Jump to content

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்


Recommended Posts

ரியோ ஒலிம்பிக்:7 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா

Date: 2016-08-10@ 16:52:32

Daily_News_5957714319230.jpg

இந்திய ஹாக்கி அணி தனது 3வது லீக் போட்டியில் நேற்று அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் கங்குஜம், இந்திய அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன்பின் 35வது நிமிடத்தில் கோதஜித் மற்றொரு கோல் அடிக்க 2-0 என இந்தியா வலுவான முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு கோல் அடித்த இருவருமே மணிப்பூரை சேர்ந்தவர்கள். 49வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலமாக அர்ஜென்டினாவின் கோன்ஜலா முதல் கோலை அடித்தார்.

இதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசி 10 நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏராளமான கோல் அடிக்கும் முயற்சிகளை இந்தியா தடுத்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அர்ஜென்டினாவை வீழ்த்த (கடைசியாக 2009ல் அர்ஜென்டினாவை இந்தியா வீழ்த்தியிருந்தது) இதுவே உதவி செய்தது. இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக வெற்றியும், 2வது போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக தோல்வியையும் கண்டிருந்தது.

தற்போது 6 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா, கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நாளை மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237898

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

மதுவால் வந்த வினை பைனலுக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக் வீரரை வீட்டிற்கு அனுப்பியது நெதர்லாந்து அணி

 

Daily_News_6040416955948.jpg

நெதர்லாந்தை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் யூரி வான் ஜெல்டர், ரிங்ஸ் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். 33 வயதான இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறி, அங்கீகரிக்கப்படாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தினார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஒலிம்பிக் கிராமத்துக்கு திரும்பினார்.
இந்த தகவல் தெரியவந்ததும், அணி விதிகளை மீறியதாக கூறி, யூரி வான் ஜெல்டரை வீட்டிற்கு திரும்ப அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது நெதர்லாந்து அணி நிர்வாகம்.

கடுமையான விதிகளை பின்பற்றி வரும் நெதர்லாந்து அணியின் ஒலிம்பிக் தலைமை அதிகாரி ஹெண்ட்ரிக்ஸ் கூறுகையில், இது போன்ற செயல்களை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். கடந்த 2009ம் ஆண்டில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன் கொகைன் பயன்படுத்தியதாக நெதர்லாந்து ஜிம்னாஸ்டிக் யூனியனால், யூரி வான் ஜெல்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237896

Link to comment
Share on other sites

திட்டமிட்ட இலக்கை அடையத் தவறினார் மெத்யூ
2016-08-11 10:15:00

(பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

ரியோ டி ஜெனெய்­ரோவில் நடை­பெற்­று­வரும் 31ஆவது ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் எதை­யா­வது சாதிப்பார் என எதிர்­பார்க்­கப்­பட்ட இலங்­கையின் நீச்சல் நட்­சத்­திரம் மெத்யூ அபே­சிங்­க­வினால் 50ஆவது இடத்­தையே பெற­முடிந்­தது.

 

1851424.jpgஒலிம்பிக் நீச்சல் தடா­கத்தில் நேற்று முன்­தினம் (இலங்கை நேரப்­படி 9.35 மணி) நடை­பெற்ற 100 மீற்றர் சாதா­ரண நீச்சல் (ப்றீஸ்டைல்) போட்­டிக்­கான முதல் சுற்றின் இரண்­டா­வது தகு­திகாண் போட்­டியை 50.96 செக்­கன்­களில் நீந்திக் கடந்து மெத்யூ அபே­சிங்க நான்காம் இடத்தைப் பெற்றார்.

 

இவர் நான்­கா­வது சுவட்டில் பங்­கு­பற்­றி­ய­போ­திலும் எதிர்­பார்த்த நேரப் பெறு­தியை எட்டத் தவ­றினார்.

 

எனினும் எட்டு தகு­திகாண் போட்­டி­களில் மொத்­த­மாக பங்­கு­பற்­றிய 59 நீச்சல் வீரர்­க­ளுக்­கான ஒட்­டு­மொத்த நிலை யில் 20 வய­து­டைய மெத்யூ அபே­சிங்­க­வினால் 50ஆவது இடத்­தையே பெற­மு­டிந்­தது.

