Jump to content

மனைவியின் சடலத்தை 12 கி.மீ. தோளில் சுமந்து சென்ற கணவர்


Recommended Posts

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால், ஒரு ஏழை நபர், தனது மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


160825111932_deadbody_512x288__nocredit.jpg
மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர்

டானா மாஜி எனப்படும் அந்நபரின் மனைவியான 42 வயது அமாங், ஒடிஸா மாநிலம், பாவானிபட்னா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், காசநோயின் காரணமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையிலிருந்து தனது கிராமம் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்ட மாஜி, ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி செல்லுமளவு தனக்கு வசதியில்லை என்று தெரிவித்தார்.
அவரது குற்றச்சாட்டுக்களை மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி பி. பிரம்மா இது குறித்து கூறுகையில், ''கடந்த செவ்வாய்க்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் அன்றிரவு உயிரிழந்தார். மருத்துவமனை பணியாளர்களிடம் எதுவும் தெரிவிக்காமல், தனது மனைவியின் உடலை இறந்த பெண்ணின் கணவர் எடுத்துச் சென்றார்'' என்று கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு தன் மனைவி இறந்து விட்டதாகவும், அவரது உடலை அகற்றுமாறு மருத்துவமனை அதிகாரிகள் அடிக்கடி கூறியதால், புதன்கிழமையன்று தன் மனைவியின் உடலை எடுத்துச் சென்றதாக மாஜி தெரிவித்தார்.
ஏழைகளுக்கு வேறு வழியில்லை:-
அவர் மேலும் கூறுகையில், ''மருத்துவமனை பணியாளர்களிடம் என் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல ஒரு வாகனம் வழங்குமாறு வாதாடி கேட்டுக் கொண்டேன். ஆனால், அதில் எந்த பயனுமில்லை. நான் ஓர் ஏழையாக இருப்பதால், தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்ய என்னால் இயலாது.
எனக்கு வேறு வழியில்லாததால், என் மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றேன்'' என்று மாஜி குறிப்பிட்டார்.
தனது கிராமமான மேல்கரில் மனைவிக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக, புதன்கிழமை அதிகாலையில், மனைவியின் சடலத்தை ஒரு துணியால் சுற்றி தன் தோளில் சுமந்து கொண்டு தனது 12 வயது மகள் சவுலாவுடன் மாஜி நடந்து சென்றார்.


160825112038_deadbody2_512x288__nocredit.jpg
கலங்க வைக்கும் பரிதாபம்

12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அவரை, வழியில் பலர் குறுக்கிட்டு விசாரித்தனர். பின்னர், அவசர மருத்துவ ஊர்தி அவரது உதவிக்கு வந்தது.
புதன்கிழமை மாலையில் மாஜியின் மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பாவானிபட்னா நகரம் அமைந்துள்ள காளஹண்டி மாவட்ட ஆட்சியரான டி. பிருந்தா, இத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அவசர மருத்துவ ஊர்திக்கு தான் ஏற்பாடு செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
வறுமையில் வாடும் ஏழை மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தகனம் செய்ய உதவியாக உள்ள ஹரிஸ்சந்திரா யோஜனா என்ற அரசு திட்டம் மூலம், உள்ளூர் அரசு அதிகாரிகளை பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு 2000 ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், செஞ்சிலுவை அமைப்பின் மூலம் மாஜியின் குடுமபத்துக்கு 10,000 ரூபாய் கிடைக்கவுள்ளது'' என்று தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india/2016/08/160825_odisha_ambulance

Link to comment
Share on other sites

10 minutes ago, Athavan CH said:

தனது கிராமமான மேல்கரில் மனைவிக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக, புதன்கிழமை அதிகாலையில், மனைவியின் சடலத்தை ஒரு துணியால் சுற்றி தன் தோளில் சுமந்து கொண்டு தனது 12 வயது மகள் சவுலாவுடன் மாஜி நடந்து சென்றார்.

 

160825111932_deadbody_512x288__nocredit.jpg

நீ மானஸ்தன் + ஹீரோடா 
தலை வணங்குகின்றேன்.

நீரும் உமது மகளும் நன்கு வாழ எனது ஆசீர்வாதங்கள்
உமது மனைவியின் பிரிவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

160825111932_deadbody_512x288__nocredit.jpg

நீதிக்கதைகளும் புராணக்கதைகளும் நன்னடத்தை உவமானங்களும் திருக்குறளும் பிறந்த நாட்டிலா இந்த அவலம்??????:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மிருகங்கள்  தற்போது அதிகரித்து செல்கின்றன இந்தியாவில் ( மத வெறி ,இன வெறி , சாதி வெறி )

ஊன்மையாக மனைவியை நேசித்த மனிதன் ஐயா நீர்  வணங்குகிறேன் உன்னை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(காணொளி)
மருத்துவமனை தான் கைவிட்டு  விட்டது  என்றால், 
அந்தப் பகுதியில்.. உள்ள எந்த மனிதனும் உதவ முன் வரவில்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் இதை வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.tw_angry:tw_angry:
என்ன சினிமா படமா எடுக்கிறார்கள்?:(

Link to comment
Share on other sites

எல்லாவற்றையும் விட்டு இந்திய திரு மகனே உனக்கு உன் சொந்தமானவர்களின்  செத்த உடலை தன்னும் தூக்கி சென்று அடக்கம் செய்ய விட்டுள்ளார்கள் என்பதையிட்டு பெருமை கொள் ஈழத்தமிழ்ர்களாகிய எங்களுக்கு 2009 ல் அந்த உரிமையும் இல்லை சாவடிக்கபட்ட பிணம்களை தூக்கி சென்று தகனம் செய்ய கூட எங்களுக்கு அனுமதியில்லை என்பதை அறிவாயா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.