Jump to content

விலகுவது கடினம் ஆனால் …


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விலகுவது கடினம் ஆனால் …

IMG-20160720-WA0007திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து அவ்வாழ்வை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சிலர் குழந்தைகள் பொருட்டு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் தொடர்ந்து இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளை விவாகரத்து என்கிற அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். உண்மையில் இது மிகத் தவறான கருத்துநிலையாகும்.

நீங்களே உதாரணமாகி வழிநடத்துகிறீர்கள்

விவாகரத்து நமது சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓர் உண்மைதான் என்றாலும், மல்லுக்கட்டிக்கொண்டு தொடர்ந்து வாழ்தல் என்பது மீதமுள்ள வாழ்வை சேதப்படுத்துவதோடு குழந்தைகளையும் பாதிக்கும். முதலில் மனம் ஒவ்வாத ஓர் உறவை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டுவதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகத்தவறான முன்மாதிரி ஆகிறீர்கள். இணையருடன் அன்பில்லாமல் இருப்பது, வெறுப்பைக் காட்டுவது போன்றவை திருமண வாழ்வில் சகஜமானது என உங்களது சிறு குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள். இதன்மூலம் எதிர்பார்ப்பதைவிட குறைந்த அளவே மகிழ்ச்சி இவ்வுலகில் சாத்தியப்படும் என அவர்களுக்கு மறைமுகமாக நீங்கள் கற்பிக்கிறீர்கள். உங்கள் இணையர்மீது நீங்கள் செலுத்தும் உடல், மனம் அல்லது உணர்வு ரீதியிலான எவ்வகை துன்புறுத்தலாக இருந்தாலும் சரி, அதைப்பார்க்கும் உங்கள் குழந்தைகள் எப்போதும் வன்முறைக்கு எதிராக எழுந்து நிற்கக்கூடாதென மறைமுகமாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் உறவுகள் சார்ந்தும் திருமண வாழ்வு சார்ந்தும் ஆரோக்கியமற்ற, நம்பிக்கையற்ற தன்மையையும் அவர்களுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள்.

 

நீங்கள் ஒரு கொடிய பெற்றோராக மாறுகிறீர்கள்

மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் இருப்பது உங்கள் மன அழுத்தத்தை உயர்த்தி, உங்கள் ஊக்கத்தைக் கொன்றுவிடும். காரணம் உங்கள் திருமண வாழ்வு இனியும் மகிழ்வளிப்பதாக இல்லாததுதான்.

பெரும்பாலானவர்கள் தங்களது மன அழுத்தத்தைச் சமாளிக்க குடும்பத்திலிருந்து தங்களை விலக்கிக்Arunan கொள்கிறார்கள். அதிக நேரம் வேலை இடத்தில் இருப்பதன் மூலமாகவோ அல்லது வெளியில் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலமாகவோ – இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதன் மூலம் தங்களது இணையரைத் தவிர்க்கிறார்கள்.  இப்படியே படிப்படியாக தங்களது குடும்பப் பொறுப்புகளையும் இழக்கிறார்கள். இதில் பெரிதும் பாதிப்படைவது குழந்தைகளே. காரணம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் ஒன்றுசேர்ந்த கடமையாகும்.

பெற்றோர்களிடையே ஒத்துழைக்க மறுப்பு உண்டாகும்போது, சரியான பேச்சுவார்த்தை இல்லாதபோது தொடர்ந்து அவர்கள் நல்ல பெற்றோர்களாக இருப்பது எப்படி சாத்தியமாகும்?

நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமே அவர்கள் என்னவாக வளர்கிறார்கள் என்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அவர்கள் வளரும் சூழலே அவர்களை உருவாக்குகிறது. எனவே, உங்கள் இணையருக்கும் உங்களுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களும் சண்டைச்சச்சரவுகளும்  குழந்தை வளர்ப்பில் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. மாறாக, குழந்தைகளின் வளர்ச்சியில் பாதகத்தையே உண்டுபண்ணும். வெளிப்படையாக சொல்வதென்றால் இம்மாதிரியான சூழலில் உங்கள் குழந்தை நம்பிக்கை, சுயமரியாதை குன்றியவராகவுமே வளருவர்.

