Jump to content

எங்களுடைய போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை : வடக்கு முதல்வர் உணர்ச்சிப் பேச்சு


Recommended Posts

ஆயுதம் ஏந்திப் போராடினோம். ஆனால், தற்போது அந்தப் போராட்டம் மெளனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்களுடைய போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவையிருக்கிறது.

எங்களுடைய தனித்துவமான மனித வளத்தை நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அறிவைப் பாவிக்க வேண்டும். எங்கள் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை வேறொரு வகையில் அர்ப்பணிப்புள்ளதாக வகுத்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமான க. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் "நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட்டு விழா" இன்று புதன்கிழமை(24) காலை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். மாநகர சபையின் தலைவர் பொ. வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பிலுள்ள சிங்கள நண்பர்கள் என்னிடம் சற்றே விட்டுக் கொடுக்கலாமே? எனச் சொல்லுவார்கள். அதற்கு நான் அவர்களுக்குப் பதிலளிக்கும் போது எங்களின் உரிமைகளை, எங்களுக்குத் தேவையானவற்றை, உண்மையை எடுத்தியம்புகிறோம். நீங்கள் அதனைப் பிழையானதாகச் சிந்தித்துப் பிழையானதாக நோக்கினால் நாங்கள் பொறுப்பல்ல எனத் தெரிவித்தேன்.

நான் இன்று கொழும்பிலிருந்து விமானத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் விமானத்தில் வந்திருந்தார். அவரும் என்னிடம் நீங்கள் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அது எவ்வாறு சாத்தியப்படும்? சிங்கள மக்கள் பல வருட காலமாக வடக்குக் கிழக்கில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்குரியது என நீங்கள் கூறுவது பிழை எனத் தெரிவித்தார்.

அதற்கு நான் பதிலளிக்கும் போது, காலாதி காலமாகத் தமிழ் மொழி தான் வடக்கு, கிழக்கில் நடைமுறையிலிருந்து வருகின்ற மொழி. அதிலே எந்த விதமான சந்தேகங்களும் இருக்கமுடியாது. இல்லையே.... அங்கெல்லாம் பெளத்த சின்னங்கள் காணப்படுகின்றன என என்றார். அதற்கு நான் ஆம்.... பெளத்த சின்னங்களிருக்கின்றன. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பெளத்தர்களாகவிருந்தார்கள். அதனால் தான் பெளத்த சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நீங்கள் சிங்கள மக்கள் தான் வாழ்ந்தார்கள் என நீங்கள் எவ்வாறு கூற முடியும்? என அவரைப் பார்த்துக் கேட்ட போது அவரால் எனது கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.

இந்த உரையாடலில் அவர் ஒரு சிங்களவர் என்ற ரீதியில் தேவநம்பிய தீச மன்னனைப் பற்றிய சில விடயங்களையம் பகிர்ந்து கொண்டார். தேவநம்பிய தீச மன்னன் சிங்களவராக இருக்க முடியாது? சிங்கள மொழி கிறிஸ்துவிற்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் தானே நடைமுறைக்கு வந்தது என்பது குறித்துத் தெரியப்படுத்தினேன். ஆகவே, சரித்திர ரீதியாகப் பலவிதமான பிழையான எண்ணங்களை, தகவல்களைச் சேகரித்துக்கொண்டு எங்களுடைய மக்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றேன். அதற்கு அவர் உங்கள் எண்ணங்கள், நோக்குகள் வித்தியாசமாகவும், எங்களுடைய நோக்குகள் வித்தியாசமாகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது சரித்திரசம்பந்தமானதொரு விடயம் தானே? ஆகவே, சரித்திர சம்பந்தமானதொரு விடயத்தை நாங்கள் சர்வதேச ரீதியான சரித்திர ஆய்வாளர்களை அழைத்து நான் சொல்லுவது சரியா? நீங்கள் சொல்லுவது சரியா? என ஆராய்ந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டேன். அதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? என அவர் சொன்னார். இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிந்தால் தான் இவ்வாறான குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும் என நான் அவருக்குக் கூறி வைத்தேன்.

நாங்கள் தற்போது உணர்ச்சி பூர்வமாகவே அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த உணர்ச்சி பூர்வமான சூழலுக்குள் எங்களுக்குள் நான் பெரிதா? நீ பெரிதா? யார் முதலில் வந்தது? யார் பிறகு வந்தது? எனப் பலவிதமான கேள்விகள் உள்ளன. இதனால் தான் எங்களுடைய அரசியல் கீழ் நிலையிலுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

CV_Speech_01.jpg

CV_Speech_02.jpg

CV_Speech_03.jpg

CV_Speech_04.jpg

CV_Speech_05.jpg

http://www.tamilwin.com/statements/01/115241

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.