Jump to content

நிராசையாகும் மருத்துவப் படிப்பு... அகதி மாணவர்களின் ஏக்கம் தீருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

AG_1.jpg

பி.எ‌ஸ்‌ஸி ந‌ர்‌சி‌ங், பி.பார்ம்., போன்ற படிப்புகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 1000 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க முடியாமல், தங்களது கனவுகளை பொசுக்கிக்கொண்டு அகதிகள் முகாமில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள், இலங்கை அகதி மாணவர்கள்.

பொறியியல் கனவை நனவாக்கிய கருணாநிதி!

தமிழகம் முழுவதும் சுமார் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் உள்ள சிறார்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இதில் ஆண்டுதோறும் சுமார் 4000 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு தயாராகிறார்கள். 1000 த்தை தாண்டி இவர்கள் மதிப்பெண் பெற்றாலும், இவர்கள் தேர்ந்தெடுப்பது கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ படிப்புகளைதான். காரணம், இநதியக் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே இந்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க முடியும். பொறியியல், மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் ஆகிய உயர்கல்வியைப் படிக்க விரும்பினால், அதற்கு விண்ணப்பிக்க கூட இவர்களுக்கு தகுதியில்லை என்கிறது மாநில அரசின் கல்விக் கோட்பாடு.

இந்நிலையில்தான் 2010ம் ஆண்டு, திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜ், பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார், வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்ப படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி ஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பொறியாளர்களாக ஆகியுள்ளனர்; ஆகி வருகின்றனர்.

மருத்துவக் கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?

AG_2.jpg

பொறியியல் கனவு நிறைவேறினாலும், இன்னும் மருத்துவம் படிப்பதற்கான வழி இல்லாமல், தங்களது கனவுகளோடு இருள் சூழ்ந்த கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள் இந்த அகதிகள். தாங்கள் விரும்பிய படிப்பை படிக்க ஏதாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில், வேறொரு படிப்பை தேர்வு செய்யவும் மனமில்லாமல் உள்ளனர்.

பொறியியல் படிக்க கருணாநிதியிடம் சுரந்த கருணையை, மருத்துவம் படிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவிடமும் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள் அகதி மாணவர்கள். ஈரோடு மாவட்டம் பவானி அகதிகள் முகாமில் உள்ள துஷாந்தி, 1018 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இயற்பியல் 181, வேதியியல் 178, உயிரியல் 152, கணிதத்தில் 157 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 2005-ல் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் இவருடைய தந்தை விஜித் காணாமல் போனவர். அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கூடத் தெரியவில்லை. 

இவருடைய தாய் அருந்ததி, மூன்று பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அகதியாக தமிழகம் வந்தார். ஈரோடு மாவட்டம், பவானி முகாமில் இருந்து கொண்டு, பனியன் கம்பெனியில் வேலை செய்து, 3 பெண் குழந்தைகளையும் படிக்க வைத்தார். 10 -ம் வகுப்பு தேர்வில் துஷாந்தி 466 மதிப்பெண்கள் பெற்றார். 12-ம் வகுப்பில் தற்போது 1018 மதிப்பெண்கள் பெற்றுள்ள துஷாந்தி, நர்சிங் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் குடியுரிமைத் தகுதி அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. ' அகதிகள் மாணவர்களும் மருத்துவம் மற்றும் நர்சிங் படிக்கலாம்' என்று தமிழக முதலமைச்சர் அரசாணை வெளியிட்டால் மட்டுமே, துஷாந்தி போன்ற மாணவர்கள் மருத்துவத் துறையில் அடியெடுத்து வைக்க முடியும்.

அகதி மாணவர்களின் வாழ்வு முதல்வர் கையில்

இது குறித்து துஷாந்தியிடம் பேசினோம். “ என் அம்மா பனியன் கம்பெனியில் வேலை செய்துதான் என்னை படிக்க வைத்தார். தற்போது அவர் வேலைக்குப் போக முடியாத நிலையில் உள்ளார். நான் படித்து வேலைக்குப் போய்தான் எனது தங்கைகளை படிக்க வைக்க முடியும் என்ற நிலை. என் ஒருவருடைய கல்வி மட்டுமல்ல, என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான அகதிகளின் கனவும், வாழ்வும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையில் உள்ளது. அவர்கள் மனது வைத்தால் மட்டுமே குடியுரிமை இல்லாத எங்களுக்கு கல்வி உரிமை கிடைக்கும்” என்று கண்ணீரோடு வார்த்தைகளை முடிக்கிறார் துஷாந்தி.

