Jump to content

தெற்கின் எடுபிடிகளாக எம்மை மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!


Recommended Posts

Wigneswaran-e1463146532166-2.jpg

வடக்கு மாகாண அபிவிருத்திக்கான கணிப்புப் பற்றிய கூட்டம் திரு. பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சந்திரிக்காவின் செயலணியின் செயலாளர் போன்றோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே வடக்கு மாகாண முதலமைச்சரை உரையாற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் உரையில் தெரிவித்திருப்பதாவது,

2003ல் ஒரு தேவைகள் கணிப்பு நடைபெற்றது. பின்னர் 2004ல் சுனாமியும் 2009ல் போரின் முடிவுக்கட்டமும் பல விதமான பாதிப்புக்களையும் அழிவுகளையும் கொண்டு வந்தன.

எனவே புதியதொரு கணிப்பு நடைபெறுவது அவசியமாகிறது.2010ல் பாக்கிஸ்தானில் கைபர் கணவாய் சார்ந்த இடத்தில் இவ்வாறான கணிப்பொன்று நடந்தது.

அதில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஈடுபட்டது. இங்கும் ஐக்கிய ஒன்றியத்தை அழைப்பது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

அந்தக் கூட்டத்தில் சமஷ்டி உரித்து வழங்கப்பட்ட ஆதிவாசிகளின் மாகாண அரசாங்கமும் முழுமையாகப் பங்கேற்றது. இதேபோல் இந்தக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தையும் எமது வடமாகாண சபையையும் உள்ளடக்கி கணிப்பைச் செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

எம்முடன் கலந்துறவாடாது இப்பேர்ப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எம்மீது உங்கள் கருத்துக்களைத் திணிப்பதாக அமையும்.

இதனால்த்தான் எம்மக்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து இவ்வாய்வைக் கொண்டு நடத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

பாகிஸ்தானிய செயற்திட்டத்தின் போது 4 கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

முதலாவது, நாட்டரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை வளர உதவி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, வேலைவாய்பை உருவாக்கி வாழ்வாதார சந்தர்ப்பங்களை உருவாக்கல்.

மூன்றாவது மக்களின் ஆதார வசதிகளைக் கொடுத்துதவுதல்.

நான்காவது தீவிரவாதத்தைத் தடுக்க நல்லிணக்கத்தை உருவாக்குதல். இவற்றை வைத்தே பாகிஸ்தானில் தேவைகள் பற்றிய கணிப்பில் இறங்கினார்கள்.

எமது கணிப்பு பற்றிய விரிவெல்லையை நிர்ணயிக்கும் இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட விடயங்களை நாங்கள் கருத்திற்கெடுத்தல் நன்மை பயக்கும்.
எமது மக்களின் நம்பிக்கையைப் பெற உங்கள் வினைத்திறனான செயற்பாடு உதவியளிக்கும். வேலையில்லாதோரின் விபரங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நீங்கள் உதவி செய்யலாம்.

மக்களின் ஆதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வழிவகுக்கலாம். நல்லெண்ணத்தை உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு உதவி புரியும்.

ஆகவே முன்னெச்சரிக்கையுடன் கணிப்பின் விரிவெல்லையை நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறான கணிப்பு தொடர்ந்திருக்கக் கூடிய அபிவிருத்தியை உறுதிப்படுத்த வேண்டும். பல்விதமான போரினால் உண்டாக்கப்பட்ட பௌதீக ரீதியான, மனோரீதியான பாதிப்புக்களை நீங்கள் கண்டறிய வேண்டும்.

அவற்றில் இருந்து எம்மக்களை காப்பாற்றி வழிநடத்தத் தேவையான செயற்திட்டங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட எம் சமூகத்தின் மிகப் பலவீனமான அலகுகளை உள்ளடக்கியதாக மேற்படி செயற்திட்டங்கள் அமைய வேண்டும்.

இவற்றிற்கான அடிப்படை தரவுகள் சரியன முறையில் கண்டறியப்பட வேண்டும். முன்னர் தயாரிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் தரவுகள் பிழையானவை.