 

இப் போட்டி முடிவில் மெத்யூ அபே­சிங்­க­விடம் கருத்து கேட்­ட­போது, ''இரண்­டா­வது தகு­திகாண் போட்­டியில் மூன் றாம் இடத்தைப் பெற்ற போதிலும் ஒட்டு மொத்த நிலையில் 50ஆம் இடத்­தையே பெற்றேன்.

 

இது சற்று கவலையளிக்­கின்­றது. ஆனால் நான் ஏமாற்றமடை­ய­வில்லை. இது எனது முத­லா­வது ஒலிம்பிக் முயற்சி என்­பதால் பெறு­பே­றை­யிட்டு மகிழ்ச்சியடை­கின்றேன். எனது எதிர்­கால இலக்கு டொக்­கியோ 2020 ஒலிம்பிக் போட்­டி­யாகும். ஜப்பான் ஒலிம்பிக் போட்­டிக்கு இப்­போ­தி­ருந்தே என்னைத் தயார்­ப­டுத்­திக்­கொள்­ள­வுள்ளேன்'' என்றார்.

 

ஒலிம்பிக் போட்­டியில் பங்­கு­பற்­றும்­போது உங்­க­ளது இலக்கு என்­ன­வாக இருந்­தது எனக் கேட்­ட­போது, ''ரியோ ஒலிம்பிக் போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் சாதா­ரண நீச்­சலை 50 செக்­கன்­க­ளுக்குள் நீந்திக் கடக்க எண்­ணி­யி­ருந்தேன். ஆனால் அது கைகூ­ட­வில்லை.

 

ஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்­ப­தற்கு அமைய நான் கடும் பயிற்­சியில் ஈடு­பட்டு 2020 ஒலிம்பிக் போட்­டியில் எதை­யா­வது சாதிக்க முயற்­சிப்பேன். அதற்­காக இப்­போ­தி­ருந்தே என்னை தயார்­ப­டுத்­திக்­கொள்­ள ­வுள்ளேன்'' என மெத்யூ அபே­சிங்க மேலும் தெரி­வித்தார்.

 

ரியோ டி ஜெனய்ரோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்­பாக 9 வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

அவர்­களில் கிமிக்கோ ரஹீம் (நீச்சல்), மங்­கள சம­ரக்கோன் (குறி­பார்த்து சுடுதல்), சுதேஷ் பீரிஸ் (பளு­தூக்கல்), மெத்யூ அபே­சிங்க (நீச்சல்) ஆகி­யோ­ரது ஆற்றல் வெளிப்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. 

 

எனினும் பிர­தான சர்­வ­தேச போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­றிய ஜூடோக்கா சாமர நுவன் தர்ம வர்தன முதலாம் சுற்றில் வெற்றிபெற்று இலங்கையரில் அதி சிறந்த பெறுபேறை ரியோ ஒலிம்பிக்கில் பதிவு செய்தார். எனினும் இரண்டாம் சுற்றில் சாமர நுவன் தோல்வியைத் தழுவினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18514#sthash.cy71DkxI.dpuf
Link to comment
Share on other sites

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி

 

 
 
வெற்றியைக் கொண்டாடும் மனோஜ் குமார் | படம்: ஏ.எஃப்.பி.
வெற்றியைக் கொண்டாடும் மனோஜ் குமார் | படம்: ஏ.எஃப்.பி.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதியடைந்துள்ளார்.

ஆடவருக்கான 64 கிலோ எடைப் பிரிவு (லைட் வெயிட்) குத்துச் சண்டை போட்டியில் லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராஸ்கஸை வீழ்த்தி மனோஜ் குமார் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.

மூன்று சுற்றுகளிலும் மனோஜ் குமார் ஆதிக்கம் செலுத்தினார். 29-28, 29-28, 28-29 என்ற புள்ளிகளில் மனோஜ் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக 16-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் பஸ்லுதீன் காயிஸ்னசாரோவை எதிர்கொள்கிறார்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-குத்துச்சண்டை-காலிறுதிக்கு-முந்தையச்-சுற்றுக்கு-இந்திய-வீரர்-மனோஜ்-குமார்-தகுதி/article8972968.ece

Link to comment
Share on other sites

அணிக்கு எழுவர் ஒலிம்பிக் றக்பியில் நியூஸிலாந்தை பதம் பார்த்தது ஜப்பான்
2016-08-11 11:04:45

(பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

120 வருட ஒலிம்பிக் வர­லாற்றில் முதல் தட­வை­யாக இவ்­வ­ருடம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட அணிக்கு எழுவர் றக்­பிக்­கான குழு சி போட்டி ஒன்றில் நியூ­ஸி­லாந்தை ஜப்பான் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்­தது.

