்சேர்ந்ததால்...

 
  • போராளிகளின் வேதனைகளை தாங்கள் பங்கு போடுகிறோம் என்றும்;
  • அவர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம் என்றும் “பப்படா” காட்டி;

 அரசியலில் தமது இருப்பை தக்கவைக்க இதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்திறார்கள்.

மக்களின் நன்மதிப்பை பெற்று தங்களின் வாக்கு வங்கியை குறையவிடாமல் பாதுகாக்க இதுவும் ஒரு வழியாக பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து;
அநாமதேய தமிழ் இணையங்கள் நடாத்தும் ஒரு சில “தமிழ் தேசியவாதிகள்”
தங்களின் “இணைய வியாபாரத்துக்கு” அல்லது “இணையப்பிரபலத்துக்கு” இந்த விடயத்தினை பயன்படுத்துகிறார்கள்.

சும்மா கிடக்கும் கல்லுக்கு ”பொட்டும் பூவும்” வைச்சு அதுக்கு பால் ஊற்றி; கும்பாபிசேகம் செய்யும் வல்லமை இந்த முதலெழுத்து இல்லாத அநாமதேய தமிழ் இணையங்களுக்கு “கைவந்த கலை”.

இவர்களுக்கு இந்தச்செய்தி “காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த “ நிலை.



அடுத்து “சமூக வலைப்பதிவர்கள்”.

இவர்களில் பலர் ஈயடிச்சான் “copy and paste"  வகையறாக்கள்தான் அதிகம்.
10$ அநாமதேய இணையத்தளங்களை மேயும் இவர்கள் அந்த செய்திகளை அப்படியே பகிர்வார்கள் அல்லது அதில் இருந்து கொஞ்சம் பொறுக்கி அதை நறுக்கி ஒரு பதிவாக பகிர்ந்து அதற்கு கிடைக்கும் “like and comments" இல் ;
குதூகலம் அடைவார்கள்.


ஆக; உற்றுநோக்கிப்பார்த்தால் விச(ர்) ஊசி ஏற்றப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட மூன்று பகுதியினருக்குத்தான் என்பது தெட்டத்தெளிவு.
  • ஒரு செய்தியின் பின்னணி ( Background) 
  • ஒரு செய்தியின் அடிப்படை(Basic)
  • ஒரு செய்தியின் தொடர்ச்சி(follow up)

    இவை பற்றிய தேடலும் அறிவும் ( Research and knowledge)  இல்லாத ஆர்வக்கோளாறு உடையவர்கள் செய்திகளை எழுதுகிறார்கள் என்று சொல்வதை விட உருவாக்குகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    பொறுப்புக்கூறும் வல்லமை இல்லாத தமிழ்  ஊடகங்கள் ஒருசிலவற்றின் ஆர்வக்கோளாறின் காரணமாகவே இந்த “விச ஊசி “ விவகாரம் ஊதிப்பெருப்பிக்கப்படுகிறது.

    நாளை இந்த ‘விச ஊசி” விவகாரத்தை மறந்து வேறு ஒரு விடயத்தைப்பற்றி பரபரப்பாக பேசத்தொடங்கிவிடுவார்கள்.

புலம்பெயர் தேசத்தில் இருக்கும் ஒருசில அதிதீவிர "ஆர்வக்கோளாறுகள்" எப்போதும் உணர்வுகளின் அடிப்படையில் இயங்குவதற்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டிய தருணங்களில் கூட
 " உணர்ச்சிக்கொந்தளிப்பு" தான் அவர்களை இயக்கும். இப்படியானவர்களின் கைகளில் இந்த விடயம் இப்போது "குரங்கு கையில் பூமாலையாக" சிக்கி சின்னாபின்னமாகிறது.

 
 
2009 இக்கு முன்னரும் பின்னரும் பல ஆயிரம் போராளிகள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளானவர்கள்.
 
உதாரணத்துக்கு அவுஸ்திரேலியாவுக்கு உள் நுழையும் போது நிச்சயமாக அவர்களின் இரத்தம் முழுமையான பரிசோதனைக்கு( FBC- full blood count) உட்படுத்தப்படும். அவர்களின் குருதியில் ஏதாவது வித்தியாசம் இருந்தால்
அப்படியான பரிசோதனையில் நிச்சயம் தெரியவந்திருக்கும்.

