Jump to content

ஒளித்து விளையாடுதல்


Recommended Posts

ஒளித்து விளையாடுதல்
 

article_1471926366-sdx.jpgமுகம்மது தம்பி மரைக்கார்

அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து 'ஆடி'க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கில் ஆச்சரியமாகும். 'வடக்கு - கிழக்கு விவகாரம்' என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும். இப்போதும், 'அந்த'ப் பந்து அரசியல் அரங்கில் வந்து விழுந்திருக்கிறது. உதைத்து விளையாடும் கால்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாட்டினை புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் தீர்த்து வைக்க முடியுமென்று அரசாங்கம் நம்புகிறது. அரசியலமைப்பின் ஊடாக, ஆட்சி - அதிகாரங்களை நேர்மையாகப் பங்கிடுவதன் மூலம், அமைதியான ஒரு தேசத்தினைக் கட்டியெழுப்ப முடியும் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

புதிய அரசியலமைப்பு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்தவுடன், இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வு பற்றிய கதையாடல்களும் உரத்த குரலில் எழத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு சமூகமும், சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற சபைகளும் - இவை தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதிலும் அது குறித்துப் பேசுவதிலும் கருத்துக்களை முன்வைப்பதிலும் தமிழர் சமூகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமியென்பதில் தமிழர் தரப்பு உறுதியாக உள்ளது. மேற்படி மாகாணங்கள் இரண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றனர். இணைந்த வடகிழக்கு மாகாணத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் தமக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் சமூகம் கிட்டத்தட்ட ஒன்றுபட்டு நிற்கிறது.

ஆனால், மேற்படி விடயங்களில் முஸ்லிம்கள் மிகவும் 'பொடுபோக்கான' மனநிலையில் உள்ளமையினை அவதானிக்க முடிகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலோ, தீர்வுத் திட்டமொன்று குறித்தோ எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் இதுவரை தமது யோசனைகளை உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதானமானது. வடக்கு - கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளையும் அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆயினும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் எதுவித யோசனைகளையும் உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை. மேலும், இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தில், தமது கோரிக்கைகள் என்ன என்பது குறித்தும் முஸ்லிம் காங்கிரஸ் பேசவில்லை.

இதேவேளை, ஏனைய முஸ்லிம் கட்சிகளான ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சிகளும் மேற்படி விடயங்களில் ஆர்வமற்ற நிலையிலேயே உள்ளன.

இருந்தபோதும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனியாகவே இருக்க வேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோர் கூறி வருகின்றனர். அவ்வாறானதொரு நிலையிலேயே அரசியல் தீர்வு முன்வைக்கப்படுதல் வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் மேற்படி இருவரும் தமது எதிர்ப்பினை பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவகாரத்தில் 'ஒளித்து விளையாடும்' ஒரு போக்கினையே கடைப்பிடித்து வருகிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு எதிரான மனநிலையுடன் முஸ்லிம் காங்கிரஸின்; முக்கியஸ்தர்களில் கணிசமானோர் உள்ளனர். இன்னொருபுறம் அந்தக் கட்சிக்குள்ளிருக்கும் சிலர், வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின்; தலைமை இதுவரை எதுவித தீர்க்கமான அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின்; கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம். முபீன் அண்மையில் ஏறாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்த கருத்து, மேற்படி விடயத்துடன் இணைத்து நோக்கும்போது அவதானம் பெறுகிறது. அவருடைய உரையில் - முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின்; தலைவருமான அதாவுல்லா பற்றிக் கூறும்போது, 'வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பிரித்த இனவாதியான அதாவுல்லா' என்று தெரிவித்திருந்தார். இணைந்திருந்த வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டமைக்கு அதாவுல்லாவும் ஒருவகையில் காரணமாவார் என்று கூறப்படுகிறது. அதனால்தான், முஸ்லிம் காங்கிரஸின்; கொள்கைப் பரப்புச் செயலாளர் முபீன் அவ்வாறு கூறியிருந்தார்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு அதாவுல்லா காரணமாக இருந்தமையினால், அவரை ஓர் இனவாதியாக முபீன் பார்க்கிறார். அப்படியென்றால், வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஆதரவளிப்பவர்கள்தான் இனவாதமற்றவர்கள் என்று முபீன் நம்புகின்றார். முஸ்லிம் காங்கிரஸினுடைய கொள்கைகளைப் பரப்புவதற்கான உத்தியோகபூர்வ செயலாளர் என்கிற வகையில், பொதுவெளியில் முபீன் வெளியிட்ட இந்தக் கருத்தினை, முஸ்லிம் காங்கிரஸின்; அபிப்பிராயமாகவும் எடுத்துக் கொள்ள முடியும். அப்படிப் பார்த்தால், வடக்கு - கிழக்கு இணைப்பினை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் ஒரு மனநிலையுடன் உள்ளதாக நாம் கருத இடமுள்ளது.

