Jump to content

இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’


Recommended Posts

இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ 

 

தமிழ் பேசும் மக்­களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்­கு­ரலாய் வழி­காட்­டியாய் சிறப்­புற்று விளங்கும் வீர­கே­சரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அக­வையின் நிறைவில் காலடி எடுத்து வைக்­கின்­றது. இது தமிழ் பேசும் இத­யங்­க­ளுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்­தி­யாகும்.

86-anniversary.jpg

தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தினமும் உலக நடப்­பு­க­ளையும் மற்றும் முக்­கிய விட­யங்­க­ளையும் தரு­வ­தோ­டல்­லாமல் தமிழ்மொழி பண்­பாடு, கலா­சாரம், பொரு­ளா­தாரம், சமூக முன்­னேற்றம் ஆகிய அனைத்துத் துறை­யிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்­தி­ருந்த வர்த்­த­க­ரான ஆவ­ணிப்­பட்டி பெரி. சுப்­பி­ர­மணியம் செட்­டியார் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை வீர­கே­சரியை ஆரம்­பித்தார். அவ­ருக்கு தமி­ழ­கத்தில் இருந்து கொழும்பில் வாழ்ந்­தி­ருந்த எச்.நெல்­லையா என்­ப­வரும் மற்றும் பல பெரி­யார்­களும் பெரிதும் உத­வி­யாக இருந்தனர்.

பாரத தேச­பிதா மகாத்மா காந்­தி­ய­டிகள் அக்­கா­ல­கட்­டத்தில் இலங்கை வந்து சுற்­றுப்­ப­யணம் செய்து உரை­களை ஆற்றிச் சென்ற போதும் அவ்­வி­ட­யங்கள் குறித்து தமிழ் மக்கள் ஏதும் அறி­யா­தி­ருந்த சூழ்­நிலை உண­ரப்­பட்­டதே வீர­கே­சரிப் பத்­தி­ரிகை உரு­வாக பிர­தான உந்­து­த­லாக அமைந்­தி­ருந்­தது.

வீர­கே­ச­ரியின் இலட்­சியம் எது­வாக இருக்கும் என்­ப­தனை சுப்­பி­ர­ம­ணியம் செட்­டியார் வீர­கே­ச­ரியின் முதல் இதழில் திட்­ட­வட்­ட­மா­கவே குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அதை இங்கு குறிப்­பி­டு­வது மிகவும் பொருத்­த­மா­ன­தாகும்.

“எம்மைப் பற்றி நாமே எழுதிக் கொள்­வதில் எமக்கு சிறி­தேனும் விரும்­ப­மில்லை. ஆயினும் புதி­தாகத் தோன்றும் பத்­தி­ரிகை தனது நோக்­கத்தை முதல் வெளி­யீட்டில் தெரி­விக்க வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு செய்­வது உலக வழக்கு. ஆகையால் கீழ்­கண்ட சில­வற்றை எழு­த­ மு­யன்றோம்.

தன்னால் இயன்ற அள­வுக்கு பொது ஜனங்­க­ளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவா­வினால் தூண்­டப்­பட்டே வீர­கே­சரி தோன்­று­கிறான். அசாத்­தி­ய­மான காரி­யங்­களைச் செய்து முடிக்கும் திறன் படைத்­தவன் என்று வீறு பேசத் தயா­ராக இல்லை. நியாய வாய்ப்பை எட்­டு­ணையும் மீறாமல் நடு­நிலையில் இருந்து உல­கத்தின் முன்­னேற்­றத்­திற்­கான இயக்­கங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் பரி­வுடன் ஆராய்ந்து பொது­மக்கள் கருத்தை நல்­ல­மு­றையில் உரு­வ­கப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையே வீர­கே­சரி தன் முதல் கட­னாக கொள்­கின்றான்.

