Jump to content

தொழில் முன்னோடிகள்: எல்லோர்க்கும் வழிகாட்ட இவர்கள் இதோ...


Recommended Posts

way_2875674f.jpg
 

வாழ்க்கை வரலாறுகள் வெறும் அனுபவங்களின் தொகுப்பு அல்ல, மாபெரும் மனிதர்கள் உங்கள் கைவிரல்களை அழுந்தப்பிடித்து அழைத்துப்போகும் வாழ்க்கைப் பயண ஒத்திகை; தங்கள் தோள்களில் உட்காரவைத்து உங்களுக்குக் காட்டும் புதிய உலகம்; தங்கள் வெற்றி ரகசியங்களையும், செய்த தவறுகளையும் பகிர்ந்துகொண்டு உங்களைப் பட்டை தீட்டும் பாசறை. அவர்கள் ஜெயித்திருந்தாலும், தோற்றிருந்தாலும், எழுந்திருந்தாலும், விழுந்திருந்தாலும், ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு பாடம்.

- ப்ரையன் ட்ரேசி, அமெரிக்கச் சுய முன்னேற்றப் பயிற்சியாளர்

வாருங்கள். இந்தியாவின் சில பிசினஸ் பிரபலங்களைச் சந்திப்போம்.

குஜராத் கிராமத்தின் ஒரு குக்கிராமத்தில் பள்ளி ஆசிரியர் மகனாகப் பிறந்த திருபாய் அம்பானிக்குக் கல்லூரிப் படிப்பைத் தொடரக் குடும்பத்தில் வசதி இல்லை. ஏடன் நாட்டுக்கு வேலைக்குப் போனார். ஓரளவு சேமிப்புடன் இந்தியா திரும்பினார். வெறும் 15,000 ரூபாய் முதலீட்டில் பிசினஸ் தொடங்கினார். பால்காரர்கள், தையல்காரர்கள் வசிக்கும் புலேஷ்வர் பகுதியில், 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு ரூம் குடியிருப்பு. அதில், திருபாய், அவர் தம்பி, மனைவி, இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர்.

இன்று, திருபாயின் மூத்த மகன் முகேஷ் வீடு மும்பையின் ஆடம்பரமான அல்ட்டாமவுண்ட் ரோடில், உயர்ந்து நிற்கும் அன்டிலியா என்னும் 27 மாடிக் கட்டடம். 550 அடி உயரம். நாலு லட்சம் சதுர அடி பரப்பு. மாடியில் மூன்று ஹெலிக்காப்டர்கள் ஏறி இறங்கும் ஹெலிப்பாட்கள். வீட்டுக்குள் நீச்சல் குளம், 168 கார்களை ஹாயாக நிறுத்தும் கார் பார்க். வீட்டுக் கார்களிலும் விருந்தாளிகள் கார்களிலும் கோளாறு வந்தால் ரிப்பேர் செய்ய ஒரு முழுத் தளம், உடற்பயிற்சி செய்ய இன்னொரு தளம், ஐம்பது பேர் ஜாலியாக உட்கார்ந்து சினிமா பார்க்கும் ஹோம் தியேட்டர். திருபாய் அமைத்த அஸ்திவாரம்!

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியின் அப்பா மைசூரில் பள்ளி ஆசிரியர். 9 குழந்தைகள். அரசினர் பள்ளியில் படிப்பு. ஸ்காலர்ஷிப் பணத்தில் பி.ஈ பட்டம். அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலை. 30 ஆம் வயதில் சாஃப்ட்ரானிக்ஸ் என்னும் கம்பெனி தொடங்கினார். நஷ்டம். ஒன்றரை வருடத்தில் கம்பெனியை மூடவேண்டிய கட்டாயம். வேலைக்குப் போனார். 5 வருடங்களுக்குப் பிறகு, 1981 இல், இன்ஃபோஸிஸ் தொடங்கினார். அப்போது, முதலீடு செய்ய அவரிடம் பணமே கிடையாது. மனைவி சுதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய்தான் கை கொடுத்தது.

பி.சி. முஸ்தஃபா கேரள மாநிலம் சென்னலோடு என்னும், குக்கிராமத்தில் 1974 இல் பிறந்தார். அரிக்கேன் விளக்கில் படிப்பு. ஆறாம் வகுப்பில் தோல்வி. படிப்பை விட்டுவிட்டுக் கூலி வேலைக்குப் போக முடிவெடுத்தார். கணித ஆசிரியர் மாத்யூ வற்புறுத்தலால், படிப்பைத் தொடர்ந்தார். இன்ஜினீயரிங், பெங்களூரு ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ எனப் படிப்பு தொடர்ந்தது. பல நிறுவனங்களில் பணியாற்றியபின், 2006 இல், 25,000 ரூபாய் முதலீட்டில் இட்லி, தோசை மாவு விற்பனை தொடங்கினார். இன்று iD Fresh Foods கம்பெனியின் ஆண்டு விற்பனை 100 கோடிக்கும் அதிகம்.

