Jump to content

பாலர் போதினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவு  மீண்டும் .... பழைய நினைவுகளை கொண்டு வந்து விட்டது, தமிழினி.
நான்... ஆரம்பக் கல்வியை கற்ற போது,  "பால போதினி" என்ற பாடப் புத்தகம் இருந்தது.
(அதே.... புத்தகத்தில் வந்த, பக்கங்கள்.... இவை என நினைக்கின்றேன்.) :love:
அந்த வயதில்.... அதில் உள்ள படங்களே..... புத்தகத்தை படிக்கத் தூண்டும்.:)

Link to comment
Share on other sites

எனக்கும் முகநூலில் இந்த பக்கங்களை பார்த்தபோது பழைய ஞாபங்களும் எனக்கு படிப்பித்த

ஆசிரியர்கள், என்னுடன் படித்த நண்பிகள் நினைவுக்குள் வந்து சென்றார்கள். நீங்கள் எழுதிய பின்பு தான் "பாலர் போதினி"

என்ற ஞாபகம் வந்தது. நன்றி சிறி அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா...ஹா...ஹா.....!நாங்கள் உதுக்கும் மேலே......! 

அம்மா... ஆடு.... இலை... ஈ.....!  :rolleyes:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

ஹா...ஹா...ஹா.....!நாங்கள் உதுக்கும் மேலே......! 

அம்மா... ஆடு.... இலை... ஈ.....!  :rolleyes:  tw_blush:

ம்மா,  ஆடு,  லை,  ஈ,  ரல்,  ஊஞ்சல்..... 
எல்லாம் படிச்சு, கிளிச்சு.... பாஸ் பண்ணிணாப் பிறகு தான்.....
பால போதினி படிக்கலாம்... சுவியர். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள பாடல்கள் நான் படிக்கவில்லை சிறீயர்...! 

பாரதியார் பாடல்கள்...! கன்னன் பாட்டுக்கள்.....! போன்றவை....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

இதிலுள்ள பாடல்கள் நான் படிக்கவில்லை சிறீயர்...! 

பாரதியார் பாடல்கள்...! கன்னன் பாட்டுக்கள்.....! போன்றவை....!!

தலைப் பாகை  கட்டிய....... பாரதியாரை,   படித்திருக்கின்றோம்  சுவியர்,
ஆனால்.... கன்னன், என்பவரை பற்றி... இதுவரை ,  படிக்கவேயில்லை.
கன்னன்...  யார்? எங்கு அவர் வசித்தவர்?   47.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலா பாலா ஓடி வா படம் விடுவோம் ஓடி வா.....

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூக் கொண்டு வா.....

எப்படி எல்லாம் படித்த நாங்கள் இப்படி  ஆயிட்டொமே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

பாலா பாலா ஓடி வா படம் விடுவோம் ஓடி வா.....

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூக் கொண்டு வா.....

எப்படி எல்லாம் படித்த நாங்கள் இப்படி  ஆயிட்டொமே.... 

சினிமா நடிகரின்  கட் அவுட்டுக்கு.....  பால் ஊத்துற நிலைமைக்கும், பேதைக்கும்,  போதைக்கும்......  
யாழ் மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த.. நிலைமைக்கு கொண்டு வந்தது,

தூர நோக்கு அற்ற..... கூட்டமைப்பின்  அரசியல் தலைமை தான்....

முஸ்லீம் மக்களின் தலைமையை பாராட்ட வேண்டும்.

எங்கள் ஆட்கள், எமக்கு..... குழி பறிப்பதில், குறியாக இருப்பதால்...... 
எம் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டு... வக்கீல் தொழில் பார்த்து, 
நியூஸ் பேப்பர் படிக்கிற.... கேவலம் கெட்ட  இனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருக்காவது தெரியுமா ,,,,,

கீச்சு மாச்சு தம்பலம்
கீயா  மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம்
மாயா மாயா தம்பலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் கூறீய பாட்டுக்கள்... அடுத்து கீச்சு மாச்சு தம்பலம் (வினளயாட்டு) எல்லாம் படித்தனாங்கள்....!

அது ஒரு கனாக் காலம்.....! 

தவறூ: கண்ணன் பாடல்கள்....!

