Jump to content

லோக்கல், கலக்கல், செம தில்! அமர்க்களம் ஆரம்பம் #TNPL-T20


Recommended Posts

லோக்கல், கலக்கல், செம தில்! அமர்க்களம் ஆரம்பம் #TNPL-T20

dhoni%20tnpl.jpg

வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு, சங்கம் தியேட்டரில் சினிமா பார்த்து, பார்ட் டைம் தமிழனாகவே வலம் வந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி&20 தொடரை ப்ரமோட் செய்வதற்கான நிகழ்ச்சிகளில்தான் இந்த அமர்க்களம். பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ள லான்ஸ் க்ளூஸ்னர், மைக்கேல் பெவன், பிரட் லீ இனி தங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகின்றனரோ? 

‘எதிரணியைச் சேர்ந்தவர் என்றாலும், களத்தில் சாதித்தால் ஆராதிப்பர் என்பதால் சென்னை ரசிகர்கள் மீது எனக்கு தனி பிரியம்’ என்றார் இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி. பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் உரிய கவுரவம் கொடுத்தவர்கள் சென்னை ரசிகர்கள். அதனால்தான் ‘ஐ லவ் சென்னை ஃபேன்ஸ்’ என்றார் வாசிம் அக்ரம்.

பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலகிய பின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த துவங்கியது பிசிசிஐ. கடந்த மார்ச் மாதம் டி&20 உலக கோப்பை நடந்தபோது, தன் சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்துக்கு ஏழு போட்டிகளை ஒதுக்கி இருந்தார் அப்போது பிசிசிஐ செயலராக இருந்த அனுராக் தாக்கூர். இவ்வளவு ஏன் அனல் கொதிக்கும் இந்தியா & பாகிஸ்தான் போட்டியே தர்மசாலாவில்தான் நடப்பதாக இருந்தது. ஹிமாச்சல பிரதேச அரசு கடைசி நேரத்தில் கை விரித்ததால், போட்டி கொல்கத்தாவுக்கு மாறியது. 

செயலர் இப்படி என்றால் தலைவர் விடுவாரா? அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், தன் பங்குக்கு நாக்பூரில் 9 போட்டிகள் நடக்கும்படி பார்த்துக் கொண்டார். கேலரி பிரச்னையை மேற்கோள்காட்டி, போனால் போகட்டும் என 4 பெண்களுக்கான போட்டிகளை மட்டுமே சேப்பாக்கத்துக்கு ஒதுக்கினர். அதுவும் இந்தியா இல்லாத போட்டிகள்.

என்ன ஆயிற்று தெரியுமா?

இந்தியா & வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி&20 உலக கோப்பை போட்டி பெங்களூருவில் நடந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் சேப்பாக்கத்தில் தென் ஆப்ரிக்கா & அயர்லாந்து பெண்கள் அணிகள் மோதிக் கொண்டிருந்தன. பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் கூட, தென் ஆப்ரிக்கா & அயர்லாந்து பெண்கள் மோதிய போட்டியை முழுமையாகப் பார்க்க எந்த கிரிக்கெட் வெறியனும் சம்மதிக்க மாட்டான்.

அவ்வளவு ஏன்... மேட்ச் ரிப்போர்ட் கொடுப்பதற்காக பணிக்கப்பட்டிருந்த நிருபர்கள் கூட, மீடியா ரூமில் இருந்த டிவியில் இந்தியா & வங்கதேசம் மோதிய போட்டியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த பெண்கள் கிரிக்கெட்டைப் பார்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேப்பாக்கம் வந்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் வீட்டில் இருந்தபடி இந்தியா & வங்கதேச போட்டியை பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், வந்து நின்றான் ரசிகன். அதான் சென்னை, அதான் கெத்து.

இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ரசனைக்கு ஒரு சாம்பிள். 

அறிவார்ந்த ரசிகர்கள் பட்டம் எல்லாம் ஓகே. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இல்லையே, சென்னையில் டி&20 உலக கோப்பை போட்டிகள் இல்லையே என கடுப்பில் இருந்த ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக டிஎன்பிஎல் தொடரை ஆரம்பித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் #TNCA. 25 நாட்கள் நடக்கும் இந்தத் தொடர் நாளை தொடங்குகிறது.