 

18517895197-01-02.jpg

 

டியோ­டோரோ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் அணிக்கு எழுவர் றக்பி போட்­டி­களின் முதலாம் நாளன்று நியூ­ஸி­லாந்தை எதிர்த்­தா­டிய ஆசிய சம்­பியன் ஜப்பான் 14 க்கு 12 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

 

எனினும், அன்­றைய தினம் நடை­பெற்ற தனது இரண்­டா­வது போட்­டியில் பெரிய பிரித்­தா­னி­யா­வு­ட­னான போட்­டியில் கடும் சவால் விடுத்து விளை­யா­டிய ஜப்பான் இறு­தியில் 19 க்கு 21 என்ற புள்­ளிகள் அடிப்
­ப­டையில் தோல்வி அடைந்­தது.

 

இதே­வேளை, நியூ­ஸி­லாந்து தனது இரண்­டா­வது போட்­டியில் கென்­யாவை 28 க்கு 5 என துவம்சம் செய்­தது. அணிக்கு எழுவர் றக்பியல் 12 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடுகின்றன.

 

 

18517medals.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18517#sthash.KoeErQcT.dpuf
Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் களமிறங்கும் நேரம் இதுதான்

 

உலகின் மின்னல் வேக வீரர் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பங்குபற்றும்  போட்டிகளைதான் உலகில் உள்ள அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

காரணம் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது பங்குபற்றிய மூன்று போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

அதேபோல் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற லண்டன் ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கத்தை வென்றார்.

இந்நிலையில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று ஹெட்ரிக் தங்கம் வென்ற சாதனையை நிலைநாட்டுவாரா? என்று எதிர்பார்ப்பு உலக மக்களினிடையே  ஓங்கியுள்ளது.

தற்போது அதற்கான காலம் நெருங்கியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் பங்குபற்றும் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அவர் பங்குபற்றும் போட்டிகளின் நேர அட்டவனை இதோ...

asawer2.jpg

http://www.virakesari.lk/article/10068

Link to comment
Share on other sites

பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை ; பின்தொடருகிறது சீனா

 

 

ரியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்கா 11 தங்கம், 11 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கம் அடங்கலாக 32 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் சீனா 10 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களுடன்  2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை ஜப்பான் 6 தங்கப்பதக்கங்களுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், 3 ஆவது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா 5 தங்கப்பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ள்ளப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/10082

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன்: இரட்டையர் பிரிவில் ஜப்பானிடம் இந்தியா தோல்வி

 

படம்: ஏ.பி.
படம்: ஏ.பி.

ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அஸ்வினி பொன்னப்பா-ஜுவாலா கட்டா ஜப்பானிய ஜோடியிடம் முதல் போட்டியில் தோல்வி தழுவினர்.

மிசாகி மட்சுடோமா-அயாகா டகாஹாஷி ஜோடி இந்திய ஜோடியை 21-15, 201-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இரண்டாவது செட்டில் 1-5 என்று பின் தங்கிய இந்திய ஜோடி பிறகு 6-3 என்று அசத்தியது. ஆனால் ஜப்பானிய வீராங்கனைகள் அதன் பிறகு அசாத்திய அதிரடியில் 10-6 என்று முன்னிலை பெற்றனர். அதன் பிறகு அஸ்வினி-ஜுவாலா ஜோடி ஒரு புள்ளியைப் பெறுவதற்குள் ஜப்பான் வீராங்கனைகள் 5 புள்ளிகள் பெற்று 15-7 என்று முன்னிலை பெற்றனர். கடைசியில் 20-10 என்று வென்றனர்.