தாராள சிந்­த­னையும் பரந்த நோக்­கமும் சம­ரஸ உணர்வும் பெற்ற வீர­கே­சரி சாதிஇ சமய சண்­டை­களில் கலந்­து­கொள்­ள­மாட்டான். நியா­யமே அவன் வீற்­றி­ருக்கும் பீடம். அவ­னது கருத்­துக்கள் நியா­யத்­தையே அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்கும். மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக் கொண்டு உயர்ந்த நோக்­குடன் வெளி­வரும் வீர­கே­சரி தமிழ் மக்­களின் அன்­பையும் ஆத­ர­வையும் நாடு­கின்றான்.

இவ்­வா­றான ஆசி­ரி­ய­ரது நோக்கு ஒரு தார­க­மந்­தி­ர­மா­கவே கடந்த 86 வரு­டங்­க­ளாக கடைப்­பிக்­கப்­பட்டு வரு­வதை வாச­கர்கள் நன்­கு­ணர்­வார்கள். இத்­த­கை­ய­தொரு தனித்­துவ வர­லாற்­றினை கொண்டு வீர சிங்­க­மென நிமிர்ந்து, இந்­நாட்டின் தமிழ்ப் பேசும் இனத்­துக்கு விசே­ட­மா­கவும் நாட்டு மக்­க­ளுக்குப் பொது­வா­கவும் சேவை புரிந்­து­வரும் வீர­கே­ச­ரியின் வாழ்க்கைப் பயணம் இலே­சா­ன­தல்ல. அவன் சந்­தித்த சோத­னைகள் பலப்­பல. அது­போன்று சாத­னை­களும் ஏராளம் என்­பதில் பெருமை கொள்­ளலாம்.

செட்­டி­யா­ர­வர்கள் குறிப்­பிட்­டது போன்று நடு­நிலை தவ­றாமல் நின்று தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக பக்­கஞ்­சா­ராது உள்­ளது உள்­ள­படி செய்திச் சேவையை தினமும் வழங்­கி­ய­தோடு மட்­டு­மன்றி அவர்கள் மீது பரிவு கொண்டு பற்­பல அறி­வு­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை வீர­கே­சரி இந்த 86 வருட காலத்தில் அவ்­வப்­போது உரிய காலத்தின் தேவைக்கு இணங்க மேற்­கொண்­டு­வந்­தது யாவரும் அறிந்­ததே.

இதன் பயனாய் பல்­வேறு பத்­தி­ரி­கைகள் தோன்றிச் சேவை புரிந்­ததை மறக்க முடி­யாது. ஜோதிஇ மித்­திரன்இ மித்­திரன் வார­மலர், நவீன விஞ்­ஞானிஇ லஸ்­ஸன வந்­கம, விது­மின உட்­பட சில பத்­தி­ரி­கைகள் 1960 களில் தோற்றம் பெற்றுச் சேவை­பு­ரிந்­தன.

இவை தவிர இந்­நாட்டு எழுத்­தா­ளர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் நோக்கில் வீர­கே­சரி சிறு­கதைப் போட்­டி­களை நடத்­தியும் மற்றும் நட­வ­டிக்­கைகள் மூலமும் செயற்­பட்­டமை என்றும் நினை­வு­கூ­ரத்­தக்­கது. அத்­துடன் வீர­கே­சரி 1970 களில் மேற்­கொண்ட மாதம் ஒரு நாவல் பிர­சு­ர­ திட்டம் அக்­கா­லத்தில் வாச­கர்­களால் மிகவும் வர­வேற்­கப்­பட்ட ஒன்­றாகும். இதன் மூலம் ஆக்க இலக்­கிய கர்த்­தாக்கள் பெரு­ம­திப்பைப் பெற்­றார்கள்.

நாட்டின் அர­சியல் விட­யங்­களை குறிப்­பாக தமிழ் மக்­களின் அர­சியல் உரிமைப் போராட்­டங்­களில் மிகுந்த ஆர்வம் காட்டி உட­னுக்­குடன் செய்­தி­களை வழங்­கி­ய­தோடு மட்­டு­மன்றி காலத்­துக்குக் காலம் எழும் அர­சியல் உரிமைப் போராட்­டங்­களில் அனைத்து அர­சியல் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் திரட்டி வெளி­யி­டு­வதன் மூலம் அவர்­க­ளுக்கு ஒரு வழி­காட்­டி­யா­கவும் திகழ்ந்து வந்­தி­ருக்­கி­றது. இன்றும் அதன் பணி சோர்­வின்றி தளர்­வின்றித் தொட­ரு­கின்­றது.

