Jump to content

அயர்லாந்து: இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது


Recommended Posts

Hogan's_Flying_Column

பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர்ந்தும் அங்கம் வகிக்கவே வாக்களித்திருந்தனர்.

சிதையாத சித்தாந்தம்

பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்துக்குள் சிக்கிய அயர்லாந்துக்கே உரித்தான வட அயர்லாந்து, மீண்டும் அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாகும் என்ற போராட்டம் நீண்டது. அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டத்தை நடாத்திய அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA) பின்னர் ஐக்கிய அயர்லாந்தையும் வலியுறுத்தி தனது தாக்குதல்களை முன்னெடுத்தது. அதேபோன்று, சின் பையின் என்ற அயர்லாந்தின் முதன்மையான அரசியல் அமைப்பு அரசியல் போராட்டத்தை சுமார் நூறு வருடங்களாக மேற்கொண்டுவருகிறது. சின் பையினின் ஆயுத அமைப்பே ஐ.ஆர்.ஏ என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தாலும் சின் பையினின் அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டம் தடைகளை தகர்த்து முன்னகர்ந்தது.

ஆங்கில அதிகாரத்தை அயர்லாந்தில் நிலைநிறுத்த முயற்சித்த பிரித்தானியர்களுக்கும், தனித்துவத்தையும் தன்னாட்சியையும் நிலைநிறுத்த போராடிய அயர்லாந்து குடியரசுக்குமிடையிலான மோதுகை சுமார் எண்ணூறு வருட வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அயர்லாந்தை புரொட்டஸ்தாந்தை பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய இராச்சியத்துடன் 1801இல் இணைத்த போது தீவிர ஆயுத மோதல்களுக்கான அடித்தளமிடப்பட்டது.

விடுதலைக்கான வித்து

பிரித்தானியாவின் பிடிக்குள் அயர்லாந்து கடுமையாக சிக்குண்டிருந்த காலம். அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் தொடர்ந்தும் வாழமுடியாது, எம்மை எதிர்த்து நிற்பது எம்மைவிட பலம்வாய்ந்த படைகள் என்றாலும் எமது தேசத்தின் சுதந்திரத்திற்காக நாம் போராடியே ஆகவேண்டும் என்ற முடிவு அயர்லாந்தின் புரட்சியாளர்களால் எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவை அமுல்படுத்துவதற்காக இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதி நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் நிமிர்த்தம் இந்த எழுச்சி Easter Rising (ஈஸ்டர் எழுச்சி) என பெயரிடப்பட்டு 24 ஏப்ரல் 1916 வெடித்தது. இருப்பினும், எழுச்சி ஆரம்பிப்பதற்கு அண்மித்த நாட்களில் தலைமைத்துவத்திற்கு இடையில் உறுதியற்ற தன்மையும், உடன்பாடற்ற தன்மையும் காணப்பட்டது. இது போராளிகளுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணியதோடு தாக்குதல் திட்டத்தை பிற்போட நிர்ப்பந்தித்தது. அத்துடன், அயர்லாந்து தொண்டர்கள் (Irish Volunteers) படைப்பிரிவைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் தமது தலைமைத்துவத்தின் வேண்டுதலுக்கு இணங்க தாக்குதல்களில் இறங்கவில்லை. ஆதலால், பிரஜைகள் இராணுவம் (Citizen Army) என்ற மற்றைய அமைப்பின் படைப்பிரிவே பெரும்பாலான தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்கியது. அத்துடன், ஜேர்மனியிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆயுதங்களும் இராணுவத் தளபாடங்களும் வழங்கல் தடைப்பட்டதால் உரிய நேரத்திற்கு வந்தடையவில்லை. இத்தகைய உறுதிப்பாடற்ற தன்மைகளால், ஆரம்பத்தில் அயர்லாந்து தழுவிய ரீதியில் நடாத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட புரட்சி இறுதியில் டப்ளின் நகரத்தை பிரதானமாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டது.

