Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கும் மைத்திரிக்கும் இடையில் இடம்பெற்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது!


Recommended Posts

logo.png

 

எஸ்.எம்.ஈ.சி. என்ற  அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, மைத்திரிபால சிறிசேன 1.8மில்லியன் டொலர் பெறுமதியான அணைக்கட்டின் ஒப்பந்தத்தை எஸ்.எம்.இ.சி. நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.

அண்மையில் பதவி விலக்கப்பட்ட எஸ்.எம்.இ.சி. நிறுவனத்தின் சிறீலங்கா மேலாளர், அவுஸ்திரேலிய அமைச்சருக்கும், ஒருங்கிணைப்புச் செயலாளருக்கும், தெரிவிக்க விரும்புவதாக தனது சகாக்களுக்கு இ-மெயில் எழுதியிருந்தார்.

அதில், இலஞ்சமாகப் பெறப்பட்ட பணமானது சில தேவைகளுக்காக பயன்படுத்தப்படவேண்டியிருந்தது எனவும், அது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சில பெயர் குறிப்பிட விரும்பாத கட்சிகளை முன்னுரிமைப்படுத்த வேண்டிய தேவை தனக்கிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் எஸ்.எம்.இ.சி நிறுவனமானது இது ஒரு ‘அரசியல் நன்கொடை கோரிக்கை’ என உறுதிபடத் தெரிவித்தது. ஆனால் உள்ளக விசாரணையில் இது நன்கொடை இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://thuliyam.com/?p=38895

திட்டத்திற்கு அனுமதியளிக்க அரசியல் நன்கொடை வழங்குமாறு ஜனாதிபதி கோரினாரா? அவுஸ்திரேலிய ஊடகம்:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இயங்கி வரும் Fairfax Media  என்ற இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஸ்னோவி மவுன்டன்ஸ் என்ஜினியரிங் கம்பனி (SMEC என்ற நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களின் போது இலங்கை ஜனாதிபதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஊடக நிறுவனத்தின் ஊடகங்களில் ஒன்றான தி ஏஜ் பத்திரிகை இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 2.3 மில்லியன் டொலர் பெறுமதியான கழிவுநீர் வடிகாலமைப்பு திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகள் லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திட்டத்திற்கு அனுமதியளிக்க அரசியல் நன்கொடை ஒன்றை வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது ஆலோசகரும் கோரியதாகவும் அது தொடர்பிலான மின்னஞ்சல் தகவல்கள் காணப்படுவதாகவும் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிறுவனத்தின் மின்னஞ்சல்களின் ஊடாக மோசடி பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் நன்கொடை ஒன்று கேட்கப்பட்டதனை நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும் உள்ளக விசாரணைகளின் மூலம் லஞ்சம் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினரின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135219/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

20 minutes ago, Athavan CH said:

உள்ளக விசாரணைகளின் மூலம் லஞ்சம் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்ப சர்வதேச விசாரணையை மகிந்த கும்பல் கோரலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடிப்புக்கு இவரும் சளைத்தவரில்லை. ஆட்சிப்பீடத்திலிருந்து இறங்கும் போது எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

நல்லாச்சி நல்லாச்சி எண்டு நாக்கை தொங்கப்போடுறவைக்கு ஒரு வணக்கம் சொல்லிக்கிறேன்.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
    • தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார். கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.
    • அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.  நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற  சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.