Jump to content

'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி''


Recommended Posts

'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி''

சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு.
சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு.

நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இதில், சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடத்துள்ளனர்.

வழக்கமாக வார விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த 22-ம் தேதி நடிகர் ரஜினி நடித்து வெளியான ‘கபாலி’ படம், திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, கோடிக்கணக்கில் வசூலித்து வரும் நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள கெயிட்டி திரையரங்கில் நேற்று முன்தினம் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் வெளியானது.

படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் கூட்டம் வந்த நிலையில், நேற்று மாலை நேரக் காட்சியில் திரையரங்கு நிறைந்தது. இங்குள்ள 324 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இது, சிவாஜிகணேசனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை கூறும்போது, “நடிப்பால் மக்களைக் கவர்ந்த சிவாஜியின் நினைவுகள் மக்களைவிட்டு மறையவில்லை என்பதை, இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

திரையரங்கு மேலாளர் இக்பால் கூறும்போது, “இந்தப் படத்தை திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அதிக கூட்டம் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் ‘ஹவுஸ்புல் போர்டு’ மாட்டியுள்ளோம். டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலர் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/கபாலி-பரபரப்பிலும்-அரங்கம்-நிறைந்த-அவன்தான்-மனிதன்-திருச்சியில்-நடிகர்-சிவாஜி-ரசிகர்கள்-மகிழ்ச்சி/article8896769.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தின் தரம் குறைவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி வெற்று டப்பாவோடு ஒப்பிடும் போது இந்தப் பழைய குடுகுடுப்பை பறுவாயில்லைன்னு ரசிகர்கள்.. (திராவிடர் ஆட்சியில்.. தமிழக மக்கள் ரசிக்க.. ருசிக்க.. அனுமதிக்கப்பட்டிருப்பது சினிமாவைத் தானே...) நினைச்சிருப்பாங்க போல. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி....  சில நல்ல ரசிகர்களும்,  தமிழகத்தில் உள்ளார்கள்.
இனி... ரசனி காத்து,  இமயமலைக்கு  போனால், நல்லது. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ......! --- கண்ணாளனே எனது கண்ணை ---
    • உண்மைதான். ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக தன்நலத்தின் பால் இதை அவர் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் என்றோ செய்திருக்கலாம்.
    • சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 
    • நான் நினைக்கிறேன்  பையன் போனில் இருந்து வேக வேகமாய் அடித்து பதிவுக்கு அனுப்புவதால்தான் எழுத்துக்கள் சரியாக வேகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்பிழைகள் ஏற்படுக்கின்றன ....... அதைக் கவனித்து சரிசெய்ய அவருக்கு அவகாசம் குடுக்காமல் வருகிற எல்லோரும் அவரோடு மோதினால் அவரால் என்ன செய்ய முடியும்.......மற்றும்படி நான் பார்த்தவரை பையனுக்கு நல்ல தமிழ் விளக்கம் இருக்கு........!   😁
    • உண்மை, ஆனால் அதே நேரம், தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்கின்ற, போலிகா தலைவரின் மகள் தான் என்று சொல்கின்ற கூட்டத்துடன் அவரும் இருக்கின்றார் என்பது தான் வேதனையான விடயம்.  வயது முதிர்ச்சியால், ஆட்டுவித்தவர்களின் பொய்களை நம்பித் தான் அவ்வாறு சொன்னார் / சொல்கின்றார் என்று சிலர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.