வீடு என்பது இல்லமல்ல

தம்பதிகளுக்கு இடையில் காதல் வற்றிவிடும்போது அவர்கள் குடும்பத்தில் முழுமனிதராய் இருப்பதில்லை. பேச்சு, காதல், மரியாதை என அனைத்தும் குறைந்து விடுகிறது. குடும்பம் என்பதற்கான உண்மையான அர்த்தம் நீர்த்துப்போய் குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து இணக்கமான உறவை உணராமல் போகின்றனர். இது அவர்களுக்குள் குழப்பம், அழுத்தம் மற்றும் காயத்தை உண்டாக்கி உணர்வுக்குள் தீராத வடுக்களையும் கொடுத்துவிடும்.

உங்கள் திருமண வாழ்வின் தொடக்கத்தில் நிலையற்ற தன்மையை உணர்ந்தால், முதல் வேலையாக அதனை அபாயச் சூழலிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆனால், அதன் பாதிப்பு எல்லைமீறிப் போய்விடும் சூழலில், விவாகரத்து செய்துகொள்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவையற்ற வலிகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் எனும் உண்மையையும் மறக்க வேண்டாம்.

அப்படி என்றால் இதைத் தவிர்ப்பதற்கு வழியேதும் இல்லையா? கணவன் மனைவிக்கிடையே தோன்றும் சிக்கல்களுக்கு விவாகரத்துதான் தீர்வா என்றால், அப்படி இல்லை. உங்கள் மணவாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் இப்படிப்பட்ட சூழல்களைத் தவிர்க்க முடியும். பின்வரும் கருத்துகளைப் படியுங்கள்:

உங்கள் திருமண வாழ்வை வளமாக்குங்கள்:

Arunan 3ஒருவேளை உங்கள் திருமணவாழ்வு தோல்வியில் முடியக்கூடும் என்பதை நினைத்து நீங்கள் கலங்கலாம். அதேநேரம் சிலர் தங்கள் திருமண வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடலாம் இன்னும் சிலர் அதை பொருட்படுத்தாமல்கூட இருக்கலாம். நம்மில் பலரும் திருமண வாழ்வென்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பது என ஏற்றுக்கொள்வதால் உங்கள் முழுக் காதலையும் இணையருக்கானதாக அங்கீகரியுங்கள். வளமான திருமண வாழ்வுக்கு இதுமட்டும் போதாது. இதனுடன் சேர்த்து, கணவன் மனைவி இருவருக்குமே தொடர்ச்சியான முயற்சி, ஊக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்றவை தேவைப்படுகின்றது.

உங்களுக்குள்ளேயே முதலீடு செய்துகொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வை வலுவாக்குவதற்கு முன்பு உங்களை நீங்கள் அங்கீகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் இணையரிடம் காதலையும் மரியாதையையும் பொழியும் முன்னர் உங்களை நீங்களே மதிக்கவும் நேசிக்கவும் செய்யுங்கள். உங்களை நீங்களாய் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘உங்களுக்கான நேரம்’ என்பதை தினமும் உருவாக்கிச் செலவிடுங்கள். உங்கள் பொழுதை நல்ல வழியில் கடைப்பிடிப்பது, பிடித்த வேலைகளைச் செய்வது என உங்களை நீங்களே முழுமையாய் உணர வாய்ப்பளியுங்கள். காரணம், உங்களுக்குள் உங்கள் மீதான நேசம் அதிகமாக இருக்கும்போதே அதை உங்களால் இணையருக்கும் வழங்க முடியும்.