மத்திய அரசுக்காக காத்திருக்கத் தேவையில்லை

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறனிடம் பேசியபோது, “ இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனேவே தமிழக முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இரட்டைக் குடியுரிமை கொடுத்துவிட்டால் அவர்களுக்கான உரிமை கிடைத்து விடும். ஆனால் இரட்டைக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்காமல், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தகுதியுடைய மாணவர்களும் மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்க்க வேண்டும் என அரசாணை ஒன்றை முதலமைச்சர் வெளியிட வேண்டும்” என்றார்.

அகதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

“ஐ. நா. வின் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் அகதிகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்த மறுக்கிறார்கள். மற்ற நாடுகளில் அடைக்கலம் தேடி வருகிற அகதிகளுக்கு என்ன உரிமைகள் வழங்கப்படுகிறதோ, பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ அதேபோன்று இந்தியாவில் கடைபிடிப்பது இல்லை. இவர்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருப்பது போன்றே வைத்துள்ளனர். 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைத்துள்ளார்கள். காவலர்களின் அனுமதியின்றி எங்கும் செல்லமுடியாத நிலையில்தான் இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியக் குடியுரிமையும் இல்லாமல், இலங்கைக்கும் போக முடியாமல் தவித்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் போன்றவை அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதை இந்த அரசு கண்டு கொள்வதும் இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். அதேபோன்று இரட்டைக் குடியுரிமை விரும்புகிறவர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். அகதிகளுக்கான ஐ. நா. வின் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவேண்டும். சட்டம், மருத்துவம் ,பொறியியல் போன்றவற்றில் இவர்களுக்கு என்று தனிப் பிரிவை ஏற்படுத்தி அதில் குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன் பிறகு இந்தியக் குடியுரிமை வழங்க, மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜைத் தொடர்பு கொண்டு கேட்டோம். “அகதிகள் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை என்று விதிகள் உள்ளன. இந்த ஆண்டில் மருத்துவத்திற்கு விண்ணப்பங்கள் வரவில்லை. நர்சிங் படிக்க இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்கச் சொல்லுங்கள், நாங்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறோம்" என்றார்.

2014-ல் ஈரோடு அகதிகள் முகாமை சேர்ந்த நந்தினி என்ற பெண், 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்தார். ஆனால் குடியுரிமை விவகாரம் காரணமாக அவர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பெண்ணுக்கு கல்வி உரிமை வழங்கக் கோரி, அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் பலரும் அறிக்கை விட்டார்கள். ஆனாலும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

1996 ம் ஆண்டு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் மகள், ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 ம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் அதனை முற்றிலும் நீக்கியுள்ளது. அப்போதிலிருந்து நந்தினி போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது, இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்படுவது வேதனையளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

" ஒரு நாடு, பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் எனில் அந்த நாட்டில் உள்ள பெண்கள் பெருமளவு கல்வி கற்க வேண்டும் என்பார்கள். என்னுடைய உழைப்பு நாட்டிற்கான பங்களிப்பாக இல்லையென்றாலும், என் குடும்பத்தின் வறுமையைப் போக்கவாவது தீர்வாக இருக்கவேண்டும்" என்கிறார் துஷாந்தினி. 

செய்யுமா தமிழக அரசு?

- கே. புவனேஸ்வரி

 

http://www.vikatan.com/news/india/66478-medical-education-remains-struggle-refugeestudents.art

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழரசு said:

பொறியியல் கனவை நனவாக்கிய கருணாநிதி!

இது முழுத் தவறு!
எம்ஜிஆர் தான் ஈழத்து தமிழ் மாணவர்களின் பொறியியல் கல்விக்கு 1980 களில் சிறப்பு இடங்களை ஒதுக்கி அனுமதி வழங்கினார். பின்னர் அந்த இட ஒதுக்கீடு சுயநலவாதியான  கருணாநிதியால் நீக்கப்பட்டு, மாணவர் போராட்டத்தின் பின்னர் ஏனைய தமிழக மாணவர்கள் போல் சாதாரண முறையில் அனுமதிக்கும் புதிய முறை கொண்டு வரப்பட்டது. 

தாய் மண்ணுக்கு திரும்புவது தான் இவர்களின் வாழ்வில் நிரந்தர விடிவுக்கு வழி வகுக்கும்!

ஒரு மாணவரின் மருத்துவ கல்விக்கு ஆகும் பெரும் தொகை (தற்போது இந்திய ரூபா 20 இலட்சம் என்று சொல்லப்படுகிறது) காரணமாகவே அரசு ஈழத் தமிழருக்கு அந்த ஒதுக்கீட்டை செய்ய தயங்குகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.