Jump to content

சந்ததி


Recommended Posts

வீடு புதிதாகக் கட்டுப்படுகையில், குடிபூரல் நிகழுமுன்னர் அதற்குள் தச்சுப்பேய் இருக்கும் என்பது முடிந்த முடிபாக ஊரிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தச்சுப் பேயைப் பார்த்தவர்கள் சாட்சியம் கூற இருந்ததனால் நம்பிக்கைத் தன்மையில் சந்தேகம் ஒட்டவில்லை. விதிகளிற்கு ஏற்ப வாழும் கிராமம் பேயை உரச விரும்பவில்லை — ஒரு சிறுவனையும் அவன் தம்பியையும் தவிர. அவ்விரு சிறுவர்களிற்கும் பேயைப் பார்த்துப் பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வம் தாங்க முடியவில்லை. அப்போது அவர்களில் மூத்தவனிற்கு ஒன்பது வயதும் இளையவனிற்கு ஏழு வயதும் ஆகியிருந்தது. ஒரு இரவினைத் தங்கள் நடவடிக்கைக்குக் தேர்ந்தெடுத்தார்கள். மூத்தவன் ஒரு இரும்புக் கம்பியினை எடுத்துக் கொண்டான். இரண்டாமவன் குசினியில் இருந்து காய்கறி நறுக்கும் கத்தியினை எடுத்துக் கொண்டான். அன்றிரவு, நான்கு காணிகள் தாண்டிப் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டிற்குள் தமது வீட்டாரிற்குத் தெரியாது சென்று தச்சுப் பேயினைப் பார்த்து வருவதே அவர்களின் திட்டம். 

காலை இப்போது தான் வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. இருவரும் கட்டிலில் கிடந்தபடி ஒருவரை ஒருவர் சலிப்போடு பார்த்துக்கொண்டனர். எத்தனை சிரமப்பட்டு அவர்கள் முந்தைய இரவில் தமது நடவடிக்கையினைப் பிசிறின்றி நடத்தி முடித்திருந்தும் பேட்டி கிடைக்கவில்லை. பேய் அங்கு இருக்கவில்லை. 

யாரோ கேற்றில் நின்று சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் ஆளையாள் தள்ளி விழுத்தியபடி எழுந்து ஓடினார்கள். சித்தியின் மாமனார் வந்திருந்தார். 

எழுபது வயதிருக்கும். உயர்ந்த இறுகிய தேகம். வெள்ளைக்காரனிற்குச் சற்றுக் குறைவான நிறம். வெள்ளை நிறத்தில் தலை நிறைய முடி. வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் போட்டிருந்தார். அவரது உருவம் எப்போதும் அவரை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்தவராகவே சிறுவர்கள் மனதில் பதித்து வைத்திருந்தது. அன்று சனிக்கிழமை என்பதனால் பள்ளியில்லை. கிழவர் என்ன கதைத்தாலும் கதைசொல்வது போலிருக்கும் என்பதால் அண்ணனும் தம்பியும் தமது அறைக் கதவருகில் அமர்ந்துகொண்டார்கள். அம்மா தேனீர் கொண்டு வந்தார். கிழவர் நேற்றைய இரவில் தனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தோடு சம்பாசனையினை ஆரம்பித்தார்.

         "விடியப்பறம் ரெண்டு மணியிருக்கும். கிணத்தில இருந்து தண்ணியெடுத்துக்கொண்டு, மற்றக் கையில ரோச் லைற்ரோட லற்றுக்குப் போனன். ஒரு குட்டி வெள்ளையாடு துள்ளி ஓடி வந்திச்சு.        எங்கிளட்டையோ அயலிலையோ இப்பிடி ஆடு ஒண்டும் இல்லையே எண்டு நான் நினைச்சுக்கொண்டு நிக்க, ஆட்டுக்குட்டி முன்னால நிண்டு ரெண்டு தரம் துள்ளிப்போட்டு என்னக் கூப்பிடுமாப்போல ரெண்டடி  முன்னால போய் நிண்டு பேந்தும் ரெண்டு தரம் என்னைப் பாத்துத் துள்ளிச்சு. எனக்குவேற அவசரமாப் போகவேண்டி இருந்ததால, நானும் போனன். ஆட்டுக்குட்டி கொஞ்சம் நடந்திச்சு பிறகு கொஞ்சம் ஓடி  ஒரு பத்தடி தூரம் போனோண்ண திடீரெண்டு ஒரு கிழவியா மாறிச் சிரிச்சுப்போட்டு மறைஞ்சிற்று.