டப்ளின் நகரில் அமைந்திருந்த பொதுத் தபால் நிலையம் உட்பட்ட கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக கருதப்பட்ட இடங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பொதுத் தபால் நிலைய படிக்கட்டுக்களில் சக போராளிகள் புடைசூழ நின்ற பற்றிக் பியேஸ் (Patrick Pearse), அயர்லாந்து மக்களுக்கான அயர்லாந்து குடியரசின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். கடவுளினதும் மரணித்த எங்கள் சந்திதியின் பெயரிலும், தேசத்தின் பழைய மரபை அயர்லாந்து அன்னை எங்கள் ஊடாக பெற்றுக்கொள்கிறாள். தனது கொடிக்குக் கீழ் அணிதிரள அழைக்கும் அயர்லாந்து அன்னை, தனது சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கு அழைக்கிறார் என்ற தொனிப்பட்ட அந்த அறிக்கை நீண்டு சென்றது. அயர்லாந்து குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியும் ஏற்றப்பட்டது. அந்தநிறங்களே அயர்லாந்தின் தேசியக்கொடியை இன்றுவரை அலங்கரிக்கின்றன.

தவிர்க்கமுடியாத தோல்வி

போராட்டம் தொடங்கிய அடுத்த நாளே பெருமளவான பிரித்தானியா படைகள் டப்ளின் நகரில் வந்து குவிந்தனர். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. மூன்றாவது நாள், பிரித்தானிய படைகளின் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது. துப்பாக்கி ரவைகளும், குண்டுகளும் முடிவடைந்த பின் ஒரு முனையில் இருந்த போராளிகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைகின்றனர். அதனைத் தொடர்ந்து நகரத்துக்குள் நுழைந்த பிரித்தானியப் படையினருக்கு உணவு வழங்கி வரவேற்றார்கள் அயர்லாந்து மக்கள்.

இன்னொரு முறையில் தீவிர மோதல்கள் தொடர்ந்தது. அதில் பிரித்தானியப் படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெனரல் சேர் ஜோன் கிரென்பெல் மக்ஸ்வேல் பிரித்தானியாவிலிருந்து களமிறக்கப்பட்டார். தீவிர தொடர் மோதல்களால் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவியது. பொதுத் தபால் நிலையத்திலிருந்தும் போராளிகளை பின்வாங்குமாறு கட்டளை பிறப்பித்தார் பற்றிக் பியேஸ். போராக மாறிய போராட்டத்தின் ஆறாவது நாள் நிபந்தனையற்ற சரணடைவுக்கு போராளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஆறு நாட்களில் தோல்வியில் முடிந்த Easter Rising இல் சில நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினார்கள். Eater Rising இற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 3,000 மேற்பட்ட அயர்லாந்து மக்கள் கைதுசெய்யப்பட்டனர். டப்ளின் நகரம் அழிவடைந்தது.

அயர்லாந்தின் சுதந்திரத்திற்கான புரட்சிக்கு தலைமை வகித்த அயர்லாந்தின் போராளிகள் அடையாளம் காணப்பட்டு தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர். பிரித்தானியப் படைகளின் காரணமற்ற கைதுகளும் தடுத்து வைப்புகளும் ஆத்திர அலையை அயர்லாந்து மக்களிடம் ஏற்படுத்தியது.

ஈற்றில் மக்கள் மயப்படுத்தப்படாத போராட்டம், தலைமைத்துவங்களுக்கு இடையில் நிலவிய முரண்பாடுகள், திட்டமிடல், தொடர்பாடல், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளை வழங்கலில் காணப்பட்ட பலவீனங்கள் போன்றவற்றால் Easter Rising  தோல்வியில் முடிந்தது.

தோல்விக்கு பின்னர் தோன்றிய மக்கள் எழுச்சி

அந்தப் பொழுதுகளில் விடுதலைப் பொறியொன்று வெளிக் கிளம்புமென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிலைமை மாறியது. தோல்வியிலிருந்து தோற்றம் பெற்றது சுதந்திரத்துக்கான திறவுகோல். இழப்புகள், வலிகள், தோற்றுப்போனோம் என தோற்றிய எண்ணப்பாடுகள், தொடர்ந்த அவமானங்களும் அடக்குமுறையும் மக்களை அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தூண்டியது.

