Jump to content

'யாழில் இளைஞர்கள் நிலை மோசமானது'


Recommended Posts

article_1471932572-daklas.jpg

 

இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். புத்திஜீவிகள் குழுவினர், திங்கட்கிழமை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,

போதைப்பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது மாறியுள்ளது. குறிப்பாக, கேரள கஞ்சா யாழ். குடாநாட்டின் ஊடாக அதிகளவில் கடத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் தொடர்ந்தும் இவற்றைக் கைப்பற்றி வருவதாகவும், சந்தேகநபர்களைக் கைதுசெய்து வருவதாகவும் கூறுகின்ற நிலையிலும் மேற்படிக் கடத்தல்கள் குறைந்தபாடில்லை.

எமது மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதித்துறை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகளின் மூலம் தெரியவருகிறது.  

எம்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறோம் எனக் கூறிக்கொண்டு இவர்கள் எமது மக்களைச் சீரழிக்கும் இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டும், ஈடுபடும் பிற நபர்களை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

பொலிஸாரினால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற பகுதிகளைப் பார்க்கின்றபோது, அப்பகுதிகளிலேயே அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதுடன், குறிப்பாக கல்வி நிறுவனங்களை அண்மித்த பகுதிகளாக இவை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, இவ்வாறான போதைப்பொருள் விற்பனைகள் எமது இளம் சந்ததியினரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. எனவே, இதனைத் தடுக்கும் முயற்சியில் பொலிஸார் மட்டுமே ஈடுபடுவர் என இருந்துவிடாது, எமது சமூக நலன்சார் அமைப்புகள், புத்திஜீவிகள், சமய மற்றும் சமூகப் பெரியார்கள் அனைவரும் ஈடுபட வேண்டுமென்றும், பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

http://www.tamilmirror.lk/180253/-ய-ழ-ல-இள-ஞர-கள-ந-ல-ம-சம-னத-

Link to comment
Share on other sites

ஐயா டக்லசு, நீங்கள் மண் கொள்ளையடித்து மணல் சுவர்களை தகர்த்துவிட்டதால், பொருட்களை உள்ளே கொண்டுவருவது சுலபமாகி விட்டது. :rolleyes::unsure: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.