Jump to content

சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம்


Recommended Posts

சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம்

 

 

சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம்
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தொட்டுக்காட்டியுள்ளார்.
 
இப் பிரச்சினைகளைப் பார்க்கமுன் எல்லாவற்றுக்கும் மேலாக சகலரும் ஓர் முக்கிய விடயத்தினை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, மீள்குடியேற்றத்திற்கும் திட்டமிட்ட சிங்கள திட்டமிட்ட குடியேற்றத்திற்குமான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறான இடத்தில், தமிழ்த் மக்களும் அதன் தலைவர்களும் ஒருபோதும் சகோதர இனங்கள் போரினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தமது உண்மையான சொந்த இடங்களுக்குத் திரும்புவதை யாரும் எதிர்க்கவில்லை. அந்த வகையில்  தமிழ்த் தரப்புக்களிடம் இருந்து சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் பற்றி எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை. ஆனால், மீள்குடியேற்றம் என்ற வரையரைக்குள் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட எத்தனிக்கப்படும் இன விகிதாசாரத்தினையும் தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மையினையும் அழிக்க எத்தனிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அக் குடியேற்றங்களை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளையே  தமிழர்கள் எதிர்க்கின்றனர்.ஆகவே இவ் எதிர்ப்பு என்பது நல்லிணக்கத்தினை நிலைநாட்டுவதற்கானது எனலாம். இன நல்லிணக்கத்தினை பாதிக்கும் நியாயத்திற்குப் புறம்பான சிங்கள மயமாக்கத்தின் ஊக்கியாக அரச அதிகாரம் காணப்படுவதே பிரச்சினையாகும்.
 
இந்த இடத்தில் அரசாங்கம்இ திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போதும் அதற்கு முன்னரும் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும் எனக் கோருவது நல்லிணக்கத்திற்கான தேவையாகவே உள்ளது. அரசு தீர்வை முன்வைக்கும் அதேவேளை இனவிகிதாசாரத்தினைப் பாதிக்கும் விடயங்களில் அது எவ்வாறு செயற்படப் போகின்றது என்பது பற்றி சாதாரணமாக மாற்றமுடியாத   கொள்கையினை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகவுள்ளது.
 
மகாவலி கங்கையின் நீரை வடக்கிற்குக் கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மற்றும் மீள்குடியேற்ற செயலணிக்கான அமைச்சரவைத் தீர்மானமும் வெளியாகியுள்ளது. இவ்விரு விடயங்களைத் தொடர்ந்தும் வடக்கின் இனவிகிதாசாரத்தினை பாதிப்பதற்கான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய சூட்சுமங்கள் மேலுமொரு வகையில் உத்வேகமடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதனைச் சுட்டிக்காட்டி வடக்கில் தொடர்ச்சியான சம்பாசனைகள் இடம்பெற்றுவருகின்றன. 
 
அரசாங்கம் இம் மாதத் தொடக்கத்தில் வடக்கு மாகாண சபையினைப் புறக்கணித்து வடக்கிற்கான மீள்குடியேற்ற செயலணி ஒன்றை அமைத்திருந்தது. அச் செயலணி, வடக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தும் என்ற விடயம் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தவகையில் தற்போது 5 ஆயிரத்து 554 சிங்களக் குடும்பங்களுக்கும் 16 ஆயிரத்து 120 முஸ்லிம் குடும்பங்களுக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
 
மீள்குடியேற்றம் என்ற அடிப்படைக்குள் தழிர்களுக்கு கிடைக்கவேண்டிய அல்லது மேற்கொள்ளப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் கிடப்பில் கிடப்பில் கிடக்கின்றன. அதற்கு சரியான தீர்வுகளை அரசாங்கம் முன்வைக்காது  வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் மீது பிரத்தியேகக் கவனம் கொள்கின்றது.  அரசாங்கம் தனது யோசனையினை  நடைமுறைச்சாத்தியமாக்குவதற்காக வடக்கு மாகாண பிரதிநிதிகளை புறந்தள்ளி நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் திணிப்பதற்கும் முயற்சிக்கின்றது. இது அதிக  சந்தேகத்திளை உண்டுபண்ணுவதாகவுள்ளது. இச் செயலணி பற்றி வடக்கு மாகாண சபை காரசாரமாக கண்டித்துள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தும் செயலணியே இதுவென வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் குறிப்பிட்டுள்ளார்.. இவ்வாறாக பலத்த வாதப்பிரதிவாதங்கள்இ சந்தேகங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு உரிய பதிலளிப்புக்கள் மத்தியில் இருந்து கிடைக்கவில்லை. 
 