 அங்கால நிண்ட அந்த வேம்பைத் தறிக்கோணும் எண்டு நெடுக நினைக்கிறது பிறகு விட்டிடுறது, ஆனால் இனி விடேலாது. அதில தான் உவையின்ர இருப்பு. அது தான் தறிக்கிறதுக்கு ஆள் ஒழுங்கு பண்ண  வெள்ளணவா வந்தாப்போல இதால உங்களையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தனான்"

சிறுவர்கள் அம்மாவின் முகத்தைப் பார்த்தார்கள். அம்மா மரியாதைக்காக முறுவலிப்பது போலிருந்ததே அன்றிக் கதையினை அவர் நம்பியதாகவோ கதையில் ஈடுபாடுகாட்டியதாகவோ சிறுவர்களிற்குத் தோன்றவில்லை. கிழவர் சிறுவர்களை அப்போது தான் பார்த்தவராக, தம்பியவை எழும்பீற்றியளே, ஓடிப்போங்கோ போய் முகத்தைக் கழுவுங்கோ என்றார்.

——

நகரத்தில் ஒரு தேனீர்க்கடை. வெள்ளைப் ஜீன்சும் வெள்ளைச் சேட்டும் போட்ட ஒரு ஒரு உயர்தர மாணவன் தேனீர்க்கடைக்குள் இருந்து தேனீர்பருகுகிறான். அடர்ந்த கேசம். கருத்த நிறம். உயர்ந்த தேகம். கூர்மையான விழிகள். கிளி மூக்கு. வசீகரமான புன்னகை. அவன் நினைத்தால் எந்த மாணவியையும் காதலியாக்கக் கூடிய தோற்றம். தேனீர் பருகிவிட்டு வெளியே வருகிறான். சைக்கிளை ஸ்ராண்டில் இருந்து எடுத்துத் தன்னில் சாய்த்து வைத்தபடி, லேஞ்சியினை எடுத்து முகத்தை அழுத்தித் துடைக்கிறான். ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டு விட்டு பையினைச் சைக்கிள் ஹான்டிலில் கொழுவிவிட்டுப் பையின் zipப்பைத் திறந்து விடுகிறான். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே நின்றபடி எதிர்த் திசையில் இருந்த பேருந்துத் தரிப்பிடத்தைப் பார்த்தபடி நிற்கிறான். பின் எதையோ கண்டவனாக, அவதானமாக ரோட்டைக் கடந்து ரோட்டின் மறுபக்க்ததில் கடையெதிரே இருந்த பேருந்து தரிப்பிடத்திற்குச் சைக்கிளை உருட்டியபடி செல்கிறான். 

தரிப்பில் ஒரு நடுத்தர வயது மனிதர் நிற்கிறார். மண்ணிற பான்ற்ரும் மஞ்சள் சேட்டும் அணிந்திருக்கிறார். கையில் கறுத்த பை வைத்திருக்கிறார். சைக்கிளை உருட்டியபடி அவரருகில் வந்த மாணவன் நிதானமாக ஒரு கணம் நிற்கிறான். பின் தனது சைக்கிளின் ஹான்டிலில் கொழுவியிருந்த பையிற்குள் இருந்து ஒரு துப்பாக்கியினை எடுத்து அவரைச் சுடுகிறான். அவர் கண்கள் திறந்தபடியே விழுந்து இறந்து போகிறார். இளைஞன் மறுபடி தனது லேஞ்சியினை எடுத்துத் தனது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொள்கிறான். பின் நிதானமாக சைக்கிளில் ஏறி அகன்று செல்கிறான்.