ஒருவருக்கொருவர் சரி என அங்கீகரியுங்கள்:

சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் நல்லவையாக வைத்துக் கொள்ளுங்கள். காதலே திருமண வாழ்வின் சாரமாகின்றது. பேரன்பையும் இரக்கத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். மனிதர்களான நாம் தவறுகள் செய்வது இயல்பே. நீங்கள் தவறு செய்துவிடும்போது உங்கள் இணையரிடம் அதனை ஒப்புக்கொள்வது முக்கியம். உடனடியாக உங்கள் மன்னிப்பையும் அவரிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் இணையர் தவறு செய்தால் உடனடியாக மன்னித்து அத்தவறை அத்துடன் மறந்தும் விடுங்கள். உங்கள் இணையரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களோ நாளை உங்கள் குழந்தைகளும் அவர்தம் இணையரை அப்படியே நடத்துவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் எல்லை எது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

எதிர்ப்பாலினருடன் நட்பு கொள்வது தவறில்லை, ஆனால் அவர்களுடன் எவ்வாறு உறவாடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. உங்கள் இணையருடன் பகிர்ந்துக்கொள்ளாத ஒரு விடயத்தை எதிர்பாலின நண்பருடன் பகிர்கிறீர்கள் என்றால் அவர் பார்வையில் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்பது தெளிவு. சொன்ன விடயம் சாதாரணமானது அல்லது சில நிமிட உரையாடல்தானே என்று நாம் நினைத்துவிடலாம். ஆனால், இதுமாதிரியான விடயங்களே தவறான உறவுக்கு கொண்டு செல்லும் எனும் அச்சம் நிகழ்வதால் உங்கள் திருமண வாழ்வை இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கலாம்.

காதலின் திறவுகோல் முழுமையாக ஏற்றுக்கொள்வதே

ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தனித்தன்மை மிக்கவன், புத்தாக்க சிந்தனையாளன். உங்கள் இணையரின் இவ்வேறுபாடுகளுக்கு மதிப்பளியுங்கள், அவர் தனித்தன்மை மிக்கவர் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இணையரை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர்களது குறைகளை வெளியிலிழுத்துக் கொண்டே இருக்காதீர்கள். அவரது ஆளுமையைப் பாராட்டுங்கள். எப்போதெல்லாம் பாராட்டுகள் குறைவதாக தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து பாராட்டுங்கள். உங்களது பலவீனங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாகவும் அவரை அவராகவும் இருக்க விடுங்கள்.

உங்கள் திருமண வாழ்வில் முழுமையாக இருங்கள்

உங்கள் உடல் உங்கள் இணையரின் அருகில் இருப்பதைக் காரணம் காட்டி நீங்கள் திருமண வாழ்வில் முழுமையாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. கணவன் மனைவி ஆகியோருக்கு இடையேயான தொடர்பாடல் அவசியம். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள். உங்கள் இணையர் பேசுவதை முழுவதும் செவிமடுப்பவராக இருங்கள். உங்கள் இணையருக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவருக்காக இருங்கள். திருமணத்திற்குப் பின்பு தம்பதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான்.  உங்கள் இணையர்மீது இருக்கும் காதலையும் ஈர்ப்பையும் காட்டப் பயன்படும் சக்தி மிகுந்த ஒரே ஆயுதம் தொடுதல்தான். தொடுவது எப்போதும் காமத்தால்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி முத்தமிட்டுக் கொள்ளுங்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் நீண்டு செல்லும்.

உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான சமநிலையை நிலைநிறுத்துங்கள்

குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பின்பு கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முயல்வது இயல்பாகிவிட்டிருக்கிறது. குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க நேரத்தையும் ஆற்றலையும் முதலீடாக்குவது நல்லதே. ஆனால், உங்களது மொத்த ஆற்றலையும் அதிலேயே விரயம் செய்துவிடாதீர்கள். குழந்தைகளுடன் கூடியிருப்பதனால் உங்கள் இணையருக்குக் கொடுக்கவேண்டிய காதலையும் அன்பையும் தவறவிட்டு விடாதீர்கள். ஒரு பூச்செடியைப் போல உங்கள் திருமண வாழ்வுக்கும் அன்றாடம் நீர் ஊற்றுங்கள். இல்லையேல் அது கருகி மடிந்துபோகும்.

