Jump to content

இன்னொரு இரும்புப் பெண்மணி?


Recommended Posts

இன்னொரு இரும்புப் பெண்மணி?

கார்க்கிபவா

 

p94a.jpg

மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே.

இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்... தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி.

59 வயது ஆகும் தெரேசா மே, இயல்பாகவே தலைமைப் பண்புக்கான குணாதிசயங்கள் கொண்டவர். உலகப் பெண் தலைவர்களில் இவரையும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலையும்தான் ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒப்பிடுகின்றன. ஆனால், ஏஞ்சலாவுக்கும் தெரேசாவுக்கும் கொள்கை ரீதியில் பல வேறுபாடுகள் உண்டு. அகதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர் ஏஞ்சலா. தெரேசாவோ, அவர்களுக்கு உதவலாம். ஆனால், நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பவர்.

2010-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அரசின் உள்துறைச் செயலாளராக இருந்துவந்தார் தெரேசா. தீவிரவாதத் தடுப்பு, குடியுரிமை, எல்லைக் கட்டுப்பாடு பிரிவுகளுக்கு தெரேசாதான் தலைவர். இன்னும் ஒரு மாதம் இந்தப் பொறுப்பில் நீடித்து இருந்தால் அதிக ஆண்டுகள் தொடர்ந்து உள்துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் சூட்டர் ரெக்கார்டை உடைத்திருப்பார். ஆனால், இந்தக் காலத்தில் இவரது செயல்பாடுகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. `இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து வருபவர் களின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்றது டேவிட் கேமரூன் அரசு. ஆனால், கடந்த ஆண்டுகளில் அது முன்னர் இருந்ததைவிட அதிகம் ஆனது. சட்டத்துக்குப் புறம்பாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்ற பல அதிரடி முயற்சிகள் எடுத்தார் தெரேசா. வேன்களில் `Go home or face arrest' என்ற போர்டுகளை மாட்டி, லண்டன் நகரம் எங்கும் ஓடவிட்டார். ஒரே ஒருவர் மட்டுமே தாமாக வந்து சரண் அடைந்தார். அந்தப் பிரசாரம் படுதோல்வி அடைந்தது. 

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதால் இங்கிலாந்துக்குப் புதிய நண்பர்கள் தேவை. பொருளாதார, வர்த்தக முன்னேற்றத்துக்கு அமெரிக்காவுடனான நட்பு அவசியம். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி, ட்ரம்ப் என யார் வெற்றி பெற்றாலும் அவர்களோடு நட்பு பாராட்டவேண்டியதுதான்  தெரேசாவுக்கு டாப் ப்ரியாரிட்டி.

p94b.jpg

`மார்கரேட் தாட்சர் போல இவர் இரும்புப் பெண்மணி அல்ல. ஆனால் கடுமையான பெண்மணி' என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள். காரணம், `தவறான முடிவு எடுத்தாலும், அதை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிக்கொள்ள மாட்டார். எடுத்த முடிவில் மிக உறுதியாக இருப்பார் தெரேசா' என்கிறார்கள்.

தெரேசாவின் காதல் கணவர் ஃபிலிப்ஸ் மே. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. ஃபிலிப்ஸை தெரேசாவுக்கு அறிமுகம் செய்துவைத்து, காதலுக்கு ரைட் சொன்னவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ.

புகைப்படக் கலைஞர்களுக்கு, தெரேசா அசைன்மென்ட் என்றால் குதூகலம்தான். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழகழகான, வித்தியாசமான காலணிகள் அணிவது தெரேசா ஸ்டைல். சர்வதேச அரசியல் தலைவர்கள் யாரையாவது தெரேசா சந்திக்கிறார் என்றால், அன்று ஸ்பெஷல் ஷூ நிச்சயம். `ஷூக்கள்தான் எனது ஐஸ்பிரேக்கர். என்ன பேசுவது எனத் தயங்கிய பல நாட்களில் இந்த ஷூக்கள் பற்றிய பேச்சுத்தான் அதைத் தொடங்கி வைத்திருக்கிறது’ என்பார் தெரேசா.