இந்த அய­ராத பொது­மக்கள் பணியில் பத்­தி­ரிகை ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்து பத்­தி­ரிகை நிர்­வா­கி­களும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களும் சிறப்­பாகக் கட­மை­யாற்றி பத்­தி­ரி­கையின் பெயரை மக்கள் மத்­தியில் ஆழப்­பதித்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தவகையில் அன்­றைய கால­கட்­டத்தில் சுப்­பி­ர­மணியம் செட்­டி­யா­ரோடு எச். நெல்­லையா, ஈஸ்­வர ஐயர் போன்­றோரும் 1960 களின் பின் டி.பி.கேசவன், கிருஷ்­ண­மூர்த்தி, ஹரோல்ட்­ பீரிஸ், எம்.ஜி.வென்­சஸ்லாஸ் போன்­றோரும் பெரும் சேவை­யாற்­றினர். இன்­றைய காலக்­கட்­டத்தில் குமா­ர் ­ந­டேசன் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக பெரும் சேவை புரிந்­து­வ­ரு­கின்றார்.

பத்­தி­ரிகை பிர­தம ஆசி­ரி­யர்­க­ளாக கே.பி. ஹரன், கே.வி. எஸ்.வாஸ், கே.சிவப்­பி­ர­காசம், சிவ­னே­சச்­செல்வன், எஸ்.நட­ராஜா ஆகியோர் பணி­பு­ரிந்து வழி­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். ஈ.வி.டேவிட் ராஜூ, எம்.எஸ்.எம்.கார்­மேகம், இரா­ஜ­கோபால் ஆகி­யோரின் பணியும் இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

காலத்­துக்கு காலம் வேலை­நி­றுத்தம் உட்­பட நெருக்­க­டி­களை வீர­கே­சரி எதிர்­நோக்­கிய போதும் முகா­மை­யா­ளர்கள்இ ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊழி­யர்­களின் அய­ராத உழைப்­பினால் வீர­கே­சரி மக்கள் மனதில் அழி­யாத இடத்தைப் பெற்­றது. மிகுந்த செல்­வாக்­குடன் அதன் பணி மேலும் முன்­னோக்கிச் செல்­கின்­றது.

எக்­ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் என்ற கம்­பனிப் பெய­ருடன் நிறை­வான சேவையை தின­ச­ரி­யா­கவும் ஞாயிறு வார­வெ­ளி­யீட்டின் மூல­மா­கவும் மக்­க­ளுக்கு வழங்கி அரு­மை­யான தோழனாய் பிர­கா­சிக்கும் வீர­கே­சரி, 1990 களில் தகவல் நவீன தொழில்­நுட்­பத்­துக்குள் பிர­வே­சித்­தமை மேலும் பல படிகள் முன்­னேற வழி­வ­குத்­தது. இந்த நவீன வச­தி­களைப் பயன்­ப­டுத்தி வீரகேசரி ஸ்தாபனம் பல பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றமை பெருமைக்­குரியது.

“விடிந்தால் வீரகேசரி” என்று காத்திருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இத்தாபனம் மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சோதிட கேசரி, கலைக்கேசரி, சுட்டிகேசரி, ஜீனியஸ் என்பவற்றை பிரசுரித்து வழங்கி அவர்தம் ஆற்றலையும் வளர்த்து வருகின்றது.

தமிழ் பேசும் மக்களின் குரலாய் விளங்கும் வீரகேசரியின் பயணமும் மிக மிக நீண்டது. ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி பெருவிருட்சமாய் விளங்கும் வீரகேசரி மேலும் நூற்றாண்டுகள் காலம் நிலைத்து நிற்க தமிழ் பேசும் மக்கள் என்றும் துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

http://www.virakesari.lk/article/9863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.