பாரத்மாட்ரிமனி.காம். இதுவரை சுமார் 30 லட்சம் திருமணங்கள் நடக்கப் பாலமாக இருந்திருக்கிறது. இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்ட முருகவேல் ஜானகிராமனின் அப்பா சென்னைத் துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி. 16 ஒண்டுக் குடித்தனங்களுக்கு நடுவில் ஒரே ரூம் வீடு. அங்கே பிறந்து வளர்ந்த முருகவேல் ஜானகிராமனின் இன்றைய வெற்றி, அறிவு, உழைப்பு, வித்தியாசச் சிந்தனை ஆகியவற்றால் உருவாக்கிய சுயமுயற்சி ராஜபாட்டை.

திருப்பூர் கோவை ரூட்டில் இருக்கும் முருகம்பாளையம் கிராமம். ரயில்வேயில் வேலை பார்த்த விநாயகப்பக் கவுண்டரின் மகன் பழனிச்சாமி. எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியாத குடும்ப நிலை. அண்ணனும், அவரும் திருப்பூரில் பனியன் கம்பெனி யில் வேலைக்குச் சேர்ந்தார்கள். தினச் சம்பளம் மூன்று ரூபாய். நான்கு வருட அனுபவம். 1976. ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரே ஒரு பழைய தையல் மெஷினோடு தொடங்கினார்கள். இன்று ஜே.வி. குழுமத்தில் 5 நிறுவனங்கள், 1,000 தொழிலாளிகள். பின்னலாடைகள், பருத்தி நூல், எலாஸ்டிக் டேப்கள் தயாரிப்பு. விற்பனை 250 கோடிக்கும் அதிகம்.

1950 காலகட்டம். கோயம்பத்தூர். 11 வயது சின்னசாமி, 9 வயதுத் தம்பி நடராஜன். குடும்ப வறுமை. படிப்பை நிறுத்தவேண்டிய கட்டாயம். ஜூஸ் கடையில் வேலைக்குப் போனார்கள். பல வருடங்கள் ஓடின. இருவருக்கும் டெக்ஸ்டைல் மில்லில் வேலை கிடைத்தது. பிசினஸ் தொடங்கினார்கள். முதல் கடை எது தெரியுமா? தள்ளு வண்டி! வேலை நேரம் முடிந்து வந்தவுடன் காய்கறி வியாபாரம். 1965. தள்ளுவண்டி சின்னக் கடையாக வளர்ந்தது. இன்று, கோவை பழமுதிர் நிலையத்துக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய பகுதிகளில் 46 கிளைகள், பல நூறு கோடி ரூபாய் வியாபாரம்.

இவர்களில் ஒருவர்கூட பிசினஸ் குடும்பங்களிலோ, செல்வச் செழிப்பிலோ பிறக்கவில்லை, வளரவில்லை. இவர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் ஜூஜூபி. தொழில் தொடங்காததற்குக் “காரணங்கள்” என்று நீங்கள் நினைப்பவையெல்லாம் வெறும் சாக்குப்போக்குகள், பயங்கள்.

முதலாளி ஆகவேண்டுமா? முதலில் இந்த பயங்களை நீங்கள் ஜெயிக்க வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, தண்ணீரில் குதித்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் என்று கண்ணை மூடிக்கொண்டு பிசினஸ் ஆரம்பிக்கவேண்டும். இது ரிஸ்க்கான வழி. உங்கள் வாழ்க்கையோடு நீங்கள் விளையாடலாமா? கூடாது, கூடவே கூடாது. ஆகவே, அடுத்த வழி, புத்தி சாலித்தனமான வழி. பிசினஸ் நடத்தி யவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது. இதற்கு என்ன செய்யவேண்டும்? உலக மகா பிசினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கவேண்டும்.

படிக்கப் படிக்க, ``என்னால் முடியும்” என்னும் நம்பிக்கை நம் மனங்களில் தோன்றும், தொழில் முனைவராகும் பொறி வெறியாகும், கனவுகள் நனவாகும், வானம் வசப்படும்.

உலக நாடுகளில் பல லட்சம் பிசினஸ்மேன்கள். இவர்களுள், நமக்கு வழிகாட்டும் முன்னோடிகள் யார்? உலக முன்னணி நிர்வாகக் கல்லூரியான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்கள் அந்தோனி மேயோ, நித்தின் நோரியா இருவரும் ஆயிரத்துக்கும் அதிகமான பிசினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ச்சி செய்தார்கள். 7,000 மேனேஜர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். இந்த அடிப்படையில், தங்களுடைய In Their Time The Greatest Business Leaders of the Twentieth Century என்னும் புத்தகத்தில் 100 பிசினஸ்மேன்களைத் தலை சிறந்தவர்களாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

இது தவிர, Entrepreneur, Fast Company, Forbes, Fortune, Inc., Success பத்திரிகைகளும், யாஹூ இணையதளமும் உலகின் மாபெரும் பிசினஸ்மேன்களை அணிவகுக்க வைத்திருக்கிறார்கள்.