பற்றிக் பியேஸ் உட்பட Easter Rising ற்கு முன்னிலையிருந்து செயற்பட்ட பலரும் தேசியவாதத்தின் அடிப்படையில் தோன்றிய எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்தார்கள். எங்களை அழிப்பதன் ஊடாக அயர்லாந்தின் சுதந்திர தாகத்தை அழிக்க முடியாது. நாம் மரணித்தாலும் சுதந்திரத்தில் விருப்புக்கொண்ட எமது எதிர்கால சந்ததி தொடர்ந்து போராடும். நாம் விட்டுச் செல்லும் வரலாறும் எமது அர்ப்பணிப்புளும் வீண் போகாது என்ற தொனிப்பட்ட பற்றிக் பியேஸ் போன்றவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அயர்லாந்தின் தேசியவாதத்தை பலப்படுத்தியிருந்தது.

இதன் காரணமாகவே, படுகொலைசெய்யப்பட்ட உடல்களை உறவினர்களிடம் கையளிக்கக்கூடாது என்ற கருத்தை பிரித்தானியா கட்டளைத் தளபதியான கிரென்பெல் மக்ஸ்வேல பிரித்தானியாவின் அன்றைய பிரதமர் அஸ்குயித்துக்குத் (Asquith) தெரியப்படுத்தினார். ஏனெனில், அயர்லாந்தில் வேரூன்றத் தொடங்கிய தேசியவாதம் இந்த உடலங்களை கண்டதும் கிளர்ந்தெழும். அது ஒரு எழுச்சியாக மாறும் என்ற எண்ணமே உடலங்களை கையளிக்கக் கூடாது என்ற அவரது நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.

இது போன்ற விடயங்கள், அயர்லாந்து மக்களின் ஆத்திரத்தையும் சுதந்திரத்துக்கான அபிலாசையையும் இரட்டிப்பாக்கியதுடன் விடுதலைக்கான வேட்கைக்கு வித்திட்டது.

அயர்லாந்தையும் உள்ளடக்கிய ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தல் 1918இல் இடம்பெற்றது. இதில் அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக போராடிய சின் பையின் அமைப்பும் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியது. பிரித்தானியர்களுக்கு சார்பானவர்கள் அயர்லாந்தில் தெரிவுசெய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கோடும் தாமே அயர்லாந்து மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தும் எண்ணத்தோடும் ஒரு தந்திரோபாயமாகவே சின் பெயின் ஐக்கிய இராச்சியம் நடாத்திய தேர்தலில் பங்குபற்றியது. ஆயினும், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் அமர்வதை புறக்கணித்தார்கள். அத்துடன், அரசியல் போராட்டத்தின் அங்கமாக, அயர்லாந்துக்கான நாடாளுமன்றத்தை கூட்டி அயர்லாந்தின் சுதந்திர பிரகடனத்தை வெளியிடுவதற்காக போரினால் சிதைக்கப்பட்ட டப்ளின் நகரில் 1919இல் ஒன்றுகூடினார்கள்.

(தொடரும்)

நிர்மானுசன் பாலசுதந்தரம் 

http://maatram.org/?p=4688

இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – II

File Pics The Good Friday Agreement was agreed 15 years ago. L TO R. Taoiseach and Fianna Fail leader Bertie Ahern and British Prime Minister Tony Blair at Castle Buildings signing the peace agreenment that will allow the people of Northern Ireland to decide their future. 10/4/1998 Pic Photocall Ireland

மீண்டெழுதல்

அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின் பையின் உறுதியெடுக்க, அதனைத் தொடர்ந்து, அதன் இராணுவக் கட்டமைப்பென கூறப்படுகின்ற அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA)  அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான கெரில்லா போராட்டத்தை ஆரம்பித்தது (அயர்லாந்து தொண்டர்கள் என்ற இராணுவ அமைப்பே 1916 தோல்விக்குப் பின்னர் ஜ.ஆர்.ஏ ஆக மாற்றம் பெற்றதென பரவலாகக் கருதப்படுகிறது.)