சேப்பாக்கம், நத்தம், திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் நடக்கும், மொத்தம் 31 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்புகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், டூ-ட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் என்பது அணிகளின் பெயர். இந்த தொடரின் மூலம் முழுக்க முழுக்க தமிழகத்தில் இளம் வீரர்களை அடையாளம் காண்வதே அல்டிமேட் இலக்கு.

tnpl%20dhoni.jpg

தமிழகத்தின் இளம் வீரர்களுக்கான இந்த தேடல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் என சீனியர்கள் இருப்பது இளம் வீரர்களுக்கு பலம். ‘சீனியர் வீரர்களுக்கு ஐபிஎல் அளவுக்கு பணம் கிடைக்காது. இருந்தாலும், அவர்கள் கிரிக்கெட்டுக்கு திருப்பிச் செலுத்தும் நேரமிது. முடிந்தவரை இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு சீனியர்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என, கோப்பையை அறிமுகப்படுத்தி விட்டு சொன்னார் தோனி. மதுரை அணியின் லோகோவை அறிமுகப்படுத்தி விட்டு ‘மாவட்ட அளவிலான வீரர்கள் மாநில அணிக்கு தேர்வாக இந்த தொடர் நல்ல வாய்ப்பு’ சொல்லி விட்டுப் பறந்தார் சேவாக்.

தோனி, சேவாக் சொல்வது போல, புதிதாக இளம் வீரர்கள் உருவெடுக்க மட்டுமல்ல, ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் தவிக்கும் வீரர்களுக்கும், தங்களை நிரூபிக்க இது நல்ல களம். அதேசமயம் இங்கு அடிக்கும் ச(த்)தம் அங்கு பிசிசிஐ கதவுகளை தட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில்...

#TNPL தொடருக்கான வேலைகள் ஒருபுறம் நடக்க, சத்தமில்லாமல் ஆறு தமிழக சீனியர் வீரர்களை துலீப் டிராபி தொடருக்கான அணியில் சேர்த்து ‘அல்ரெடி’ ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது பிசிசிஐ. அந்த ஆறு பேரும் ஸ்டார் வேல்யூ பிளேயர்கள். தவிர, TNCA-வில் பதிவு செய்துள்ள வேற்று மாநில வீரர்களை இந்த தொடரில் பங்கேற்க விடாமல் தடுக்கும் வேலையும் திரைமறைவில் நடக்கிறது. ‘டிஎன்பிஎல் தொடரை உங்களுக்கு போட்டியாக கருத வேண்டாம்’ என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் இதை அப்படியே ஏற்றுக்கொள்பவரா என்ன?

டிஎன்சிஏ இந்தத் தொடரை இளம் வீரர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் தொடராக பார்க்கிறது. பிசிசிஐ வேறு விதமாக நினைக்கிறது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கும் இந்த தொடர் சூடுபிடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இருந்தாலும் கார்ப்பரேட் பங்களிப்பு, நேரடி ஒளிபரப்பு, ஸ்டார் வீரர்களின் பங்கேற்பு, மின்னொளியில் போட்டி, ஸ்டார் ஹோட்டல்களில் பேட்டி என ஏற்பாடுகள் எல்லாம் பக்கா ஐபிஎல் சொக்கா.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு செலிபிரிட்டியை வைத்து ப்ரமோ செய்து வருகிறது. இதில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியின் டீசரை டிஆர் பாடியதுதான் அல்டிமேட். இறங்குனாக்கா லோக்கலு, ஆடுனாக்கா கலக்கலு. இறங்குனாக்கா லோக்கலு, ஆடுனாக்கா கலக்கலு... இப்படி போகுது அந்த டீசர். ரைட்டு!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

டிஎன்பிஎல் தொடர் வண்ணமயமாக தொடங்கியது

 

 
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தினேஷ் கார்த்திக். படம்: வி.கணேசன்
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தினேஷ் கார்த்திக். படம்: வி.கணேசன்

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடர் சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.

தமிழகத்தின் இளம் வீரர்களுக்கான தேடலாக கருதப் படும் இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ரூ.3.40 கோடி பரிசுத்தொகை கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. சேப்பாக் அணி சதீஷ் தலை மையிலும், தூத்துக்குடி அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் இறங்கின.

முன்னதாக சினிமா நட்சத் திரங்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடிகர் மாதவனுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங் கினார். தமிழக பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இந்த நடனம் 5 வகையான நிலங்களை குறிக்கும் வகையில் இருந்தது. மேலும் பாரம்பரிய கலைகளான சிலம்பம், சுருள் வீச்சு உள்ளிட்டவற்றையும் கலைஞர்கள் செய்து காண்பித்தனர். இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா, தன்ஷிகா ஆகியோர் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினர். நடிகர் தனுஷ் மைதானத்தை வாகனத்தில் வலம் வந்தபடி விழா மேடைக்கு வந்து கோப்பையை அறிமுகம் செய்தார். இதில் தமிழ்நாடு கிரிக்கெட் தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் இரு அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். வாணவேடிக்கைக ளுடன் தொடக்க விழா நிகழ்ச்சி கள் முடிவடைந்தன.