 ஒரு சிலருக்கு குண்டுத்துகள்கள்( piece) அவர்களின் தலை நெஞ்சுப்பகுதியில் இருந்தது. தலைசுற்று, மயக்கம், களைப்பு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு அதிகமாக வந்த போது அவர்களுக்கு "சத்திரசிகிச்சை" செய்யப்பட்டது. இப்போது அவர்கள் பூரண சுகமாக இருக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் விழுப்புண் அடைந்த  போராளிகள் பலருக்கு தகுந்த சிறப்பு சிகிச்சை( special treatments) இன்னமும் அளிக்கப்படவில்லை. அப்படி  தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டால் அவர்களும் பூரண சுகம் அடைந்து தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விழுப்புண் அடைந்த போராளிகள் பலர் சிகிச்சைபெற்று மிகவும் ஆரோக்கியத்துடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று சந்தோசமாக வாழ்கிறார்கள்.

எனவே
போராளிகளே...!!!
 
  • இப்படியான “விச ஊசி” “விச உணவு” செய்திகளைக்கேட்டு மனதளவில் பாதிப்படையதேவையில்லை.
  • பல வலிகளை தாங்கிய உங்களுக்கு இது ஒரு பெரிய விடயம் அல்ல; இருந்தாலும் இது பற்றிய தெளிவும் மனத்தைரியமும் உங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும்.
  • உங்களது உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள மருத்துமனைக்குச்சென்று பூரண பரிசோதனை (full blood count and medical check up) செய்யுங்கள்.
  • உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அயலவர்களுக்கும் முடிந்தளவு தெளிவுபடுத்துங்கள்.
  • உங்களுடைய நண்பர்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் இருக்கிறார்கள்.உங்களோடு புனர்வாழ்வு மையங்களில் வலிகளை சேர்ந்து அனுபவித்தவர்கள் அவர்கள். அவர்களை அந்தந்த நாடுகளில் மருத்துவ பரிசோதனை செய்து “உண்மை” என்னவென்று வெளியுலகத்துக்கு சொல்லச்சொல்லுங்கள்.
 
 போராளிகளின் பெற்றோர்களே... உறவினர்களே!!!
  • பல ஆண்டுகளாக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து ; பல வேதனைகளையும் வலிகளையும் தாங்கிக்கொண்டு வாழும் உங்களின் பிள்ளைகள்/உறவுகளிற்கு உறுதுணையாக இருங்கள்.
  • அவர்கள் அனுபவித்த வலிகளை தங்களுக்குள்ளே மூடி வைத்து;உங்களுக்காக வாழும் அவர்களுக்கு மனத்தைரியமும் ஆதரவும் கொடுக்கவேண்டியது உங்களின் கடமை.
  • உங்களால் முடிந்த அளவு அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுங்கள்.
  • மனவழுத்தம் தான் பல நோய்களுக்கான முக்கிய காரணி. இந்த மன அழுத்தத்தினை குறைக்கும் வழிகளை கண்டறிந்து அவர்களிற்கு மனத்தைரியத்தினை கொடுங்கள்.
  • எல்லா வழிகளிலும் அவர்களுக்கு  ஆதரவாக இருங்கள்.
 


இறுதியாக;


கிட்டத்தட்ட 15000 முன்னாள் போராளிகளின் எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கி ; அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் வைத்துத்தான் சர்வதேச சமூகத்துக்கு எமக்கு நிகழ்ந்த கொடுமைகளை உறுதியாக சொல்ல முடியும் எனும் கட்டாயம் இங்கு இல்லை.

அதற்காக அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அநீதிகளுக்கும்  அவர்கள் பற்றிய பிரச்சினைகளை பேசாமல் எப்படி தீர்வு கிடைக்கும்? என்ற கேள்வி எழலாம்.
நியாயமான கேள்விதான்.

ஆனால் ஒரு விடயத்தினை நினைவில் வைத்துக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்.

தங்களின் வாழ்க்கையின் பாதியை தொலைத்துவிட்டு; உடலாலும் மனதாலும் பல வலிகளின் வடுக்களை சுமந்து ...
ஏதோ ஒரு வாழும் நம்பிக்கையில்...
அம்மா...அப்பா...கணவன்...மனைவி...பிள்ளைகள் என ஒரு புதிய உலகத்தில்..
வாழ ஆசைப்படும் அவர்களின் மிகுதி வாழ் நாட்களை கேள்விக்குறியாக்காதீர்கள்.

சில விடயங்களை எப்படி கையாளவேண்டும் ? எப்படி கையாளக்கூடாது? என்பதற்கு இந்த “விச ஊசி” விவகாரம் மிக நல்ல உதாரணம்.நாளை ஒரு சுதந்திர மருத்துவ பரிசோதனை (independent international medical test) செய்யப்பட்டு இந்த விவகாரம் “பொய்” என நிரூபிக்கப்பட்டால்;விடுதலைப்புலி போராளிகளின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மை(credibility) கேள்விக்குறியாக்கப்படும்.

