Jump to content

அரசியல் கிசுகிசு செய்திகள்


Recommended Posts

அரசியல் கிசுகிசு செய்திகள்

வரிசையில் நின்ற முன்னாள் தலைவர்
 
 

article_1468993832-hitapu600.jpg

இந்த நாட்டின் முன்னாள் தலைவர், அண்மையில் நிப்போன் நாடொன்றுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவருக்கு, அங்கிருந்த இலங்கையர்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரியொருவருக்கு, கோபம் வந்ததாம்.

இதனால், ஜப்பானிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தாராம். முன்னாள் தலைவர், தற்போது சாதாரண எம்.பி.யொருவர் மாத்திரமே. அவருக்கு வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவையில்லை என்று கூறினாராம். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில், முன்னாள் தலைவரின் காதுக்கு எட்டியுள்ளது.

'ஹா அது என்ன பெரிய விசயமா?' என்று சொல்லிக்கொண்ட முன்னாள் தலைவர், தான் சென்ற வேலைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக, நிப்போன் விமான நிலையத்துக்குச் சென்றாராம். அங்கு அவர், தன்னுடன் கூடவே வந்த எம்.பி.க்களையும் அழைத்துக்கொண்டு, சாதாரண மக்கள் செல்லும் வரிசையில் சென்றாராம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஜப்பான் அதிகாரிகள், 'நீங்கள் ஏன் இங்கு நின்றுகொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டு, அவருக்கு உயர் மரியாதை வழங்கி, அழைத்துக்கொண்டுச் சென்றார்களாம்.

- See more at: http://www.tamilmirror.lk/177509#sthash.G1SVSumx.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
சத்தம் அடங்கிப்போச்சு
 

article_1468994026-Unnahe600.jpg

கூட்டு எதிரணியிலுள்ள மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவரும் வழக்குகளில் சிக்குண்டவருமாக ஒருவர், விமோசனம் தேடி அழைந்துகொண்டிருந்த போது, அமைச்சரவையிலுள்ள விளையாட்டு விடயதானங்களுக்கும் பொறுப்பான அமைச்சர் ஒருவர், 'நாட்டின் தலைவரைச் சந்திக்கலாம் வாருங்கள்' என்று அழைத்தாராம்.

இவ்வாறு அழைப்பு விடுத்தவர், கடந்த தேர்தலின் போது தோல்வியுற்று, பின்னர் தேசியப் பட்டியல் மூலம் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டவர் என்று கூறப்படுகிறது. நாட்டின் தலைவரோடு மிக நெருங்கிப் பழக வேண்டும் என்பதற்காகத்தான், அவர் மேற்கண்ட நபருக்கு அழைப்பொன்றையும் விடுத்திருந்தாராம்.

விமோசனத்தை தேடிக்கொண்டிருந்தவர்,  ஆரம்பித்திலேயே அந்த அழைப்புக்கு இணக்கம் தெரிவித்திருந்தாராம். அதன் பின்னர், இந்த சந்திப்பை ஏற்படுத்தவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் அந்த அமைச்சர் முன்னெடுத்துக்கொண்டிருந்தாராம்.

இவ்வாறிருக்க, விமோசனம் தேடியவரின் ஊரைச் சேர்ந்தவர்கள், 'நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று அவரைப் பார்த்து கேட்கத் தொடங்கினார்களாம். இந்த வேலைகளுக்கு போய்விட்டு, இங்கேயே மீண்டும் வராவிட்டால் சந்தோசம் என்றும் கூறினார்களாம். இதனால், என்ன செய்வதென்று அறியாமல், அவர் முழித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/177511/சத-தம-அடங-க-ப-ப-ச-ச-#sthash.zDdJKpDn.dpuf
Link to comment
Share on other sites


சேவல் சண்டை
 
 

article_1468993960-Kukula600.jpg

தோட்டப்புற காங்கிரஸ் கட்சியின் தலைவர், சேவலையும் எடுத்துக்கொண்டு அரசாங்கத்தின் கிளையொன்றில் தொற்றிக்கொள்வதற்கு எதிராக பெரிய சண்டையொன்றே நடந்துகொண்டிருக்கிறது. அவருக்கு எதிராக தோட்டப்புற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியில் உட்கார்ந்துள்ளனர்.

காங்கிரஸ்காரர்கள், அரசாங்கத்துடன் இணைவதற்கு இவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவர்களில், அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர், அண்மையில் இந்h நாட்டின் தலைவரை சந்தித்து, இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.