ஹார்வர்ட் ஆராய்ச்சியிலும், இந்தப் பட்டியல்களிலும் இடம் கொடுக்க எந்தத் தகுதிகளை அளவுகோல்களாகப் பயன்படுத்தினார்கள்? விற்பனையிலும், லாபத்திலும் குவித்த கோடிகள், பூஜ்ஜி யத்திலிருந்து வர்த்தக சாம்ராஜ் ஜியங்கள் உருவாக்கிய அசுரச் சாதனை ஆகியவற்றைத் தாண்டி, இவர்கள் தொடங்கிய பிசினஸ்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், இவர்களின் அனுபவங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றிருக்கும் பாடம் ஆகியவை.

இந்த எட்டு பட்டியல்களில் சிலரது அனுபவங்கள் இந்தியப் பின்புலத்துக்குப் பொருந்தாதவை. இவர்களை விடுத்திருக்கிறேன்; பல இந்தியர்களை, தமிழர்களைச் சேர்த்திருக்கிறேன். நமக்குப் பொருந்தும் ஒரு புதிய பிசினஸ் முன்னோடிகள் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த இந்த பிசினஸ் மாமேதைகளை உங்கள் முன்னால் அழைத்துவருகிறேன். இவர்களைச் சந்தியுங்கள். இவர்களின் சாதனைகளை அசை போடுங்கள். உத்தரவாதம் தருகிறேன். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம்.

slvmoorthy@gmail.com

 

http://tamil.thehindu.com/business/தொழில்-முன்னோடிகள்-எல்லோர்க்கும்-வழிகாட்ட-இவர்கள்-இதோ/article8671268.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

தொழில் முன்னோடிகள்: பெஞ்சமின் பிராங்ளின் (1706 - 1790)

sa_2894020f.jpg
 

மரணத்துக்குப் பின்னும் மக்கள் உங்களை மறக்காமலிருக்க வேண்டுமா? படிக்கத் தகுதியான புத்தகங்கள் எழுதுங்கள். அல்லது, புத்தகங்களில் எழுதப்படத் தகுதியான காரியங்கள் செய்யுங்கள்.

- பெஞ்சமின் பிராங்ளின்

பதினேழாம் நூற்றாண்டு. அமெரிக் காவின் பாஸ்டன் நகரம். ஜோசையா என்பவர் தன் வீட்டில் குடிசைத் தொழிலாக சோப், மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்று வாழ்க்கையை ஓட்டி வந்தார். வருமானம் குறைவானாலும், வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. இரண்டு மனைவிகள், பதினேழு குழந்தைகள். பெஞ்சமின் பதினைந்தாவது குழந்தை. எட்டு வயதில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள். பையனுக்குக் கற்பூர புத்தி. எழுதப் படிக்க உடனேயே கற்றுக்கொண்டான். படிப்பில் அபார ஆர்வம். துண்டுக் காகிதம் கிடைத்தாலும், படித்து முடிக்காமல் விடமாட்டான். ஆனால், இத்தனை சூட்டிகையான சிறுவனுக்கு ஏனோ, கணிதம் மட்டும் மூளையில் ஏறவேயில்லை.

பையன் படித்து என்ன கிழித்து விடப்போகிறான்?” அப்பா படிப்பை நிறுத்தினார். தன் சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பில் உதவியாளாக வைத்துக் கொண்டார்.

பெஞ்சமினுக்கு பனிரெண்டு வயதானது. அண்ணன் ஜேம்ஸ் நடத்திய அச்சகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்க்கப்பட்டான். அச்சகத்தில் பிரசுரமா கும் துண்டுப் பிரசுரங்கள், நோட்டீஸ்கள் அத்தனையையும் படிப்பான். அடுத்தபடி யாக வீட்டில் இருந்த புத்தகங்கள். அறிவுத்தாகம் தீரவில்லை. ஊரில் இருந்த துறைமுகத்துக்கு அடிக்கடி போவான். அங்கே வரும் பயணிகள், மாலுமிகளிடம் அவர்கள் படித்து முடித்த பழைய புத்தகங்களைக் கெஞ்சிக் கேட்டு வாங்குவான். புரிந்தாலும், புரியாவிட்டாலும், தவம்போல் படித்து முடிப்பான். அச்சுக்கோர்க்கும், கட்டுரை கள் எழுதும் அளவுக்கு அவன் திறமை வளர்ந்தது. வீட்டில் அவனைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. ஆகவே, பெஞ்சமினின் திறமைகள் பற்றி யாருக்குமே தெரியாது.