கடந்த ஒக்டோபரில் ஜனாதிபதியுடன் வடக்கிற்கு என மீள்குடியேற்றக்கொள்கை ஒன்றை வகுப்பது தொடர்பில் வடமாகாண சபை பேசியிருந்தது. அதற்கு அமைய  வடக்கு மாகாண சபையினால்  ஆவணம் தயாரிக்கப்பட்டு அது  தற்போது வடக்கு மாகாண அமைச்சரவையின் ஆலோசணைகைக்கு இருப்பதாக அறிய முடிகின்றது. இவ்வாறான பேச்சுக்கள்இ உடன்பாடுகள் அரசுத் தலைவருக்கும் மாகாண நிர்வாகத்திற்கும் இடையில்  காணப்படுகையில் அவற்றுக்கு முக்கியத்தவமளிக்கப்படாமல் வடக்கு சார்ந்த மீள்குடியேற்றத்திற்காக செயலணி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக  வடக்கு தமிழ் அரசியல் தலைமைகள் உள்வாங்கப்படாது உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி வடிவம் பெற்றிருப்பது சந்தேகத்திற்கு உரியதொன்றாக அமைவதும் நிராகரிக்க முடியாததாகும்.
 
வடக்கு மாகாணத்தில் இருந்து மாகாண பிரதம செயலாளர் இச் செயலணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அவ்வாறாக வடக்கு மாகாண பிரதம செயலர் மட்டும்  இச் செயலணிக்கு உள்வாங்கப்பட்டிருப்பதனை சரியான போக்காகக் கருத முடியாது. மீள்குடியோற்றம் மற்றும் அதனோடு இணைந்த நடவடிக்கைகளில் அரசியல் ரீதியிலான இனவிகிதாசார மாற்றங்களுக்கான பல்வேறு முனைப்புக்கள் காணப்படும் நிலையில்இ அதனை அரசாங்க அதிகாரிகளால் எந்தளவு தூரம் எதிர்க்க முடியும் என்ற கேள்வியுள்ளது. அதேயிடத்தில் அரசாங்க அதிகாரிகளால் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பெரியளவில் முடிவதில்லை என்பதும் கடந்த கால அனுபவமாகும். அதற்கு சட்ட ரீதியிலும் அதற்குப் புறம்பாகவும் காரணங்கள் இருக்கின்றன.
 
இதற்கு மேலாக, தற்போது மகாவலி நீரை வடக்கிற்குக் கொண்டு வரும் போது அதனுடன் இணைந்ததாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மகாவலி அதிகார சபையினால் ஏற்படுத்தப்படக் கூடாது எனக் கோரப்பட்டுள்ளது. அது பற்றிய உத்தரவாதம் அவசியம் என்ற கோரிக்கை வடக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் அல்லாமல் அரசு என்ற ரீதியில் பதிலளிப்பு நடைபெறவேண்டும். நல்லிணக்கக் காலப்பகுதியாகையினால் இவ் அரசாங்கம் இப் பிரச்சினைகளுக்குஉத்திரவாதங்களைக்கொடுத்தாலும் காலப்போக்கில் ஆட்சிக்கு வருபவர்களால் அவ் உத்தரவாதங்களை மதிக்காது விட்டால் அது மேலும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அமைந்துவிடும். 
 
கடந்த காலங்களில் மகாவலி அதிகார சபை ஊடாக தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான கசப்பான அனுபவங்களும் வலிகளும் தமிழ் தலைமைகளையும் மக்களையும் இவ்வாறு எல்லலாம் சந்தேகிக்கத்தேன்றுகின்றன. இரண்டு மாகாணங்களுக்கு இடையில் நீர்பாசனம் மேற்கொள்ளப்படுகையில் அதிகார சபை ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு அப் பிரதேசங்களின் நீர்ப்பாசனம் மற்றும் குடியேற்றுகை போன்றன உரித்தானதாகின்றன. 
 