1919இல் ஆரம்பித்த சுதந்திரத்திற்கான போர் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து 1921இல் முடிவுக்கு வந்தது. அதன் பிரகாரம், ஆங்கிலேயருக்கும் அயர்லாந்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கத்தோலிக்கர்கள் வாழும் சுதந்திர அயர்லாந்து அரசாக ஒரு பகுதியும், புரொட்டஸ்தாந்தினர் வாழும் வட அயர்லாந்து இன்னொரு பகுதியாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஐ.ஆர்.ஏயின் ஒரு பகுதியினர் எதிர்த்தனர்.

இதனோடு ஆரம்பித்த ஐ.ஆர்.ஏயின் பிளவு, காலத்துக்குக் காலம் பல பிரிவுகளாக உருவெடுத்தது. அதேவேளை, அரசியல் இயக்கமான சின் பையினுக்குள்ளும் உள்ளக முரண்பாடுகள் தோன்றி சின் பையினுலிருந்து ஒரு தொகுதியினர் வெளியேறி Fianna Fáil என்ற பிறிதொரு அமைப்பை தோற்றுவித்து தேர்தல்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இவ்வாறு அரசியல் அமைப்பான சின் பையினுக்குள்ளும் ஆயுத அமைப்பான ஐ.ஆர்.ஏக்குள்ளும் பிளவுகளும் பிரிவுகளும் தோன்றின, தொடர்ந்தன.

எது எப்படி இருப்பினும், ஐக்கிய இராச்சியத்தின் சகல நேரடிக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுதலைபெற்று, இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதியில், அதாவது 18 ஏப்ரல் 1949 அயர்லாந்து குடியரசாக பூரணசுதந்திரத்துடன் மிளிரத்தொடங்கியது.

அடிப்படைகளில் விட்டுக்கொடுப்பில்லை

இருப்பினும், அயர்லாந்துக்கு உரித்தான வட அயர்லாந்தின் ஆறு தொகுதிகள் ஐக்கிய இராச்சியத்தோடு இருந்தது அயர்லாந்தை உறுத்திக்கொண்டேயிருந்தது. முரண்பாடுகள் தொடர்ந்த போதும் சின் பையினும் ஜ.ஆர்.ஏயும் பிளவுபடாத ஐக்கிய அயர்லாந்தை வலியுறுத்தி வந்தன. இதன் நிமிர்த்தம், 1969 தொடக்கம் 1967 வரை ஐ.ஆர்.ஏயின் தாக்குதல்கள் தொடர்ந்தன. மறுபுறம், பிரித்தானியப் படைகளின் தாக்குதல்களும் தொடர்ந்தது.

பிரித்தானியப் படைகளின் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஐ.ஆர்.ஏக்கான ஆதரவுத் தளத்தை பலப்படுத்தியதோடு, சுதந்திர அயர்லாந்தே தமக்கான தீர்வாக அமையும் என்ற சிந்தனையையும் தொடர்ந்து தூண்டியது. 1977இல் ஐ.ஆர்.ஏ. மீள ஒருங்கிணைக்கப்பட்டது. இவர்களுக்கு பலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட வேறு பல வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தது. 1981இல் ஐ.ஆர்.ஏயின் ஏழு அங்கத்தவர்கள் உட்பட பத்துபேர் உண்ணா நோன்பிருந்து அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக உயிர்நீத்தார்கள்.

பிரித்தானியாவோ உண்ணாவிரதத்துக்கோ அயர்லாந்தின் உணர்வுகளுக்கோ மதிப்பளிக்கவில்லை. ஆனால், இது அயர்லாந்தின் போராடும் உணர்வின் இன்னுமொரு பரிமாணத்தைக் காட்டியதோடு, பிரித்தானியாவின் அடக்குமுறை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்தாலும் அயர்லாந்து அடிபணியப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டியது.

