Jump to content

எல்லாளனின் சமாதி அனுராதபுரவில் உள்ளதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Dakshina stupaஇலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.

‘எல்லாள மன்னனின் சமாதி இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இங்கு காணப்படவில்லை. அனுராதபுரத்திற்கு அருகில் எரிந்த நிலையில் காணப்படும் செங்கற்களால் அமைக்கப்பட்ட இடிந்து போன கட்டடம் தான் எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்பட்டாலும் கூட இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிராமி வார்த்தைகளை எவராலும் வாசிக்க முடியவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் காணப்படும் அழிவடைந்த கட்டடமானது இந்துக்களின் அல்லது பௌத்தர்களின் ஆலயமாக இருக்கலாம் எனவும் பெரும்பாலும் இது ஒரு பௌத்த ஆலயமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தமிழ் பேசும் நாகர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

‘நீண்ட காலமாக இந்துமதத்திற்கு அல்லது பௌத்த மதத்திற்கு மாறும் எண்ணத்துடன் வாழ்ந்த நாகர்கள் தாம் சார்ந்த மதங்களைப் பிரதிபடுத்தும் வணக்கத் தலங்களை அமைத்தனர். இவ்வாறான தலங்களில் பெரும்பாலானவற்றில் இன்றும் ‘மணி நாகன்’ என்ற வார்த்தை தமிழ்ப் பிராமிய மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்நிலையில் அனுராதபுரத்தில் எரிந்த நிலையில் காணப்படும் கட்டடமும் நாக அரசர் ஒருவரால் கட்டப்பட்டிருக்கலாம்’ என பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்தார்.

பேராசிரியர் பத்மநாதன்

பேராசிரியர் பத்மநாதன்

‘ஆனால் இங்கு குறிப்பிடப்படும் கட்டடமானது எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்படுகின்ற போதிலும் அது அவ்வாறிருப்பதற்கான சாத்தியமில்லை. ஏனெனில் எல்லாள மன்னன் கி.மு. 205-161 வரையான காலப்பகுதியில் அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே அனுராதபுரத்தை ஆட்சி செய்திருந்தார். ஆனால் இந்தக் கட்டடமானது அனுராதபுரத்தை நாகர்கள் ஆட்சி செய்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதற்கான ஆதாரம் காணப்படுகிறது’ என பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்தார்.

எல்லாள மன்னனின் சமாதியானது கனித்த திஸ்ஸவினால் கி.பி. 165-193 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டதாக 1896ல் தொல்பொருளியலாளர் H.C.P பெல் தெரிவித்திருந்தார்.

கலாநிதி ஜேம்ஸ் இரட்ணமின் கருத்து:

சிங்கள அரசனான துட்டகெமுனுவுடனான யுத்தத்தின் போதே எல்லாள மன்னன் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதால் இது எல்லாள மன்னனின் சமாதியாக இருக்கலாம் எனவும் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் சிறிலங்காவைத் தமது கொலனித்துவ ஆட்சிக்குக் கொண்டு வரும் வரை இந்த இடம் புனித இடமாகப் பேணப்பட்டிருப்பதற்கான சாட்சியம் காணப்படுவதாகவும் கலாநிதி ஜேம்ஸ் ரி.இரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்து வந்ததாகக் கூறப்படும் சோழ அரசரான எல்லாளன் அனைவராலும் குறிப்பாக இவரைக் கொன்ற துட்டுகெமுனுவாலும் ஆட்சியாளராகக் கருதப்பட்டதுடன், இவர் போரில் கொல்லப்பட்ட இடத்தால் செல்லும் போது அமைதி வணக்கம் செலுத்திச் செல்லுமாறும் துட்டுகெமுனு தனது மக்களுக்கு கட்டளையிட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

Dakshina stupa

‘இந்நிலையில், அனுராதபுரத்தில் காணப்படும் புராதன கட்டட அழிவுகளை அடையாளங் கண்டுகொள்வதில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அனுராதபுரத்தில் எல்லாள மன்னன் கொல்லப்பட்ட இடத்தைக் கடந்து செல்லும் மன்னர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் அமைதி வணக்கம் செலுத்தியே செல்ல வேண்டும் எனக் கட்டளை இடப்பட்டிருந்தமை உறுதியாகின்றது. ஆகவே அனுராதபுரத்திலுள்ள ஒரு இடம் இவ்வாறான பிரபலத்தைப் பெற்றுள்ளது இங்கு உறுதியாகிறது. இது காலாதி காலமாக செவி வழியாகக் கூறப்படும் கதையாகும். ஆகவே இது தொடர்பில் தவறு நடந்திருப்பதற்கான வாய்ப்பு சாத்தியமற்றது’ என கலாநிதி இரட்ணம் எழுதியிருந்தார்.

