Jump to content

'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது'


Recommended Posts

'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது'

 

 
படம்: ராய்ட்டர்ஸ்.
படம்: ராய்ட்டர்ஸ்.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்சிலிருந்தே கசிவானதாகவும், இந்தியாவிலிருந்து அல்ல என்றும் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவர்ட் கேமரூன் என்பவர் ஆஸ்திரேலியாவின் முன்னணி புலனாய்வு நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

22,400 பக்கங்கள் கொண்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை.

'Restricted Scorpene India' என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில் மிக மிக நுட்பமான போர் யுக்திகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் 4,457 பக்கங்களில் நீர்மூழ்கிக் கப்பலின் கடலுக்கடியில் செயல்படும் சென்சார் குறித்தும், 4,209 பக்கங்களில் நீருக்கு மேல் செயல்படும் சென்சார்கள் குறித்தும், 4301 பக்கங்களில் போர் யுக்திகள் குறித்தும், 6,841 பக்கங்களில் தொலை தொடர்புகள் குறித்தும், 2138 பக்கங்களில் நேவிகேஷன் கட்டமைப்பு குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகையின் கூற்றின்படி இந்த ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டும் பிரான்ஸ் நாட்டால் இந்தியாவுக்காக கணினியில் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டு டிசிஎன்எஸ் நிறுவனத்தின் சப் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் ஓர் அதிகாரியால் இந்த ஆவணம் நீக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் அளித்த தனிப் பேட்டி வருமாறு:

இந்தத் தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள்?

2011-ம் ஆண்டு பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனத்தின் ஊழியர் கசியவிட்ட தகவலைத்தான் நான் இப்போது வைத்துள்ளேன். இதுதான் என்னிடம் தெரிவிக்கப்பட்ட தகவல் என்பதை மீண்டும் நான் அழுந்தக் கூறவிரும்புகிறேன். இந்தத் தகவலை நானே தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வழிவகையில்லை.

டிசிஎன்எஸ் நிறுவன ஊழியர் மூலம் கசியவிடப்பட்ட தகவல்களாகும் இது. இதனை அவர் தென் கிழக்கு ஆசியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார், அதாவது தனது நம்பகத்தன்மைக்கான உத்தரவாதமாக இதனை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் தகவலை அளிக்கவில்லை. இந்த நபர் பல்வேறு காரணங்களுக்காக தரவுகளை ஒன்று திரட்டியுள்ளார், ஒரு தனியார் நிறுவனம் அந்தக் கசிவுத் தகவல்களை பெறுவதில் முடிந்தது. பிறகு இந்த தரவு வேறொரு நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு தருணத்தில் எந்த வித பாதுகாப்பு அக்கறைகளும் இல்லாமல் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஆனால் இவைதான் என்னிடம் தெரிவிக்கப்பட்ட தகவல்கள். ஆனால் கசிவு இந்தியாவிலிருந்து வந்ததாக நான் நம்பவில்லை. அது பிரான்சிலிருந்தே கசியவிடப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தின் தன்மை என்ன?

யார் வசம் இந்தத் தரவுகள் உள்ளன என்பதைப் பொறுத்த விஷயம் அது. ஆனால் கசியவிடப்பட்ட இந்தத் தரவுகள் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியவை. பெரிய அளவிலான தரவுகள். ஸ்கார்பீனின் போர் யுக்திகள், போர்முறை தொழில்நுட்ப அமைப்பு, அதன் காலம், அது தாக்கவல்ல தூரம் என்று எந்த ஒரு கடற்படையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாதது.

இந்தத் தரவுகள் எதிராளி நாட்டிடம் சென்றுள்ளதா என்பதை அறியும் நிலையில் நான் இல்லை. பகை உளவுத்துறையிடம் சிக்கியிருந்தால் பதற்றமடையத் தேவையில்லை. ஆனால் பகைநாட்டிடம் சிக்கியிருந்தால் அது ஸ்கார்பீன் நீர்முழ்கிக் கப்பல் திட்டத்திற்கு பெரும் சவாலாக முடியும்.

