Jump to content

அமலாபால் - விஜய் விவாகரத்து


Recommended Posts

அமலாபால் - விஜய் விவாகரத்து

 

 

 

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

22-1421897547-director-vijay-amala-paul2

கேரளாவைச் நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

 

அவர் தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்ளிட்ட பல தமிழ் தரைப்படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் 'கிரீடம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, 'மதராச பட்டினம்,' 'தலைவா,' 'தாண்டவம்,' 'சைவம்,' 'இது என்ன மாயம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் விஜய்.

இருவருக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் இயக்கிய 'தலைவா,' 'தெய்வ திருமகள்' ஆகிய திரைப்படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். 

அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள்.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. 

அதையடுத்து ஜூன்  மாதம் 12 ஆம் திகதி சென்னையில் திருமணம் இடம்பெற்றது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

 

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை இயக்குனர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய் - அமலாபால் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் சுமுகமாகப்பேசி பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

 

அதன்படி, அமலாபால், இயக்குனர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். 

இயக்குனர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9445

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் நெ.....ஞ்சில பால் வார்த்த செய்தி   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவே சொன்னனான்.. அம்மு இது உனக்கு சரிவராதுன்னு.

எனி எங்கட நிழலியானந்தா காட்டில் மழை தான். சாமி போட்ட சாபமோ என்னமோ.. அம்முக்கு இப்படி ஆயிடிச்சு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

நான் அப்பவே சொன்னனான்.. அம்மு இது உனக்கு சரிவராதுன்னு.

எனி எங்கட நிழலியானந்தா காட்டில் மழை தான். சாமி போட்ட சாபமோ என்னமோ.. அம்முக்கு இப்படி ஆயிடிச்சு. tw_blush:

நிழலியானந்தா மீது எனக்கும் இந்த சந்தேகமுண்டு..

செய்திருப்பார்..

பாவி

எங்களுக்கும் இந்த மந்திரங்களை சொல்லித்தரலாம் தானே...?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

என் நெ.....ஞ்சில பால் வார்த்த செய்தி   :grin:

கிரெடிட் காட் ரெடியாய் இருக்கா?  grin emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

breking-news.jpg

A.-L.-Vijay.jpg

இயக்குனர்  விஜய்,  வழக்கு தாக்கல்.

தனது குடும்பத்தை பிரிக்க.... கனடாவில் வசிக்கும்..... "நிழலி"  என்பவர் சதி செய்து விட்டதாகவும்,  அதனால் அமலாபாலின் திருமணம் முறிந்து விட்டது என்றும் தன்னை மீண்டும்.... அமலா பாலுடன், சேர்த்து வைக்கும்   படியும்...   சென்னை உயர் நீதிமன்றத்தில்,  இன்று காலை 9 மணிக்கு, இயக்குனர்  விஜய்  வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  

இவருக்காக வாதாட இருக்கும்... வக்கீல் பெரிய கருப்பன் அவர்கள் கூறும் கூறும் போது......  இயக்குனர்  விஜய்க்கு,   மன  உளைச்சலை ஏற்படுத்தியற்காக.... கனடாவில் வசிக்கும் குறிப்பிட்ட  நபரிடமிருந்து, பத்து  லட்சம் (10 000 00)  கனடிய டாலர்களை மான நஷ்ட மாக அறவிட இருப்பதாகவும் வரும் அந்தப் பணத்தை வைத்து, மீண்டும் அமலாபாலை, இயக்குனர் விஜயுடன் சேர்த்து திருமணம் செய்து வைப்பேன் என்று உறுதி படக் கூறினார்.

வக்கீல் பெரிய கருப்பன்.... இப்படியான வழக்குகளில் வாதாடினால், வெற்றி பெறுவது  நிச்சயம் என்று, நீதிமன்ற வட்டாரத்தில் கூறியதை அறிய முடிந்தது.

நன்றி: ரியூப் லைட் செய்திகள்.

Link to comment
Share on other sites

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே

எது நடக்க வேண்டுமோ அது நடக்கின்றது
எது நடந்திருக்க வேண்டுமோ அதுவே நடந்து இருக்கின்றது
இனி எது நடக்க இருக்க போகின்றதோ அதுவும் நடக்க போகின்றது

இதில் எதை நீ எதிர்பார்த்தாய்  அது நடக்காமல் போக
இதில் எதை நீ எதிர்பாக்காமல் விட்டாய் அது நடந்து போக

 

Link to comment
Share on other sites

உண்மைக் காதலைப் புரிந்து கொள்ளாத அமலா பால் இப்போது நிச்சயம் திருந்தியிருப்பார். :unsure: நிழலியானந்தாவை ஏற்றுக்கொள்வார். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே

