Jump to content

புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது

இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது.

புலத்தில் உறவுகள் யாருமற்றநிலையில் இவரது இறப்பு சம்பந்தமாக

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து

அது சம்பந்தமான அரச மற்றும் சட்ட நிர்வாகம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தததும் 
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அவரது இறுதி அடக்கம் சம்பந்தமான சகல விடயங்களையும் ஒழுங்கு செய்திருந்தது.

ஊரவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எமது சகோதரர் ஒருவருக்கு செய்யவேண்டிய அத்தனை கிரிகைகளும் முறைப்படி செய்யப்பட்டு 
வந்திருந்தவர்களால் கற்பூரம் சாம்பிராணி ஏற்றப்பட்டு பூக்கள் தூவப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு
அஞ்சலிகள் செய்யப்பட்டு இறுதியாக தேவாரம் பாடப்பட்டு

வருகை தந்திருந்த ஒன்றிய நிர்வாகிகளால் தோளில் சுமந்து அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

இவரது கிரியைகள் முடிவடைந்ததும் அவரது அஷ்டி (சாம்பல்)

தாயகத்தில் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இவை அனைத்துக்குமான செலவான 2607 € 20 களை 
இது போன்ற அசாதாரண நிலைமைகளில் வழமையாக செய்வது போல்

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகள் குழு தமது சொந்த விருப்பத்தின் பேரில்

தம்மால் முடிந்த பங்களிப்புக்களை செய்து தம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் முழுமையான அறிவித்தல்கள் தொலைபேசி அழைப்புக்கள்

மற்றும் லா சப்பலில் நோட்டீசும் ஒட்டப்பட்ட போதும்
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகளும்

பாரதி விளையாட்டுக்கழகமும்

மரணமடைந்தவரின் இரு நண்பர்களுமே இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

தகவல் - 
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Gnanasegaran_01_4.jpg

தகவல் - Photo de Kugathasan Subramaniam.
FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

 
Photo de Kugathasan Subramaniam.
Photo de Kugathasan Subramaniam.
Photo de Kugathasan Subramaniam.
J’aimeAfficher plus de réactions
CommenterPartager
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 

இந்த இக்கடடான நேரத்தில் உதவி செய்த FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.