அன்புத் தீ உங்களுக்குள் எரிந்து கொண்டே இருக்கட்டும்

ஒவ்வொரு சிறு இடைவெளிக்குப் பின்னரும், இணையரிடம் உங்களது அன்பையும் கனிவையும் கொடுத்துக்கொண்டே இருங்கள். வெளியே உணவுக்கு அழைத்துச் செல்லுங்கள்; பூக்களை வாங்கிக் கொடுங்கள்; அவர்களுக்கு கடிதங்கள் எழுதுங்கள். எளிமையான முறையில் உங்கள் தீராத அன்பை காட்டிக்கொண்டே இருங்கள். இந்தச் சின்ன சின்ன விடயங்களே கவனத்திற்கு உரியனவாகின்றன.

உங்கள் வாழ்க்கையை இன்னொருவருடன் பகிர்ந்துக்கொள்ள முடிவது அவ்வளவு அழகானது. திருமணம் உங்கள் வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. அதனை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் என இன்னமும்கூட தொடர்ந்து வாழமுடிவதால், உங்கள் இணையை அங்கீகரியுங்கள்.

மூலம்: டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ்

தமிழில் : விஜயலட்சுமி

http://vallinam.com.my/version2/?p=2991

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உபத்திரபம் வேணான்னு தான்.. பாச்சிளரா இருக்கனுன்னு பிரியப்படுறாங்க. வாரிசு வேணுன்னா.. IVF இல் வாடகைக்கு ஒருத்தியை அமர்த்தி பெத்துக்கிட்டு அதை நீங்க வளர்க்கலாம். இல்ல தத்தெடுக்கலாம். 

சும்மா.. இரு உடல்.. ஒரு மனம்.. காதல்.. கல்யாணம்.. எல்லாம் வெற்று டப்பா. மனிதன் தனது சமூகக் கட்டமைப்புக்குள் புகுத்தி வைத்துள்ள மாயைகள். இதே மற்ற உயிரினங்களில் இல்லவே இல்லை. அவையும் இவை இன்றி பூமியில் இனப்பெருக்கி வாழ்க்கின்றன தாம்.  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இந்த உபத்திரபம் வேணான்னு தான்.. பாச்சிளரா இருக்கனுன்னு பிரியப்படுறாங்க. வாரிசு வேணுன்னா.. IVF இல் வாடகைக்கு ஒருத்தியை அமர்த்தி பெத்துக்கிட்டு அதை நீங்க வளர்க்கலாம். இல்ல தத்தெடுக்கலாம். 

சும்மா.. இரு உடல்.. ஒரு மனம்.. காதல்.. கல்யாணம்.. எல்லாம் வெற்று டப்பா. மனிதன் தனது சமூகக் கட்டமைப்புக்குள் புகுத்தி வைத்துள்ள மாயைகள். இதே மற்ற உயிரினங்களில் இல்லவே இல்லை. அவையும் இவை இன்றி பூமியில் இனப்பெருக்கி வாழ்க்கின்றன தாம்.  tw_blush: 

இவங்கள் விசரங்கள்  யாரோ கலியாணம் முடிக்காத காலி 
பைசங்கள் எழுதி இருக்கிறான்கள்.


ஊடலும் ......பின் கூடலும் 
இரு வேறு பக்கங்கள்.

ஒரே கூடி கொண்டு இருந்தால் போரடிக்கும் 
ஊடிவிட்டு .........பின் கூடினால் ஒரு இறுக்கம் இருக்கும்.

வாழ்க்கையை போக போக லூசாகும் அப்போ ஒரு இறுக்கம் தேவை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

அப்படி சொல்ல முடியாது அக்கா.

