Jump to content

'மருத்துவ சிகிச்சையா.... அப்படின்னா?' -பேரறிவாளனை வதைக்கும் சிறைத்துறை


Recommended Posts

'மருத்துவ சிகிச்சையா.... அப்படின்னா?' -பேரறிவாளனை வதைக்கும் சிறைத்துறை

vellore.jpg

மிழக சிறைத்துறை அதிகாரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 'முன்பைவிட உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் தடையாக இருக்கின்றனர்' என வேதனைப்படுகிறார் அவர்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக, அண்மையில் பிரமாண்ட பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று வேலூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞர்களிடம் பேசிய பேரறிவாளன், " மனஅழுத்தத்தைத் தரும் வகையில் சிறைத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் நடந்து கொள்கிறார். ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பிரச்னை போன்றவற்றுக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தேன். மருத்துவர்களும், ஆறு மாதத்திற்கான மருந்துகளை எனக்கு வழங்கினர். அந்த மருந்துகளைச் சாப்பிட்ட பின்னர், முன்பைவிட வலி அதிகமாகிவிட்டது.

arivuanna.jpgவலது கையிலும், இடது கையிலும் வலி உயிர் போகிறது. மூட்டு நோய், முடக்கு வாதம், கண் பார்வை குறைவு என உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆறு மாதத்திற்கு முன்பு மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளும் தீர்ந்துவிட்டன. மீண்டும் சென்னை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தேன். கடந்த 30.6.16 அன்று,  'புழல் சிறையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்' என சிறை மருத்துவர் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். வேலூர் சிறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

 

ஆனால், சிறைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், ' அப்படியெல்லாம் அனுமதிக்க முடியாது' என மறுத்துவிட்டார். இதனால் ஒரு மாதமாக சென்னை அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகிறேன். கடந்த மூன்று வாரமாக வலி தீர்வதற்காக ஆன்டி-பயாடிக் மருந்துகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்கிறேன். இதன் விளைவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தமிழக அரசு எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது. ஆனால், சிறைத்துறையில் உள்ள சில அதிகாரிகளால், மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என வேதனைப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், " மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பாமல், மனரீதியாக கொடுமைப்படுத்தும் வேலைகளை சிறைத்துறையின் குறிப்பிட்ட அதிகாரி ஒருவர் செய்து வருகிறார். தொடர்ந்து எடுக்கப்படும் ஆன்டி-பயாடிக் மருந்துகளால் நிலைமை விபரீதமாகிக் கொண்டு போகிறது. இந்த விவகாரத்தில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், புழல் சிறைக்கு அவரை மாற்ற வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.

http://www.vikatan.com/news/tamilnadu/66506-prison-officers-didnt-allowed-perarivalan-for-test.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செத்து போனால் இவர்களது எலும்பு கூடுகளை வைத்தாவது  சிறை தண்டனை கொடுக்கும் அளவுக்கு கேவலமான ஒரு நாடு இந்த ஹிந்தியா 
நாட்டையே தொடர் வெடிகுண்டு வைத்து சிதைத்தவனும் ,கடன் வாங்கி வாங்கி பொருளாதாரத்தை ஓட்டையாக்கியவனும் வெளியில் கௌரவமாக திரிகிறான் ...பற்றரி வாங்கி கொடுத்ததற்கு இவர் கம்பி எண்ணுகிறார் ...இதற்குள் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பீத்தல் வேற 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.