Jump to content

சுவிஸ் கடிகாரங்களை அணிய வட கொரியா அதிபருக்கு தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகும் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் விருப்பம் உடையவர் என கூறப்படுகிறது. உதாரணமாக, பொதுநிகழ்ச்சிகளில் கிம் பங்கேற்கும்போது அவர் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்களை கட்டியிருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.சர்வாதிகாரி கிம் மற்றும் அவருடைய சகோதரி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி கல்வி பயின்றதால், சுவிஸ் கடிகாரங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகும் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் விருப்பம் உடையவர் என கூறப்படுகிறது. உதாரணமாக, பொதுநிகழ்ச்சிகளில் கிம் பங்கேற்கும்போது அவர் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்களை கட்டியிருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.சர்வாதிகாரி கிம் மற்றும் அவருடைய சகோதரி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி கல்வி பயின்றதால், சுவிஸ் கடிகாரங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

   

இதனை தொடர்ந்து, எந்த நிகழ்வாக இருந்தாலும் கிம் சுவிஸ் கடிகாரத்துடன் தான் காட்சியளிப்பார்.இதுமட்டுமில்லாமல், கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் கிம் குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையை சார்ந்தவர்களுக்காக அவர் சுமார் 2,20,000 டொலருக்கு மேல் சுவிஸ் கடிகாரங்களை வாங்கியுள்ளார்.ஆனால், கிம்மின் சுவிஸ் கடிகாரங்கள் மீதான விருப்பத்திற்கு தற்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அண்மை காலங்களில் ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வந்துள்ளது.இதனை தொடர்ந்து வட கொரியா மீது ஐ.நா சபை பல்வேறு பொருளாதார தடைகளை அமுல்படுத்தியது.

இதன் ஒருபகுதியாக, சுவிஸ் நாட்டிலிருந்து வட கொரியாவிற்கு கடிகாரங்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் வட கொரியா நாட்டிற்கு ஒரு கடிகாரத்தை கூட ஏற்றுமதி செய்யவில்லை என சுவிஸ் கடிகாரங்கள் உற்பத்தி சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.இதன் மூலம், தனக்கு பிரியமான சுவிஸ் கடிகாரங்களை அணிய வட கொரியா சர்வாதிகாரிக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162169&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.