உதாரணத்திற்கு விதவைகளைத் தமது கணவன்மார்கள் போரினால் இறந்தார்கள் என்று சொல்ல வேண்டாம் என்று அலுவலர்கள் நிர்ப்பந்தித்ததனால் விதவைகள் 7000க்கு மேல் என்றும், இயற்கை மரணம் எய்தியோர் 29000 என்றும் கூறப்பட்டுள்ளது.

புள்ளி விபரங்கள் பொய் விபரங்களாக அமையக் கூடாது. மக்களின் அடிமட்டத்தில் இருந்து உண்மையான தரவுகள் பெறப்பட வேண்டும்.

2003ல் தயாரிக்கப்பட்ட தேவைகள் கணிப்பில் மீள்குடியேற்றம், சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, கட்டுமானங்கள், விவசாயம், வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும். மேலும் ஆற்றல் அபிவிருத்தியும் நிர்வாகச் சீரமைப்பும் போன்ற விடயங்கள் கணக்கிற்கு எடுக்கப்பட்டன.

அதன் பின் நடைபெற்ற பாதிப்புக்கள் யாவும் கணக்கிற்கு எடுக்கப்பட வேண்டும்.நிரந்தரமான சகலரையும் உள்ளடக்கி முன்னேறும் அபிவிருத்தியே எங்கள் எதிர்பார்ப்பு.

எமது வளங்கள் சூறையாடப்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுற்றுலாத்துறையில் பிராந்திய ரீதியில் பெருந்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும்.

எமது வாழ்விடங்கள் விவசாயம், மீன்பிடி என்ற இருவித தொழில்களுடன் பாரம்பரியமாகப் பரீட்சயப்பட்ட பிராந்தியமாகும். அவற்றை மையமாக வைத்து கைத்தொழில்கள் நடாத்தப்பட வழிவகுக்க வேண்டும்.

சிறிய மத்திய தொழில் முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. பாரிய தொழிற்சாலைகள் பாரிய கட்டிடங்கள் ஆகியன எமது நில அமைப்புக்கும், கலாசார பின்புலத்திற்கும் ஒவ்வாதன என்பதே எமது கணிப்பு.

அவை பற்றி ஆராயுங்கள். கூட்டுறவு அடிப்படையில் தொழில் முயற்சிகளும் கைத்தொழில்களும் நடப்பது உசிதம் என்றே நாம் நம்புகின்றோம்.

மேலும் எம் இளைய சமுதாயத்தின் திறன்களை அவதானிக்கும் போது தகவல் தொடர்பு சம்பந்தமான தொழில்கள், காரியாலய பின்னணி வசதிகள் ஏற்படுத்தல் (Back office facilities), பொருளாதாரத் துறைசார்ந்த தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தலை அவர்கள் வரவேற்பார்கள் என்று எண்ண இடமுண்டு.

எமது தேவைகள் சம்பந்தமான கணிப்பாய்வை ஐக்கிய நாடுகள் சென்ற வருடம் வெளிக்கொண்டு வந்த 2015ம் ஆண்டுக்குப் பின்னரான தொடர் அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் ஏற்பாடுகளுக்கு அமைய கொண்டு நடத்துவது நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன்.

இதை உசாத்துணையாக வைத்து முன்னேறுவது நல்லது.எம்மைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தைத் தற்போதைய பலவீன நிலையில் இருந்து எழுப்பி மற்றையவர்களுக்கு ஈடாக நிமிர்த்தி வைப்பதே குறிக்கோள்.

அபிவிருத்திப் பணியில் எமது புலம்பெயர் மக்கள் பிரதானமான பங்கினை ஆற்ற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

தனியார் முதலீடுகளை நாம் வரவேற்கின்றோம். ஆனால் எம்மைப் பிடித்து விழுங்கும் நோக்குடன் எவரும் எம்மிடம் வருவதை நாம் வரவேற்க மாட்டோம். எம்மைத் தெற்கின் எடுபிடிகளாக மாற்றப் பார்ப்பதை நாம் வரவேற்க மாட்டோம்.