சமகாலத்தில், சின் பையினும் ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்திற்கான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்தது. உண்ணாவிரதத்திற்குப் பிற்பாடு, ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தை அரசியல் ஜனநாயகப்படுத்துவதற்கு முயற்சித்தார்கள் சின் பையினின் முக்கிய தலைவர்களான ஜெரி அடம்சும் (Gerry Adams) மார்ட்டின் மக்கின்னசும் (Martin McGuiness).

இதற்குப் பிற்பாடும் பல்வேறு முரண்பாடுகள் வெவ்வேறு பக்கங்களிலிருந்த எழுந்தன. ஆயினும், இறுதியில் 1998இல் பெரியவெள்ளி (Good Friday Agreement) அல்லது பெல்பாஸ்ட் உடன்படிக்கை (Belfast Agreement) கைச்சாத்திடப்பட்டது. இது அதிகாரப் பரவலாக்கலுக்கும், வட அயர்லாந்து தொடந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருக்க ஒப்புதல் அளித்தது. 28 ஜூலை 2005இல் தமது போரியல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக ஐ.ஆர்.ஏ அறிவித்தது.

அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம், போர் நிறுத்த உடன்பாடுகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று நீடித்த போதும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தில் சின் பையின் தொடந்தும் உறுதியாக இருந்து வருகிறது. அதன் வெளிப்பாடே, ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கத்திற்கான குரலை ஐக்கிய இராச்சியத்தின் ஜூன் 23 வாக்கெடுப்புகள் வெளிவந்த பின்னும் உரத்து கூறியுள்ளது சின் பையினின் தலைமை.

இதேவேளை, வட அயர்லாந்தின் கணிசமான மக்களும் அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, அயர்லாந்து குடியரசின் கடவுச்சீட்டுக்களுக்கும் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதென்ற பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வட அயர்லாந்து மக்களின் முடிவுகளை துரிதப்படுத்தியிருப்பினும், வட அயர்லாந்து மக்கள் மத்தியில் அயர்லாந்து குடியரசுடன் தாம் இணைய வேண்டும் என்ற மனமாற்றம் இதற்கு முன்னரே துளிர்விடத் தொடங்கிவிட்டது.

இதற்கு அயர்லாந்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதோடு, பிரித்தானியாவின் சட்ட அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்ற அயர்லாந்தின் அரசியல் பீடங்களுக்கும், அயர்லாந்தின் சுதந்திரத்தை, அயர்லாந்துக்கான சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதில் முதன்மை பாத்திரம் வகித்த, புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் அயர்லாந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் இடையில் நிலவிய வினைத்திறன் மிக்க கூட்டுச் செயற்பாடுகள் வழிவகுத்தன.

புலம்பெயர் அயர்லாந்து மக்கள்

அயர்லாந்தில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான போர் பல மில்லியன் அயர்லாந்து மக்களை உலகெங்கும் புலம்பெயர வைத்தது. அயர்லாந்து குடியரசில் வாழும் அயர்லாந்து மக்களின் எண்ணிக்கையோ சுமார் 4.6 மில்லியன். ஆனால், அயர்லாந்தை அடியாகக் கொண்ட சுமார் 70 மில்லியனுக்கு மேற்பட்ட அயர்லாந்து மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்த அயர்லாந்து மக்கள், உலகில் பலம் வாய்ந்த புலம்பெயர்ந்த சமூகக் கட்டமைப்புகளில் முக்கியமான தரப்பாகும். அவர்கள் தனித்து உணர்வுரீதியான செயற்பாடுகளுடன் மட்டும் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. மாறாக, ஐக்கிய அயர்லாந்தின் சுதந்திரம் தொடங்கி ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கம் வரை சொந்த நிகழ்ச்சி நிரலில் நேர்த்தியான நிர்வாக முகாமைத்துவத்தோடு தமக்குரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இவர்களுடைய செயற்திறன் மிக்க நடவடிக்கையின் விளைவால், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பில் கிளின்டன் இருந்தபோது, சின் பையினின் முக்கிய தலைவரான ஜெரி அடம்ஸ் அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஐ.ஆர்.ஏயை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு அதனோடு ஜெரி அடம்ஸ் தொடர்புபடுத்தப்பட்டதோடு, ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்குள் நுழைவதை அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் முழுமையாக எதிர்த்தது. ஆயினும், இறுதியில் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து மக்கள், அமெரிக்காவின் தீர்மானம் மேற்கொள்ளும் தரப்புகளை இலக்குவைத்து மேற்கொண்ட நேர்த்தியான பரப்புரைகளும் செயற்திட்டங்களும் ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்குள் நுழைவதை உறுதிப்படுத்தியது.