கன்னன் =  கர்ணன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23.jpgஞாபம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் எழுதிய சிலேட்

Link to comment
Share on other sites

6 minutes ago, putthan said:

23.jpgஞாபம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் எழுதிய சிலேட்

ஆமா சிலேட்டில் தப்பா எழுதினதை எப்படி அழிப்பீர்கள்?

எச்சிலா? ஹா தூ.

றேசர் மாதிரி ஒரு சாமான் இருக்குது அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

ஆமா சிலேட்டில் தப்பா எழுதினதை எப்படி அழிப்பீர்கள்?

எச்சிலா? ஹா தூ.

றேசர் மாதிரி ஒரு சாமான் இருக்குது அது என்ன?

அதிகம் எச்சில்தான்:rolleyes:....அது ஞாபகம்  வ்ருதில்லை

Link to comment
Share on other sites

48 minutes ago, putthan said:

அதிகம் எச்சில்தான்:rolleyes:....அது ஞாபகம்  வ்ருதில்லை

ஏதாவது கடற்கரைக்கு போய் கணவாய் கரை ஒதுங்கின கணவாய் ஓட்டை எடுத்து அதன் கோதை உடைத்துவிட்டு பாவிக்கலாம். அந்தக்காலத்தில் பண்ணையில் பொறுக்கின ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஜீவன் சிவா said:

ஏதாவது கடற்கரைக்கு போய் கணவாய் கரை ஒதுங்கின கணவாய் ஓட்டை எடுத்து அதன் கோதை உடைத்துவிட்டு பாவிக்கலாம். அந்தக்காலத்தில் பண்ணையில் பொறுக்கின ஞாபகம்.

ஓம் ஓம் ஞாபகம் வந்திட்டு.......எனக்கும்நினைவிருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளுக்கு கொண்டு போன தமிழினிக்கு பாராட்டுக்கள்.

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

இவைகள் எந்த புத்தகத்தில் வந்தன?

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

இவைகள் எந்த புத்தகத்தில் வந்தன?

இது வயதோ போய் 
தலையும் நரையாகி
சும்மா இருக்கெக்கே
பொழுது போகாம 
அந்த கிழவி கிறுக்கினது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் வருக்கம்தொகு

1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்
கோபம் தணியத் தகுவதாம்.

3. இயல்வது கரவேல்
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.

4. ஈவது விலக்கேல்
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று தடுக்காதே.

5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

6. ஊக்கமது கைவிடேல்
எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே.

7. எண் எழுத்து இகழேல்
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்.

8. ஏற்பது இகழ்ச்சி
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.

9. ஐயம் இட்டு உண்
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு உண்ணு.

10. ஒப்புரவு ஒழுகு
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்
அறிவு தரும் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்
ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

13. அஃகம் சுருக்கேல்
மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

இது வயதோ போய் 
தலையும் நரையாகி
சும்மா இருக்கெக்கே
பொழுது போகாம 
அந்த கிழவி கிறுக்கினது.

தகவலுக்கு நன்றி ஜீவன்.

எந்த புத்தகம் என்று ஞாபகம் இருக்கா?

Link to comment
Share on other sites

10 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி ஜீவன்.

எந்த புத்தகம் என்று ஞாபகம் இருக்கா?

ஆத்திசூடி by ஔவையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13876523_1730518417203756_46241050980103

பாலர் வகுப்பில்..... இதனையும் இலகுவில் மறக்க முடியாது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கு பாலர் வகுப்பிலை படிச்சதெல்லாம் துண்டற மறந்து போச்சுது.....இருந்தாலும் பாட்டி வடைசுட்டகதை , சோனகனும் குரங்கும் , சிங்கம் கிணத்துக்கை விழுந்த கதை கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்திலை இருக்கு. tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 எனக்கு பாலர் வகுப்பிலை படிச்சதெல்லாம் துண்டற மறந்து போச்சுது.....இருந்தாலும் பாட்டி வடைசுட்டகதை , சோனகனும் குரங்கும் , சிங்கம் கிணத்துக்கை விழுந்த கதை கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்திலை இருக்கு. tw_glasses:

அப்போ இன்னும் வயது போகல போல ம்கும் :rolleyes:

இளமை ஊஞ்சல் ஆடுகிறதோtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.