டிசிஎன்எஸ் என்ற நிறுவனம் சந்தையில் பெரும் ஒப்பந்தங்களை பிடித்துள்ளது, சமீபத்தில் ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே கார்ப்பரேட் போட்டிப் பகை காரணமாக இந்த கசிவு நடந்திருக்குமா?

இது எனக்கு தெரியாது. ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தைக் கையகப்படுத்த ஜப்பான், பிரான்ஸ் ஜெர்மனி நாடுகளிடையே கடும் போட்டி இருந்ததென்னவோ உண்மை. கார்ப்பரேட் பழிவாங்கலாக இந்தக் கசிவு நடவடிக்கை இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் இல்லை. அப்படியும் கூட இருக்கலாம் ஆனால் என்னிடம் அதற்கு நிரூபணம் இல்லை.

இந்த செய்தியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

ஆஸ்திரேலியாவில் கூட இந்த செய்திக்கு கடும் எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பிரதமரும், அமைச்சகமும் இதன் முக்கியத்துவத்தை குறைவாகவே மதிப்பிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் சமரசத்துக்குள்ளாகும் என்று கருத வேண்டிய தேவையில்லை, ஆனால் கேள்வி சாதாரணமானது: இந்திய ஆவணங்கள் கசியும் போது ஆஸ்திரேலியாவுக்கும் இது நடக்காது என்பது என்ன நிச்சயம்? இதுதான் இப்போதைக்கு நம் கேள்வி.

http://tamil.thehindu.com/india/ஸ்கார்பீன்-நீர்மூழ்கிக்-கப்பல்-ரகசியங்கள்-பிரான்ஸில்-இருந்தே-கசிந்தது/article9026380.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம்  நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂 இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன்.  என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️  
    • 15வ‌ருட‌த்தை வீன் அடித்து விட்டார்க‌ள் இவ‌ர்க‌ளை இனி ந‌ம்ப‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் உருத்திரகுமார் வாய் சொல் ந‌ப‌ர்   இவ‌ரின் மாவீர‌ நாள் உரைக்கு ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு இல்லை..........................நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றின‌து தான் மிச்ச‌ம்........................இவ‌ர்க‌ளை நானும் எட்டி பார்க்காம‌ விட்டு க‌ண‌ காலம்......................................................
    • இரண்ட‌ர‌ வ‌ருட‌ம் ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ப‌டிச்சேன் ஜேர்ம‌ன் பெரிய‌ நாடு   அதுவும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு வாக‌ன‌த்தில் நீண்ட‌ தூர‌ ப‌யண‌ம் பெரிசா ச‌ரி வ‌ராது..........................நீங்க‌ள் யாழில் இணைந்து 16வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து  இந்த 16வ‌ருட‌த்தில் முத‌ல் முறை தாத்தாவை ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்..............................................   நான் தாத்தா கூட‌ ப‌ழ‌கிய‌ ம‌ட்டில் அவ‌ருக்கு பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து பிடிக்காது என‌க்கும் பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போட‌ சுத்த‌மாய் பிடிக்காது............................நான் ஊதிச்சு ஒரு மாதிரி பிடிச்சு போடுவேன் த‌மிழ்சிறி அண்ணா ஹா ஹா    ச‌ந்திப்பு ந‌ல்ல‌ மாதிரி அமைஞ்ச‌து ச‌ந்தோஷ‌ம் த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் தாத்தா ம‌ற்றும் ப‌ஞ் ஜ‌யா.............................................
    • மூவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியானதும் சந்திப்பு என்பதைப் பதிவு பகர்கின்றது.  எனக்கும் யாழ்கள உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காலம் ஒருநாள் கைகூடச்செய்யும் அதுவரை களமூடாக உறவாடுவோம்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • யாழ்கள உறவுகள் மூவர் சந்தித்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான சந்திப்புக்கள் இங்கிலாந்தில் நடப்பது மிகவும் அரிதாக இருக்கும். கேட்டால் நாங்க ரொம்ப பிசி என்று சொல்லுவார்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.