 இவ் அடிப்படைகளினை சாதகமாகப் பயன்படுத்தி சிங்களக் குடியேற்றங்கள் கடந்த காலங்களில் அதிகமாக அமைக்கப்பட்டன. தற்போதும் இது போன்றதொரு விபரீதம் மகாவலி அதிகாரசபையினால் ஏற்படுமா என்ற சந்தேகங்களும் எதிர்பார்ப்புக்களும் சகலரிடத்திலும் இருக்கின்றன. இச் சந்தேகங்களை சாதாரணமாக விட்டு விட முடியாது. தமிழர்கள் அனுபவ ரீதியாக கண்டுள்ள அவலங்களின் வெளிப்படுத்துகைளே இவை ஆகும். 
 
 தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தினைப் பேசினாலும் அது அது கூட கடந்த காலத்தினில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தற்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கத்திற்கான முயற்சிகள் பலவற்றில் அமைதியானவையாகவே உள்ளது. அதற்கும் மேலாக கடந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் பலப்படுத்தப்பட்டும் வருகின்றன.
 
இவற்றுக்கு அப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட கொக்குதொடுவாய் பகுதியில் 25 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர் அந்நடவடிக்கை எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டது. இவ்வாறாக சுவீகரிக்க முயற்சிக்கப்பட்ட காணியின் உரித்தாளர்கள் தற்போது இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் அவர்களை மீள அழைப்பதற்கு காணப்படுகின்ற ஆர்வத்திலும் அதிகமாக அவர்களின் காணிகளை அபகரிப்பதிலும் அவற்றில் சிங்கள மக்களையோ அல்லது இராணுவ குடியேற்றங்களையே ஏற்படுத்துவதற்கு  ஆர்வம் காட்டப்படுகின்றமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
 
கொக்குளாய் கிழக்கில் வாடி வீடுகளை அமைப்பதில் இன ரீதியிலான முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்ற சிங்கள மீனவர்கள் முயற்சிக்கின்றனர். அம் முயற்சிக்காக  பொலிசாரையும் பௌத்த பிக்குவையும் அழைத்துவந்து தமிழ் மீனவர்களை மிரட்டியதற்கான முறைப்பாடுகள் உண்டு, இவை எல்லாம் நாம் ஆரோக்கியமான நல்லிணக்கத்தினை சந்திப்போமா என்ற சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றன. 
 
தமிழ்க் கிராமங்கள் கடந்த காலங்களில் மட்டுமல்ல அண்மையில் கூட சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டும் வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ்க் கிராமம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. அக் கிராமத்தில் 1980 களில் தமிழர்களே முழுமையாக வாழ்ந்தனர். 
 
இதுபோன்றே பல கிராமங்களினதும் பெயர்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டமை வரலாறு. பதிவில் குளம் - பதவியாக்குளம் எனவும் முதலிக்குளம் - மெறாவேவ, பெரிய குளம்- நாமல்வத்த, பட்டிப்பளை – கல்லோயா, புடவைக்கட்டு – சாகரபுர, அம்பாள் ஏரி- அம்பாறை, மணலாறு – வெலியோயா, குமரக்கடவை – கோமரங்கடவெல, பொரிய விளாங்குளம் - மகா திவுல்வௌ, பனிக்கட்டி முறிப்பு – பனிக்கட்டியாவ என சிங்களப் பெயர்மாற்றங்கண்டு அவை சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு அப்பாலும் அதிகம் உதாரணங்கள் உண்டு. 
 
அண்மையில்; கலிபோர்னியாவின் ஒக்லன் ஆய்வு நிறுவனம் “யுத்தத்தின் நீண்ட நிழல்” என ஆய்வொன்றை நடத்தியிருந்தது. அந்நிகழ்வுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்இ 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்த அற்ப சொற்ப அதிகாரங்களையும் மகாவலி அதிகாரசபை மீறுவதுடன் எமது நிலங்களின் அதிகாரங்களையும் அது அபகரிக்கின்றது எனக் கூறினார். 
 