இதையடுத்து டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த அந்த 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண் டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாஷிங்டன் சுந்தர் 24, கவுசிக் காந்தி 20, மாருதி ராகவ் 13, சுஷில் 25, ஆகாஷ் சுர்மா 5 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் சதீஷ் 2, யோ மகேஷ், அந்தோனி தாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட் செய்தது. இந்த டிஎன்பிஎல் தொடரானது 25 நாட்கள் நடத்தப்படுகிறது. மொத்தம் 31 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன. நத்தம், நெல்லை ஆகிய பகுதிகளிலும் இந்த தொடரின் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

இதன்படி தொடரின் 2-வது ஆட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் திருவள்ளூர் வீரன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தையொட்டியும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.45 மணிக்கு தொடங்கும் விழாவில் பாடகி சின்னப்பொன்னு, பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டு பாடுகின்றனர். 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/டிஎன்பிஎல்-தொடர்-வண்ணமயமாக-தொடங்கியது/article9030346.ece

Link to comment
Share on other sites

சியர் லீடர்ஸ் யார்? -#TNPL கோலாகலம்

123.jpg

வாலாஜா ரோடு வழியாக சேப்பாக்கம் மைதானத்தை நெருங்கும்போதே ஒருவித புத்துணர்ச்சி. ஃப்ளட் லைட் வெளிச்சம் கண்ணைக் கூசியது. சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் காக்கி உடைகள். ‘வண்டியை இங்க நிறுத்தக் கூடாது. அங்க போ அங்க போ...’ என விரட்டிக் கொண்டே இருந்தனர் செக்யூரிட்டிகள். 

டிக்கெட்டை வாங்கி சரிபார்த்து, ‘எஃப் ஸ்டாண்ட்டு அங்க இருக்கு..’ என வழிகாட்டிக் கொண்டிருந்தனர் மேட்ச் அஃபீஸியல்ஸ் என்ற பேட்ஜ் அணிந்திருந்தவர்கள். சைரன் வைத்த வண்டியில் வந்திறங்கிய மேலதிகாரியின் மனைவி, குழந்தைகளுக்கு அட்டென்சனில் சல்யூட் அடித்து, பவ்யமாக அழைத்துச் சென்றனர் சில போலீஸார். ஒருமுறை தனக்குத்தானே ஹோம்வொர்க் செய்து கொண்டு, பின் ஓகே என தம்ஸ் அப் காட்டி நேரடி ஒளிபரப்புக்கு தயாரானார் பட்டாபிராம் கேட் முன்பு ஒரு டிவி நிருபர். 

‘சீக்கிரம் வாங்க. ஷ்ரேயா டான்ஸ் ஆடப் போறா...’ என சக நிருபர் வாட்ஸ் அப்பில் அனுப்பியதை வாசித்துக் கொண்டே மைதானத்துக்குள் நுழைந்தால், பெவிலியன் எண்ட் முன்பு, மேடையில் ஆண்ட்ரியாவும், மாதவனும் சிரித்தபடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாரம்பரிய நடனங்களை ஆடி கலக்கிக் கொண்டிருந்தனர். திடீரென ‘ஆடுகளம்’ நாயகன் தனுஷ் ஓபன் டாப் கார்ட்டில் ‘ஆடுகளத்தில்’ வலம்வர, ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேடையில் ஷ்ரேயா ‘அலேக்ரா அலேக்ரா’ பாடலுக்கு டான்ஸ் ஆடத் துவங்கியதும் சைலன்ட்டாக வேடிக்கை பார்க்கத் துவங்கியது கூட்டம். அடுத்தடுத்து நான்கு பாட்டுக்கு ஷ்ரேயா ஆடி முடித்ததும், கடைசியாக ‘நெருப்புடா நெருங்குடா’ பாடலுக்கு தன்ஷிகா ஆட, விசில் சத்தம் விண்ணை முட்டியது. 

அதற்கு நேர் எதிரே, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் தொகுப்பாளினி, எல்.சிவராமகிருஷ்ணன், டீன் ஜோன்ஸிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். இதை எதையுமே பார்க்காமல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தனர் சேப்பாக் கில்லிஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் அணியினர். ஆம், அந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடுவிலும் அவர்கள் ஒருபுறம் வார்ம் அப் செய்து கொண்டிருந்தனர்.

