Jump to content

யாழ்ப்பாணத்தில் இருந்து முழுநீள திரைப்படம்


Recommended Posts

படத்தின் கதாநாயகன் ஜெராட் மற்றும் கதாநாயகி மிதுனா
தம்­பி­ஐயா தேவதாஸ்
பாடசாலை மாணவர்களாக தோன்றும் நடிகர்கள்
showImageInStory?imageid=287133:tn
 

தமிழ்ச் சினி­மாவை ரசிக்கும் ரசி கர்கள் இப்­பொ­ழுது உலகம் எங்கும் பரந்­தி­ருக்­கி­றார்கள். அத்­தனை பேருக்கும் தீனி­போட்ட தமிழ் சினிமா உலகம் சென்­னையில் இருக்­கி­றது என்­பதை நாம­றிவோம். பெரும்­பா லான தமிழ்த் திரைப்­ப­டங்கள் இப் பொழுதும் சென்­னையில் இருந்து தான் வெளிவரு­கின்­றன. ஆனாலும் இப்­பொ­ழுது தமிழ்ப்படங்கள் பிற நக ரங்­க­ளி­லி­ருந்தும் வெளி­வரத் தொடங் கு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தமிழ்ப்­ப­டங்கள் லண்டன், டொரண்டோ, பாரிஸ், கொழும்பு போன்ற நக­ரங்­க ளி­லி­ருந்து தயாரிக்கப்பட்டு வெளி­வ­ரு வதை சாதா­ரண­மாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

இவற்றை விட யாழ்ப்­பா­ணத்­தி­லி ருந்தும் தமிழ்ப்­ப­டங்கள் வெளி­வரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. பல குறும் ப­டங்கள் தயா­ரிக்­கப்­பட்ட யாழ்ப்­பா ணத்தில் இப்­பொ­ழுது முழு நீளத் தமிழ்த் திரைப்­ப­ட­மொன்று தயா ரிக்­கப்­பட்டு இலங்கை தணிக்கை சபையின் அனு­ம­தி­யையும் பெற்­றி­ருக் கி­றது. அந்தப் படத்தின் பெயர்தான் "மன­சுக்குள் ஒரு மழைச் சாரல்" என்­ப தாகும்.

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி படத் தொகுப்புச் செய் ­தி­ருக்­கிறார். ‘விநோதன்’ என்ற இளைஞர். மூலக் கதை, பாடல்கள் எழுதி தயாரித்திருக்­கிறார். கு.உதயரூபன் என்ற இளைஞர்.

இது­வரை இலங் கையில் தயா­ரான பல தமிழ்ப்­ப­டங்கள் தோல்வியைத் தழு­வி­ய தற்கு முக்­கிய காரணம் வலு­வான கதை இல் லா­மையே என்று கரு தப்­ப­டு­கி­றது. ஆனால் இப்­ப­டத்தில் வலு­வான கதை இருக்­கி­றது. திரைப் படத் தயா­ரிப்­பா­ளர்கள் பலர் யாழ்ப்­பாணம் என்றால் அது போரும் அழி­வு­களும் கொண்ட பிர­தேசம் என்றே காட்ட முயன்­றி­ருக்­கி­றார்கள். ஆனால் இப்­ப­டி­யான அழ­கான காதல் கதை­களும் யாழ்ப்­பா ணத்தில் இருக்­கின்­றன என் பதை இப்­படக் குழு­வினர் நிரூ­பித்துக் காட்­டி­யுள்­ளனர்.

இதற்கு முன் தயா­ரிக்­கப்­பட்ட பல படங்­களில் உரை­யா­டல்கள் பல்­வேறு வகையில் அமைந்­தி­ருந்­தன. இந் தியப் படங்­களில் கூட யாழ்ப்­பாண உரை­யாடல் என்று ஏதோ புது­வி த­மான உரை­யா­டலை சேர்த்துக் கொள்­வார்கள்.

ஆனால் இப்­ப­டத்தில் நாக­ரி­க­மான யாழ்ப்­பாண பேச்­சு­வ­ழக்கில் உரை யா­டல்கள் இடம்­பெ­று­கின் றன. படத்­திற்கு ஆங்­கில மொழியில் 'சப் டைடில்' காட்­டப்­ப­டு­வது நல்ல முயற்­சி­யாகும்.