தெற்கில் இருந்து வடக்கில் சிங்களவர்களை வடக்கில் குடியேற்றுவதில் தப்பு என்ன எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அக் கேள்விகளை சிங்கள மயமாகக்கத்தின் போக்குகளை ஆதரிக்கும் சக்திகளே கேட்கின்றன.
 
கடந்த மே மாதம் பாணகொட இராணுவ முகாமில் நடைபெற்ற இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கஇ வடக்கில் சிங்கள மக்கள் வாழவும் கல்வி கற்கவும் விகாரைகளை அமைக்கவும் முடியாது என்றால் பெற்ற சுதந்திரத்தினில் பயன் இல்லை என்று கேட்போரை உசுப்பேத்தும் விதத்தில் பேசியிருந்தார். ஜாதிக்க கெல உறுமய உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளும் ஏன் இன்று போதிய தெளிவின்றி அல்லது உள்நோக்கில் நல்லிணக்கம் பற்றி பேசும் சிலரும் இவ்வாறான கேள்விகளைக் கேட்கின்றனர்.
 
இவ்வாறான கேள்விகளைத் தொடுக்கும் பலரும் தெற்கில் தமிழ் மக்கள் வாழ்வதற்கும் அங்கு கோயில்களை அமைப்பதையும் வடக்கில் நடக்கும் சிங்களக் குடியேற்றத்துக்குமான வேறுபாட்டினை உரியவாறு புரிந்துகொள்வதில்லை. அல்லது புரிந்து கொண்ட போதும் தமது இனவாத நலன்களுக்காக அவற்றினை மறைத்து வருகின்றனர். 
 
உண்மையில் வடக்குக் கிழக்கிற்கு வெளியே தமிழர்களின் இருப்புக்கும் வடக்கில் சிங்களவர்களின் இருப்புக்கும் இடையில் தொடர்பே கிடையாது. இரு விடயங்களும் இரு வேறுபட்டவை. வடக்கில் அரசாங்கத்தினது அல்லது இராணுவத்தினரது  அணுசரணை மற்றும் ஆதரவுடன் இனத்துவ ரீதியிலான குடிப் பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களே நடைபெறுகின்றன.அதற்காக  சிங்கள மக்கள் கொண்டுவந்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படுகின்றார்கள். ஆனால் தெற்கிற்கு தமிழ் மக்கள் அவ்வாறான பின்னணிகளுடன் செல்லவில்லை. 
 
வட கிக்கிற்கு வெளியில் தமிழர்கள் பொருளாதார அடிப்படையில் சந்தைச் சக்திகளுக்குக் கட்டுப்பட்டு சொத்துக்களை கொள்வனவு செய்தே அங்கு சென்று வாழ்கின்றனர். தமிழர்கள் வரலாறு தொட்டு வாழ்ந்து வந்த பகுதிகளை கூட அவர்கள் இழக்கின்றார்களே தவிர அவர்கள் சிங்களவர்களின் பகுதியை ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தவோ அல்லது தமிழ் மயமாக்கம் செய்யவோ இல்லை.   
 
அடிப்படையில்இ தற்போதும் இனங்களுக்கு இடையில் கணிசமான பிரச்சினைகள் இருக்கின்றன. இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையில் சிங்கள மக்களின் மீள் குடியேற்றங்களில் அரசாங்கம் நிதானமான அதேசமயம் உள்நோக்கமற்ற வெளிப்படைத்தன்மையினைக் காட்டவேண்டியுள்ளது. 
 

இதுஇ நல்லிணக்கம் மீதான சந்தேகங்களை களைவதற்கும் தமிழ் மக்களை சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான அச்சத்தில் இருந்து விடுவிப்பதற்கும் வழியாகும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134545/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சிநிரலுக்குத் தடையாக இருந்த விடுதலைப்புலிகளின் அழிவு, சிங்களம் தான் நினைத்த ஆட்டத்தை ஆட வாய்ப்பாகி உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.