எது நடக்க வேண்டுமோ அது நடக்கின்றது
எது நடந்திருக்க வேண்டுமோ அதுவே நடந்து இருக்கின்றது
இனி எது நடக்க இருக்க போகின்றதோ அதுவும் நடக்க போகின்றது

இதில் எதை நீ எதிர்பார்த்தாய்  அது நடக்காமல் போக
இதில் எதை நீ எதிர்பாக்காமல் விட்டாய் அது நடந்து போக

 

amala-paul-unseen-hot-picjpg.jpg

கனடா வந்தால் இந்த வெறும் கழுத்துக்கு தங்கச்சங்கிலி போடுவீர்களா.......போடுவீர்களா.. flirty smile smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அமலா பால் விவாகரத்துக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ்?

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு தலைவராக இருந்தவர் ஏ.எல். அழகப்பன். இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் நடிகர் உதயா. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வது அழகப்பன் மனைவியின் வழக்கம். அங்கே ஒரு பெண் தெய்வபக்தியோடு வழிபடுவதைப் பார்த்து பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் ‘நீ என் மகனை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்க அந்தப் பெண் வெட்கித்தலை குனிந்து, வீட்டில் பேசச் சொல்லிவிட்டார். அவர்தான் இப்போது உதயாவின் மனைவி, அழகப்பனின் மருமகள். இரண்டாவது மகன் ஏ.எல். விஜய் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களை எடுத்து வந்தார். ஏ.எல். விஜய் இயக்கிய ‘மதராச பட்டணம்’ திரைப்படம் உலகளவில் ரசிக்கப்பட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வமகள்’ படத்தில் அமலாபால் நடித்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்து ‘ தலைவா’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இருவருக்கும் காதல் தீவிரமானது. ஏ.எல். விஜய் வீட்டுக்கும், அமலாபால் வீட்டுக்கும் காதல் தெரியவந்தது. ‘நாலு பேருக்கு மெசேஜ் சொல்ற மாதிரி சினிமா எடுக்குற டைரக்டர் நீ. உன் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ. பின்னாடி வருத்தப்படுற மாதிரி முடிவு எடுக்காதே’ என்று விஜய் வீட்டில் சொல்லி விட்டனர்.

ஏ.எல்.விஜய்யின் சுபாவம் அமலாபால் பெற்றோரை கவர்ந்ததால் கல்யாணத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனே சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். திருமணம் செய்வதற்கு முன்பே அமலாபாலிடம் ‘நீ கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது’ என்று விஜய் சொல்ல, அப்போது காதல் மோகத்தில் இருந்த அமலாபால் ஆனந்தமாக தலையாட்டினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் திருமணம் கோலாகலமாக நடந்தது. சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டல் அருகிலுள்ள போர்ட் கிளப் பகுதியில் தனி வீட்டில் ஏ.எல்.விஜய், அமலாபால் தனிக்குடித்தனம் செய்தனர்.

முதலில் ‘நடிக்க மாட்டேன்’ என்று கொடுத்த வாக்குறுதியை மீறத் துவங்கினார், அமலாபால். தனது தாய்பூமியான மலையாளப் படத்தில் நடிக்கப்போனார் அமலாபால். அப்போதே அதிருப்தி ஆரம்பமானது. அடுத்து ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோதும் தனது எதிர்ப்பை தெரிவித்தார், விஜய்.

தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்கச் சென்றபோது பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தனர். அப்போது அமலாபாலின் பெற்றோர் ‘சினிமாவில் நடிச்சது போதும் நல்ல கணவர் கிடைச்சிருக்கார் மிஸ் பண்ணாதே’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சினிமாவில் நடிப்பதில் பிடிவாதமாக இருந்தார், அமலாபால்.

கடந்த மூன்று மாதமாகவே விஜய் போர்ட் கிளப் வீட்டிலும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்த விஜய் கடந்த 20-ம்தேதி உண்மை நிலையை எடுத்து உரைத்தார். பெற்றோர் முதலில் அதிர்ந்துபோய் கண் கலங்கினர். அதன்பின் விஜய்க்கு ஆறுதல் கூறினர். ஏ.எல். விஜய், அமலாபால் இரண்டு நாட்களுக்கும் முன்பு முக்கியமான நண்பர்கள் முன்பு ஆஜராயினர். ஒருவரை ஒருவர் குறைசொல்லி காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் பரஸ்பர புரிதலோடு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இனி அமலாபால் நடிப்பு தொடரும். விஜய்யின் கவனம் இயக்கத்தில் இருக்கும்.amalpal_vijay_amala_paul

 

http://www.jvpnews.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.