1721. பெஞ்சமினுக்கு வயது 15. பாஸ்டன் நகரிலிருந்து அப்போது இரண்டு நாளிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அவை வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை மறுவெளியீடு மட்டுமே செய்துகொண்டிருந்தன. பெஞ்சமினின் அண்ணன் படா சாமர்த்தியசாலி. உள்ளூர்ச் செய்திகளை வெளியிடும் செய்தித்தாள் தொடங்கினார். விற்பனை சூடு பிடித்தது.

பெஞ்சமின், அண்ணனின் இதழில் கட்டுரைகள் எழுத விரும்பினார். அண்ணனுக்கோ, தம்பி பள்ளிக்கூடமே போகாத அடிமுட்டாள் என்று நினைப்பு. ஆகவே, தன் படைப்புகளைப் படிக்காமலேயே, குப்பைக் கூடைக்குக் கடாசி விடுவார் என்று பெஞ்சமினுக்கு பயம். ஆகவே, Silence DoGood என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கினார். கட்டுரையை எழுதி, இரவில் அச்சகத்தின் கதவுக்கு வெளியே வைத்துவிடுவார். அண்ணன் படித்தார், ரசித்தார். யார் எழுதினால் அவருக்கென்ன? நல்ல கட்டுரை ஓசிக்குக் கிடைக்கிறது. தொடர்ந்து வெளியிட்டார். பெண்ணுரிமைக்காக ஒரு பெண் வாதாடும் பாணியில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளுக்கு வாசகர்களிடம் எக்கச்செக்க வரவேற்பு.

ஒரு நாள். பெஞ்சமினின் குட்டு வெளிப்பட்டது. அண்ணன் என்ன செய்தார்? கட்டிப் பிடித்து, உச்சி மோர்ந்தாரா? இல்லை. இல்லை. பொறாமையால் கொதித்தார். திட்டினார், அடித்தார், உதைத்தார். உடலிலும், மனதிலும் தாங்கமுடியாத வலிகள்.

பெஞ்சமினுக்குப் பதினேழு வயதானது. அண்ணன் எப்போதுமே தன்னை அடிமையாகத்தான் நடத்துவார், சிறகு விரிக்க அனுமதிக்கமாட்டார் என்று தெளிவாகத் தெரிந்தது. அப்பாவிடம் முறையிட்டார். அவர் தலையிட மறுத்துவிட்டார். தன் தலைவிதியைத் தானேதான் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும் என்று பெஞ்சமினுக்குத் தெரிந்தது. பாஸ்டன் நகரில் இருந்த பிற அச்சகங்களில் வேலை தேடினார். பலர் வேலை கொடுக்க தயாராக இருந்தாலும், அண்ணன் அந்த வேலைகளை கிடைக்க விடாமல் செய்தார்.

வீட்டிலேயே இருந்தால் தன் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்று பெஞ்சமினுக்குத் தெரிந்தது. வீட்டைவிட்டு ஓடிப்போக முடிவு செய்தார். எங்கே போவது? என்ன செய்வது? குடும்பம் தவிர அவருக்கு யாரையும் தெரியாது, படிப்பு கிடையாது, அச்சுப்பணி தவிர வேறு தொழில் தெரியாது.

பிலடெல்பியா நகரம் வந்து சேர்ந்தார். ஒரு அச்சகத்தில் உதவியாளர் வேலை கிடைத்தது. சில வருடங்களில் சொந்த அச்சகம் தொடங்கத் திட்டமிட்டார். ஊருக்குப் போய், அப்பாவிடம் மூலதனத்துக்குப் பணம் கடனாகக் கேட்டார். அப்பா மறுத்துவிட்டார்.

பெஞ்சமினுக்கு வயது இருபது. நெஞ்சில் இப்போது ஒரு வெறி தன் அண்ணன் முன்னால், அப்பா முன்னால் வாழ்ந்து காட்டவேண்டும், ஏறும் இடமெல்லாம் எவரெஸ்ட் ஆக்கவேண் டும். என்ன செய்யலாம்? அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் 13 நற்குணங்கள் தேவை என்று பட்டியலிட்டார். (பெட்டி)

பலர் திட்டம் போடுவதில் கெட்டிக்காரர்கள். ஆனால், கனவுகளை நனவாக்க அர்ப்பணிப்பு வேண்டும், கட்டுப்பாடு வேண்டும், கடும் உழைப்பு வேண்டும். பெஞ்சமின் என்ன செய்தார் தெரியுமா? ஒரு கையளவு நோட்டுப் புத்தகம். அதில் ஒவ்வொரு “நற்குணத்துக்கும்” ஒவ்வொரு பக்கம். அதில் வாரத்தின் ஒவ்வொரு நாளும், குறிக்கோளை எட்டுவதில் செய்த சாதனைகள், சறுக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார். இவற்றை அடிக்கடி படித்துப் பார்த்துத் தன் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் கொண்டுவருவார். இந்தக் கடும் முயற்சியால் விரைவில் இந்தப் பதின்மூன்று நற்குணங்களும், பெஞ்சமின் ஆளுமையின் அம்சங்களாயின, அவருடைய . ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்தன.

