Jump to content

போக்கிமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13770378_1116903035046966_20637477283577

 

வசந்தகாலம் .........
பச்சையம் விரிந்த புல்வெளியும்
பல வா்ண அழகு மலா்களும்
வீதியின் இருமருங்கும் வியாபித்திருக்க
பள்ளி விடுமுறையில் மழலைகள்
துள்ளி விளையாடும்
பூங்காவை நோக்கி நான்
என் பேரனுடன் நடைபயில
இரண்டாவது படிக்கும்
அவனது கையிலும் ஜ போன்
வீதியில் ஓடிஓடி மூலைக்கு மூலை
எதையோ தேடி அலைந்தான்
அன்று தும்பி பொன்வண்டுதேடி
மாட்டு வால் தடத்துடன்
ஓடி விளையாடிய என்
அண்ணன் தம்பிகளின்
இளமைப் பருவம் நினைவில் ஊசலாட
இவனென்ன தேடுகிறான் என்று
எண்ணித் திகைத்து
வீதியில் கவனமாக நடத்கும்படி
எச்சாித்தபடி நான்
அவன் சொன்னான்
போக்கிமான் பிடிக்கிறானாம்
காலமும் தேசமும் மாறினாலும்
தேடல் ஒன்றுதான் என்று என்
நினைவில் நிழலாட
அவனைத்தவிர மூலைக்கு மூலை
ஓடித் தேடும் சிறுவா்களுடன் விடலைகளும்
வீதியில் வாகனமோ மனிதா்களோ
வருவது கூட கவனத்தில் இல்லை
இவா்களை வீதியில் அலையவைத்த
விஞ்ஞானத்தை மனதுக்குள் வைதபடி
என் பேரனின் தேடலுடன் என்
நடையும் தொடா்ந்தது.
 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது போண் கவிதை 

விஞ்ஞானத்தின் விளைச்சலில் இதுவும் ஒன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை போய் முடியப் போகுதோ. :rolleyes: பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய??
காலத்தின் கோலமிது.....
கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி...!

மாரீசன் என்ற ஒரு மாய மானால் 'சீதை' சுயமிழந்தாள்!

இந்தப் போக்கிமான் என்கிற மாய மானால் உலகமே சுயமிழக்கும் போல உள்ளது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

கண்மணி அக்கா இந்தக் கவிதையை இணைத்த.... ஜூலை 21´ம் திகதி, வீட்டில் விருந்தினர்கள் வந்து நின்ற படியால்.... களத்திற்கு அதிகம் வரமுடியாததால்... இப் பதிவு கண்ணில் படமால் போய் விட்டது. இப்போ.... முனிவர் அதனை மீண்டும் மேலே கொண்டு வந்து விட்டதால், எமது கண்ணில் பட்டது மகிழ்ச்சியே..... :)

போக்கிமானை வைத்து......  எழுதிய நவீன கவிதை அருமை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

நான் தினசரி அவதானித்தபடியே இருந்தேன் tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/08/2016 at 8:53 AM, தமிழ் சிறி said:

கண்மணி அக்கா இந்தக் கவிதையை இணைத்த.... ஜூலை 21´ம் திகதி, வீட்டில் விருந்தினர்கள் வந்து நின்ற படியால்.... களத்திற்கு அதிகம் வரமுடியாததால்... இப் பதிவு கண்ணில் படமால் போய் விட்டது. இப்போ.... முனிவர் அதனை மீண்டும் மேலே கொண்டு வந்து விட்டதால், எமது கண்ணில் பட்டது மகிழ்ச்சியே..... :)

போக்கிமானை வைத்து......  எழுதிய நவீன கவிதை அருமை.:)

நான் சும்மா பகிடிக்கு எழுதியது அண்ணா 

 

18 hours ago, குமாரசாமி said:

நான் தினசரி அவதானித்தபடியே இருந்தேன் tw_glasses:

ம்கும் ஹா ஹா நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அவனைச் சொல்லுறேள். நானே வீட்டில இருக்க ஒரு பொம்பிளை போக்கிமோன் அதுவா தேடித் தேடி வந்து தொல்லை பண்ணுதுன்னு.. கவலைல இருக்கன். இருந்தாலும் விட்டனா... எறிஞ்சன்.. பிடிச்சுட்டன். 

எனக்குத் தெரியும் படம் போட்டால் தான் நம்புவியள் என்டு. 