நாற்பத்தெட்டு மணித்தியால அனுமதிதான் கிடைத்ததாயினும், இது சர்வதேச ரீதியில் சீன் பையின் தனிமைப்படுத்தப்பட்டதை முறியடிக்க பக்கத்துணையாக மாறியது. உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும் தமது அடி அயர்லாந்து என்ற அடையாளத்துக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அயர்லாந்தை அடியாகக் கொண்டவர்கள்.

1916 எழுச்சி தோல்வியில் முடிந்த போதும் அது அயர்லாந்தின் விடுதலைக்கு வித்தாக அமைந்தது. ஆதலாலேயே, அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்த அயர்லாந்தின் பதினாறு போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் நூறாவது ஆண்டிலும் அயர்லாந்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றது.

சமகாலப்பகுதியில், அயர்லாந்து புலம்பெயர் சமூகங்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், சுதந்திரப் போராட்டத்தையும் அதற்காக வீழ்ந்தவர்களையும் கௌரவிப்பதாக அமைந்தது. கூட்டு நினைவுகூரல் என்பது அயர்லாந்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்ததாக இருந்துவருகிறது. அது, அயர்லாந்தின் எழுச்சியிலும் அயர்லாந்தின் அடையாளத்தை கட்டமைப்பதிலும் பங்கு வகிக்கிறது.

ஈழத்தமிழர்களுடனான தொடர்பு

மே 2009இல் ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பு இடம்பெற்ற பின், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டி அயர்லாந்திலுள்ள கணிசமான கத்தோலிக்க தேவாலயங்களில் மணியோசையைத் தொடர்ந்து அமைதி வணக்கமும் செலுத்தப்பட்டது.

ஜனவரி 2010இல் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளது, இனஅழிப்பு தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவையென அறிவித்தது. இதன் நிமிர்த்தமே, டிசம்பர் 2013இல் ஜேர்மனியின் பிறேமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு இனஅழிப்பை மேற்கொண்டுள்ளது என்ற தீர்ப்பை வழங்கியது.

அழிவுகளுக்கு மத்தியிலும் சுதந்திரத்துக்கான பயணத்தைத் தொடர்ந்து இலட்சியத்தை அடைந்த தேசம் எமக்கான பாடத்தை மட்டும் சொல்லிநிற்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர்களின் நீதிக்காக சில பங்களிப்புகளையும் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தாயக அரசியல் தரப்புகளும், தமிழர் தாயகத்தை மையப்படுத்திய புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், நீதி மறுப்பும், தமிழின அடையாள அழிப்பு மிகநுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழர் தேச நலனை அடைவதற்காக என்ன செய்யப் போகிறார்கள்? எப்படிச் செய்யப் போகிறார்கள்?

மாறிவரும் உலக ஒழுங்கையும், சுதந்திரத்திற்காகப் போராடிய, போராடிக்கொண்டிருக்கும் அனுபவங்களையும் வரலாறுகளையும் மனதிற் கொண்டு, தமிழர் தேச அணுகுமுறைகளிலும் உபாயங்களிலும் மாற்றம் ஏற்படாதவிடத்து, தமிழர்களின் இலட்சியப் பயணம் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வதோடு, இலக்கிலிருந்து இன்னும் தூர விலகிவிடும்.

நிர்மானுசன் பாலசுந்தரம்

http://maatram.org/?p=4711

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.