19.jpg

ஆட்டம், பாட்டம் எல்லாம் முடிந்ததும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன், டூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் கேப்டன்களான தினேஷ் கார்த்திக், சதீஷ், நடிகர் மாதவன், ஆண்ட்ரியா சூழ்ந்து நிற்க, மேடையில் கோப்பையை அறிமுகம் செய்தார் தனுஷ். இந்த தருணத்துக்காகவே காத்திருந்தது போல, வாண வேடிக்கைகள் வெடித்துச் சிதற, மைதானமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

புகை மெல்ல மெல்ல விலகத் துவங்கியபோது, பெவிலியன் எண்ட்டில் இருந்த மேடை, டெம்ப்ளேட் பிளக்ஸ் போர்டுகள், அறிவிப்பு பலகைகள், வார்ம் அப் செய்த போது மைதானமெங்கும் சிதறிக் கிடந்த உபகரணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியேறி இருந்தது. கூடவே மனிதர்களும். அதுவரை கசகசவென இருந்த மைதானத்தில், கடைசியாக நிலைத்திருந்தது ஸ்டம்புகள் மட்டுமே.

ஆம். கோலகலமாக துவங்கியது தமிழ்நாடு பிரிமியர் லீக். 


துளிகள்...

* டிஎன்பிஎல் தொடரின் முதல் நாள் போட்டியை காண 13,000 பேர் வந்திருந்தனர். சிஎஸ்கே இல்லை, சேப்பாக்கத்தில் வேர்ல்ட் டி2&0 போட்டிகள் நடக்கவில்லை என ரசிகர்கள் காய்ந்து போயிருந்தனர் என்பதற்கு இதுவே சாட்சி.

* ஐபிஎல் பாணியில் தொடங்கும் இந்த தொடருக்கு ‘சியர் லீடர்ஸ்’ யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாடல்கள் தோற்றத்தில் இருந்த டீன் ஏஜ் யுவதிகள், அந்த குறையை போக்கினர். பெண்களை விட அவர்களுக்கு முன் நின்று ஆடிய சிறுவனின் ஆட்டம் செம.

* ‘ப்பா என்னா வெயிலு...’ சென்னைக்கு புதிதாக வருபவர்கள் சொல்வதைப் போலவே சொன்னார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ். ‘சென்னை என்றதும் எனக்கு வெயில்தான் நினைவுக்கு வருகிறது’ என்றார் ஜோன்ஸ். 1986ல் சென்னை வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல், வாந்தி எடுத்து வாந்தி எடுத்து 200 ரன்கள் அடித்தார் ஜோன்ஸ் என்கிறது வரலாறு.

http://www.vikatan.com/news/sports/67585-tnpl-inauguration-ceremony.art

Link to comment
Share on other sites

திண்டுக்கலிலும் டிஎன்பிஎல் போட்டி தொடக்கம்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
பந்தை பவுண்டரிக்கு விளாசும் காரைக்குடி காளை அணியின் வீரர் விஜய் குமார்.
பந்தை பவுண்டரிக்கு விளாசும் காரைக்குடி காளை அணியின் வீரர் விஜய் குமார்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 67 ரன் எடுத்தார்.

சேப்பாக் அணி தரப்பில் சதீஷ் 2 விக்கெட் கைப்பற்றினார். 165 ரன்கள் இலக்குடன் விளையாடி சேப்பாக் அணி 19.4 ஓவர்களில் 119 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தூத்துக்குடி அணி தரப்பில் ஆகாஸ் சும்ரா, அவுசிக் சீனிவாஸ் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இந்நிலையில் தொடரின் 2-வது நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் திருவள்ளூர் வீரன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதின. இந்த போட்டியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடகி சின்னப்பொன்னு, பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்ற நடனமும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. இதையடுத்து போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

ஆர்.நிவாசன் 38 பந்தில், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்னும், விஜய் குமார் 39 பந்தில், 4 புவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 43 ரன்னும், ராஜ்குமார் 13 பந்தில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 34 ரன்களும் எடுத்தனர்.

திருவள்ளூர் அணி தரப்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன்கள் இலக்குடன் திருவள்ளூர் வீரன்ஸ் அணி பேட் செய்ய தொடங்கியது. டிஎன்பிஎல் தொடரின் 3-வது நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் நேரடி ஒளிபரப்பாகிறது.

tnpl1_2987087a.jpg

டிஎன்பிஎல் டி 20 தொடரின் 2-வது நாள் ஆட்டம் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாடகி சின்னப்பொன்னு, பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

http://tamil.thehindu.com/sports/திண்டுக்கலிலும்-டிஎன்பிஎல்-போட்டி-தொடக்கம்/article9035444.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட்டில் வாய்ப்பே அளிக்கப்படாத பாபா அபராஜித் 56 பந்துகளில் சதம் விளாசல்

 

 
பாபா அபராஜித் ஷாட் ஆடும் காட்சி. | படம்: கே.பிச்சுமணி.
பாபா அபராஜித் ஷாட் ஆடும் காட்சி. | படம்: கே.பிச்சுமணி.

