Jump to content

மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ranil-maithri-cbk-y.k.sinha_-300x196.jpg

அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர்.   முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார்.

டி.எஸ்.சேனநாயக்கவின் பின்னர் பண்டாரநாயக்க பிரதமராகியிருந்தால், சேனநாயக்கவைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்க பெற்றிருப்பார். இது நடந்திருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காது.

எனினும், நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த டி.எஸ் தனது மகனான டட்லி சேனநாயக்கவை அடுத்த பிரதமராக்க வேண்டும் எனக் கனவு கண்டிருந்தார். இந்த விடயத்தில் பண்டாரநாயக்கவின் பிரதமர் ஆசையைத் தவிடுபொடியாக்குவதற்கான தனது திட்டத்திற்கு டி.எஸ்.சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவலவை பயன்படுத்தினார்.  தனக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களை அறிந்து கொண்ட பண்டாரநாயக்க அரசாங்கத்தை விட்டு விலகினார்.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை  2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்த மைத்திரி மற்றும் ரணில் ஆகியோரால் அரசியல் யாப்பில் அல்லது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலுடன் ஒப்பீடு செய்து கொள்ள முடியும்.

வெள்ளையர்களிடமிருந்து நாட்டின் ஆட்சியைத் தமது அதிகாரத்திற்குள் கொண்டு வரும் நோக்குடன் 1947ல் இடம்பெற்ற தேர்தலில் சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்க ஆகியோர் ஓரணியில் இணைந்து கொண்டனர். இதேபோன்று மகிந்தவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக 2015ல் மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் ஓரணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தான் பெற்றுக்கொள்வேன் என்று மைத்திரி துளியளவும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதிபர் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்ற பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் மைத்திரி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரி ஏற்றுக்கொள்ளா விட்டிருந்தால் அல்லது  கட்சியின் அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாதிருந்தால், எந்தவொரு அதிகாரங்களும் இல்லாத ஒரு அதிபராக மைத்திரி விளங்கியிருப்பார்.

அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்திருக்காவிட்டால், மைத்திரி தனது பதவிக்காலம் முடியும் போது ஓய்வுபெற வேண்டும். இதன் காரணமாகவே, அதிபராகப் பதவியேற்ற அன்றைய நாள் தான் மீண்டும் அதிபர் பதவிக்காகப் போட்டியிட மாட்டேன் என மைத்திரி தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்தே மைத்திரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அண்மையிலும் மைத்திரி அறிவித்திருந்தார்.

அரசியல் யாப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், இனிவருங் காலங்களில் அதிபர் தேர்தல் என்பது இடம்பெற மாட்டாது. பொதுத்தேர்தல் மட்டுமே இடம்பெறும். ஆனால் தான் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவே அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்காக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் போட்டியிடுவார்களா? 2015 அதிபர் தேர்தலில் மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளைத் தமக்கிடையே பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்ட போது, அடுத்த பொதுத் தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பாக இவர்களுக்கிடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவில்லை எனின் அது ஆச்சரியமளிக்கக் கூடிய விடயமாகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில் மைத்திரி எந்தவொரு எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கவில்லை எனின், இவ்விரு தலைவர்களும் அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வருதல் மற்றும் அதிகாரமற்ற அதிபர் பதவியை மைத்திரி ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட பிரதமர் பதவிக்கு ரணிலைத் தெரிவு செய்தல் மற்றும் அடுத்த பொதுத்தேர்தல் தொடர்பாக எவ்வாறான உடன்படிக்கையை மேற்கொண்டிருப்பார்கள். இந்தச் சூழலானது தற்போது மாற்றமடைந்துள்ளது.

ராஜபக்சாக்கள் ஐ.தே.க மேடைகளில் ஏறினால், மைத்திரி அடுத்த அதிபர் தேர்தலில் அல்லது பொதுத்தேர்தலில் போட்டியிட்டால், ராஜபக்சக்களின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதும் கூட்டு எதிர்க்கட்சியை அழிப்பதுவுமே மைத்திரியின் முதலாவது பணியாக இருக்கும். இதன் பின்னர் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.

இது இடம்பெறாவிட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக மைத்திரி போட்டியிடும் அதேவேளையில், மகிந்த அல்லது அவரது பெயரால் கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து யாராவது போட்டியிட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் பிரிக்கப்படும். மைத்திரி, ரணில் அரசாங்கத்தின் ஆட்சியைக் கலைத்து விட்டு பிரதமராக வேறொருவரை நியமித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைத்தால், ராஜபக்சக்களின் அரசியல் அத்துடன் முடிவிற்கு வரும்.

இது நடந்தால், கூட்டு எதிரணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மைத்திரியின் பின்னால் அணிவகுப்பார்கள். இவர்கள் அரசாங்கத்திற்குள் உள்ளெடுக்கப்படுவார்கள்.

இதன்பின்னர் ராஜபக்சக்கள் ஐ.தே.க சார்பாகப் போட்டியிட்டால் அது தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. 1982 பொதுத் தேர்தலில், பசில் இதனைச் செய்தார். 1982 பொதுத் தேர்தலில் அனுரா வேட்பாளராகப் போட்டியிடுவதை உறுதிப்படுத்துவதற்காக பசிலும் மகிந்தவும் முயற்சி செய்தனர். எனினும், விஜய-சந்திரிக்கா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்றதுடன் கொப்பேக்கடுவவை வேட்பாளராக நியமித்தது. இதன் பின்னர் கொப்பேகடுவவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மகிந்த மற்றும் பசில் முன்னெடுத்தனர்.

