Jump to content

நோய் இருப்பதை அறியாமலே குணப்படுத்துவது எப்படி?


Recommended Posts

நோய் இருப்பதை அறியாமலே குணப்படுத்துவது எப்படி?

 

ஹெபடிட்டிஸ் - சி என்றழைக்கப்படும் கல்லீரல் அழற்சியானது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் உலகளாவிய சுகாதார பிரச்சினையாகவும், உலகம் முழுவதும் அதிகரிக்கும் இறப்புகளுக்குக் காரணமாகவும் உள்ளது.

ஆனால், இந்த நோய் பீடித்தவர்கள், தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே அறிந்திருப்பதில்லை. இதன் காரணமாக, சோதனை என்பது அவசியமாகிறது. இந்தியா, நெதர்லாந்து, மங்கோலியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வரும் திட்டங்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதால் பாராட்டுப் பெற்று வருகின்றன.

160728091709_hepatitis_screening_1_640x3
 

மருத்துவ வல்லுநர்கள் ஹெபடிட்டிஸ்-சி-யை அமைதி தொற்றுநோய் என்று அழைக்கிறார்கள். காரணம், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதம் நோயாளிகள் தங்களுக்கு அந்த நோய் தொற்று இருப்பதை அறிவது கிடையாது.

ஆண்டுதோறும் உலக அளவில் ஹெபடிட்டிஸ் சி நோயினால் பாதிக்கப்படும் 150 மில்லியன் பேரில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வது கிடையாது. இதன் காரணமாக, ஆண்டிற்கு 700,000 உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பு மருந்தும் கிடையாது.

பல ஆண்டுகளுக்கு இந்த நோயின் அறிகுறிகளின்றி மக்களால் வாழ முடியும். ஹெபடிட்டிஸ் சி வைரஸால் (எச்.சி.வி) தாங்கள் தாக்கப்பட்டிருப்பதை மக்கள் உணரும் போது, பெரும்பாலும் சிகிச்சை எடுப்பதற்கான காலம் கடந்துவிடுகிறது. அந்த சமயம், கல்லீரல் சேதம் அடைந்து கல்லீரல் நோயாகவும் அல்லது புற்றுநோயாகவும் வளரலாம்.

 

உலகளாவிய அமைதி உயிர் கொல்லி

130-150 மில்லியன்

நாள்பட்ட ஹெப்படிட்டிஸ் சி நோயால் தாக்குண்டவர்கள்

  • 95% பேர் ஹெப்படிட்டிஸ் பி அல்லது சி நோயினால் தாக்கப்பட்டிருப்பதை அறியாதவர்கள்

  • 700,000 பேர் ஆண்டுத்தோறும், ஹெப்படிட்டிஸ் சி நோயினால் தொடர்புடைய கல்லீரல் நோயினால் உயிரிழக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம், 2016
GETTY

எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா போன்று உலகளவில் இருக்கக்கூடிய தொற்று நோய்களால் ஏற்படக்கூடிய இறப்பு விகிதமானது கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆனால், எச்.சி.வி வைரஸால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

160729141111_hepatitis_624x624_bbc_nocre  

மற்ற நோய்களை காட்டிலும் ஹெபடிட்டிஸ் நோய்க்கு கொள்கை வகுப்பவர்களின் கவனமின்மை மற்றும் போதிய நிதி ஒதுக்கப்படாதது ஆகியவையே காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ உபகரணங்களில் போதிய சுத்தமின்மை அல்லது பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றப்படும் போது ஹெபடிட்டிஸ் வைரஸானது ரத்தம் மூலம் பரவுகிறது. இதில், பெரும்பான்மையான தொற்று நோய்கள் ஊசி பகிர்வின் மூலம் வருகின்றன.

உலகளவில் எச்.சி.வியால் தாக்கப்படும் புதிய நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர், ஊசி மூலம் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களிடம் உள்ள பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாகவே இந்நோயால் தாக்கப்படுகின்றனர்.

''ஹெபடிட்டிஸ் நோயினால் தேவையின்றி மக்கள் பலியாவதை தடுக்க உடனடியாக நாம் செயல்பட வேண்டும்'' என்று பிபிசியிடம் சொல்கிறார் உலக சுகாதார மையத்தின் உலகளாவிய ஹெபடிட்டிஸ் திட்டத்தின் இயக்குநர் மருத்துவர் கோட்ஃபிரைய் ஹீர்ன்ஷெல்.

ஹெபடிட்டிஸ் சோதனையின் போது, வைரஸை கண்டறிந்துவிட்டால், ஹெபடிட்டிஸ் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் 90% ஒருவரை காப்பாற்ற முடியும். அதனால், பரிசோதனை என்பது முக்கியமாகிறது. ஹெபடிட்டிஸ் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், வைரஸ் கண்டறியும் சாத்தியக்கூறுகளை மேம்படுத்தவும் உலகில் உள்ள நாடுகள் சிறந்த வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

உயிர் காக்கும் பரிசோதனை

வட கிழக்கு இந்தியாவில் உள்ள சிறிய மாநிலமான மணிப்பூரில், உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட திட்டம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு போதை பழக்கத்துக்கு உள்ளானவர்கள் இடையே ஹெபடிட்டிஸ் சி என்பது பரவலாக உள்ளது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 98% வரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச எச்.ஐ.வி பரிசோதனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும், எச்.சி.விக்கு அதற்கு ஈடான முக்கியத்துவம் தரப்படவில்லை.

