Jump to content

இன்னொரு இரும்புப் பெண்மணி?


Recommended Posts

இன்னொரு இரும்புப் பெண்மணி?

கார்க்கிபவா

 

p94a.jpg

மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே.

இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்... தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி.

59 வயது ஆகும் தெரேசா மே, இயல்பாகவே தலைமைப் பண்புக்கான குணாதிசயங்கள் கொண்டவர். உலகப் பெண் தலைவர்களில் இவரையும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலையும்தான் ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒப்பிடுகின்றன. ஆனால், ஏஞ்சலாவுக்கும் தெரேசாவுக்கும் கொள்கை ரீதியில் பல வேறுபாடுகள் உண்டு. அகதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர் ஏஞ்சலா. தெரேசாவோ, அவர்களுக்கு உதவலாம். ஆனால், நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பவர்.

2010-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அரசின் உள்துறைச் செயலாளராக இருந்துவந்தார் தெரேசா. தீவிரவாதத் தடுப்பு, குடியுரிமை, எல்லைக் கட்டுப்பாடு பிரிவுகளுக்கு தெரேசாதான் தலைவர். இன்னும் ஒரு மாதம் இந்தப் பொறுப்பில் நீடித்து இருந்தால் அதிக ஆண்டுகள் தொடர்ந்து உள்துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் சூட்டர் ரெக்கார்டை உடைத்திருப்பார். ஆனால், இந்தக் காலத்தில் இவரது செயல்பாடுகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. `இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து வருபவர் களின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்றது டேவிட் கேமரூன் அரசு. ஆனால், கடந்த ஆண்டுகளில் அது முன்னர் இருந்ததைவிட அதிகம் ஆனது. சட்டத்துக்குப் புறம்பாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்ற பல அதிரடி முயற்சிகள் எடுத்தார் தெரேசா. வேன்களில் `Go home or face arrest' என்ற போர்டுகளை மாட்டி, லண்டன் நகரம் எங்கும் ஓடவிட்டார். ஒரே ஒருவர் மட்டுமே தாமாக வந்து சரண் அடைந்தார். அந்தப் பிரசாரம் படுதோல்வி அடைந்தது. 

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதால் இங்கிலாந்துக்குப் புதிய நண்பர்கள் தேவை. பொருளாதார, வர்த்தக முன்னேற்றத்துக்கு அமெரிக்காவுடனான நட்பு அவசியம். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி, ட்ரம்ப் என யார் வெற்றி பெற்றாலும் அவர்களோடு நட்பு பாராட்டவேண்டியதுதான்  தெரேசாவுக்கு டாப் ப்ரியாரிட்டி.

p94b.jpg

`மார்கரேட் தாட்சர் போல இவர் இரும்புப் பெண்மணி அல்ல. ஆனால் கடுமையான பெண்மணி' என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள். காரணம், `தவறான முடிவு எடுத்தாலும், அதை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிக்கொள்ள மாட்டார். எடுத்த முடிவில் மிக உறுதியாக இருப்பார் தெரேசா' என்கிறார்கள்.

தெரேசாவின் காதல் கணவர் ஃபிலிப்ஸ் மே. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. ஃபிலிப்ஸை தெரேசாவுக்கு அறிமுகம் செய்துவைத்து, காதலுக்கு ரைட் சொன்னவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ.

புகைப்படக் கலைஞர்களுக்கு, தெரேசா அசைன்மென்ட் என்றால் குதூகலம்தான். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழகழகான, வித்தியாசமான காலணிகள் அணிவது தெரேசா ஸ்டைல். சர்வதேச அரசியல் தலைவர்கள் யாரையாவது தெரேசா சந்திக்கிறார் என்றால், அன்று ஸ்பெஷல் ஷூ நிச்சயம். `ஷூக்கள்தான் எனது ஐஸ்பிரேக்கர். என்ன பேசுவது எனத் தயங்கிய பல நாட்களில் இந்த ஷூக்கள் பற்றிய பேச்சுத்தான் அதைத் தொடங்கி வைத்திருக்கிறது’ என்பார் தெரேசா.

தெரேசாவின் ஃபேவரிட் பொழுதுபோக்கு வீடியோகேம்ஸ். கேமிங் கம்யூனிட்டியில் இவரது யூடியூப் சேனல் செம வைரல். `பேட்டல்ஃபீல்டு-4' என்ற கேமை விளையாடிய தெரேசா, அதை ரிக்கார்ட் செய்து யூடியூபில் அப்லோடினார். இதுவரை அந்த வீடியோவை 1.2 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள்.

p94c.jpg

மாலை வேளைகளில் வெஸ்ட் மினிட்ஸர் பிரிட்ஜுக்குச் சென்றால் தெரேசாவைப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்குப் புகைப்படம் எடுக்க உதவுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது என மேடம் அங்கேயும் பிஸி. `பிரதமர் ஆன பிறகும் வருவாரா?' எனக் கேள்விக் கேட்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் இருந்த மாற்றுக்கருத்துகளைக் களைந்து, பிரதமராகப் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார் தெரேசா. கட்சியை ஒன்றாக இணைத்ததுபோல, இங்கிலாந்து மக்களையும் அவர் ஒன்றுசேர்க்க வேண்டியிருக்கிறது. `அடுத்த தேர்தலுக்குள் அதைச் செய்வாரா?' என்பதுதான் இப்போது அவர் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

http://www.vikatan.com/anandavikatan/2016-jul-27/interviews---exclusive-articles/121432-theresa-may-becomes-new-british-prime-minister.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகிரெட் தட்சர் சாதித்த அளவிற்கு இவரால் சாதிக்க முடியாது. ஏனெனில் இன்றைய உலகப்பிரச்சனைகள் வேறு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.