முதல் செட்டில் பேக்-ஹேண்ட் ஸ்மேஷ் மற்றும் ஸ்லைஸ் ஆகிய ஷாட்களில் சிறந்து விளங்கிய அஸ்வினி-ஜுவாலா ஜோடி 12-15 என்று நெருங்கி வந்தனர். ஆனால் ஜப்பானிய வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் முதல் செட்டை 21-15 என்று இழந்தனர்.

இந்தத் தோல்வியை அடுத்து நெருக்கடியான நிலையில் நாளை ஹாலந்து அணியைச் சந்திக்கின்றனர். இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-மகளிர்-பாட்மிண்டன்-இரட்டையர்-பிரிவில்-ஜப்பானிடம்-இந்தியா-தோல்வி/article8974452.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெர்சியில் 'இந்தியா ' இல்லை:ஒலிம்பிக் சர்ச்சை!

லிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களது ஜெர்சியின் பின்பக்கத்தில் 'இந்தியா ' என  பெயர் பொறிக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

mans.jpg

 

ஒலிம்பிக் போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் 64 கிலோ எடைப் பிரிவில், லிதுவேனியா வீரர் எவால்டஸ் பெட்ராஸ்காசை வீழ்த்தினார். இந்நிலையில் மனோஜ்குமாரின் ஜெர்சியின் பின்பக்கத்தில் 'இந்தியா' என பொறிக்கப்படவில்லை. வழக்கமாக ஜெர்சியின் பின்பக்கத்தில், தாய்நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. இதையடுத்து சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம், இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'ஒலிம்பிக்கில் இன்று நடைபெறும் போட்டிகளில், இந்தியாவின் பெயர் பொறித்த  ஜெர்சி அணியவில்லையென்றால் தகுதி நீக்கம் செய்து விடுவோம்' என எச்சரித்துள்ளது. இதையடுத்து இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு ஜெர்சியின் பின்பக்கத்தில் ' இந்தியா' என பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/sports/67054-indian-boxers-run-into-trouble-with-organizers.art

Link to comment
Share on other sites

நம்ம எதைத்தான் உருப்படியா செஞ்சிருக்கோம்.. shame.png

Link to comment
Share on other sites

ஹாக்கி: கடைசி நிமிடத்தில் தொடர்ச்சியாக 5 பெனால்டி கார்னர்களையும் விரயம் செய்து இந்தியா தோல்வி

 

 
ஹாலந்து கேப்டன் ராபர்ட் ஹர்ஸ்ட் இந்திய வீரர்கள் சந்தனா திம்மையா, சிங்ளிசேனா சிங் ஆகியோருக்குப் போக்குக் காட்டி பந்தை எடுத்துச் செல்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஹாலந்து கேப்டன் ராபர்ட் ஹர்ஸ்ட் இந்திய வீரர்கள் சந்தனா திம்மையா, சிங்ளிசேனா சிங் ஆகியோருக்குப் போக்குக் காட்டி பந்தை எடுத்துச் செல்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஹாலந்து அணியிடம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. ஹாலந்து கோல் கீப்பர் ஜேப் ஸ்டாக்மேன் அற்புதமான தடுப்பு உத்தியை வெளிப்படுத்தினார்.

கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்குச் சார்பான 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன, ஒன்றைக்கூட ஹாலந்து தடுப்பாட்ட வீரர்களைத் தாண்டி கோலுக்குள் செலுத்த முடியவில்லை, ருபிந்தர் பால் சிங், ரகுநாத் ஆகியோரால் கடைசி 5 வாய்ப்புகளையும் கோலாக மாற்ற முடியவில்லை.

ஹாலந்து கோல் கீப்பர் அற்புதமாக இரண்டைத் தடுத்தார், ஒன்றை தடுப்பாட்ட வீரர் அபாரமாக தடுத்தார், ஆனால் சர்க்கிளுக்குள் இவையெல்லம் நடைபெற்றதால் மீண்டும் மீண்டும் 5 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன, கடைசி வாய்ப்பு ஏறக்குறைய சமன் கோல் கிடைத்திருக்கும் ஆனால் இம்முறையும் ஹாலந்து கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். இதுமட்டுமல்ல முன்னதாகவும் ஜேப் ஸ்டாக்மேன் இந்திய வாய்ப்பு ஓரிண்டை தடுத்தார். ஏதோ ரகுநாத் ஒரு முறை அற்புதமாக அவரைத் திசைத்திருப்பி அவருக்கு இடது புறமாக வேகமாக அடிக்க இந்தியா முதல் கோலை அடித்து சமன் செய்தது.