சரி உண்மையாகவே அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பின் ; புலம்பெயர் தேசங்களில் வாழும்  போராளிகள் ஒன்றிணைந்து ஒரு மருத்துவ பரிசோதனையை செய்து முறையாக வெளிக்கொணர்ந்து இருக்கலாம். அந்தப்பரிசோதனை நம்பத்தகுந்ததாக அமைந்திருக்கும்.

இதுவரை ...

புலம்பெயர் தேசத்தில் உள்ள  போராளிகள் ஒரு வாய்கூடத்திறக்காமல்  மெளனமாக இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்????

பல மருத்துவ பரிசோதனைகளை அவர்கள் வாழும் புலம்பெயர் நாட்டில் கட்டாயம் செய்திருப்பார்கள். அப்படியொரு வித்தியாசமான நோய்த்தாக்கம்  கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நாட்டு மருத்துவ திணைக்களம் நிச்சயம் அதை அவர்களுக்கு சொல்லியிருக்கும்.
அப்படி நிகழ்ந்ததாய் இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
இந்த “விச ஊசி” செய்தியின்    பின்னர் ;
புலம்பெயர் தேசத்தில் இருக்கும்  ஒரு சில  போராளிகள் தங்களை பூரண பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை யாருக்கும் இப்படியான “விச ஊசித்தாக்கம்” கண்டுபிடிக்கப்படவில்லை.
 
மேலும் இந்த “விச ஊசி”  செய்தியால் ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கிறது.யாரும் கவனிப்பாரற்றுக்கிடந்த போராளிகளின் பக்கம் எல்லோரினதும் கவனம் திரும்பியுள்ளது. ”மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அக்கறையோடு  பலர் போராளிகளைப்பார்த்து கேட்கிறார்கள்.நிச்சயமாக அவர்கள் பூரண மருத்துவ பரிசோதனை செய்வதினால்; அவர்களுக்கு ஏதாவது நோய்கள் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.அதற்கான சிகிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதனால் பல போராளிகளின் நாட்பட்ட நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு பூரண சுகம் அடைய வாய்ப்புகள் உருவாகும்.


 
எம் இனத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளை நிரூபிக்க ...
ஆயிரம் வழிகள் இருக்கிறது.
அதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் “அந்த சீவன்களின்” உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.


 
சொந்த அண்ணாவோ; தம்பியோ; தங்கச்சியோ; அக்காவோ...
கடைசிநேரம் பிடிபட்டு புனர்வாழ்வுக்குப்போய் திரும்பி வந்திருந்தா...
"விச ஊசி" " வன்புணர்வு" எண்டு கதைக்க மனம் வராது.
மனச்சாட்சியும் இடம் கொடுக்காது!!!!
இதை நான் சொல்லவில்லை...
ஊரில இருக்கும் தம்பி ஒருத்தன் சொன்னான்.

அப்படியானால் இசைப்பிரியா, கிருசாந்தி இவர்களுக்கு நிகழ்ந்த கொடுமையை பேசக்கூடாதா? என்ற கேள்வி எழலாம்.
பேசுங்கள்......
ஆனால் பேச முதல்...
இந்த  கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்த பின்;
அவர்கள்  உலகின் ஒரு மூலையில்   உயிரோடு இருக்கிறார்கள்  என வைத்துக்கொண்டால்..
எப்படி பேசுவீர்களோ...
அப்படிப்பேசுங்கள்!!!


 
 
"இசைப்பிரியா" ஒரு நொடியில் இறந்தாள்!
அவளைப்பெற்றவர்கள் ...
உயிரோடு இருக்கும்
ஒவ்வொரு கணமும்
இறக்கிறார்கள்!!!
 
 

போராளிகள் மன ரீதியாக இன்னும் வலிமையோடுதான் இருக்கிறார்கள் என்பது உண்மை.

மற்றவர்களுக்காக போராடியவர்கள்...
இப்போது தங்களின் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள்.
சாகும் வரை அவர்களின் வாழ்வு போராட்டமே!!!


எமக்காக எவ்வளவோ செய்தவர்கள்... காலம் வரும் போது தங்களின் மெளனம் கலைத்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை துணிவோடு சொல்வார்கள். அதுவரை பொறுத்திருங்கள்.

“உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. உபத்திரவம் செய்யாதீர்கள்”
 
போதும் இனியாவது அவர்களை “ துகிலுரியாது” இருப்போம்.