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டியில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ் அணி காரைக்குடி காளையர்கள் அணியை வீழ்த்தியது.

இதில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி கேப்டன் பாபா அபராஜித் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 63 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்து திருவள்ளூர் ‘வீரன்’ ஆனார். 56 பந்துகளில் சதம் கண்டார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் முதல் சதம் அடித்த சாதனையையும் பாபா அபராஜித் நிகழ்த்தினார்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துரத்த ஆரம்பித்த திருவள்ளூர் அணி 2-வது பந்திலேயே சி.கணபதியிடம், ஹரி பிரசாந்த் என்பவரை இழந்தது. ஆனால் பாபா அபராஜித் தொடக்கத்தில் சி.கணபதி பந்தில் அளித்த கேட்ச் வாய்ப்பை பத்ரிநாத் தவற விட்டார்.

அபராஜித் அதன் பிறகு புகுந்து விளையாடினார். கே.ஆகாஷ் வீசிய முதல் ஓவரில் 19 ரன்களை விளாசினார் அபராஜித். அபராஜித்துக்கு இன்னொரு வாழ்வும் கிடைத்தது, காரைக்குடி அணியின் எஸ்.அனிருதா இன்னொரு கேட்சை விட்டார்.

சதுர்வேத் என்ற வீரரும், விக்னேஷ் என்ற வீரரும் அவுட் ஆக திருவள்ளூர் 53/3 என்று ஆனது. ஆனால் அபராஜித், சுஜய் என்பவரின் ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்து திருவள்ளூர் அணியின் 80 ரன்களில் 65 ரன்களை இவர் மட்டுமே அடித்திருந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களை பின்னால் சென்று கட், புல்ஷாட்களை ஆடிய அபராஜித், ஸ்பின்னர்களை மேலேறி வந்து தாக்கினார். மற்ற வீரர்கள் நிற்காத போதும் அபராஜித் 81 ரன்களை எடுக்க 14-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது திருவள்ளூர்.

கடைசி 4 ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற நிலையில், சி.கணபதி ஓவரில் அபராஜித் 2 தொடர்ச்சியான சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் 56 பந்துகளில் சதம் கண்டார். கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் அபராஜித் 14 ரன்களை விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றார். கடைசியில் அபராஜித்துக்கு உறுதுணையாக நின்ற மலோலன் ரங்கராஜன் 30 ரன்கள் எடுக்க 18.4 ஓவர்களில் 167/5 என்று திருவள்ளூர் வெற்றி பெற்றது.

காரைக்குடி காளை அணியில் ஆர்.சீனிவாசன் 50 ரன்களையும், எம்.விஜய் குமார் 43 ரன்களையும், ஆர்.ராஜ்குமார் 34 ரன்களையும் எடுத்தனர். அந்த அணி 165/6 என்று நல்ல ஸ்கோரை எட்டியது.

அண்டர் 19 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவில் கலக்கிய பாபா அபராஜித் தமிழகத்திலிருந்து இந்தியாவுக்கு ஆடும் அடுத்த வீரராக இருப்பார் என்று பலராலும் கருதப்பட்டது, இந்நிலையில் ஐபிஎல் வாய்ப்பு அவருக்கு அதன் முதற்படியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வான பாபா அபராஜித் 3 ஆண்டுகளாக ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பளிக்கப்படாமல் வெறுப்பேற்றப்பட்டார்.

ஆனால் இவரது விதி நிழலாய் பின் தொடர அதே தோனி தலைமையில் கடந்த ஐபிஎல் போட்டிகளில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தேர்வானார். ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. கடைசி ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே அணி கடுமையாக தோல்விகளைச் சந்தித்த போதும், பலர் காயமடைந்து விலகிய போதும் ஏனோ தோனியின் பார்வை அபராஜித் பக்கம் செல்லவில்லை. 4 ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தமிழ்நாடு பிரிமியர் லீகில் அபார சதம் எடுத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-கிரிக்கெட்டில்-வாய்ப்பே-அளிக்கப்படாத-பாபா-அபராஜித்-56-பந்துகளில்-சதம்-விளாசல்/article9036366.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.