Jump to content

அழகுராணி குமாரி மகேந்திரனை கழுத்தில் கத்தியால் குத்திய தாயார் - குற்றம் புரிந்துள்ளார் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு


Recommended Posts

அழகுராணி குமாரி மகேந்திரனை கழுத்தில் கத்தியால் குத்திய தாயார் - குற்றம் புரிந்துள்ளார் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
 

18213f-dsfsdf.jpgபிரிட்­டனில் வசிக்கும் அழ­கு­ ரா­ணி­யான குமாரி மகேந்­தி­ரனை (26) அவரின் தாயார் சித்­ராணி மகேந்­திரன் (74) கத்­தியால் குத்­தி­யமை தொடர்­பான வழக்கு பிரிட்­டனின் வேல்­ஸி­லுள்ள கர்டிவ் கிரவுண் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டது.

 

வேல்ஸ் பிராந்­தி­யத்தின்  உள்ளூர் அழ­கு­ராணி போட்­டி­களில் பங்­கு­பற்­றிய பின்னர், 2013 மிஸ் வேல்ஸ் அழ­கு­ராணி போட்­டி­யிலும் பங்­கு­பற்­றி­யவர் குமாரி மகேந்­திரன்.

 

குமாரி மகேந்­திரன் உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது அவரின் தாயார் கழுத்தில் கத்­தியால் குத்­தி­ய­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.


தனது தாயாரை தாய­க­மான இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கு தான் ஏற்­பாடு செய்த சில நாட்­களில் இத்­ தாக்­குதல் இடம்­பெற்­ற­தாக அழ­கு­ராணி குமாரி மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்தார்.


தான் கட்­டிலில் படுத்­தி­ருந்­தபோது, தனது தாயார் தனது தலை
­ம­யிரை கோதி­யதால் இரு தட­வைகள் தான் விழித்­தெ­ழுந்­த­தா­கவும் ஆனால், 'உறங்கு உறங்கு' என தனது தாயார் கூறி­ய­தை­யடுத்து தான் உறங்­கி­விட்­ட­தா­கவும் மூன்­றா­வது தடவை விழித்­தெ­ழுந்­த­போது தனது கழுத்தில் கத்­தியால் குத்­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும் குமாரி மகேந்­திரன் கூறினார்.

 

'எனது கழுத்தில் கடும் குத்து விழுந்­ததைப் போல் உணர்ந்தேன். நான் விழித்­தெ­ழுந்­த­போது எனது தாயார் கத்­தி­யுடன் எனக்கு முன்னால் நின்று கொண்­டி­ருந்தார்.


18213kumari.jpgஇதனால் நான் பெரும் அதிர்ச்­சியும் குழப்­பமும் அடைந்தேன்.

 

அவர் என்னை கத்­தியால் குத்­தி­னாரா என நான் யோசித்தேன்.

 

எனது கழுத்தை தொட்டுப் பார்த்­த­போது இரத்தம் வரு­வதை உணர்ந்தேன்.

 

'அம்மா நீங்கள் என்னைக் கத்­தியால் குத்­தி­விட்­டீர்கள்' என நான் கூறினேன்' என குமாரி மகேந்­திரன் நீதி­மன்றில் தெரி­வித்தார்.


அதன்பின் தன்னை தனது தாயார் கத்­தி­யுடன் துரத்­தி­ய­தா­கவும் இதனால், தனது இரவு உடை­யுடன் இரத்தம் வடிந்த நிலையில் வீட்­டி­லி­ருந்து தான் வெளியே ஓடி வந்­த­தா­கவும் அவர் கூறினார்.


வேல்­ஸி­லுள்ள கேர்டிவ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணி­தத்­து­றையில் கல்வி கற்­றவர் குமாரி மகேந்­திரன்.

 

இத் ­தாக்­கு­த­லினால் தனது செல்­லிடத் தொலை­பே­சியில் இரத்தம் தோய்ந்­தி­ருந்­ததால் அத்­தொலை­பே­சியை 'அன்லொக்' செய்­வ­தற்கு தன்னால் முடி­ய­வில்லை எனவும் இதனால், அம்­பி­யூ­லன்­ஸுக்கு அழைப்பு விடுக்­கவும் தான் சிர­மப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

18213_Kumari-Mahendran-1.jpg

 

'எனக்கு மயக்கம் ஏற்­ப­டு­வது போல் உணர்ந்தேன். அச்­ச­ம­டைந்­தி­ருந்தேன். வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்­சித்­த­போது என்னால் சாவியை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

 

அவர் என்­னுடன் மோதலில் ஈடு­பட்டார். எனக்கு அம்­பி­யூலன்ஸ் தேவை என நான் கூறினேன்.

