Jump to content

திரை விமர்சனம்: தர்மதுரை


Recommended Posts

திரை விமர்சனம்: தர்மதுரை

 

 
dharmadurai1_2980804f.jpg
 

இயக்குநர் சீனு ராமசாமி ‘நீர்ப் பறவை’ திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ‘தர்மதுரை’. மருத்துவர்கள் கிராமங் களுக்குப் பணியாற்ற செல்லத் தயங்கக் கூடாது என்பதை குடும்ப ‘நாடக’ பின்னணியில் சொல்ல முற்பட்டிருக்கிறது இந்தப் படம்.

மருத்துவரான தர்மதுரை (விஜய் சேதுபதி) தொழிலைக் கவனிக்காமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிக் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவருகிறார். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தை அவர்களுடைய அம்மா பாண்டி யம்மா (ராதிகா) ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். தங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்மதுரையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அண்ணன், தம்பிகள் நினைக்கிறார்கள்.

அம்மாவின் உதவியோடு அவர்களிடமிருந்து தப்பிக்கும் தர்மதுரையின் பையில் அவரது சகோதரர்கள் சீட்டுத் தொழிலில் வசூலித்த பெரும் பணம் இருக்கிறது. இது தர்மதுரைக்குத் தெரியாது. வீட்டை வெறுத்து வெளியேறும் அவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் தன்னோடு படித்த சுபாஷினி (தமன்னா), ஸ்டெல்லா (சிருஷ்டி டாங்கே) ஆகியோரைத் தேடிப் புறப்படுகிறார். இவரிடம் சிக்கிக்கொண்ட பணத்தை மீட்பதற்காக அண்ணன் தம்பிகள் வலைவீசித் தேடுகின்றனர். கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

அழுத்தமான பாத்திரங்கள், இயல்பான காட்சியமைப்பு, மனதைத் தொடும் தருணங் கள், அழகு ததும்பும் காட்சிகள், ஆக்கபூர்வ மான செய்தி என சீனு ராமசாமியின் படங்களில் இருக்கும் அம்சங்கள் எல்லாம் இந்தப் படத்திலும் இருக்கின்றன. இன்றைய மருத்துவர்களின் போக்கு, கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை ஆகியவற்றின் மீது கவனம் குவிக்க முயற்சிசெய்திருப்பது பாராட்டத்தக்கது. கல்லூரிக் காட்சிகளில் காதல் எட்டிப் பார்த்தாலும் அது வழக்கமான திசையில் பயணிக்காமல் இருப்பது ஆறுதல். தமன்னாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே யான அன்பைக் காட்சிப்படுத்திய விதம் அழகு.

திரைக்கதை பல திசைகளில் பல நோக் கங்களுடன் பயணிப்பது படத்தைப் பலவீன மாக்குகிறது. குடும்ப டிராமா, மருத்துவத் துறை யின் நிலை, வரதட்சிணை, குடும்ப வன்முறை, சகோதர வன்மம் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது. எந்தக் குவிமையமும் இல்லாத தால், காட்சிகள் வலுவில்லாமல் திரையில் விரிகின்றன. குறிப்பான நோக்கமற்ற திரைக் கதைப் பயணம் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கதாநாயகிகளின் மரணங்கள், நாயகனை விடுத்து வேறொருவரை மணக்கும் நாயகியின் கணவன் மோசமானவனாக அமைதல் என கோலிவுட்டின் வழக்கமான சடங்குகள் அனைத்தும் உள்ளன. இரண்டு ஃபிளாஷ்பேக் காட்சிகள் எப்போது முடியுமோ என்ற அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்லூரிக் காட்சிகளில் சுவாரஸ்யமான, புதுமையான அம்சம் எதுவும் இல்லை.

விஜய் சேதுபதியிடம் தன் காதலைச் சொல்லும் சிருஷ்டி டாங்கே அதன் பிறகு ஏன் அதுபற்றிப் பேசுவதே இல்லை? தமன்னா தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஏன் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை? கல்லூரியில் அவ்வளவு நெருக்கமாகப் பழகுபவர்கள் அதன் பிறகு ஏன் எந்தத் தொடர்பும் இல்லாமல், துப்பறிந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்?

பல கதாபாத்திரங்கள் யதார்த்தத்துக்குப் புறம்பாக, மிதமிஞ்சிய நல்லவர்களாக இருப்பது திகட்டுகிறது. படத்தின் நீளம் பொறுமையைக் கடுமையாகச் சோதிக்கிறது.

ராதிகா, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ஆகிய மூவரின் நடிப்பும் மனதில் நிற்கிறது. குறிப் பாக, பாண்டியம்மா கதாபாத்திரத்தில் ராதிகா அநாயாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார். விஜய் சேதுபதியை இதேபோன்ற காட்சிகளில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்றாலும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வஞ்சனை இன்றி வழங்கியிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரம் திரையில் வந்தாலும் அழுத்தமான நடிப்பைத் தருகிறார். சற்றே கனமான வேடத்தை தமன்னா நன்கு கையாள்கிறார். சிருஷ்டி டாங்கேவுக்கு நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பு இல்லை. துணைக் கதாபாத்திரங்களில் வரும் எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட எந்த நடிகரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

எம். சுகுமாரின் கேமரா, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஆகியவை படத்துக்குப் பெரிய பலம். ‘மக்கா கலங்குதப்பா’ பாடல் தனித்து நிற்கிறது. வைரமுத்துவின் வரிகள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. சுகுமாரின் கேமரா தேனி, கோடைக்கானல் ஆகிய இடங்களின் அழகை அள்ளித் தருகிறது.

திரைக்கதையின் நோக்கத்திலும், படத் தொகுப்பிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந் தால் ‘தர்மதுரை’ மருத்துவ துறை பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படமாக இருந்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-தர்மதுரை/article9014173.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.