Jump to content

Recommended Posts

1983ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றே. கறுப்பு ஜூலை என்றால் அனைவரது முகத்திலும் அச்சம், கவலை, கோபம் உச்சம் தொடும்.

தமிழர்களின் இந்த அழிவுக்காகவும், இதற்கார காரணம் என்னவென்றும், கணடாவை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வலர் Usha S. Sri-Skanda-Rajah என்பவரால் எழுதப்பட கட்டுரையே கறுப்பு ஜூலை.

இவர் தனது கட்டுரையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான படிவமாக எமது கைகளில் கொடுத்திருக்கின்றார். இனி அந்த கட்டுரையில் என்ன இருக்கின்றது என்பது பற்றி நோக்குவோம்,

“கறுப்பு ஜூலை என்றால் என்ன? தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட யுத்தமா? இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியதா? தமிழீழ விடுதலை புலிகளின் 13 படையினர்களை பதுங்கியிருந்து தாக்கிய நிகழ்வா? கறுப்ப ஜூலை இடம்பெறும் போது நான் எங்கு இருந்தேன்? இனவாதமற்ற தமிழீழத்தை உருவாக்க இயலுமா?

கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு இடம்பெற்றது. நன்கு நினைவு கூறுவோம் இனப்படுகொலை இடம் பெற்று இந்த வருடம் 33 ஆவது ஆண்டு பூர்தியாகும் என்பதை,

இனப்படுகொலைக்கு இலங்கையின் அரசியல்வாதி ஜே.ஆர்.ஜெயவர்தன பங்கேற்றமைக்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. பத்து நாட்களாக இடம் பெற்ற இந்த இன மோதலில் 3000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் வீடுகளையும், அவர்களது வணிக நிலையங்களையும் தீ வைத்து கொளுத்தினர். 150 ஆயிரம் தமிழ் மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாக நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கறுப்பு ஜூலை இடம் பெற்ற போது, நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என நான் தற்போது சிந்தித்து பார்கின்றேன் இந்த தாக்குதல் பதுங்கியிருந்தே நடத்தப்பட்டுள்ளது.

இதை நான் எழுத வேண்டியதற்கான தேவை...

இந்த தாக்குதலை எந்த தமிழராலுமே மறக்க முடியாது. இனவாத தாக்குதல் ஒரு படம் போல் கண்முன்னே தோன்றுகின்றதே, இதை எவ்வாறு மறக்க இயலும் இதே போல் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் இதன் போதே முள்ளிவாய்கால் பிரச்சினையும் இடம் பெற்றது.

கறுப்பு ஜூலை இடம் பெற்ற போது நான் எங்கு இருந்தேன்? இனவாதத்தை ஒழிக்க என்ன செய்திருக்கலாம்?

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலையின் துரதிஷ்ட நாளுக்கு மீண்டும் பின்னோக்கி செல்கின்றேன். நாங்கள் பிலிபைன்ஸ் மனிலா பகுதியில் 70 மற்றும் 80 களில் வாழ்ந்தோம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்களது வீட்டிற்கும் அத்துடன் லண்டனிற்கும் செல்ல தீர்மானித்தோம்.

எங்கள் முதல் அடியை கொழும்பில் எடுத்து வைத்ததுமே சில வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான வதந்திகளே அவை. எங்களுக்கு ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.

இதனால் நாங்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல தீர்மானித்தோம்.

ஆயினும் தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. பின் அச்சமடைந்த நாங்கள்,எனது உறிவினர்களுடன் மீண்டும் லண்டனிற்கு செல்லவே தீர்மானித்தோம், ஆனால் இது இடம் பெறவில்லை.

ஜூலை 23 ஆம் திகதி வந்தது. நாங்கள் பயந்தது போலவே இந்த சம்பவம் இடம் பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை ஆரம்பிக்க அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியது. யுத்தத்திற்கான ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன.

கறுப்பு ஜூலை ஒரு இனக்கலவரம் இல்லை. முதலில் சிந்திக்க வேண்டியவை. அரசாங்கம் இதை இனக்கலவரமாக கருதவில்லை. தமிழ் மக்களின் வலிகள் குறித்து வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் இது ஒரு இனக்கலவரம் இல்லை என பல உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களை துன்புறுத்துவதற்காக திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் மற்றும் தமிழ் இனத்தை அளிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதி திட்டம் இது ஒரு இனப்படுகொலையே என என்கார்டா அகராதியை வடிவமைத்த வட அமெரிக்க பிரஜை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பத்தகத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் E M Thornton மற்றும் R. Niththyananthan ஆகியோர் இனப்படுகொலை எள்றே எழுதியுள்ளனர்.