 #தமிழ்ப்பொடியன்©

http://tamilpodiyan.blogspot.ca/






















 

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டான் சுடப்புறப்பட்டு கோவணத்துக்குள் சுட்டுக்கொண்ட கதையா இதை மாத்திட்டீங்க தமிழ் பையன்களா. மொத்தத்திலை விச ஊசிபரிசோதனையே வேணாம் என்று சொல்றீங்களா. இதைவிட முக்கியமா அரசியல்வாதிகள் இதைவச்சு தலையெடுக்கப்படாது எண்டும் சொல்றீங்க அது இங்க முக்கியமில்லை. ஒரு மாகாணசபையின் முடிவு மக்களின் முடிவு. தமிழன் பிரச்சினையை தீர்க்க மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான எத்தனை போராளிகளை நீங்கள் புலம்பெயர் நாடுகளில் பார்த்தீர்கள். நாட்டில் எத்தனை சுயாதீன வெளிநாட்டு அமைப்புகள் போராளிகளின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்க முயற்சிசெய்திருக்கின்றன. ஏன் அவற்றை மாகாணசபை உதவிக்கு அழைக்கவில்லை?

உடனடியாக பரிசோதனையை தொடங்குவதுதான் இதற்கு முடிவு. விசஊசி விடயம்  பரிசோதனைகளிலிருந்து சீக்கிரமாக உண்மையானது என்று கண்டறியப்பட்டால்  தகுந்த  சிகிச்சை வழங்கப்பட்டு எத்தனையோ போராளிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ற பாலிசிக்கு நான் உடன்பாடு கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப் பட்டவர்கள் தானே... விஷ ஊசி பரிசோதனை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டும்?
இதில் சில வட மாகாண சபை உறுப்பினர்கள், வேண்டாம் என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை.
இப்படியே.... பேசி காலம் கடத்தினால், விஷ ஊசி ஏற்றப்பட்டவர்களை, காப்பாற்ற முடியாமல் போகும்.

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதட்காகமருத்துவத்தில்  ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் கொண்ட 10  பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு குழுவின் ஆலோசனைக்கு அமைய செப்டெம்பர் 1ம் திகதி பரிசோதனை ஆரம்பிக்கப்படும் யாழ் மாவடடத்தில் மூன்று இடங்களிலும் ,(யாழ் ,தெல்லிப்பளை ,பருத்தித்துறை )கிளிநொச்சி ,முல்லைத்திவு ,மன்னார் ,வவுனியா மாவடட வைத்தியசாலைகளிலும் இடம்பெறும் .சகல தரவுகளும் கணனியில் சேகரிக்கப்படும் .

வடமாகாண சுகாதார அமைச்சர் தற்போது கனடாவிறகு வருகை தந்துள்ளார் .இவருடனான நேரடி கலந்துரையாடலில் தெரிவித்தார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gari said:

முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதட்காகமருத்துவத்தில்  ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் கொண்ட 10  பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு குழுவின் ஆலோசனைக்கு அமைய செப்டெம்பர் 1ம் திகதி பரிசோதனை ஆரம்பிக்கப்படும் யாழ் மாவடடத்தில் மூன்று இடங்களிலும் ,(யாழ் ,தெல்லிப்பளை ,பருத்தித்துறை )கிளிநொச்சி ,முல்லைத்திவு ,மன்னார் ,வவுனியா மாவடட வைத்தியசாலைகளிலும் இடம்பெறும் .சகல தரவுகளும் கணனியில் சேகரிக்கப்படும் .

வடமாகாண சுகாதார அமைச்சர் தற்போது கனடாவிறகு வருகை தந்துள்ளார் .இவருடனான நேரடி கலந்துரையாடலில் தெரிவித்தார் .

அப்புறம் ????????? 

Link to comment
Share on other sites

உவ்வளவு சித்திரவதை செய்தவர்கள் ஊசி மட்டும் ஏற்ற மாட்டார்கள் என்பதை ஏற்க முடியாது.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

அப்புறம் ????????? 

குதர்க்க வாதிகளுக்கு எப்படி சொன்னாலும் ??????????????????????????????????????????????????

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

உவ்வளவு சித்திரவதை செய்தவர்கள் ஊசி மட்டும் ஏற்ற மாட்டார்கள் என்பதை ஏற்க முடியாது.

ஊசி ஏற்ற வில்லை என்று எவரும் சொல்லவில்லை ?இதை நிரூபிக்க வேண்டும் .யாழ் மருத்துவ சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவரோடு கதைத்தபோது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடட முன்னாள்பெண்  போராளி சொன்னதாக தன்னுடன்  சரணடைந்த  1800 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்ததாகவும் அதில் தான் அறிய 3  பேர் இறந்ததாக வும் சொன்னார் .

விடுதலை செய்யப்பட்டு நீண்டநாட்களாகியும் ஏன் இதை தற்போது சொல்லவேண்டி நிலை ?

புனர் வாழ்வு அளிக்கப்படட பலர் வெளிநாடுகளிலும் உள்ளார்கள் ,இதில் அக்கறையுள்ளவர்கள் ஏன் அவர்களை ஒன்று சேர்த்து மருத்துவ பரிசோதனை செய்யலாம் தானே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.