திருமதி பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சேனநாயக்கவிற்கு இடையில் ‘கை’ சின்னத்தைப் பெற்றுக் கொள்வதில் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றதால் கொப்பேகடுவவால் ‘கை’ சின்னத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. கொப்பேகடுவ ‘கை’ சின்னத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, விஜய-சந்திரிக்கா கூட்டணி மற்றும் இலங்கரட்ன ஆகியோர் தினேசிற்குச் சொந்தமான ‘சக்கரம்’ சின்னத்தின் கீழ் கொப்பேகடுவ போட்டியிடுவதற்கான பேச்சுக்களை நடத்தினர். கொப்பேகடுவவிற்க ‘சக்கரம்’ சின்னத்தை தினேஸ் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக தினேசைச் சந்திப்பதற்காக மகிந்தவை அனுரா அனுப்பினார்.

1982 அதிபர் தேர்தலில், ;றுகுணு பெரமுன’ என்கின்ற அமைப்பை ராஜபக்சக்கள் உருவாக்கியதுடன் இதன்மூலம் ஜே.ஆர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கொப்பேகடுவவிற்குத் தோல்வியை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளை முன்னெடுத்தனர். அந்தவேளையில், மகிந்த, பசில் மற்றும் ஏனையோர் அனுராவைத் தம்வசப்படுத்தி தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க முனைந்தனர். அனுரா இதற்கு இணங்கவில்லை. மகிந்தவும் விடவில்லை.

எனினும், 1982ல் ஐ.தே.க ஆட்சிக்காலத்தை ஆறு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்ற போது தனது ஆதரவை வழங்குவதற்காக பசில், ஐ.தே.க வுடன் இணைந்தார். பசில், ஐ.தே.க மேடைகளில் உரையாற்றினார். தனது நன்றியைத் தெரிவிப்பதற்காக மகாவலி அமைச்சர் காமினி திசநாயக்க, பசிலுக்கு தனது அமைச்சுப் பதவியை வழங்கினார். மகிந்தவுடன் பேச்சுக்களை நடாத்துவதற்காகவே பசில் இந்த ஆட்டத்தில் ஈடுபட்டார். ஆகவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரி ஒன்றாக இணைத்தால், ராஜபக்சக்கள் ஐ.தே.கவுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

எனினும், மைத்திரி-ரணில் அரசாங்கம் கலைக்கப்படும் என்பதை நாங்கள் கற்பனை செய்ய முடியாது. ரணிலுடன் இணைந்து மைத்திரி அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால், மைத்திரியால் ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக அதிபர் பதவியும் ஒழிக்கப்பட்டால் மைத்திரி எதிர்க்கட்சிக்குத் தாவவேண்டிய நிலை தான் ஏற்படும். இதன்பின்னர் ராஜபக்சாக்களின் அரசியல் முடிவிற்கு வரும்.

மைத்திரி எதிர்க்கட்சி உறுப்பினரானால், எதிர்க்கூட்டணியிலுள்ள பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மைத்திரியால் பெறமுடியும். நிறைவேற்று அதிபர் முறைமை ஒழிக்கப்பட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் ரணில் அரசாங்கத்தைத் தோற்கடிப்பது அவ்வளவு கடினமானதல்ல என்பதை மைத்திரி அறிவார். இதன்பின்னர் ரணில் மற்றும் ஐ.தே.க ஆதரவுடன் தான் மைத்திரி அதிபரானார் என்கின்ற குற்றச்சாட்டிலிருந்தும் மைத்திரியால் தப்பித்துக் கொள்ள முடியும். இதன் பின்னர் மைத்திரியால், ரணில் மற்றும் ஐ.தே.க அரசாங்கத்தை முற்றாக அழிக்க முடியும்.

எனினும் ரணிலைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை மைத்திரி முன்னெடுப்பார் என்பதை நம்பமுடியாது. ‘அன்னம்’ சின்னத்திலேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அல்லது அதிபர் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்திரிக்கு கோபத்தை ஏற்படுத்தாது இந்த ஆட்டம் விளையாடப்பட்டால், மைத்திரி அல்லது ரணில் அரசியலை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இவர்கள் அரசியலிலிருந்து வெளியேறுவதுடன், அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டால், அதிகாரம் எதுவுமற்ற அதிபர் பதவியானது ரணில் அல்லது மைத்திரி ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படாத அதிபராக மைத்திரி பதவியேற்பார் எனவும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில், நிறைவேற்று பிரதமராகப் பதவிவகிப்பதற்கு மைத்திரி உதவுவார் எனவும் ஐ.தே.க உறுப்பினர்கள் கருதுகின்றனர். எனினும், பொதுத் தேர்தலானது முற்கூட்டி நடத்தப்பட்டால், மைத்திரி சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்துக் கொள்வார் என மைத்திரிக்குச் சார்பான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

இவ்விரு தீர்மானங்களில் எது நிறைவேறினாலும் கூட, இதில் வெளிநாடுகள் தலையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் உச்சமாகக் காணப்படுகின்றன. சிறிலங்காவைச் சீனாவின் கொலனித்துவமாக மாற்ற முயற்சி செய்த ராஜபக்ச மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முற்படுவதால், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இது ஒரு சவாலாக இருப்பதே வெளிநாடுகளின் தலையீட்டிற்கான காரணமாகும்.

ஆங்கிலத்தில்  – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்        – சிலோன் ருடே
மொழியாக்கம்  – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2016/08/19/news/18015

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.