13932727_10153765480797944_9580315441851

13669778_10153765480887944_3756637466094

On 8/1/2016 at 3:55 AM, முனிவர் ஜீ said:

நம்ம பின்னூட்டம் இட்டா பிறகுதான் வாராங்கள்  இது என்ன டிசைனோ ஹாஹாஹா:unsure:tw_blush:

நாங்க பின்னூட்டம் விட நேரமில்லாம விளையாடுறம். இவர் என்னடான்னா.. :rolleyes:tw_blush:

===============

நிகழ்கால ஓட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை அழகு.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ உங்கள் பிள்ளை விளையாடும் வயதில் நீங்கள் விளையாட்டு காட்டுகிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிமானும்  பேரனும் போக்குக்காட்ட  காவல்காத்துக் கொண்டு கண்மணி செல்கின்றார் ....!  tw_blush:

அருமையான கவிதை சகோதரி  ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

போக்கிமானும்  பேரனும் போக்குக்காட்ட  காவல்காத்துக் கொண்டு கண்மணி செல்கின்றார் ....!  tw_blush:

அருமையான கவிதை சகோதரி  ....!

இந்தா இவரும் இப்ப தான் வந்திருக்கிறார்     டூ லேட்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

இந்தா இவரும் இப்ப தான் வந்திருக்கிறார்     டூ லேட்tw_blush:

இப்பதான் இந்தக் கவிதை கண்ணில் பட்டது  மகரிஷி ....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இப்பதான் இந்தக் கவிதை கண்ணில் பட்டது  மகரிஷி ....!  tw_blush:

 

நல்லது அண்ணா கண்மணீ அக்கான்ட திரியை கொஞ்சம் சிரிப்பு எண்ணெய் ஊற்றி சீராக்கவே எனது பதிவுtw_blush: 

அக்கேய்  தம்பியை மன்னித்து அருளும் குரு பெயர்ச்சி தம்பிக்கு நல்லதாம் அக்கா ஏசாமாட்டாtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பட்டாம்பூச்சிகளை பிடிக்க

முள்ளுக்குத்தும் என்று தாய் தகப்பன் எம்பின்னால் ஓடிவந்தார்கள்

இப்ப 

தொழில்நுட்ப உலகம்

அவன் விளையாடுகின்றான்

ஒரே கல்லில் பல மாங்காய்

உங்களுக்கும் நடப்பதால் பல நன்மைகள்

ஆச்சியை நடக்கவைத்த பேரனுக்கு  பராட்டுக்கள்.

கவிதைக்கு நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நாங்க பட்டாம்பூச்சிகளை பிடிக்க

முள்ளுக்குத்தும் என்று தாய் தகப்பன் எம்பின்னால் ஓடிவந்தார்கள்

இப்ப 

தொழில்நுட்ப உலகம்

அவன் விளையாடுகின்றான்

ஒரே கல்லில் பல மாங்காய்

உங்களுக்கும் நடப்பதால் பல நன்மைகள்

ஆச்சியை நடக்கவைத்த பேரனுக்கு  பராட்டுக்கள்.

கவிதைக்கு நன்றி அக்கா

இவரும் லேட் தான் அக்காtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இவரும் லேட் தான் அக்காtw_blush:

தமிழேண்டா

(இவங்க கிட்ட எப்படி  தப்புவது?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

ஓகோ உங்கள் பிள்ளை விளையாடும் வயதில் நீங்கள் விளையாட்டு காட்டுகிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்tw_blush:

பாஸ் நாங்க ரிவி கேம் காலத்தில இருந்து உப்படி விளையாட்டுக்களை விளையாடிக்கிட்டு வாறம். ஊரில பட்டரி இல்லாத காலத்திலும்.. உள்ள பென்ரோச் (3ஏ) பட்டரியை வெயில்ல காய வைச்சு அதுக்கு சேர்க்கிட் போட்டு விளையாடின ஆக்கள்.

போக்கிமோன் கோ.. பலருக்கு இப்ப தான் தெரியுது. ஆனால் நாங்க கேம்பாய் காலத்திலேயே போக்கிமோன் விளையாட தொடக்கிட்டம். அப்புறம்.. டி எஸ்.. பி எஸ் பி.. பி எஸ்.. கம்பியூட்டர் கேம்.... எக்ஸ் பாக்ஸ்.. இப்ப சிமாட் போன்.. என்று வந்திருக்குது. நாங்களும் தொடர்ந்து கிட்டிருக்கிறம்.

நாங்க எல்லாம்.. ரி வி கேம் காலத்தில் வளர்ந்த கூட்டம் என்பதால்.. இதொன்னும் புதிசில்லை. 

முதல் முதல் விளையாடிய கேமில்... பசு மாடு இடிக்காமல்.. கன்றுக்குட்டியை பிடிக்கனும்.. இன்னும் ஞாபகத்தில் இருக்குது. அப்ப எல்லாம்.. LCD இல் குறைவான கிரபிக்ஸில் காட்டூன் வடிவில் விளையாடினது.. இப்ப கூடின கிராபிக்ஸில் LED.. retina.. என்று பார்த்து விளையாடுறம்.

