Jump to content

எமது நண்பனை சுன்னாக பொலிசார் அடித்தே கொன்றனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் வாக்குமூலம்


Recommended Posts

எமது நண்பனை சுன்னாக பொலிசார் அடித்தே கொன்றனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் வாக்குமூலம்


தமது நண்பரை " உனக்கு தனி நாடு தேவையா ? " என கேட்டே பொலிசார் அடித்துக் கொலை செய்து விட்டு , அந்த கொலையை தற்கொலையாக மாற்றி மரண சான்றிதழ் வழங்கியதாக மல்லாகம் நீதிமன்றில் சந்தேகநபர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்றைய தினம் திருட்டுகுற்ற சாட்டு வழக்கு ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது குற்ற சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை ஆகி தமது வாக்கு மூலங்களை இன்று திங்கட்கிழமை பதிவு செய்தனர்.

அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது ,

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நாம் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு புத்தக பைகள் அன்பளிப்பு செய்தோம். அவ்வேளை அந்த இடத்திற்கு வந்த சுன்னாக பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் "நீங்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு தான் புத்தக பைகள் வழங்குகின்றீர்களா ? ' என கேட்டனர்.

அதற்கு நாம் "இல்லை , இது வறிய நிலையில் உள்ள மாணவர்கள் கல்வியை தொடர அவர்களுக்கு உதவுகின்றோம். " என கூறினோம் அதனை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து சென்று இருந்தனர்.

பின்னர் இரவு எங்கள் வீடுகளுக்கு வந்து எம் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி எம்மை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அன்றைய தினம் இரவு எமது உறவினர்கள் நண்பர்கள் என ஐவரை பொலிசார் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை செய்வதற்கு என பிரத்தியோக அறை ஒன்று உள்ளது அந்த அறைக்குள் எம்மை அழைத்து சென்றனர். அங்கு ஊரெழு இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ புலனாய்வு துறையினர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எம் மீது திருட்டுக் குற்றம் ஒன்றினை சாட்டி எம் மீது சித்திரவதைகளை புரிய தொடங்கினார்கள்.

எம் மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள் , கால் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள் , கை பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து அந்த குழாயை மேல தூக்கி கட்டினார்கள். அதன் போது எமது முழு உடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.

இவ்வாறு மிக மோசமான சித்திரவதைகளை எம் மீது சுன்னாக பொலிசார் மேற்கொண்டனர்.  இதன் போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து " உனக்கு தனி நாடு வேணுமா ? " என கேட்டு தாக்கினார்கள்.

பொலிசாரின் மூர்க்க தனமான தாக்குதலால் நண்பனின் வாய் மற்றும் மூக்கால் இரத்தம் சொட்டி நண்பன் உயிரிழந்து விட்டான். அதனை அடுத்து எம்மை அந்த அறையில் இருந்து பொலிசார் அப்புறப்படுத்தி விட்டனர்.

பின்னர் உயிரிழந்த எமது நண்பனின் உடலை கொண்டே கிளிநொச்சியில் இரணைமடு குளத்தினுள் வீசியுள்ளனர். பின்னர் நண்பன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை என மரண சான்றிதழ் கொடுத்து பொலிசார் அதனை தற்கொலையாக மாற்றி விட்டனர்.  என தமது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டனர்.

அதனை தொடர்ந்து நீதவான் கட்டளை பிறப்பிக்கையில் ,

தமது நண்பரை கொலை செய்ததாகவும் ,  தம் மீது சித்திரவதை புரிந்ததாக சந்தேகநபர்கள் பெயர் குறிப்பிட்டுள்ள பொலிசார் அனைவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறும்  அத்தனை பேரிடமும் பூரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாத கால பகுதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். எனவும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் , இந்த வழக்கினை கைவிடுமாறு எவரனும் கோரினாலோ அல்லது , மிரட்டினாலோ , வேறு விதமான அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலோ உடனடியாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

தேவை ஏற்படின் சந்தேகனபர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134372/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மர்மச்சாவுகளின் ஒரு முடிச்சு அவிழ்ந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்யப்போகிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

எம் மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள் , கால் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள் , கை பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து அந்த குழாயை மேல தூக்கி கட்டினார்கள். அதன் போது எமது முழு உடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.

இவ்வாறு மிக மோசமான சித்திரவதைகளை எம் மீது சுன்னாக பொலிசார் மேற்கொண்டனர்.  இதன் போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து " உனக்கு தனி நாடு வேணுமா ? " என கேட்டு தாக்கினார்கள்.

சிங்கள இராணுவமும் பொலிசாரும் தமிழ் இளைஞர்கள் மீது அன்றும் இதைத்தான் செய்தார்கள். இதை அரசியலாக்கி சுயலாபம் காண முனைந்தவர்கள் இன்றும் உயிருடன் உலாவுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

மர்மச்சாவுகளின் ஒரு முடிச்சு அவிழ்ந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்யப்போகிறார்கள்! 

வழமைபோல் தீக்கோழி வேசம் தான்.

Link to comment
Share on other sites

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளின் அரச பயங்கரவாதத்தின் ஆதரவுடன் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதிகளின் சித்திரவதைகளை, கொள்ளைகளை, கொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை சிங்கள-பௌத்த இனமதவெறி சார்பான நீதித்துறை கண்டு கொண்டதும் இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததும் இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.