பெரும்­பாலும் பாட சா­லைக்­குள்­ளேயே கதை நிகழ்­கி­றது. ஒரு மாணவன் கதா­நா யகன். ஒரு மாணவி கதா­நா­யகி. இன் னொரு மாணவன் நகைச்­சுவைப் பாத் தி­ரத்தில் தோன்­று கிறான்.

இள­மையும் துடிப்பும் நிறைந்த கதா­நா ய­க­னாக ஜெராட் தோன்­று­கிறார். அழகும் நடிப்புத் திற­மையும் மிக்க கதா­நா­ய­கி­யாக மிதுனா தோன் று­கின்றார். அவர் 'கீறல்கள்' என்ற படத்­தை­விட இதில் சிறப்பாக நடித்­தி­ருக்­கிறார் எனலாம். கதா நா­ய­கனின் நண்­ப­னாக தோன்றும் லக் ஷ்மன் நகைச் சுவைக் காட்­சி களில் சோபிக் கிறார். கதா­நா­ய­கனின் தங்­கை யாகத்தோன்றும் மாலி­னியும் அரு­மை யாக நடிக்­கிறார். கதா­நா­ய­கனின் பெற்றோ­ராகத் தோன்றும் முல்லை யேசுதா­சனும் தங்­கேஸ்­வ­ரியும் தமது பாத்­தி­ரங்­களை உணர்ந்து நடித்­துள் ளனர். கதா­நா­ய­கியின் பெற்­றோ­ராக நடிக்கும் சந்­தி­ரனும் லங்­கா­ரா­ணியும் நன்­றாக நடித்­துள்­ளனர்.

ஆசி­ரி­யர்கள் பிரம்பு கொண்டு அடிப்­ப­வர்­க­ளாக காட்­டப்­ப­டு­கி­றார்கள். ராஜ் ஒளிப்­ப­திவு செய்­தி­ருக்­கிறார். யாழ்ப்­பா­ணத்தின் அழகுக் காட்­சிகள் பல­வற்றை வர்­ணத்தில் காண­மு­டி­கி றது. கடற்­கரைக் காட்­சிகள் எல்லாம் அருமை. நட­னக்­காட்­சிகள் பர­வா யில்லை.

இயக்­குனர் விநோதன் நுணுக்­க மாக படத்தை இயக்­கி­யி­ருக்­கிறார். அவ­ருக்கு உத­வி­யாக வின்­சனும் கோபி­காவும் கட­மை­யாற்­றி­யி­ருக்­கி றார்கள். இப்­ப­டத்தில் பங்­கு­பற்­றியோர் பலர் குறும்­ப­டங்­க­ளுடன் தொடர்பு டை­ய­வர்கள். குறும்­பட அனு­ப­வங் களும் இப்­ப­டத்தின் வெற்­றிக்கு ஒரு காரணம் எனலாம். சுதர்சன் இசை­ய மைத்­தி­ருக்­கிறார். பாடல்கள் எல் லாமே இனி­மை­யாக இருக்­கின்­றன. யுகேஸ், தர்சன், சுதர்சன் ஆகியோர் பின்­னணி பாடி­யி­ருக்­கிறார்.

டிஜிட்டல் தொழில்­நுட்பம் வந்த பின்பு எந்த இடத்­திலும் படம் தயாரிக் கலாம். என்ற நிலை இப்பொழுது தோன்றியிருக்கிறது. ஆனால் சிறந்த கலைஞர்களாலேயே சிறந்த படத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் தயாரிப்பாளர் கே.உதயரூபனையும் இயக்குநர் விநோதனையும் பாராட்ட வேண்டும் மனசுக்குள் ஒரு மழைச் சாரல் என்ற இப்படம் சிறந்த படமாக வெளிவந்திருக்கிறது. இனிமேல் இது போன்ற சிறந்த படங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து நிச்சயம் வெளிவரும் என்று நாம் நம்பலாம்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=28/07/2016

 

showImageInStory?imageid=287139:mr

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மனசுக்குள் ஒரு மழைச்சாரல்" மண்மணம் வீசி வெற்றீநடை போட வாழ்த்துக்கள்...! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.