 

ஆனால், பொலி­ஸா­ரிடம் என்ன கூறு­வது என்­பது குறித்து நாம் கலந்­து­ரை­யாட வேண்­டு­மென அவர் கூறினார்.

 

18213_kumari-2.jpgதனது தாயா­ருடன் மல்­லுக்­கட்டி, அவரின் கையி­லி­ருந்து கத்­தியை தான் பிடுங்­கி­ய­தா­கவும் அவரை தள்­ளி­விட்டு விட்டு முன்­புற கதவை நோக்கி ஓடி­ய­தா­கவும் குமாரி மகேந்­திரன் தெரி­வித்தார்.

 

குமாரி மகேந்­திரன் கத்­திக்­கொண்டே வீதியில் சென்­றதை தான் கண்­ட­தாக அய­ல­வ­ரான எலின் கூப்பர் எனும் யுவதி (18) சாட்­சி­ய­ம­ளித்தார்.

 

'எனக்கு உத­வுங்கள், எனது தாயார் கத்­தியால் குத்தி விட்டார்' என குமாரி சத்­த­மிட்டார் என எலின் கூப்பர் கூறினார்.

 

இரத்தம் தோய்ந்­தி­ருந்த குமா­ரியை மற்­றொரு அய­ல­வ­ரான நியா டேவிஸ் தனது வீட்­டுக்கு அழைத்துச் சென்று அம்­பி­யூலன்ஸ் வரும் வரை காத்­தி­ருந்­தாராம்.

 

திரு­மதி சித்­ராணி மகேந்­திரன் தற்­போது நோட்­டிங்ஹாம் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் உள­வியல் சிகிச்சை பெறு­வதால் அவர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக முடி­யா­துள்­ள­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

 

அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு திட நிலையில் இல்லை என பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என சட்டத்தரணி அன்ட்ரூ ஜோன்ஸ் கூறினார்.

 

சித்ராணி மகேந்திரன் குற்றம் புரிந்துள்ளார் எனவும் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு எதிர்வரும் செப்டெம்பர் வரை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

 

18213_10686790_10152484752766699_4554774

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=18213#sthash.7dUlVtSJ.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்ரானி மஹேந்திரன், (74 வயது)என்ற தாயாரே குமாரி மஹேந்திரன், என்ற (26 வயது) தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குமாரி மகேந்திரன் தெரிவிக்கையில்,

தான் உறக்கத்தில் இருந்த போது கத்தியால் குத்தியதாகவும் பின்னர் தான் விழித்துக்கொண்டமையினால் தனது தாய் தன்னை துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாயார் சுகயீனமுற்றிருந்தமையால் அவரை இலங்கைக்கே அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதன் காரணமாகவே அவர் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த தாய் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த பெண், 2013ஆம் ஆண்டு ‘மிஸ் வேல்ட் ’ அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

http://www.tamilwin.com/lifestyle/01/112265

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அழகு ராணிப் போட்டியில் கலந்து கொண்ட  ஒருவர்,
தனது தாய் மனநிலை பாதிக்கப் பட்டிருப்பது தெரிந்தும், இங்கிலாந்தில் மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல்,
ஊருக்கு அனுப்பி..... தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முனைந்தது பிழைதானே....

Link to comment
Share on other sites

இவ உண்மையிலேயே ஒரு அழகுராணியா என்பதில் புடுங்குப்பாடு வந்திருக்கலாமில்லையா? :D: சும்மா பகிடிக்கு.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

இவ உண்மையிலேயே ஒரு அழகுராணியா என்பதில் புடுங்குப்பாடு வந்திருக்கலாமில்லையா? :D: சும்மா பகிடிக்கு.. :unsure:

லண்டனுக்கு கஸ்ரகாலம் எப்படியெல்லாம் வருது.tw_dizzy:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.