இதேவேளை, வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாக, அண்மைக் காலமாக ஊடகங்களில் ஒரு கதை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதனையும், கதையினைப் பரப்புவோர் முன்வைக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் சிவசிதம்பரத்தின் நினைவு நாள் நிகழ்வு கடந்த மாதம் கரவெட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இதில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இதற்குப் பின்னர்தான், வடக்கு - கிழக்கு இணைப்புக்கு மு.கா தலைவர் ஆதரவு வழங்கவுள்ளார் என்கிற கதை, தீவிரமாகப் பரவத் தொடங்கியது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சிங்களவர்களும் இவ்வாறானதொரு முடிவுடன்தான் இருக்கின்றார்கள். இதன்படி பார்த்தால், கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களில் 60 சதவீதத்துக்கும் குறையாதோர் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிரானவர்களாகவே இருக்கின்றனர். ஆக, கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அந்த மாகாணத்தினை வடக்குடன் இணைப்பதென்பது, ஜனநாயக வழியில் சாத்தியமாகுமா என்கிற பாரிய கேள்வி இங்கு உள்ளது.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்புடன், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி அண்மையில் இணைந்து கொண்டமை குறித்து அறிவோம். பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோல்வியடைந்த பின்னர், அவருடைய அரசியல்  செயற்பாடுகள் தேக்கமடைந்திருந்தன. ஆனாலும், மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்புடன் பங்காளியாக இணைந்து கொண்டதன் பிறகு, அரசியலில் அதாவுல்லா உற்சாகமடையத் தொடங்கியுள்ளார்.

இப்போது, அரசியலில் சூடுபிடித்திருக்கும் வடக்கு - கிழக்கு விவகாரத்தினை கையில் எடுத்தால், எல்லாத் தரப்பும் திரும்பிப் பார்க்கத் தொடங்கும் என்பதைப் புரிந்து கொண்ட அதாவுல்லா, வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிராக 'சுதந்திர கிழக்கு' எனும் கோஷத்தினை முன்வைத்து, மக்கள் பேரணியொன்றினை விரைவில் நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது இயக்கங்கள் தன்னுடன் கைகோர்க்க வேண்டுமென்றும் அதாவுல்லா அழைப்பு விடுத்திருக்கின்றார்.

'வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்தல்' என்கிற தமிழர் தரப்பின் கோரிக்கை தொடர்பில், மு.காங்கிரஸின் தலைமை கடைப்பிடித்து வரும் மௌனமானது கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வடக்கும் - கிழக்கும் இணைந்திருந்த மாகாணசபை நிருவாகமொன்றின் கீழ் வாழ்ந்த அனுபவம், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. அந்த அனுபவம் மிகவும் கசப்பானதாகும்.

எனவே, 'சுதந்திர கிழக்கு' எனும் கோசத்தை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையானது, அரசியலில் பாரிய கவன ஈர்ப்பினைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. மேலும், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆதரவும் இதற்குக் கிடைக்கும். இந்த நிலையானது,

மு.காங்கிஸுக்கு  பாரிய அரசியல் அசௌகரியத்தினை ஏற்படுத்தும். அதனால், வடக்கு - கிழக்கு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்ன என்பதை, அறிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்குள் மு.கா தள்ளப்படும்.

குறித்த ஒரு விவகாரத்தில் - நமது நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்வதற்காக, அது தொடர்பில் மற்றவரெல்லாம் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்கும் வரைக் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அது அபத்தமானதாகும். ஆனால், புதிய அரசியல் யாப்புக்கான யோசனை, அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு, வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில், மேற்சொன்ன அபத்தத்தினையே மு.கா கடைப்பித்து வருகிறது. இந்த நிலைப்பாடானது மு.கா தலைமைக்கு நன்மையாக அமையாது.

வடக்கு மாகாணத்துடன் கிழக்கினை இணைப்பதால், கிழக்கு முஸ்லிம்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டால், கிழக்கு முஸ்லிம்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நிலையும் இப்படித்தான் அமையும். இது தொடர்பில், புள்ளிவிபரங்களுடன் நிறையவே எழுதப்பட்டு விட்டன.

ஏற்கெனவே, முஸ்லிம் காங்கிரஸின்; தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சியின் உள்ளேயும், வெளியிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்கிற கோசத்துடன் 'கிழக்கின் எழுச்சி' எனும் செயற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு விவகாரத்தில் மு.கா தலைமையின் மௌனம் அல்லது இரண்டுங்கெட்டான் நிலைவரம் குறித்து, மு.காவுக்கு எதிர் அரசியல் செய்யும் தரப்புக்கள் மிக நன்கு அறியும். வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஆதரவா, இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டிய நெருக்கடி நிலையொன்றுக்குள், அதாவுல்லாவின் 'சுதந்திர கிழக்கு' என்கிற மக்கள் பேரணியானது, மு.கா தலைவரை நிச்சயம் தள்ளிவிடும். கண்டு பிடித்த பிறகும், ஒளித்துக் கொண்டிருப்பதில் சுவாரசியங்கள் எவையுமில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/180225/ஒள-த-த-வ-ள-ய-ட-தல-#sthash.MHhHoQsx.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.