அவ்வளவும் தான் எங்களைப் பொறுத்த வரை வேறுபாடு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

பாஸ் நாங்க ரிவி கேம் காலத்தில இருந்து உப்படி விளையாட்டுக்களை விளையாடிக்கிட்டு வாறம். ஊரில பட்டரி இல்லாத காலத்திலும்.. உள்ள பென்ரோச் (3ஏ) பட்டரியை வெயில்ல காய வைச்சு அதுக்கு சேர்க்கிட் போட்டு விளையாடின ஆக்கள்.

போக்கிமோன் கோ.. பலருக்கு இப்ப தான் தெரியுது. ஆனால் நாங்க கேம்பாய் காலத்திலேயே போக்கிமோன் விளையாட தொடக்கிட்டம். அப்புறம்.. டி எஸ்.. பி எஸ் பி.. பி எஸ்.. கம்பியூட்டர் கேம்.... எக்ஸ் பாக்ஸ்.. இப்ப சிமாட் போன்.. என்று வந்திருக்குது. நாங்களும் தொடர்ந்து கிட்டிருக்கிறம்.

நாங்க எல்லாம்.. ரி வி கேம் காலத்தில் வளர்ந்த கூட்டம் என்பதால்.. இதொன்னும் புதிசில்லை. 

முதல் முதல் விளையாடிய கேமில்... பசு மாடு இடிக்காமல்.. கன்றுக்குட்டியை பிடிக்கனும்.. இன்னும் ஞாபகத்தில் இருக்குது. அப்ப எல்லாம்.. LCD இல் குறைவான கிரபிக்ஸில் காட்டூன் வடிவில் விளையாடினது.. இப்ப கூடின கிராபிக்ஸில் LED.. retina.. என்று பார்த்து விளையாடுறம்.

அவ்வளவும் தான் எங்களைப் பொறுத்த வரை வேறுபாடு. tw_blush:

இப்படியே விலாடித்திரிங்க ச்ச‌tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. "போகிப் பண்டிகையன்று மான் பிடிக்கும் வேலை ஏன்..?" என குழம்பியபடி வந்தால், இது வேறேதோ ஒன்னு..! grognon-2009.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் என் நன்றிகள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2.8.2016 at 7:47 AM, nedukkalapoovan said:

நீங்க அவனைச் சொல்லுறேள். நானே வீட்டில இருக்க ஒரு பொம்பிளை போக்கிமோன் அதுவா தேடித் தேடி வந்து தொல்லை பண்ணுதுன்னு.. கவலைல இருக்கன். இருந்தாலும் விட்டனா... எறிஞ்சன்.. பிடிச்சுட்டன். 

எனக்குத் தெரியும் படம் போட்டால் தான் நம்புவியள் என்டு. 

நாங்க பின்னூட்டம் விட நேரமில்லாம விளையாடுறம். இவர் என்னடான்னா.. :rolleyes:tw_blush:

===============

நிகழ்கால ஓட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை அழகு.tw_blush:

நெடுக்ஸ்.... நிஜப் பெண்களை விட, மிச்ச எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துகின்றார் போலுள்ளது.:grin:
அப்படிப் பட்டவரை.... மோகன் அண்ணாவின் பிரித்தானிய யாழ். கள உறவுகள் சந்திப்பில்,
பலரும் அவரை நேரில் காண ஆசைப் பட்டதில் வியப்பில்லை, என்றே நினைக்கின்றேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... நிஜப் பெண்களை விட, மிச்ச எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துகின்றார் போலுள்ளது.:grin:
அப்படிப் பட்டவரை.... மோகன் அண்ணாவின் பிரித்தானிய யாழ். கள உறவுகள் சந்திப்பில்,
பலரும் அவரை நேரில் காண ஆசைப் பட்டதில் வியப்பில்லை, என்றே நினைக்கின்றேன்.:)

வெந்த புண்ணில் ஏன் வேலைப் பாய்ச்சுகுறீர்கள் சிறியண்ண ஹாஹா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

வெந்த புண்ணில் ஏன் வேலைப் பாய்ச்சுகுறீர்கள் சிறியண்ண ஹாஹா

வாழ்க்கை சிமூத்தா போய்க்கிட்டிருக்குது. இதில வெந்த புண் எங்க இருந்து வந்திச்சு. சம்சாரிகள் தான் பாவம் வெந்து போய்க் கிடக்குதுங்க. tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.