Jump to content

Recommended Posts

1983ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றே. கறுப்பு ஜூலை என்றால் அனைவரது முகத்திலும் அச்சம், கவலை, கோபம் உச்சம் தொடும்.

தமிழர்களின் இந்த அழிவுக்காகவும், இதற்கார காரணம் என்னவென்றும், கணடாவை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வலர் Usha S. Sri-Skanda-Rajah என்பவரால் எழுதப்பட கட்டுரையே கறுப்பு ஜூலை.

இவர் தனது கட்டுரையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான படிவமாக எமது கைகளில் கொடுத்திருக்கின்றார். இனி அந்த கட்டுரையில் என்ன இருக்கின்றது என்பது பற்றி நோக்குவோம்,

“கறுப்பு ஜூலை என்றால் என்ன? தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட யுத்தமா? இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியதா? தமிழீழ விடுதலை புலிகளின் 13 படையினர்களை பதுங்கியிருந்து தாக்கிய நிகழ்வா? கறுப்ப ஜூலை இடம்பெறும் போது நான் எங்கு இருந்தேன்? இனவாதமற்ற தமிழீழத்தை உருவாக்க இயலுமா?

கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு இடம்பெற்றது. நன்கு நினைவு கூறுவோம் இனப்படுகொலை இடம் பெற்று இந்த வருடம் 33 ஆவது ஆண்டு பூர்தியாகும் என்பதை,

இனப்படுகொலைக்கு இலங்கையின் அரசியல்வாதி ஜே.ஆர்.ஜெயவர்தன பங்கேற்றமைக்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. பத்து நாட்களாக இடம் பெற்ற இந்த இன மோதலில் 3000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் வீடுகளையும், அவர்களது வணிக நிலையங்களையும் தீ வைத்து கொளுத்தினர். 150 ஆயிரம் தமிழ் மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாக நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கறுப்பு ஜூலை இடம் பெற்ற போது, நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என நான் தற்போது சிந்தித்து பார்கின்றேன் இந்த தாக்குதல் பதுங்கியிருந்தே நடத்தப்பட்டுள்ளது.

இதை நான் எழுத வேண்டியதற்கான தேவை...

இந்த தாக்குதலை எந்த தமிழராலுமே மறக்க முடியாது. இனவாத தாக்குதல் ஒரு படம் போல் கண்முன்னே தோன்றுகின்றதே, இதை எவ்வாறு மறக்க இயலும் இதே போல் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் இதன் போதே முள்ளிவாய்கால் பிரச்சினையும் இடம் பெற்றது.

கறுப்பு ஜூலை இடம் பெற்ற போது நான் எங்கு இருந்தேன்? இனவாதத்தை ஒழிக்க என்ன செய்திருக்கலாம்?

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலையின் துரதிஷ்ட நாளுக்கு மீண்டும் பின்னோக்கி செல்கின்றேன். நாங்கள் பிலிபைன்ஸ் மனிலா பகுதியில் 70 மற்றும் 80 களில் வாழ்ந்தோம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்களது வீட்டிற்கும் அத்துடன் லண்டனிற்கும் செல்ல தீர்மானித்தோம்.

எங்கள் முதல் அடியை கொழும்பில் எடுத்து வைத்ததுமே சில வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான வதந்திகளே அவை. எங்களுக்கு ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.

இதனால் நாங்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல தீர்மானித்தோம்.

ஆயினும் தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. பின் அச்சமடைந்த நாங்கள்,எனது உறிவினர்களுடன் மீண்டும் லண்டனிற்கு செல்லவே தீர்மானித்தோம், ஆனால் இது இடம் பெறவில்லை.

ஜூலை 23 ஆம் திகதி வந்தது. நாங்கள் பயந்தது போலவே இந்த சம்பவம் இடம் பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை ஆரம்பிக்க அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியது. யுத்தத்திற்கான ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன.

கறுப்பு ஜூலை ஒரு இனக்கலவரம் இல்லை. முதலில் சிந்திக்க வேண்டியவை. அரசாங்கம் இதை இனக்கலவரமாக கருதவில்லை. தமிழ் மக்களின் வலிகள் குறித்து வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் இது ஒரு இனக்கலவரம் இல்லை என பல உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களை துன்புறுத்துவதற்காக திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் மற்றும் தமிழ் இனத்தை அளிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதி திட்டம் இது ஒரு இனப்படுகொலையே என என்கார்டா அகராதியை வடிவமைத்த வட அமெரிக்க பிரஜை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பத்தகத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் E M Thornton மற்றும் R. Niththyananthan ஆகியோர் இனப்படுகொலை எள்றே எழுதியுள்ளனர்.