மீண்டும் அந்த 4-வது கால்மணி நேர ஆட்டம்தான் இந்தியாவுக்கு எமனாகியது. இதில்தான் ஹாலந்து வெற்றிக்கான 2வது கோலை அடித்தது.

ஒரு நேரத்தில் ரகுநாத், எஸ்.வி.சுனில் இருவருமே பவுல் செய்ய மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர், 3-வது கால் மணி நேர ஆட்டம் முடிய இருக்கும் தறுவாயில் இந்தியா 9 பேர்களுடன் ஆடியது. இதனையடுத்து 5 நிமிட நேர தண்டனை முடியவடைய வேண்டுமென்பதால் 4வது கால் மணி நேர ஆட்டத்தின் தொடக்கத்திலும் இந்திய அணி 9 பேர்களுடன் விளையாட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது.

4-வது கால் மணி ஆட்டம் தொடங்கி 2-வது நிமிடத்திலேயே ஹாலந்து பெனால்டி கார்னர் பெற்றது, இம்முறை வலது புறம் டைவ் அடித்து அருமையாகத் தடுக்க 1-1 நீடித்தது.

கோல் நோக்கி அடிக்கப்பட்ட 20 ஷாட்களில் 14-ஐ தடுத்துள்ளார் ஸ்ரீஜேஷ் இந்தத் தொடரில். இது உண்மையில் அசாதாரணத் திறமை வெளிப்பாடாகும். 8 நிமிடங்கள் இருக்கும் போது 11 வீரர்களுடன் இந்தியா ஆடியது. மீண்டும் ஹாலந்துக்கு பெனால்டி வாய்ப்பு இம்முறையும் ஸ்ரீஜேஷ் திறமையால் கோலாகவில்லை.

ஹாலந்து தொடர்ந்து கடும் நெருக்கடிகள் கொடுக்க கோல் பகுதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தவறிழைக்க நேரிட ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும் போது ஹாலந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஹாலந்தின் மின்க் வான் டெர் வீர்டன் என்ற வீரர் ஸ்ரீஜேஷுக்கு வலது புறம் அடித்து 2-வது கோலை அடித்தார்.

3 நிமிடங்கள் இருக்கும் போது ஸ்ரீஜேஷ் வெளியேறினார், ரகுநாத் ஸ்வீப்பர் கோல் கீப்பராகவும் பொறுப்பேற்றார், ஒரு பார்வர்ட் வீரரை இந்தியா களமிறக்கியது.இது மிகவும் அரிதான நிகழ்வே. இதன் பிறகே கடைசி நிமிடத்தில் 5 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு ஷாட்டை கூட கோலுக்குள் செலுத்த முடியவில்லை.

முன்னதாக முதல் அரைமணி நேர ஆட்டத்தில் இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடாமல் ஏனோதானோவென்று ஆட ஆஃப் டைமில் 0-0 என்றே இருந்தது.

3-வது கால் மணிநேர ஆட்டம் தொடங்கி 2-வது நிமிடத்தில் அதாவது 32-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டிராக் பிளிக் ஆட ஸ்ரீஜேஷ் அற்புதமாகத் தடுத்தார் ஆனால் ரீபவுண்ட் பந்தை எடுக்க இந்திய வீரர் இல்லை, மாறாக ஹாலந்து வீரர் ரீபவுண்டை எடுத்து கோலாக மாற்றினார், முதல் கோலை அடித்தவர் ரோஜியர் ஹாஃப்மென்.

அதன் பிறகே இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ருபீந்தர் பால் சிங் நேராக ஹாலந்து கோல் கீப்பர் காலில் அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது அந்த பெனால்டி வாய்ப்பில் ரகுநாத் அற்புதமாக கோலிக்கு இடது புறம் வேகமாக அடித்தார்.