தெரேசாவின் ஃபேவரிட் பொழுதுபோக்கு வீடியோகேம்ஸ். கேமிங் கம்யூனிட்டியில் இவரது யூடியூப் சேனல் செம வைரல். `பேட்டல்ஃபீல்டு-4' என்ற கேமை விளையாடிய தெரேசா, அதை ரிக்கார்ட் செய்து யூடியூபில் அப்லோடினார். இதுவரை அந்த வீடியோவை 1.2 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள்.

p94c.jpg

மாலை வேளைகளில் வெஸ்ட் மினிட்ஸர் பிரிட்ஜுக்குச் சென்றால் தெரேசாவைப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்குப் புகைப்படம் எடுக்க உதவுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது என மேடம் அங்கேயும் பிஸி. `பிரதமர் ஆன பிறகும் வருவாரா?' எனக் கேள்விக் கேட்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் இருந்த மாற்றுக்கருத்துகளைக் களைந்து, பிரதமராகப் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார் தெரேசா. கட்சியை ஒன்றாக இணைத்ததுபோல, இங்கிலாந்து மக்களையும் அவர் ஒன்றுசேர்க்க வேண்டியிருக்கிறது. `அடுத்த தேர்தலுக்குள் அதைச் செய்வாரா?' என்பதுதான் இப்போது அவர் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

http://www.vikatan.com/anandavikatan/2016-jul-27/interviews---exclusive-articles/121432-theresa-may-becomes-new-british-prime-minister.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகிரெட் தட்சர் சாதித்த அளவிற்கு இவரால் சாதிக்க முடியாது. ஏனெனில் இன்றைய உலகப்பிரச்சனைகள் வேறு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம்  நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂 இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன்.  என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️  
    • 15வ‌ருட‌த்தை வீன் அடித்து விட்டார்க‌ள் இவ‌ர்க‌ளை இனி ந‌ம்ப‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் உருத்திரகுமார் வாய் சொல் ந‌ப‌ர்   இவ‌ரின் மாவீர‌ நாள் உரைக்கு ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு இல்லை..........................நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றின‌து தான் மிச்ச‌ம்........................இவ‌ர்க‌ளை நானும் எட்டி பார்க்காம‌ விட்டு க‌ண‌ காலம்......................................................
    • இரண்ட‌ர‌ வ‌ருட‌ம் ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ப‌டிச்சேன் ஜேர்ம‌ன் பெரிய‌ நாடு   அதுவும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு வாக‌ன‌த்தில் நீண்ட‌ தூர‌ ப‌யண‌ம் பெரிசா ச‌ரி வ‌ராது..........................நீங்க‌ள் யாழில் இணைந்து 16வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து  இந்த 16வ‌ருட‌த்தில் முத‌ல் முறை தாத்தாவை ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்..............................................   நான் தாத்தா கூட‌ ப‌ழ‌கிய‌ ம‌ட்டில் அவ‌ருக்கு பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து பிடிக்காது என‌க்கும் பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போட‌ சுத்த‌மாய் பிடிக்காது............................நான் ஊதிச்சு ஒரு மாதிரி பிடிச்சு போடுவேன் த‌மிழ்சிறி அண்ணா ஹா ஹா    ச‌ந்திப்பு ந‌ல்ல‌ மாதிரி அமைஞ்ச‌து ச‌ந்தோஷ‌ம் த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் தாத்தா ம‌ற்றும் ப‌ஞ் ஜ‌யா.............................................
    • மூவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியானதும் சந்திப்பு என்பதைப் பதிவு பகர்கின்றது.  எனக்கும் யாழ்கள உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காலம் ஒருநாள் கைகூடச்செய்யும் அதுவரை களமூடாக உறவாடுவோம்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • யாழ்கள உறவுகள் மூவர் சந்தித்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான சந்திப்புக்கள் இங்கிலாந்தில் நடப்பது மிகவும் அரிதாக இருக்கும். கேட்டால் நாங்க ரொம்ப பிசி என்று சொல்லுவார்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.