——

நடு நிசி. இரு இளைஞர்கள் ஒரு முள்ளுக்கம்பி வேலியினை அறுத்து ஒரு காணிக்குள் கைகளால் தவண்டு செல்லுகிறார்கள். அது ஒரு பெரிய இராணுவ முகாம். அன்றைய பொழுதில் அந்த முகாம் எந்த ஆபத்தையும் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. சென்றிகள் நிற்கிறார்கள். பல்வேறுபட்ட வெளிச்சங்கள் காணிக்குள் அவ்பவ்போது தோன்றி மறைகின்றன. முள்ளுக் கம்பி வேலியறுத்து உள்வந்த இளைஞர்கள் தவழ்ந்தபடியே வந்து சமையலறைக்குள் நுழைகிறார்கள். பின் சில நாட்கள் கழிகின்றன. உட்சென்ற இளைஞர்கள் இராணுவத்தில் ஒருவராக, அவர்களுடனேயே உணவருந்தி எழும்பித் திரிகிறார்கள். பின் ஒரு இரவு. மீண்டும் தவழ்ந்தபடி முள்ளுக்கம்பி வேலி தாண்டி வெளியேறிச் செல்கிறார்கள்.

சில நாட்களில் அந்த இராணு முகாம் வெற்றிகரமாக அழித்தொழிக்கப்படுகிறது.

புலம்பெயர் தேசத்தின் தொழிற்சாலை ஒன்று. தமிழர்கள் வேலை செய்கிறார்கள். திடீரென்று பரபரப்பு. ஒரு தமிழ் தொழிலாளியின் கை இயந்திரத்தால் துண்டாடப்படுகிறது. 

ஒருவயது நிரம்பிய குழந்தை தத்தி நடந்து வந்து தூக்கச் சொல்கிறது. அவன் கண்களில் நீர் வழிகிறது. மனைவியை இரைந்து கத்திவிட்டு அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்கிறான். சில மணிநேரம் ஓடுகிறது. துண்டிக்கப்பட்ட கையில் எஞ்சியிருந்தபகுதியில் ஒரு பை தொங்க, அதற்குள் இரு போத்தல்கள் உரசும் ஒலியுடன் அவன் வீடு மீள்கிறான். ஒரு மணிநேரத்தில் மொத்தமும் காலியாக, கோடையின் சௌகரியத்தில் தொடர்மாடி பல்கனியில் நிறைபோதையில் முனகியபடி விழுந்து கிடக்கிறான்.

ஓராண்டு செல்கிறது. வைத்தியசாலையில் விருந்தினர் பகுதியில் காத்திருந்த உறவினரிடம் வைத்தியர் பக்குவமாக எடுத்துக் கூறுகிறார்: "சில நிமிடங்கள் முன்னர் அவர் உயிர் சிரமமின்றிப் பிரிந்துபோனது".

கனேடிய பல்கலைக்கழகமொன்றின் உணவுப் பகுதி. குழுக்குழுவாய் மாணவர்கள் உணவருந்தியபடி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உணவு மண்டபத்தில் நான்கு முதலாம் ஆண்டு தமிழ் மாணவிகள் தங்கள் குழுக்களோடு சகஜமாக உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உரையாடலில் இளமையின் சாதாரண விடயங்கள் மட்டுமே இப்போதைக்கு வந்துபோய்க்கொண்டிருகின்றன...

பஸ் தரிப்பில் இறந்த மனிதர், சுட்ட இளைஞன், சிறுவனாய் வீரமாய்த் தச்சுப் பேய் தேடிப் பின் கையிழந்ததால் போதையின் கையில் சிக்கி மாண்டு போன மனிதன், காய்கறி நறுக்கும் கத்தியோடு முன் தச்சுப் பேய் தேடிப் பின் வேவுப்புலியாகப் பேய்வீடு சென்றுவந்து முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனவன் கதைகள் அம்மண்டபத்தின்  நான்கு மாணவிகளிற்குள் தனித்தனியாக அவரவர் பிரதியாகப் பதிந்தே கிடக்கின்றன.

Link to comment
Share on other sites

சந்ததியை முதன்முறை வாசித்தேன். சித்திரக் கண்காட்சியில் 'மொடேண் றோயிங்' ...... பலர் ஆகா ஓகோ என்று ரசிக்க...! வர்ணக்கிறுக்கல் புரியாமல் குழம்பினாலும்....! பரிகசிப்பார்களே என்று ஆகா ஓகோ சொல்லியது ஞாபகம் வந்தது.:(

மறுமுறை கடைசிப் பந்தியை வாசித்துவிட்டு முதலிலிருந்து தொடங்கினேன். சந்ததி புரிந்தது! ரசித்தேன். :)

Link to comment
Share on other sites

நன்றி பான்ச்.

டஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் 'டீமன்ஸ்' என்ற நாவலைச் (1872ம் வருடம் பிரசுரிக்கப்பட்டது) சென்ற வாரம் வாசித்து முடித்தபோது, எமது முப்பது வருட காலத்திற்கும் அந்தக் கதைக்களத்திற்கும் இடையே ஏகப்பட்ட சமாந்தரங்களளைப் பார்த்தபோது முதலில் மலைப்பாக இருந்தது. பின்னர் புரிந்தது. அதனால் எனக்குள் கிழறப்பட்டவற்றை வைத்து குறியீடுகளாக எமது களத்தில் இந்தக்கதை.

இருமுறை வாசித்துப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. பொதுவாகப் புரியாத விடயங்களை ஒதுக்கிவிட்டு நகரும் வழமையில் புரிந்தே தீருவேன் என்ற உங்கள் முனைப்பு மிகவும் புத்துணர்ச்சி தருகிறது—நானும் உங்கள் வகை வாசகன் தான். நீங்கள் இதைச் சொன்னபோது வேறொன்று ஞாபகம் வருகிறது.

நோபல் பரிசு பெற்ற மாறியோ வார்கஸ் (பெரு நாட்டு எழுத்தாளர்) 'Conversation in the Cathedral' என்றொரு நாவல் 1969ல் பிரசுரித்திருந்தார். 800 பக்கங்களிற்கு மேற்பட்ட இந்நாவலில் ஒவ்வொரு வரியும் (அதாவது ஒரு பந்தியில் 7 வரி இருக்கிறது என்றால் அந்த ஏழு வரிகளும்) வேறுவேறு காலப்பகுதியில் நிகழ்ந்த விடயங்களைப் பேசும். வேறுவேறு பாத்திரங்கள் பேசும். ஒரு அரை மணிநேரம் தலை சுத்தும். எவன் என்னத்தைச் சொல்லுகிறான் என்பதே குழப்பமாக இருக்கும். ஆனால் அந்தக் குழப்பத்தை வென்று மனதைக் குவியப்படுத்தி ஒரு சில மணிநேரம் வாசித்துக் கொண்டுபோகையில் புரிவது மட்டுமன்றி சுரவாரசியமாக இருக்கும். எண்ணூறு பக்க நாவலின் ஒவ்வொரு வரியும் வௌ;வேறு காலகட்டத்தின் வௌ;வேறு பாத்திரங்களிற்குரியனவாய் ஆனால் அவை அமைந்த பந்திகளிற்கு முற்றிலும் பொருத்தமானவையாக அந்நாவலில் இருப்பது பல அடுக்கடுக்கான பரிமாணங்களை அந்நாவலிற்கு வழங்கும். 

நேர்கோட்டு வர்ணனைக் கதைகளாயினும் கோணல்மாணலான குறியீட்டுக் கதைகளாயினும் எழுதுபரைக் காட்டிலும் வாசிப்பவரின் திறமையிலேயே வாசிப்பனுபவம் நிர்ணயிக்கப்படுகிறது. நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்குள்ளும் பல கதைப் பிரதிகள் ஒளிந்திருக்கின்றன. சுவாரசியமான எழுத்து. மீளவும் படிக்க வைத்தது. 

பிடித்த புத்தகங்களை ஆழமாகப் படிக்க எனக்கு நேரம் எடுக்கும். சில நேரம் வரிகளை மீளவும் படிப்பேன். சிலநேரம் பந்திகளையே மீளவும் படிக்கவேண்டிவரும்!

Link to comment
Share on other sites

நன்றி கிருபன். 
குவிந்து கிடக்கும் பொழுதுபோக்கம்சங்கள் வாசிப்பை உலகளாவிய ரீதியில் குறைத்தே வருகின்றன. எனினும் அனுபவித்தவர்களிற்கு இலகுவில் விலகிச்செல்லத் தோன்றாது என்றே படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாய் சொல்றன் கதை எனக்குப் புரியவே இல்லை...இன்னொரு தடவை வாசிக்கப் பொறுமையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2016 at 1:23 AM, ரதி said:

சத்தியமாய் சொல்றன் கதை எனக்குப் புரியவே இல்லை...இன்னொரு தடவை வாசிக்கப் பொறுமையும் இல்லை.