இந்தியா தற்போது கனடாவை வென்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/ஹாக்கி-கடைசி-நிமிடத்தில்-தொடர்ச்சியாக-5-பெனால்டி-கார்னர்களையும்-விரயம்-செய்து-இந்தியா-தோல்வி/article8974954.ece?homepage=true

Link to comment
Share on other sites

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸின் தங்க வேட்டை தொடர்கிறது 
ஒலிம்பிக்கில் 22வது தங்கம் வென்று பெல்ப்ஸ் சாதனை 

 http://tamil.oneindia.com/
 

Link to comment
Share on other sites

கால்பந்தில் அர்ஜென்டினா வெளியேற்றம்
whatsapp.png fb.png tw.png gp.png

ஒலிம்பிக்கில் ஆடவர் கால்பந்து போட்டியில் அர் ஜென்டினா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹோன்டுராஸ் அணியுடன் மோதியது.

75-வது நிமிடத் தில் ஹோன்டுராஸ் முதல் கோலை அடித்து அதிர்ச்சி கொடுத் தது. இந்த கோலை அந்த அணியின் லோஷானோ அன் டோனி அடித்தார். அர்ஜென் டினா அணியால் இதற்கு கடைசி நிமிடத்தில் தான் பதிலடி கொடுக்க முடிந்தது.

மவுரிசியோ இந்த கோலை அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட் டத்தில் ஜெயித்தால் மட்டுமே காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் அர் ஜென்டினா வெளியேறியது

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது....ஆசியாவின்ரை பெரிய வல்லரசும் குட்டி வல்லரசும் ஒலிம்பிக்கிலை விளையாடவெண்டு வெளிக்கிட்டவையெல்லோ....இதுவரைக்கும் வெள்ளியோ பித்தளையோ எடுத்ததாய் தெரியேல்லை. உண்மையிலேயே பிரேசில்லைதான் விளையாடீனமோ இல்லாட்டி அட்ரஸ் மாறி வேறை எங்கையும் போய் விளையாடீனமோ? :unsure:

Link to comment
Share on other sites

17 நாட்களாக நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; 67-வது இடத்தை பிடித்தது இந்தியா

 

 
 
  • ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மரக்காணா மைதானத்தில் நேற்று நடைபெற்றது
    ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மரக்காணா மைதானத்தில் நேற்று நடைபெற்றது
  • ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைஞர்களின் நடனம்.
    ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைஞர்களின் நடனம்.

17 நாட்களாக நடைபெற்ற உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. அமெரிக்கா பதக் கப்பட்டியலில் 46 தங்கம் உட்பட 121 பதக்கங்களை குவித்து 17-வது முறையாக முதலிடம் பிடித்தது. இந்தியா இரு பதக்கங்களுடன் 67-வது இடத்தை கைப்பற்றியது.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம் பிக் போட்டி கடந்த 5-ம் தேதி கோலா கலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திரு விழாவான இந்த ஒலிம்பிக் போட்டி யில் 207 நாடுகளை சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

நிறைவு விழா

கடந்த 17 நாட்களாக நடைபெற்ற இந்த திருவிழா நேற்றுடன் நிறை வடைந்தது. இதனையொட்டி மரக் காணா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. பிரேசில் நாட்டுக் கலைஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். ஒவ் வொரு நாட்டு வீரர்களும் தங்களது நாட்டின் கொடிகளை ஏந்திச் சென்றார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கவுரவம் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்குக்கு அளிக்கப்பட்டது.

மகளிர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்தார் சாக்‌ஷி. அவரைக் கவுரவிக்கும் விதமாக அணி வகுப்பில் கொடியேந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஜப்பான் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நிறைவுவிழாவில் நடைபெற்றன.

2020-ல் டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கினார். அந்தக் கொடி யை அடுத்த ஒலிம்பிக் நடைபெற உள்ள டோக்கியோ நகரின் ஆளு நர் யூரிகோ கொய்கோவிடம், சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார். பிறகு, அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்து வைத்தார். ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைக்கப் பட்டது.

அமெரிக்கா முதலிடம்

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 39 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது. முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையை தொடங்கிய அமெரிக்கா 17-வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகள போட்டிகளில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியதால் முதலிடத்தை கைப்பற்ற முடிந்தது.

இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என 70 பதக்கங்களுடன் சீனா 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய பிரேசில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 13-வது இடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு 67-வது இடம்

இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-வது இடம் பிடித்தது. கடைசி நாளில் மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கலந்து கொண்டனர்.