பெஞ்சமின் கடன் வாங்கினார். சொந்த அச்சகம் தொடங்கினார். தொழில் நேர்த்தி, சகாய விலை. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கும் வாக்குத் தவறாமை ஆகியவற்றால் ஆர்டர்கள் குவிந்தன.

1732. புதிதாக என்ன செய்யலாம் என்று பெஞ்சமினுக்கு எப்போதும் ஒரு துடிப்பு. வருடாந்தர பஞ்சாங்கம் வெளியிட முடிவு செய்தார். அன்றைய பஞ்சாங்கங்களில் நாள்காட்டி, விவசாயிகள் விதை விதைக்க ஏற்ற நாட்கள், பருவநிலை விவரங்கள் ஆகிய சமாச்சாரங்கள் இருந்தன. இவற்றைத் தாண்டி, சுய முன்னேற்ற அம்சங்கள், பழமொழிகள், கவிதைகள், கணித விடுகதைகள், சமையல் குறிப்புகள், ராசிபலன் எனப் பல புதுமைகளைச் சேர்த்தார். அடுத்த 27 வருடங்களுக்கு, பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் விற்பனையான புத்தகம், பெஞ்சமினின்Poor Richard's Almanac.

1748. பெஞ்சமினுக்கு 42 வயது. தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தார். பணம் கொட்டும் தொழில். வசதிகள். அன்பான மனைவி, குழந்தைகள், சமுதாயத்தில் மதிப்பு. மாபெரும் சபையினில் நடந்தால் மலையென வந்து குவியும் மாலைகள்.......சாதாரண மனிதனுக்குத் திருப்தி வரும். இந்தச் சகலகலா வல்லவர் மனதிலோ, தன்னலம் தாண்டிப் பொதுநலச் சேவையில் முத்திரை பதிக்கும் ஆசைகள், பேராசைகள்.

வெற்றிகரமான தொழிலிலிருந்து விலகினார். பிலடெல்பியா நகரத்தில் நூலகம், பொது மருத்துவமனை, தீயணைப்புத் துறை, ஆயுட்காப்பீட்டு நிறுவனம், கல்வி நிறுவனம் ஆகியவற்றை மக்கள் ஆதரவைத் திரட்டி உருவாக்கினார்.

இந்தப் படிக்காத மேதைக்கு அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு. சோதனைகள் பல நடத்தினார். எரிபொருள் சிக்கனமான ஸ்டவ், இடிதாங்கி, கருவி, பைஃபோக்கல் மூக்குக் கண்ணாடி ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். ``தன் சுயநலத்துக்கு அல்ல, சமுதாய நன்மைக்கே” என்னும் உறுதியோடு, இந்தக் கருவிகளுக்குக் காப்புரிமை வாங்க மறுத்தார். இவற்றைத் தயாரிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்தும் இலவசச் சொத்தாக்கினார்.

1750 காலகட்டத்தில் அமெரிக்கா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. விடுதலைப் போராட்டம் முளைவிடத் தொடங்கியிருந்தது. பெஞ்சமின் இதன் முன்னணி வீரர்களில் ஒருவரானார். இங்கிலாந்துடன் நடந்த பல பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றுச் சுதந்திர முழக்கமிட்டார். சுதந்திரப் பிரகடன வரைவுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, அமெரிக்க விடுதலைப் போருக்கு அவர்களிடம் ஆதரவும், நிதியுதவியும் வாங்கி வந்தார்.

அமெரிக்கா, தேசத் தந்தையராக எழுவரைக் கொண்டாடுகிறது. அவர்கள் பெஞ்சமின் பிராங்ளின், ஜார்ஜ் வாஷிங்டன், ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜெஃபர்ஸன், ஜேம்ஸ் மாடிசன், அலெக்சாண்டர் ஹாமில்ட்டன், ஜேம்ஸ் மன்றோ. இந்த நன்றியின் அடையாளமாக, 1914 இல், 100 டாலர் கரென்சி நோட்டில் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் உருவப்படத்தோடு வெளியிட்டார்கள். 102 ஆண்டுகளாகத் தொடர்ந்து, இன்றைய 100 டாலர் நோட்டுகளிலும் பெஞ்சமின் உலா வருகிறார்.

