Jump to content

வடக்கில் நூதன முறையில் மோசடி. இளைஞர், யுவதிகள் அவதானம்:


Recommended Posts

வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக  இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. 

குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

வேலையற்ற இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களுடைய கைத்தொலைபேசிக்கு ஒரு நபர் அழைப்பு விடுப்பார். அதில் யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட வங்கி கிளையில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அதற்காக அவர்களின், சுயவிபரக்கோவையை மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கோரி மின்னஞ்சல் முகவரி குறுஞ்செய்தி மூலம் அனுப்பபடும். 

அந்த மின்னஞ்சல் முகவரி குறித்த வங்கியின் பெயரைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதனை நம்பி சுயவிபரக் கோவையை அனுப்புவர்களுக்கு "நீங்கள் வேலைவாய்ப்பை பெற்று உள்ளீர்கள். அந்த வேலைவாய்ப்பு கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்த வங்கியில் வைப்பிலிடுங்கள் என பிறிதொரு வங்கி கணக்கிலத்தை கொடுப்பார்கள்.

அதனை நம்பி குறித்த வங்கி கணக்கிலக்கத்தில் 25 ஆயிரம் ரூபாயை வைப்பிலிட்டால் அதன் பின்னர் வேலைவாய்ப்பு வழங்குவதாக குறிப்பிட்ட நபரின் தொலை பேசி இலக்கம் தொடர்பற்று போகும். 

இவ்வாறாக கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல இளைஞர்கள் யுவதிகள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். 

அது தொடர்பில் குறித்த வங்கி முகாமையாளருடன் பாதிக்கப்பட்டவர்கள்  தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த மோசடிக்கும் எமது வங்கிக்குக்கும் தொடர்பு இல்லை. அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார். 

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் குறித்த மோசடி காரர் தொடர்ந்து அவ்வாறன மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொலிசார் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் முறைப்பாடு செய்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால் அருகில் தாங்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு உரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுகளை மேற்கொள்ளுமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பலர் பாதிக்கப்பட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுமாயின் மோசடி காரர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.


ஆனால் இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றார்கள். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135206/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.