Jump to content

ரஜினிகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மாநில எம்.எ.எல்.ஏ கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
201607261908155529_BJP-MLA-seeks-Maharas
மும்பை, 
 
நடிகர் ரஜினிகாந்துக்கு மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே வலியுறுத்தினார்.
 
மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது.  சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., அனில் கோடே பேசியதாவது:-
 
இந்த மண்ணின் மைந்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். ரஜினிகாந்த் கோலாப்பூர் மாவட்டத்தில் சிவாஜி கெய்க்வாட் என்ற பெயரில் பிறந்தவர். பட வாய்ப்பு தேடி தமிழ்நாடு சென்றார். இன்றைக்கு திரைத்துறையில் கடவுளின் அவதாரத்துக்கு நிகரான அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
 
அவரது கபாலி படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, இந்திய சினிமாவில் அவருக்கு உரிய அந்தஸ்தை பறைசாற்றுகிறது. ஆகையால், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம், சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அனில் கோடே எம்.எல்.ஏ. கூறினார்.

http://www.dailythanthi.com/News/CinemaNews/2016/07/26190817/BJP-MLA-seeks-Maharashtra-Bhushan-for-Rajinikanth.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lack of food is not what’s keeping poor people hungry. Some shocking facts about hungry India

முதலில் பஞ்சத்தை தீருங்கள். அதன் பின் பூசணிக்காய் விருது கொடுங்கள்.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.