பெஞ்சமின் அச்சக, பதிப்புத் தொழில்களில் மாபெரும் வெற்றிகள் கண்ட மாபெரும் பிசினஸ்மேன். ஆனால், இதையும் தாண்டி, ஒரு கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், அயல் நாட்டுத் தூதர், அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி, அமெரிக்காவின் தேசத் தந்தையர் எழுவரில் ஒருவர்.

பிசினஸ் தொடங்குபவர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் பெஞ்சமின் பிராங்ளின் சுய சரிதம். தமிழ் மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது.

முன்னேற்றத்துக்குத் தேவையான 13 நற்குணங்கள்

* உணவில் கட்டுப்பாடு

* தேவைப்படும்போது மட்டுமே பேசுதல்

* செய்யும் காரியங்களில் ஒழுங்குமுறை

* மன உறுதி முடிவெடுத்தல், அந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்துதல்

* சிக்கனம்

* கடும் உழைப்பு

* சொல்லிலும் செயலிலும் நேர்மை

* பாரபட்சமின்மை

* கருத்துகளில் மிதவாதம்

* சுத்தம்

* பதட்டமில்லா மனநிலை

* கற்பு

* தன்னடக்கம்

slvmoorthy@gmail.com

http://tamil.thehindu.com/business/தொழில்-முன்னோடிகள்-பெஞ்சமின்-பிராங்ளின்-1706-1790/article8727665.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

தொழில் முன்னோடிகள்: மாத்யூ போல்டன் (1728 1809)

poltan__2902673f.jpg
 

பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, மனித இனம் அதுவரை பத்தாயிரம் ஆண்டுகளாக கண்டிராத மாற்றத்தை, முன்னேற்றத்தை கொண்டு வந்தது. அந்த புதுமை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த, மாத்யூ போல்டன் தயாரித்த நீராவி இயந்திரம்.

- வில்லியம் ரோஸென், அறிவியல் எழுத்தாளர்.

அமாவாசை ராத்திரி. கரண்ட் கட். எங்கும் நிசப்தம். பக்கத்து ஜங்ஷன் மணிக்கூண்டுக் கடிகாரம் பன்னிரெண்டு அடித்து அமைதியைச் சில விநாடி களுக்குக் கலைக்கிறது. காஞ்சனா-3 பிசாசு புளியமர உச்சியிலிருந்து இ-ற-ங்-கி வருகிறது. ஏதோ அப்ரகடப்ரா உச்சரிக்கிறது. இன்டர்நெட், இணைய தளம், ஈ மெயில், மொபைல் ஃபோன் உலகத்திலிருந்து காணாமல் போச்.....

ஐயோ, ஐயோ, என்ன செய்வீர்கள்? இன்டர்நெட், இணையதளம், ஈ மெயில், மொபைல் ஃபோன் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லையா? 1980 களுக்கு முன்னால் நம் அம்மா, அப்பாக்கள் இவை ஒன்றுமே இல்லாத வாழ்க்கைதான் நடத்தினர்கள் ப்ரோ.

இந்த மாற்றங்களைத் தகவல் செய்தித் துறைகளின் புரட்சிக்காலம் அல்லது அறிவுப் புரட்சிக் காலம் என்று அழைக்கிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் மாற்றம். 1760 முதல் 1840 வரையிலான காலகட்டத்திலும் இப்படியொரு புரட்சி நடந்தது. அது தொழில் புரட்சி (Industrial Revolution) என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றின் ஆரம்ப காலங்களில், தொழில் உற்பத்தியில் இயந்திரங்களை இயக்கும் சக்திகளாக மனிதர்கள், குதிரைகள், மாடுகள் உழைப்பு ஆகியவைதாம் பயன்பட்டன. இதனால், அனைத்துமே சிறிய குடிசைத் தொழில்களாக மட்டுமே இருந்தன. 1755 இல், ஜேம்ஸ் வாட் வடிவமைத்த நீராவி இயந்திரம்தான் மனித சக்தியையும், மற்ற மிருக சக்திகளையும் தாண்டிய நீராவி சக்தியை உலகத்துக்குக் காட்டி யது. குறைந்த மனிதர்கள், நிறைந்த இயந்திரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தொழிற்சாலைகள் உருவாகின. இந்த மாற்றம்தான் தொழிற் புரட்சி. இதற்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட்தான் தொழிற்புரட்சியின் தந்தை என்று நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.

ஜேம்ஸ் வாட் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள் அவருடைய அறிவியல் மூளை, கண்டுபிடிப்புத் திறமை, மாத்யூ போல்டன் என்னும் தொழில் அதிபர் தந்த பக்கபலம்.

யார் இந்த மாத்யூ போல்டன்?