எனக்கும் தான் பகுதியாக பகுதியாக வேறு  பொருளை உணர்த்துவதால் சற்று விளங்கிகொள்ள முடியாமல் உள்ளது நண்பரே 

Link to comment
Share on other sites

இன்னுமொருவன் இன்னமும் எழுதணும்.

இதே பாணியில் சில கிழமைகளில் முன்னர் ஒரு கதை படித்திருந்தேன் - அனுமதி கிடைத்தால் பதிகின்றேன்.

Link to comment
Share on other sites

52 minutes ago, ஜீவன் சிவா said:

இன்னுமொருவன் இன்னமும் எழுதணும்.

இதே பாணியில் சில கிழமைகளில் முன்னர் ஒரு கதை படித்திருந்தேன் - அனுமதி கிடைத்தால் பதிகின்றேன்.

யாருடைய அனுமதி..? மட்டுறுத்தினர்களின் அனுமதியா.?? அவையள் எல்லாம் நல்லூர் திருவிழாவுக்குப் போட்டினம். வரமுதல் பதியுங்கோ.:grin:

Link to comment
Share on other sites

நன்றி நிழலி, சுவைப்பிரியன், பகலவன், புங்கையூரான், நந்தன் மற்றும் ஜீவன்.
 ஜீவன் சிவா கட்டாயம் நீங்கள் குறிப்பிடும் கதையையும் பகிருங்கள்.


ரதி மற்றும் முனிவர். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஏற்கனவே கதை படித்துக் கடுப்பாக இருக்கிறீர்கள் போலுள்ளது அதற்குள் மேலும் பொழிப்புரை என எழுதி மேலும் கடுப்பேற்ற விரும்பவில்லை. குறிப்பாக ஏதேனும் கேள்வியிருப்பின் கேழுங்கள் கட்டாயம் பதிலிடுகிறேன். 

---

வேணுமாயின் ஒரு சிறு குறிப்பு:

கதை முழுவதும், ஒவ்வொரு பந்தியிலும் ஏதோ ஒரு பேய் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரங்கள் பேய் சார்ந்து எதிர்வினை ஆற்றுகின்றன. பார்வையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பார்வையாளனின் பார்வை கதைக்குள் ஒளிந்து பதிவாகியிருக்கிறது. கதை முழுவதும் கிடக்கின்ற குறியீடுகள், கதையின் காட்சிகள் சார்ந்து பார்வையாளனிற்குள் பிறந்த எதிர்வினையினைச் சுட்டி நிற்கின்றன.

பொதுவாக ஒரு பார்வையாளன் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அவனது பார்வை படத்தைப் பாதிப்பதில்லை. அதாவது, படம் ஒளிப்பேழையில் இருந்தபடியே இருக்கும். பார்வையாளன் தனது உணர்வுகளைச் சுமந்தபடி படம் முடிய எழுந்து வெளியே செல்வான்.

மாறாக இங்கு, கதையின் காட்சிகள் சார்ந்த ஒரு பார்வையாளனின் உணர்வுகள் கதையோடு ஒரு இழையாக, ஒரு படத்திற்கு எப்படி பின்னணி இசை 'மூட் செற்றிங்' செய்யுமோ அது போல் கதைக்கு ஒரு 'மூட் செற்றிங் 'செய்வது போலப் பின்னணியாக் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, கதை நிகழ்ந்தது, பார்வையாளன் பார்த்தான், பார்த்த காட்சிகள் சார்ந்து அவனிற்குள் உணர்வுகள் பிறந்தன, பிறந்த உணர்வுகளோடு சேர்த்துப் பார்வையாளன் படத்தை மீள் ஒளிப்பதிவு செய்கிறான், புதிய பிரதியில் பாhர்வையாளனின் உணர்வுகள் குறியீடுகளாகக் கதை சார்நத எதிர்வினையாகக் கதையோடு சேர்த்துப் பின்னப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ஆதங்கம் முடிவாக்கப்பட்டிருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் பந்தியை எழுதாது விட்டிருந்தால் விளங்கியே இருக்காது.

Link to comment
Share on other sites

On 02/09/2016 at 3:47 AM, Innumoruvan said:

ஜீவன் சிவா கட்டாயம் நீங்கள் குறிப்பிடும் கதையையும் பகிருங்கள்.

 

அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது - இங்கு பகிரப்பட்டுள்ளது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.