போலீஸ்காரர், கொலை, வன்முறைகளை பார்க்கிறார்.

பிணவறை காரர் தினமும்......

வெட்டியார்.....

ஒரு துறையினை மட்டும் குறித்து சொல்ல முடியாதே. 

அவரவர் மனங்களைப் பொறுத்தது. 

chilid genius என்னும் டிவி நிகழ்வில், வென்ற இந்திய சிறுமியின் தாய், குழந்தை வைத்திய நிபுணர். 

பிள்ளைகளுக்காக வேலையினை உதறி இருக்கிறார். யடமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

அந்த நண்பிக்கு அவர்கள் மனித உறுப்புக்களின் தேவை.. பெறுமதி உணர்ந்தவர்கள்.. லேசில் இதயங்களை உடைக்கவோ.. காயப்படுத்தவோ மாட்டார்கள் என்று ஏன் புரியல்லை. பிரச்சனை மனிதர்களைப் புரிந்து கொள்வதிலும் அதற்கு மனிதர்களிடம் உள்ள அணுகுமுறையிலும் நேரகால அவகாசத்திலும் பகுத்தறிவிலும் உள்ளது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் இந்த திரிக்கும் சம்மந்தமில்லை என்பதை தெரிவித்து கொண்டு விடைபெறுகிறேன் நன்றி:unsure: 

கட்டுறதும் இல்லாமல் விட்டு பிரியுறதும் இல்லாமல் குழந்தைக்கு வாழ்வார்களாம் கெகே கெகேtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,நான் சொல்ல வந்தது ஒரு ஆண் வைத்தியர் எந்த நேரம்,பெண்களது மர்ம உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து அவருக்கு சலிச்சுப் போய் இருக்கும்.அதனால குடும்ப வாழ்க்கையில அவர்களது மனைவியோட தாம்பத்தியத்தை ரசிச்சு,அனுபவித்து வாழ மாட்டார்கள்.என்பது என்னோட கருத்து.

நீங்கள் சொன்ன குழந்தை வைத்திய நிபுணர் கூட தொழிலையும்,குடும்பத்தையும் சமப்படுத்த முடியாமல் தான் வேலையை விட்டு இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7.8.2016 at 9:39 PM, ரதி said:

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

தங்கச்சி! :(

நான் வந்து 24 மணித்தியாலத்திலை 13 மணித்தியாலம் 68 சாப்பாடு சக்கட்டையெண்டு அளைஞ்சு வேலை செய்யுறவன். இருந்தாலும் வீட்டை வந்து என்ரை சோறு என்ரை சுவையிலை கறி  எண்டு வரேக்கை அதின்ரை பீலிங்கே தனி...

அதோடை எல்லாம் மனம் தான்....மனம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது......:rolleyes:

உப்புடி பாக்கப்போனால் கக்கூஸ் எடுக்கிறவை/கழுவுறவை  எல்லாரும் பருப்புக்கறி சாம்பார் சாப்பிட மாட்டினம் எல்லோ

அது மாதிரி.......

வேண்டாம் தங்கச்சியோடை கனக்க கதைக்க கூடாது....அது வடிவுமில்லை :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நாதமுனி,நான் சொல்ல வந்தது ஒரு ஆண் வைத்தியர் எந்த நேரம்,பெண்களது மர்ம உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து அவருக்கு சலிச்சுப் போய் இருக்கும்.அதனால குடும்ப வாழ்க்கையில அவர்களது மனைவியோட தாம்பத்தியத்தை ரசிச்சு,அனுபவித்து வாழ மாட்டார்கள்.என்பது என்னோட கருத்து.

நீங்கள் சொன்ன குழந்தை வைத்திய நிபுணர் கூட தொழிலையும்,குடும்பத்தையும் சமப்படுத்த முடியாமல் தான் வேலையை விட்டு இருப்பார்.