1728 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரத்தில் பிறந்தார். அவருடைய அப்பா வெள்ளி சாமான்கள் தயாரிக்கும் சின்னப் பட்டறை வைத்திருந்தார். பொம்மைகள், மூக்குப் பொடி டப்பாக்கள், ஜாதிக்காய் உடைக்கும் கருவிகள் தயாரித்தார். மாத்யூ உள்ளூர் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார். விஞ்ஞானத்திலும், கணிதத்திலும் அபாரத் திறமை காட்டினார். ஆனால், ஆங்கிலப் பாடம் அவருக்குக் கசந்தது. அதுவும், எழுதத் தொடங்கினால், பிழைகளோ பிழைகள். தன் 14 ஆம் வயதில் படிப்புக்குக் குட்பை சொல்லிவிட்டு அப்பாவின் பட்டறையில் உதவியாளராகச் சேர்ந்தார். புதிய புதிய பொருட்களைத் தயாரிக்கவேண்டும் என்னும் தேடல், துடிப்பு.

மாத்யூவுக்கு வயது 21. அப்பா தன் தொழிலில் மகனைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டார். ஒரு பணக்கார வியாபாரியின் மகளை மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார். பத்து வருடங்கள் இப்படியே ஓடின. அப்பா மரணமடைந்தார். தொழில் மொத்தமும் மாத்யூ கைக்கு வந்தது. தொழிலை விரிவாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினார்.

மாத்யூ பிரம்மாண்டக் கனவுகள் காண்பவர். தன் கனவுகளை நனவாக்கக் கொஞ்சமும் தயங்காமல் ரிஸ்க் எடுத்துச் செயலில் இறங்குபவர். அவரிடம் அப்போது சேமிப்பாக 1400 பவுண்ட் இருந்தது. (இன்றைய மதிப்பில் சுமார் 1,31,600 ரூபாய்.) அன்றைக்கு மிகப் பெரிய பணம். அதுவும், மாத்யூவின் முழுச் சேமிப்பு. அத்தனை பணத்தையும் தொழிலிலேயே முதலீடு செய்ய முடிவெடுத்தார். ``பேராசைக்காரன். அகலக்கால் வைக்கிறான்” என்று பலர் கேலி செய்தார்கள். தன் இலக்கில், போகும் பாதையில் தெளிவாக இருந்த மாத்யூ மனதில் கொஞ்சமும் சலனம் இல்லை. உறுதியோடு தொடர்ந்தார்.

13 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, Soho Manufactory என்னும் தொழிற்சாலை தொடங்கினார். தன் முயற்சி கனகச்சிதமாக இருக்கவேண் டும் என்பதற்காக, ஒவ்வொரு சிறு அம்சத்திலும் சிரத்தை காட்டினார். அடுக்களை சாமான்கள், சாப்பாட்டுத் தட்டுகள், கத்தி, கரண்டி, நாணயங்கள், மெடல்கள் ஆகிய வெள்ளித் தயாரிப்பு களை அறிமுகம் செய்தார். இவற்றை வடிவமைக்கும் டிசைன் வல்லுநர்களைப் பணிக்கு எடுத்துக்கொண்டார். இவர் களின் கற்பனை சிறகடித்துப் பறக்க, ஊக்கமும், வசதிகளும் அளித்தார்.

அன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அடிப்படை வசதிகளே இல்லாத தொழிற்சாலைகள், குறைந்த சம்பளம், கணக்கே இல்லாத வேலை நேரம், இலக்கை எட்டாவிட்டால் தண்டனை, காரணமே இல்லாத வேலை நீக்கம், அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். மாத்யூ கொண்டுவந்தார் புரட்சிகர மாற்றம் சுத்தமும், சுகாதாரமுமான தொழிற்சாலை, வேலை பார்க்க வசதியான லைட்டிங், திறமைக்கும், உழைப்புக்கும் மரியாதை, 12 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே வேலை, காப்பீடு மூலமாகக் காயம்பட்ட ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதி.

தன் நிறுவனம் வேகமாக வளர்ச்சி காணவேண்டுமானால், இங்கிலாந்தில் மட்டும் விற்பனை செய்தால் போதாது என்று உணர்ந்த மாத்யூ விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்தார். இவர்கள் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் செய்தார்கள். ஆர்டர்கள் வாங்கி வந்தார்கள். புதிய தயாரிப்புப் பொருட்கள், கனகச்சிதமான தரம், நியாய விலை, மார்க்கெட்டிங் யுக்திகள், Soho Manufactory 1000 பேர் பணி புரியும் பிரம்மாண்டக் கம்பெனியாகக் கிடுகிடுவென வளர்ந்தது.