வரலாற்றில்1983 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் மக்கள் கறுப்பு இனத்தவர்களாகவே கருதப்பட்டனர்.

சிங்களவர்களின் ஆட்சியாகவே காணப்பட்டது. அப்போதிருந்த மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அஞ்சி அஞ்சியே வாழ்ந்தனர்.

தமிழ் மக்கள் கடும் துன்பங்களையே சந்தித்து வந்தனர். உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கூட இதனை மறக்க முடியாது.

எங்களுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எங்களால் நாடு திரும்ப முடியவில்லை.

எனக்கு ஏழு வயதாக இருந்த போது 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது நான் கொழும்பில் இருந்தேன், என் பெற்றோர்கள் குருநாகலில் இருந்தனர். நான் கதி கலங்கி போனேன். தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள குண்டர்களால் இரத்தம் உறைய தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

எனது கணவனின் குடும்பம், அவரது சகோதரன், இரண்டு சகோதரிகள் மற்றும் 90 தமிழ் மக்கள் தங்கியிருந்த முகாமும் தீ்க்கிரையாக்கப்பட்டன.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை இருந்தது மீண்டும் மனிலாவிற்கு சென்று, சர்வதேச சமூகத்திடம் எங்களது மக்களை காப்பாற்றுவதற்கான உதவிகளை கோறுவோம் என நினைத்திருந்தேன்.

பின் நான் மீண்டும் திரும்பினேன். என் கணவனும் நானும் இணைந்து ஒரு யோசனை முன்வைத்தோம், தங்களது உடமைகளை இழந்த எமது மக்களுக்கு உதவும் முகமாக புதிய ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க திட்டமிட்டோம்.

பின் பிலிபைன்ஸிலும் நாங்கள் சில நன்கொடைகளை கேட்டிருந்தோம் அவர்களும் தேவையான பொருட்களை வழங்கியிருந்தனர்.

பின் உதவுவதற்காக இலங்கையில் உள்ள அமைப்புகளுக்கு தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.ஆனால் அவர்கள் தமிழர் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டிருந்தனர்.

அதற்கு பதிலாக இலங்கையர் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்துங்கள் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அந்த கடிதத்தை அவர்கள் புறக்கணித்தனர் காரணம் நாங்கள் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு பட்டவர்கள் என கூறியிருந்தனர்.

சிங்களவர்களின் வன்முறையை அடுத்தே தமிழீழ விடுதலை புலிகள் உருவாகின.......

தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறை காரணமாகவே தமிழீழ விடுதலை புலிகள் என்ற அமைப்பு உருவாகியிருந்தது. பின்னர் சிங்களவர்கள் அரசாங்கத்தை உருவாக்கினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களை அழிக்கும் நோக்கிலேயே இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத அரசியல் சீர்திருத்த கொள்கையில் தமிழ் மக்கள் ஒப்பந்தம் இன்றி அவர்களின் உரிமைகளை பெற முடியாது என்ற ஒப்பந்தங்கள் கொண்டுவரப்பட்டன.

தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்தமையினாலேயே 1956 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் உருவாகின.

கல்வித்துறையிலும் ஈழ தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

கறுப்பு ஜூலை இடம் பெற்றமைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவே முழுக் காரணம். தமிழ் மக்கள் பட்டினி கிடந்தால் சிங்களவர்கள் சந்தோசமாக இருப்பார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதில் எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படும் அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் யாழ்ப்பாண மக்களின் கருத்துக்கள் குறித்து தற்போது கவலைப்படவில்லை. தற்போது அவற்றை பற்றி நாம் நினைக்கவே முடியாது.

தமிழர்கள் பல அழுத்தங்களை சந்தித்திருந்தால் சிங்களவர்கள் சந்தோசமாக தான் இருந்திருப்பார்கள்.

தமிழர்கள் பட்டினி கிடந்தால் சிங்களவர்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள் என ஜயவர்தன கூறியமை இன்னும் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கின்றது”.

என்று தனது அனுபவங்களையும் கறுப்பு ஜூலையின் கொடுமைகள் பற்றியும் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/articles/01/112200

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.