வரலாற்றில்1983 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் மக்கள் கறுப்பு இனத்தவர்களாகவே கருதப்பட்டனர்.

சிங்களவர்களின் ஆட்சியாகவே காணப்பட்டது. அப்போதிருந்த மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அஞ்சி அஞ்சியே வாழ்ந்தனர்.

தமிழ் மக்கள் கடும் துன்பங்களையே சந்தித்து வந்தனர். உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கூட இதனை மறக்க முடியாது.

எங்களுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எங்களால் நாடு திரும்ப முடியவில்லை.

எனக்கு ஏழு வயதாக இருந்த போது 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது நான் கொழும்பில் இருந்தேன், என் பெற்றோர்கள் குருநாகலில் இருந்தனர். நான் கதி கலங்கி போனேன். தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள குண்டர்களால் இரத்தம் உறைய தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

எனது கணவனின் குடும்பம், அவரது சகோதரன், இரண்டு சகோதரிகள் மற்றும் 90 தமிழ் மக்கள் தங்கியிருந்த முகாமும் தீ்க்கிரையாக்கப்பட்டன.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை இருந்தது மீண்டும் மனிலாவிற்கு சென்று, சர்வதேச சமூகத்திடம் எங்களது மக்களை காப்பாற்றுவதற்கான உதவிகளை கோறுவோம் என நினைத்திருந்தேன்.

பின் நான் மீண்டும் திரும்பினேன். என் கணவனும் நானும் இணைந்து ஒரு யோசனை முன்வைத்தோம், தங்களது உடமைகளை இழந்த எமது மக்களுக்கு உதவும் முகமாக புதிய ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க திட்டமிட்டோம்.

பின் பிலிபைன்ஸிலும் நாங்கள் சில நன்கொடைகளை கேட்டிருந்தோம் அவர்களும் தேவையான பொருட்களை வழங்கியிருந்தனர்.

பின் உதவுவதற்காக இலங்கையில் உள்ள அமைப்புகளுக்கு தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.ஆனால் அவர்கள் தமிழர் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டிருந்தனர்.

அதற்கு பதிலாக இலங்கையர் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்துங்கள் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அந்த கடிதத்தை அவர்கள் புறக்கணித்தனர் காரணம் நாங்கள் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு பட்டவர்கள் என கூறியிருந்தனர்.

சிங்களவர்களின் வன்முறையை அடுத்தே தமிழீழ விடுதலை புலிகள் உருவாகின.......

தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறை காரணமாகவே தமிழீழ விடுதலை புலிகள் என்ற அமைப்பு உருவாகியிருந்தது. பின்னர் சிங்களவர்கள் அரசாங்கத்தை உருவாக்கினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களை அழிக்கும் நோக்கிலேயே இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத அரசியல் சீர்திருத்த கொள்கையில் தமிழ் மக்கள் ஒப்பந்தம் இன்றி அவர்களின் உரிமைகளை பெற முடியாது என்ற ஒப்பந்தங்கள் கொண்டுவரப்பட்டன.

தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்தமையினாலேயே 1956 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் உருவாகின.

கல்வித்துறையிலும் ஈழ தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

கறுப்பு ஜூலை இடம் பெற்றமைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவே முழுக் காரணம். தமிழ் மக்கள் பட்டினி கிடந்தால் சிங்களவர்கள் சந்தோசமாக இருப்பார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதில் எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படும் அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் யாழ்ப்பாண மக்களின் கருத்துக்கள் குறித்து தற்போது கவலைப்படவில்லை. தற்போது அவற்றை பற்றி நாம் நினைக்கவே முடியாது.

தமிழர்கள் பல அழுத்தங்களை சந்தித்திருந்தால் சிங்களவர்கள் சந்தோசமாக தான் இருந்திருப்பார்கள்.

தமிழர்கள் பட்டினி கிடந்தால் சிங்களவர்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள் என ஜயவர்தன கூறியமை இன்னும் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கின்றது”.

என்று தனது அனுபவங்களையும் கறுப்பு ஜூலையின் கொடுமைகள் பற்றியும் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/articles/01/112200

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.