ஆனால் மாத்யூவுக்குத் திருப்தி வரவில்லை. தன் கம்பெனியை இன்னும், இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகவேண்டும் என்னும் பசி, அகோரப் பசி. இந்தப் பசியைத் தீர்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட் வடிவில் வந்தது. நீராவி சக்தியால் இயங்கும் இயந்திரங்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் தண்ணீர் இறைக்கப் பயன்பட்டன. ஜேம்ஸ் வாட் என்னும் இளைஞர் இந்த நீராவி இன்ஜின்களில் சில வடிவமைப்பு மாற்றங்கள் செய்தார். செயல்திறன் ஆறு மடங்கு அதிகமானது. சுரங்கங்கள் தன் இன்ஜின்களை அள்ளிக்கொண்டு போவார்கள் என்று வாட் நினைத்தார். அதற்குக் காப்புரிமை வாங்கவேண்டும், சில இன்ஜின்களைத் தயாரித்துச் சுரங்கங்களில் பரிசோதனை ஓட்டங்கள் நடத்தித் தன் இயந்திரத்தின் சிறப்பை நிரூபிக்கவேண்டும் என்னும் நிதர்சனம் புரிந்தது. ஆனால், அதற்குத் தேவையான பணம் அவரிடம் இருக்கவில்லை.

வெறும் கையால் எப்படி முழம் போடுவது? இரும்புப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திய டாக்டர் ரோபக் முன்வந்தார். ஆறு வருடங்களில் ஜேம்ஸ் வாட்டுக்கு நீராவி இயந்திரத்துக்கான காப்புரிமை கிடைத்தது. ஆனால், ஒரு சோகம். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்த டாக்டர் ரோபக் திவாலாகிவிட்டார். அவர் மாத்யூவிடம் 1,200 பவுண்ட்கள் கடன் வாங்கியிருந்தார். இதற்கு ஈடாக, நீராவி இயந்திர நிறுவனத்தின் பங்குகளை மாத்யூவிடம் தந்தார்.

நீராவி இயந்திரம் ஜெயிக்கும் குதிரை என்று மாத்யூ மனக்குறளி சொன்னது. போல்டன் அண்ட் வாட் என்னும் பெயரில் ஜேம்ஸ் வாட்டோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப் கம்பெனி தொடங்கினார். ஏராளமான முதலீட்டில் உற்பத்தி ஆரம்பம். வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றை ஜேம்ஸ் வாட், மார்க்கெட்டிங், முதலீடு ஆகியவற்றை மாத்யூ பார்த்துக்கொண்டார்கள். எரிசக்தியில் ஏற்படும் சேமிப்பைச் சுரங்க அதிபர்கள் உணர்ந்தார்கள். ஆர்டர்கள் கொட்டின.

ஒரு நாள், மாத்யூ மூளையில் மின்வெட்டு இங்கிலாந்தில் நெசவு ஆலைகள் அதிகம். அவர்கள் உற்பத் திக்கு அதிகச் சக்தி தேவை. அவர் களைப் புதிய நீராவி இயந்திரம் வாங்க வைத்தால்.....இந்த யுக்தி பலித்தது. வாங்கினார்கள். அடுத்து, பல்வேறு நாடு களுக்கு நாணயங்கள் செய்து தரும் பிசினஸ் தொடங்கினார்கள். மாத்யூ ஜேம்ஸ் வாட் கம்பெனிக்குப் பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்.

1800 - ஆம் ஆண்டில், தங்கள் கனவுகளை நிஜமாக்கிவிட்ட ஆத்ம திருப்தியோடு மாத்யூ, ஜேம்ஸ் வாட் இருவரும் நிர்வாகப் பொறுப்பைத் தங்கள் மகன்களிடம் ஒப்படைத்தார்கள், ஓய்வு பெற்றார்கள். அடுத்த 9 ஆண்டுகள் குடும்பத்தோடு நிம்மதியான வாழ்க்கை. மாத்யூ மறைந்தார். அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட ஒரு வாசகம்;

பிறர் திறமைகளை அடையாளம் கண்டவர்.

இந்த ஒரு குணம் மட்டும் இருந்தால் போதும். தொழிலில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் வெற்றி தேடிவரும்.

கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

* பிரம்மாண்டக் கனவுகள் கண்டு அவற்றைச் செயலாக்குதல்

* ரிஸ்க் எடுக்கும் குணம்

* ஜெயிக்கும் தயாரிப்புப் பொருட்களை அடையாளம் காணும் உள்ளுணர்வு

* தயாரிப்புப் பொருட்களுக்குப் புதுப் புது மார்க்கெட்களைக் கண்டுபிடிக்கும் தேடல்

* தொழில் வெற்றிக்குப் பணம் மட்டும் போதாது, ஊழியர்களின் திறமை, அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவை தேவை என்று உணர்ந்து அவர்களுக்குத் தந்த மதிப்பு

slvmoorthy@gmail.com

 

http://tamil.thehindu.com/business/தொழில்-முன்னோடிகள்-மாத்யூ-போல்டன்-1728-1809/article8755345.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.