 

பணமாக இருக்கலாம்

சொத்தாக  இருக்கலாம்

சாப்பாடாக இருக்கலாம்

ஏன் மதுபானமாகக்கூட இருக்கலாம்

அனுபவித்தவர்கள் 

பார்த்தவர்கள் தானே அதிகம் ஆசைப்படுகிறார்கள்

அலைகிறார்கள்?

அடுத்ததற்கு தாவுகிறார்கள்

பல வைத்தியர்கள் தம்மிடம் வரும் பெண்களிடம் தவறாக நடந்துள்ளமையை நாமும் அறிந்துள்ளோமே..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நாதமுனி,நான் சொல்ல வந்தது ஒரு ஆண் வைத்தியர் எந்த நேரம்,பெண்களது மர்ம உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து அவருக்கு சலிச்சுப் போய் இருக்கும்.அதனால குடும்ப வாழ்க்கையில அவர்களது மனைவியோட தாம்பத்தியத்தை ரசிச்சு,அனுபவித்து வாழ மாட்டார்கள்.என்பது என்னோட கருத்து.

நீங்கள் சொன்ன குழந்தை வைத்திய நிபுணர் கூட தொழிலையும்,குடும்பத்தையும் சமப்படுத்த முடியாமல் தான் வேலையை விட்டு இருப்பார்.

அக்கோய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் சலிப்பேது? பல மொடல் கார்களை பார்த்தாலும் சொந்தமாக கார் வைத்து ஓட்டுவதில் உள்ள சுகத்திற்கு ஈடாகாது.

 

✂️ (வேண்டாமே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

பணமாக இருக்கலாம்

சொத்தாக  இருக்கலாம்

சாப்பாடாக இருக்கலாம்

ஏன் மதுபானமாகக்கூட இருக்கலாம்

அனுபவித்தவர்கள் 

பார்த்தவர்கள் தானே அதிகம் ஆசைப்படுகிறார்கள்

அலைகிறார்கள்?

அடுத்ததற்கு தாவுகிறார்கள்

பல வைத்தியர்கள் தம்மிடம் வரும் பெண்களிடம் தவறாக நடந்துள்ளமையை நாமும் அறிந்துள்ளோமே..

 

இப்படி எல்லாம் சொல்லிவியள் என்று தெரிஞ்சு தான்.. நாங்க எல்லாம் தொட்டுப் பார்க்கிற கிலினிக்கல் செக்சன் பக்கம் போகாமல்.. ஆராய்ச்சிப் பக்கம் வந்திட்டம்.  கிலினிக்கல் பிடிப்பில்லை.. கண்ட கண்ட அசிங்கங்களை தொட்டுக் கொள்ளனுமேன்னு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் சொல்லிவியள் என்று தெரிஞ்சு தான்.. நாங்க எல்லாம் தொட்டுப் பார்க்கிற கிலினிக்கல் செக்சன் பக்கம் போகாமல்.. ஆராய்ச்சிப் பக்கம் வந்திட்டம்.  கிலினிக்கல் பிடிப்பில்லை.. கண்ட கண்ட அசிங்கங்களை தொட்டுக் கொள்ளனுமேன்னு. tw_blush:

நீங்க இதுக்குள் தான் முன்னேறணும் என்பதும் எமது வரம்பு கட்டலின் குறியாக இருக்கலாம் அல்லவா ராசா..

(யாரிட்ட?tw_blush:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நீங்க இதுக்குள் தான் முன்னேறணும் என்பதும் எமது வரம்பு கட்டலின் குறியாக இருக்கலாம் அல்லவா ராசா..

(யாரிட்ட?tw_blush:)

வரம்போ வாய்க்காலோ.. அசிங்கத்துக்க குடித்தனம் நடத்த முடியாது நம்மால. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

வரம்போ வாய்க்காலோ.. அசிங்கத்துக்க குடித்தனம் நடத்த முடியாது நம்மால. tw_blush:

நம் நிலை கொஞ்சம் மோசமான நிலையில் தான் போகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.