எமது அலுவலர்கள் பலர் மேலிடத்து ஆணைகளை நடைமுறைப்படுத்துபவர்களாகவே சென்ற முப்பது வருடங்களாக இயங்கி வந்துள்ளார்கள்.

புதிய ஜனநாயக சூழலில் தாமாகவே சிந்தித்துச் செயலாற்றும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்க நீங்கள் முன்வர வேண்டும். எமது தொழிற்திறன் அபிவிருத்திக்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும்.

துறைசார்ந்த விடயங்கள் சம்பந்தமாக எம் அமைப்புக்களால் தரப்பட்டவை என் வசம் உள்ளன. ஆனால் அவை இத்தருணத்தில் உங்களுக்குத் தேவையற்றவை என்பதை உணர்கின்றேன்.

எனவே கடைசியாக எமது எதிர்பார்ப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.எம்முடன் கலந்தாலோசித்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

எனது அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறி வைக்கின்றேன். எமது இந்த தேவைகள் கணிப்பு திறம்பட நடந்தால் சர்வதேச பல்நிறுவன செயற்திட்டம் ஒரு வெற்றித் திட்டமாக அமையும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

எமது வடமாகாணத்தை உங்களது வெற்றியின் சின்னமாக நீங்கள் எடுத்துக் காட்டலாம். நாங்கள் உங்களுக்கு சகல உதவிகளையும் நல்க காத்து நிற்கின்றோம்.

2015க்குப் பின்னரான தொடர் அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலுக்கு சமாந்தரமாக உங்கள் கணிப்பாய்வை நடைமுறைப்படுத்திச் செல்வது நன்மை பயக்கும்.

ஜெனிவா ஒன்றிணைந்த பிரேரணையின் ஏற்பாடுகளையும் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகின்றேன்.

போர்க்குற்ற விசாரணை முறையாக நடந்தேறினால்த்தான் சமூக நல்லிணக்கத்தை எங்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

அதிகாரப் பரவல் எமது மக்களுக்கு நன்மை பயப்பதாய் அமைய வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும்.

அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தால்த்தான் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

அவ்வாறான நம்பிக்கை பிறக்க உங்கள் தேவைகள் கணிப்பாய்வு உதவி செய்வதாக எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=38800

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் துணீந்தவர்...நல்ல பேச்சு....நீண்ட காலம் வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும் சுமந்திரனும் விக்கி ஐயாவிடம் பாடம் எடுத்துவிட்டுத்தான் இதற்கான கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.
திணிப்பு என்பது தமிழரின் எதிர்காலத்தை கெள்விக்குறியாக்கிவிடும் என்பதை புரியாதவர்களுக்கு விக்கி அய்யாவின் உரை ஒரு பாடமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

சம்பந்தரும் சுமந்திரனும் விக்கி ஐயாவிடம் பாடம் எடுத்துவிட்டுத்தான் இதற்கான கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.
திணிப்பு என்பது தமிழரின் எதிர்காலத்தை கெள்விக்குறியாக்கிவிடும் என்பதை புரியாதவர்களுக்கு விக்கி அய்யாவின் உரை ஒரு பாடமாக இருக்கும்

சரியான கருத்து... வாத்தியார். :)

Link to comment
Share on other sites

தற்போது தாயக தமிழர்களின் நம்பிக்கைத் தாரகையாக திகழும் சிலரில் முதன்மையானவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதுரியமாக காய்களை நகர்த்தி

இவற்றை எமது மக்களுக்கு நன்மை தருமாறு பாவிக்கவேண்டும் ஐயாக்களே.....

உங்களை நம்பித்தான் தமிழர்கள் உள்ளார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சாதுரியமாக காய்களை நகர்த்தி

இவற்றை எமது மக்களுக்கு நன்மை தருமாறு பாவிக்கவேண்டும் ஐயாக்களே.....

உங்களை நம்பித்தான் தமிழர்கள் உள்ளார்கள்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.