தேவானந்தாவின் வேண்டுகோள்:

சிங்கள ஆட்சியின் கீழ் இத்தீவை ஒன்றிணைப்பதற்காக எல்லாள மன்னனைக் கொலை செய்த சிங்கள ஆட்சியாளரான துட்டகெமுனுவின் மாளிகையைப் புனரமைக்கும் அதேவேளையில் அனுராதபுரத்தில் உள்ளதாகக் கூறப்படும் தமிழ் மன்னன் எல்லாளனின் சமாதியைக் கண்டறிந்து அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துட்டகெமுனு – எல்லாளனுக்கு இடையில் இடம்பெற்ற யுத்தமானது சிங்கள-தமிழ் யுத்தம் எனக் கூறப்படுவது தவறானது எனவும் அனுராதபுரத்தைத் தத்தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இவ்விரு அரசர்களும் சண்டையிட்டனர் எனவும் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

சோழத் தமிழ் மன்னான எல்லாளனை சிங்கள ஆட்சியாளரான துட்டகெமுனு கொலை செய்ததானது தமிழ் ‘மக்களை சிங்கள பௌத்தர்கள் வெற்றி கொண்டமைக்கான ஒரு சரித்திர நிகழ்வாகக் கூறப்படுகின்றது. அத்துடன் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ் அரசன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்த போது அந்தப் படையெடுப்பானது தடுக்கப்பட்டதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பான்மை சிங்கள – பௌத்த சமூகத்தவர்கள் மத்தியில் பெரியதொரு வரலாற்றுப் பதிவாக உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்’ தேவானந்தா குறிப்பிட்டார்.

துட்டகெமுனு – எல்லாளன் மத்தியில் இடம்பெற்ற யுத்தமானது இன ரீதியான யுத்தமல்ல என்ற தேவானந்தாவின் கருத்திற்குப் பேராசிரியர் பத்மநாதனும் தனது ஆதரவை வழங்கினார்.

‘துட்டகெமுனு தொடர்பாக பதினொரு அத்தியாயங்களில் விபரிக்கும் மகாவம்சமானது இவரை சிங்களவர் என அடையாளங் காட்டவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

தொல்லியலை அரசியல் மயப்படுத்துதல்:

எல்லாள மன்னனின் சமாதியைக் கண்டறிந்து அதனைப் பாதுகாப்பது தொடர்பாக தேவானந்தாவால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு இதுவரையில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

இது தொடர்பாக தமிழ் வரலாற்றாய்வாளர்கள் ஆச்சரியப்படவில்லை. எல்லாள மன்னனின் சமாதி தொடர்பான எண்ணக்கருவானது தூண்டப்பட்டால், எல்லாள மன்னனை துட்டகெமுனு என்கின்ற சிங்கள மன்னன் தோற்கடித்த விடயமானது சித்தரிக்கப்படுவதன் மூலம் இது சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையில் மேலும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் என தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

எல்லாளன் ஒரு ஆட்சியாளர் மட்டுமே என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், சிங்களவர்கள் மத்தியில் இது தொடர்பான வெற்றி மமதை தற்போதும் காணப்படுகிறது. பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தில், எல்லாள மன்னனின் வீரத்திறன் தொடர்பாக துட்டகெமுனு விழிப்புடன் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது துட்டகெமுனு மன்னன் பத்து ஆண்டுகளாக வாழ்ந்ததாகக் கூறப்படும் மாளிகையைப் புனரமைக்கும் பணியை முன்னெடுக்கும் அதேவேளையில் எல்லாள மன்னனின் சமாதியையும் கண்டறிந்து அதனையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுவே இன மீளிணக்கச் செயற்பாட்டை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தேவானந்தா நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், எல்லாள மன்னனின் சமாதி தொடர்பான தேவானந்தாவின் வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என தமிழ் வரலாற்றாய்வாளர்களும் தொல்பொருளியலாளர்களும் நம்பிக்கை கொள்ளவில்லை. சிறிலங்காவின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் போன்றன நீண்டகாலமாக நிலைத்திருக்கும் சிங்கள – தமிழ் இன முரண்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுச் சித்தரிக்கப்படுவதே இதற்கான மூல காரணம் எனவும் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுகிறார்.

ஆங்கிலத்தில்  – P.K.Balachandran
வழிமூலம்        – New Indian express
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2016/07/28/news/17695

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.