160728091843_hepatitis_screening_2_640x3 

அதனால், மாநிலம் முழுக்க பரவலாக பரிசோதனைகளை மேற்கொள்ள சமூக கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

''பிராண்டுகள் இல்லாத மருந்துகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மிகப் பெரிய அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டு உள்ளோம். தொற்று நோயை விரைவாக கண்டறியும் கருவிகளை இந்நிறுவனங்கள் வழங்கி உள்ளன'' என்கிறார் இந்த சமூகக் கட்டமைப்பு மேம்பாட்டின் தலைவர் ராஜ்குமார் நளினிகந்தா.

சுமார் 1,100 பேர் இதில் பங்கெடுத்தார்கள். அதில், பாதிப் பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

''சிகிச்சைகளுக்காக மருந்துகளை நல்ல விலைக்கு வாங்க மருந்து நிறுவனங்களிடம் பேரம் பேசவும் எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இந்த திட்டத்திற்குமுன், இப்பகுதிகளில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் விலை மிகவும் அதிகாமாக இருந்தது. ஆனால், இறுதியில் இந்தியாவில் மற்ற பகுதிகளை காட்டிலும், இங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறது'' என்று பிபிசியிடம் சொல்கிறார் நளினிகந்தா.

கைகொடுத்த சைக்கிள் பிரச்சாரம்

நெதர்லாந்தில், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளை அடையாளம் காண இணையம் சார்ந்த சுயமதிப்பீடு செய்யும் கருவி வழங்கப்பட்டது.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இணையதளத்தில் நுழைய, வல்லுநர்கள் சைக்கிள்கள் சார்ந்த பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர். சைக்கிள் சீட்களுக்கு சிவப்பு நிற கவர்களை கொடுத்தனர்.

160728092022_hepatitis_screening_3_640x3 

''இங்கு அதிகம் பேர் சைக்கில் ஓட்டுகிறார்கள். அவர்களுடைய கவனத்தை பெற விரும்பினோம். அதன் காரணமாக, அவர்களுடைய சீட்களை நாங்கள் பயன்படுத்தினோம்'' என்று பிபிசியிடம் கூறினார் ஆம்ஸ்டெர்டேம் பொதுச் சுகாதார சேவையை சேர்ந்த ஜான்கே ஷிங்கெல்.

இணையம் வழியாக கேட்கப்படும் கேள்விகளைப் பூர்த்தி செய்தபின், 'அபாய' கட்டத்தில் இருப்பவர்கள் என்று பட்டியலிடப்பட்டவர்கள், பெயர் குறிப்பிடாமல் ரத்த பரிசோதனை செய்வதற்கான இலவச பரிந்துரை கடிதத்தை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின் ஒருவாரம் கழித்து, ரத்த பரிசோதனையின் முடிவுகளை இணையம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

160728092731_hepatitis_screening_4_640x3 

''இந்த திட்டத்தின் மூலம் புதிய தொற்று ஏற்படுவதை குறைப்பதே எங்கள் நோக்கம்'' என்கிறார் மருத்துவர் ஷிங்கெல்.

கிராமப்புறங்களிலிருந்து சிறைச்சாலை வரை

உலகிலே கல்லீரல் புற்றுநோயில் அதிக விகிதத்தை --சர்வதேச சராசரியைவிட 6 மடங்கு -- மங்கோலியா பெற்றுள்ளது.

அதிக அளவிலான ஹெபடிட்டிஸ் வைரஸ் தொற்று ஏற்படும் நாடுகளில் மங்கோலியா, எகிப்து மற்றும் கேபனுக்கு அடுத்தபடியாக பிரதான இடத்தில் உள்ளது.

160728092202_hepatitis_screening_5_640x3  

ஆஸ்திரேலியா, குறிப்பிட்ட ஒரு பகுதியில் எச்.சி.வி தொற்றுநோயை சமாளித்து வருகிறது. அதுவேறு எங்கும் அல்ல, சிறைச்சாலைகளில் தான். சிறைகளில் உள்ள பாதிப்பேர் ஹெபடிட்டிஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.

உலகிலே, முதன் முறையாக விக்டோரியா மாகாணத்தில் உள்ள 13 தடுப்பு மையங்களில் ஹெபடிட்டிஸ் பரிசோதிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, சிறைவாசம் அனுபவிக்க சிறைக்குள்ளே வருபவர்களுக்கும், வேறு சிறைகளுக்கு மாறிச் செல்பவர்களுக்கும் முறையான ஹெபடிட்டிஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது உலகிலேயே இது போன்று நடக்கும் முதல் முயற்சியாக கருதப்படுகிறது.

எகிப்து, ஜார்ஜியா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் இந்தத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

எச்.சி.வி நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை தயாரிக்க குறைந்த செலவே ஆகும் போது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், வெறும் பரிசோதனை முயற்சிகள் மட்டுமே போதாது என சில வல்லுநர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.

ஹெபடிட்டிஸ் சி நோய்க்கு எதிரான போரில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கையிலே உள்ளது.

அவர்கள், இந்த ஹெபடிட்டிஸ் நோயைக் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை சுலபமாக அணுகவும், மலிவு விலையில் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.

உலகம் முழுக்க ஹெபடிட்டிஸ் சி நோயின் தாக்கம்

160729141150_hepatitis_624x624_bbc_nocre

http://www.bbc.com/tamil/global/2016/07/160729_hepatitis_news_read

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.