அதிகமானோர் பங்கேற்றதால் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகை யில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வின் பதக்க எண்ணிக்கை இரட்டிப் பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நழுவிய பதக்கம்

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா, 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மகளிருக்கான ஜிம்ஸ்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார் திபா கர்மாகர்.

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக் கத்தை கோட்டைவிட்டது. தடகளத் தில் 36 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஒரே வீராங்கனை யான லலிதா பாபர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல தவறினார்.

ஏமாற்றிய நட்சத்திரங்கள்

இந்தியா சார்பில் இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட் மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஷ் வினி பொன்னப்பா, டென்னிஸ் நட் சத்திரங்கள் லியாண்டர் பயஸ், போபண்ணா, துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் ககன் நரங், ஜிது ராய், ஹீனா சித்து, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், குத்துசண்டை வீரர்கள் ஷிவா தாபா, விகாஷ் கிர்ஷன், கோல்ப் வீரர் அனிருபன் லஹிரி ஆகியோர் ஏமாற்றினர். ஆடவர் ஹாக்கியில் கால் இறுதியில் தோல்வியை சந்தித்தது.

பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘ட்விட்டரில்', ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எல்லா வீரர்களுமே சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்திய பிரேசிலுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

olympicc_2982941a.jpg

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதனால் ஒலிம்பிக் கொடியை டோக்கியோ நகரின் ஆளுநர் யூரிகோ கொய்கோவிடம் தாமஸ் பாச் ஒப்படைத்தார். படம்:ஏஎப்பி

 

http://tamil.thehindu.com/sports/17-நாட்களாக-நடைபெற்ற-ரியோ-ஒலிம்பிக்-திருவிழா-நிறைவு-பதக்கப்-பட்டியலில்-அமெரிக்கா-முதலிடம்-67வது-இடத்தை-பிடித்தது-இந்தியா/article9020232.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நவீனன் said:

17 நாட்களாக நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; 67-வது இடத்தை பிடித்தது இந்தியா

 

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மரக்காணா மைதானத்தில் நேற்று நடைபெற்றது

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைஞர்களின் நடனம்.

17 நாட்களாக நடைபெற்ற உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. அமெரிக்கா பதக் கப்பட்டியலில் 46 தங்கம் உட்பட 121 பதக்கங்களை குவித்து 17-வது முறையாக முதலிடம் பிடித்தது. இந்தியா இரு பதக்கங்களுடன் 67-வது இடத்தை கைப்பற்றியது.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம் பிக் போட்டி கடந்த 5-ம் தேதி கோலா கலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திரு விழாவான இந்த ஒலிம்பிக் போட்டி யில் 207 நாடுகளை சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

நிறைவு விழா

கடந்த 17 நாட்களாக நடைபெற்ற இந்த திருவிழா நேற்றுடன் நிறை வடைந்தது. இதனையொட்டி மரக் காணா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. பிரேசில் நாட்டுக் கலைஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். ஒவ் வொரு நாட்டு வீரர்களும் தங்களது நாட்டின் கொடிகளை ஏந்திச் சென்றார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கவுரவம் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்குக்கு அளிக்கப்பட்டது.

மகளிர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்தார் சாக்‌ஷி. அவரைக் கவுரவிக்கும் விதமாக அணி வகுப்பில் கொடியேந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஜப்பான் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நிறைவுவிழாவில் நடைபெற்றன.

2020-ல் டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கினார். அந்தக் கொடி யை அடுத்த ஒலிம்பிக் நடைபெற உள்ள டோக்கியோ நகரின் ஆளு நர் யூரிகோ கொய்கோவிடம், சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார். பிறகு, அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்து வைத்தார். ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைக்கப் பட்டது.

அமெரிக்கா முதலிடம்

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 39 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது. முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையை தொடங்கிய அமெரிக்கா 17-வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகள போட்டிகளில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியதால் முதலிடத்தை கைப்பற்ற முடிந்தது.

இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என 70 பதக்கங்களுடன் சீனா 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய பிரேசில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 13-வது இடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு 67-வது இடம்

இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-வது இடம் பிடித்தது. கடைசி நாளில் மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கலந்து கொண்டனர்.

