Jump to content

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்


Recommended Posts

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

 

Ranil-Wickremesinghe.jpg

வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூனமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பம்பலபிட்டி ஹோட்டலில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்திரனராக பங்கேற்று உரையாற்று கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/9574

Link to comment
Share on other sites

வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகையைக் குறைத்தாகிவிட்டது. இனித் தெற்கிலும் தமிழ் மக்களின் தொகையைக் குறைக்கவேண்டும் என்று உங்கள் இனமிருகங்களைத் தூண்டிவிடும் தெரிவிப்பாக இதனை எடுத்துக்கொள்ளலாமா பிரதமர் அவர்களே! :unsure:

Link to comment
Share on other sites

தமிழரின் பிரநிதித்துவத்தை குறைப்பதே இவர்களின் நோக்கம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டு விட்டார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில்

இவர்கள் ஏன் யாழ், மற்றும் ஹாட்லி கல்லூரி நூலகங்களை எரித்த ஐதேக பயங்கரவாதக் கட்சியை சேர்ந்தவர்களை  பிரதம விருந்திரனராக அழைக்கின்றனர்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யே.ஆர் நரியினுடைய பிரதி இந்தக் குட்டிநரி.வட-கிழக்கிலே போரென்றால் போரென்று நேரை சொல்லி மோதியது. இது புன்னகைத்தவாறு அழிக்கிறது. அழித்தது. தமிழரது ஆயுதப் போராட்டத்தை அழித்து, தமிழரது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, நாடாளுமன்றத்திலும் விகிதாசார அடிப்படையிலேயென்று எதையுமே செய்யமுடியாத நாடாளுமன்ற உறுப்பினர்தொகையை இன்னும் குறைப்பதனூடாக முழுமையான சிங்கள நாடாளுமன்றமாக்கிவிட்டால் சிங்கள பௌத்த நாடாகிவிடுமென்ற நரிக்கணக்கைப்போட்டு வைத்துவிட்டு சிங்கள மக்களை உசுப்புகிறார். இந்த அவலநிலையிலைதானாம் 2016 தீர்வாமே, என்று உலகநாடுகளெல்லாம் பேச்சாமெண்டு உலகம் சுற்றுறவை சொல்லுகினம்.
மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் பங்களிப்போடு வீதியிலிறங்கிப் போராடினால் மட்டுமே இருப்பதைப் புடுங்குவதையாவது தடுக்கலாம். இல்லையேல் அம்……….தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

 

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

 

 

இந்த வசனம் ஒவ்வொரு சிங்களத்தின் மனதிலும் பசுமரத்தாணி போல் பதிந்து வைக்கப்படும். சந்தர்ப்பம் வரும் போது சாதிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, போல் said:

இவர்கள் ஏன் யாழ், மற்றும் ஹாட்லி கல்லூரி நூலகங்களை எரித்த ஐதேக பயங்கரவாதக் கட்சியை சேர்ந்தவர்களை  பிரதம விருந்திரனராக அழைக்கின்றனர்? 

நல்லிணக்கத்திற்கு எங்கன்ட ஆட்களின் சிக்னலாம்.....

Link to comment
Share on other sites

On 30/7/2016 at 10:07 AM, putthan said:

நல்லிணக்கத்திற்கு எங்கன்ட ஆட்களின் சிக்னலாம்.....

என்ன செய்யவது!
இப்படியும் ஒரு மானம் கெட்ட பிழைப்பை நடத்த, அதுவும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் முயலுவார்கள் என்பதை நம்புவது கடினமாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவையள் நல்லிணக்கத்திற்காக(ராமநாதன்,அருணச்சலம்) உழைத்தது எங்களுடைய சரித்திரத்தில் உண்டுதானே ...ஆனால் அவர்களாலும் சிங்களவர்களிடமிருந்து ஒரு சிறு துளி நன்மைகளையும் பெற்றுகொள்ளமுடியவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை...இவர்களுடைய நல்லிணக்கமும் தோல்வியில் தான் முடியும்...இருந்தாலும் முயற்சிக்கட்டும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.