Jump to content

காணமல் போனவர்கள் எங்கே? செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தல்


Recommended Posts

இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் 16000 தமிழர்களின் நிலைமை என்ன?

இது தொடர்பிலான விபரங்களை இலங்கை அரசாங்கம் விரைவில் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 14 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கொழும்பில் வெளியிட்டுள்ளது.

34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.

எனினும், இறுதிகட்ட யுத்தத்தில் காணமல் போனதாக கூறப்படும் 16,000 பேர் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் இல்லை.

அவர்களது நிலை என்ன ஆனது? தற்போது எங்குள்ளனர்? அவர்கள் சந்திக்கும் பொருளாதார, சட்ட, நிர்வாக பிரச்சினைகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிய விரும்புகின்றனர்.

எனவே, காணாமல் போனோரின் நிலை குறித்த முழு விவரங்களையும் இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, 1989ஆம் ஆண்டு இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் நபர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து வருகிறது.

உலகில் அதிகளவில் காணாமல் போன நபர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் காணப்படுகின்றது.

கடந்த 1994ஆம் ஆண்டு மாத்திரம் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு 65 ஆயிரம் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன.

குறித்த முறைப்பாடுகளில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் போனவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/politics/01/112234

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி

இனி ஒரு 7 வருசம் 

தொல்லையில்லை....

நிம்மதியாக கோப்பி  குடிக்கலாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.