அதிகமானோர் பங்கேற்றதால் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகை யில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வின் பதக்க எண்ணிக்கை இரட்டிப் பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நழுவிய பதக்கம்

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா, 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மகளிருக்கான ஜிம்ஸ்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார் திபா கர்மாகர்.

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக் கத்தை கோட்டைவிட்டது. தடகளத் தில் 36 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஒரே வீராங்கனை யான லலிதா பாபர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல தவறினார்.

ஏமாற்றிய நட்சத்திரங்கள்

இந்தியா சார்பில் இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட் மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஷ் வினி பொன்னப்பா, டென்னிஸ் நட் சத்திரங்கள் லியாண்டர் பயஸ், போபண்ணா, துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் ககன் நரங், ஜிது ராய், ஹீனா சித்து, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், குத்துசண்டை வீரர்கள் ஷிவா தாபா, விகாஷ் கிர்ஷன், கோல்ப் வீரர் அனிருபன் லஹிரி ஆகியோர் ஏமாற்றினர். ஆடவர் ஹாக்கியில் கால் இறுதியில் தோல்வியை சந்தித்தது.

பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘ட்விட்டரில்', ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எல்லா வீரர்களுமே சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்திய பிரேசிலுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/17-நாட்களாக-நடைபெற்ற-ரியோ-ஒலிம்பிக்-திருவிழா-நிறைவு-பதக்கப்-பட்டியலில்-அமெரிக்கா-முதலிடம்-67வது-இடத்தை-பிடித்தது-இந்தியா/article9020232.ece

இவர்கள் உலக சனத்தொகையில் தாங்கள் இரண்டாவது இடம் என்று சொல்லிக்கொள்ளத்தான் லாயக்கு......
மற்றும் படி.....நலிந்தவனை நசுக்கி மார்தட்டுவதில் விண்ணர்கள்.

Link to comment
Share on other sites

மொங்கோலிய பயிற்றுநர்கள் ஆடை களைந்து ஆர்ப்பாட்டம்
2016-08-23 14:49:55

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியொன்றில் நடுவர்கள் அளித்த தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக வீரர் ஒருவரின் பயிற்றுநர்கள் தமது மேலாடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 

187512016-08-21T173118Z_76415864_RIOEC8L

 

மொங்கோலிய வீரர்களின் பயிற்றுநர்கள் இருவரே இவ்வாறு விநோத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளான ஞாயிறன்று நடைபெற்ற, 65 கிலோகிராம் எடைக்குட்பட்டவர்களுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியொன்றில் உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் நவ்ருஸோவும் மற்றும் மொங்கோலிய வீரர் மன்தக்னரன் கன்ஸோரிக்கும் மோதினர்.

 

187512016-08-21T192642Z_966736889_RIOEC8

 

இப் போட்டியின் இறுதிக் கட்டத்தில், மொங்கோலியாவின் மன்தக்னரன் கன்ஸோரிக் முன்னிலையில் இருந்தார். அவர் உற்சாக நடனத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், நடுவர்கள் 7 – 7 என  புள்ளிகளை மறு சீரமைத்தனர்.

 

அதன்பின் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு மற்றொரு புள்ளி அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிராக மொங்கோலிய வீரர் தெரிவித்த ஆட்சேபம் நிராகரிக் கப்பட்டது.

 

187512016-08-22T131042Z_1599751_S1BETWXG

 

இப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நவ்ருஸோவ் வெற்றி பெற்றார்.
இதனால், மொங்கோலிய வீரரின் பயிற்றுநர்கள் இருவரும் அரங்கிலேயே தமது மேலாடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

187512016-08-21T192727Z_1056615668_RIOEC

 

'இது ஓர் எதிர்ப்பு நடவடிக்கை, நடுவர்களின் செயற்பாட்டில் பிரச்சினைகள் உள்ளன' என மேற்படி பயிற்றுநர்களில் ஒருவரான பியாம்பரென்சின் பயாரா தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=18751#sthash.xIo62num.dpuf
Link to comment
Share on other sites

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா காணொளி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றன. மைதானத்தில் நடைபெற்ற வாண வேடிக்கைகள் காணொளி இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.