Jump to content

Recommended Posts

அண்மையில் உகாண்டா ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வித்தியாசமான அனுபவம் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

உகாண்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் அறை வரைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அழைத்து சென்ற VIP வாகனத்தில் அவருடன் லொஹான் ரத்வத்தேயும் பயணித்துள்ளார்.

வேகமாக பயணித்த அந்த வாகனத்திற்கு முன்னால் எதிர்பாராத விதமாக பாதை மாறிய ஒருவர் மோதுண்டுள்ளார். சம்பவத்தை பார்த்த மஹிந்தவுக்கு வியர்வை கொட்டிய நிலையில், உரத்த குரலில் சிங்களத்தில் “டேய் ஒரு மனிதன் அடிப்பட்டு விட்டான்.... வாகனத்தை நிறுத்துடா.... என கூச்சலிட்டுள்ளார்.

எனினும் வாகனத்தின் சாரதி மற்றும் பாதுகாப்பாளர்கள் எதுவும் நடைபெறாததனை போன்று சாதாரண முறையிலேயே பயணிதுத்துள்ளனர்.

இதன் போது “உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு மோதுண்ட நபர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவும்...” என லொஹான் ரத்வத்தே ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.

VIP வாகனத்தில் யாராவது மோதுண்டால் இந்த நாட்டில் அதனை யாரும் கண்டுக்கொள்வதில்லை என சாரதி மற்றும் பாதுகாப்பாளர்கள் சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளனர். VIP களுக்கு எதிராக இந்த நாட்டில் நடவடிக்கை எடுத்த முடியாதென தெரிவித்துள்ளனர்.

அவ்வாறாக கூறி 2 நிமிடங்களுக்குள் மேலும் ஒருவர் இந்த வாகனத்தில் மோதுண்டுள்ளார். அதற்கு எதுவும் கூறாத மஹிந்த மற்றும் லொஹான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் முகங்களை பார்த்துக் கொண்டுள்ளனர்.

பின்னர் ஹோட்டல் அறையில் இறங்கிய மஹிந்தவிடம் “என்ன தான் இருந்தாலும் இது சிறப்பான நாடு சேர்...” என லொஹான் கூறியுள்ளார். அதற்கு மஹிந்த எவ்வித பதிலும் கூறவில்லை.

உகாண்டாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் நாள் அன்று மஹிந்தவின் அருகில் வந்த லொஹான் ரத்வத்தே,

”சேர்.. தற்போது உங்களுக்கு இராணுவ பாதுகாப்பும் இல்லை என்பதனால் நான் இந்த 10 பாதுகாப்பாளர்களிடம் கதைத்து தங்களின் பாதுகாப்பிற்காக இலங்கைக்கு செல்லுமாறு கூறினேன். அவர்களும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சேர் என்ன கூறுகின்றீர்கள்?....” என அவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனம் காத்தார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/security/01/114771

Link to comment
Share on other sites

Quote

அவ்வாறாக கூறி 2 நிமிடங்களுக்குள் மேலும் ஒருவர் இந்த வாகனத்தில் மோதுண்டுள்ளார். அதற்கு எதுவும் கூறாத மஹிந்த மற்றும் லொஹான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் முகங்களை பார்த்துக் கொண்டுள்ளனர்.

நாங்களும் குண்டுகளை அப்பாவிகள் மீது வீசி எறிந்தோம். இது சிங்களவருக்கு கைவந்த கலை என்று ஏன் சொல்லவில்லை எனில் இருவரும் இனவாத சிங்களவர் என்பதால் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடு.... வி.ஐ. பி. என்றால் என்ன கொம்பா முளைத்திருக்குது.
மனச் சாட்சிப் படியாவது அவரின் வைத்திய செலவுக்கு பணம் கொடுத்தோ அல்லது வைத்திய சாலையில் சேர்ப்பிக்க வேண்டிய வேலைகளை செய்திருக்க வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நல்ல நாடு.... வி.ஐ. பி. என்றால் என்ன கொம்பா முளைத்திருக்குது.
மனச் சாட்சிப் படியாவது அவரின் வைத்திய செலவுக்கு பணம் கொடுத்தோ அல்லது வைத்திய சாலையில் சேர்ப்பிக்க வேண்டிய வேலைகளை செய்திருக்க வேண்டாமா?

யாரு கிட்ட...

மகிந்த... சுனாமி அலையில் நிர்கதியானவர்களுக்கு வந்த பணத்தினை , ஹெல்பிங் அம்பந்தோடட என்ற பெயரில் ஆடடையை போட்டவர்....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.