Jump to content

கனடாவில் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் தேடப்படும் இலங்கை பிரஜை??


Recommended Posts

பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தேடப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளதாக சீ.டி.வி டொரண்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபரின் பெயர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இவர் டொரண்டோ பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்டர்போல் சிவப்பு பட்டியல் 2010ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயங்கரவாதம் என்ற பட்டியிலில் “ரவிசங்கர் கனகராஜா” என்ற 43 வயதுடைய இலங்கை பிரஜையை பற்றி வெளியிட்டுள்ளது.

இதேவேளை ரவிசங்கர் கனகராஜா தொடர்பிலான இந்த அறிக்கை தற்போது இன்டர்போல் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் இந்தக் குற்றச்சாட்டிற்காக 30 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் ரவிசங்கர் பயங்கரவாத குழுவின் தலைவர் என இலங்கை அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரவிசங்கரின் சகோதரனின் மனைவி தற்போது கிச்னர் பகுதியில் தனது கணவனுடன் வாழ்ந்து வருகின்றார் என்றும், ரவிசங்கரைத் தொடர்புகொள்ள பல முறை முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என்றும் அவரது சகோதரனின் மனைவி சீ.டி.வி டொரண்டோவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சீ.டி.வி டொரண்டோ அவரது வழக்கறிஞர் கோப்லன்டிடம் தொடர்புக் கொண்ட போது,

“அவர் தற்போது கனேடிய குடியுரிமை பெற்றுள்ளார். இருப்பினும் எந்த சூழ்நிலையின் காரணமாக இவர் கனேடிய குடியுரிமை பெற்றார் என்றும் அவர் வேறு பெயரை பயன்படுத்தியுள்ளாரா என்று தனக்கு தெரியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனகராஜா வழக்கு தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் தகவல் தர மறுத்துள்ளனர் என வழக்கறிஞர் கூறினார். மேலும், பயங்கரவாதத்தின் கீழ் ரவிசங்கரை கைது செய்ய திர்மானித்துள்ளனர். ஆனால் இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல எனவும் அவரை பயங்கரவாதி என கூற முடியாது என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த கதை தொடர்பான பேட்டிக்கு கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரல்ப் குடேல் மறுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்கின்றதாக கருதப்படும் ரவிசங்கர் கனகராஜாவை இது வரையில் இனங்காணவில்லை எனவும் சீ.டி.வி டொரண்டோ தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி- http://toronto.ctvnews.ca/man-accused-of-terrorist-activities-lives-just-outside-gta-as-canadian-citizen-1.3034499

- See more at: http://www.canadamirror.com/canada/68140.html#sthash.lQ4Shymy.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.