'தேர்தல் காலங்களில், உங்களுக்காக நாங்கள் மட்டுமே இருந்தோம். அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்களை, இன்று ஏன் நீங்கள் எடுக்கிறீர்கள்?' என்று தலைவரிடம் கேட்டாராம். அழும் குரலில் அவர் அவ்வாறு கேட்ட போதிலும், இந்த விடயம் தொடர்பில், தலைவர் பெரியாக பொருட்படுத்தவில்லையாம். இதனை அவதானித்த அந்த அமைச்சர், 'அவர்கள் வந்தால், நாங்கள் போய்விடுவோம்' என்று கூறினாராம்.

அதையும், நாட்டின் தலைவர் பொருட்படுத்தவில்லையாம். மிகவும் ஆறுதலாக, 'சரி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்று தலைவர் கூறினாராம். இதைப்பற்றி கேள்வியுற்ற, அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் புத்திசாலியொருவர், கோட்டையிலுள்ள பெரிய நிறுவனத்தில், இப்பிரச்சினை தொடர்பான புதுமையான விதத்தில் பதில் சொன்னாராம். 'இப்போ போகப்போறதாகச் சொல்கிற ஆறு பேரும், எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அறுவரும் யானைக் கட்சிக்காரர்கள். அந்த பொயின்டை மறிந்துவிட வேண்டாம்' என்று சொன்னாராம்.

- See more at: http://www.tamilmirror.lk/177510/ச-வல-சண-ட-#sthash.K8VyBCnh.dpuf
Link to comment
Share on other sites


முடிந்தால் அனுப்புங்கள்
 
 

article_1468993883-Puluwan600.jpg

அரசாங்கத்துக்குச் சொந்தமாக, நன்றாக இலாபமீட்டக்கூடிய நிறுவமொன்றின் தலைவரை வீட்டுக்குச் செல்லுமாறு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது, குறித்த விடயத்துக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சரால் நியமிக்கப்பட்டவரே, மேற்படி நிறுவனத்தின் தலைவராவார்.

இந்த தலைவரும் சாதாரணமானவர் இல்லை. அவர், அரசியல் கட்சியொன்றின் தலைவராவார். அவருடைய கட்சியில் தான், தற்போதுள்ள நாட்டின் தலைவர், அன்னம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அதனால், கேகாலை அமைச்சரின் காஸ் பார்ப்பதற்கு, அவர் தயாராக இல்லையாம். அவர் எந்தளவுக்கு காஸ் காட்டினாலும், தன்னுடைய அதிகாரத்தில், அந்தப் பதவியிலேயே தான் நிலைத்திருக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு மேலும் தன்னை தொந்தரவுக்கு உட்படுத்தினால், தன்னிடம் சட்டரீதியான துருப்புச் சீட்டொன்று உள்ளதென அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளாராம்.

- See more at: http://www.tamilmirror.lk/177504#sthash.uFPbdjmn.dpuf
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
இரகசிய சந்திப்பு
 
01-08-2016 11:53 AM
Comments - 0       Views - 30

article_1470032680-Thero.jpg

இந்த நாட்டோட தலைவரு, யாருக்குமே சொல்லாமல், கொழும்பு 7இல் இருக்கிற பிரபல விகாரையொன்றுக்குப் போய், அங்கிருக்கிற விகாராதிபதியை சந்திச்சாராம்.

சில தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில தலையிட்டு வர்ற இந்த விகாராதிபதி, இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கும் தொடர்ந்து தேசிக்காய் வெட்டிக்கிட்டு தான் வந்தாரு.

எப்போதுமே, நாடு, இனம், மதம் பற்றியே பேசுற இந்த விகாராதிபதி கிட்ட, நாட்டில் நடந்த விசயங்கள், நடந்துகிட்டிருக்கிற சம்பவங்கள் பற்றியெல்லாம், நாட்டுத் தலைவர் விவரமாகப் பேசினாராம்.

அப்போ, நாட்டின் முக்கிய விசயங்களைப் பற்றி, முக்கியமாக இராணுவம், அரசியலமைப்பு என்பவற்றைப் பற்றி, அந்த விகாராதிபதி பல கேள்விகளை எழுப்பினாராம்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நீடிச்ச அந்த பேச்சுவார்த்தையோட முடிவின்போது, நாட்டுத் தலைவருக்கு அவர் ஓர் ஆலோசனையை வழங்கினாராம்.

'விவசாயத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிற நீங்க, இந்த நாட்டுக்கு கெட்டது நடக்க இடமளிக்காதீங்க. அப்படி இடமளிச்சா, நாங்களும் உங்களை எதிர்க்கவேண்டி வரும்' என்று அந்த விகாராதிபதி சொன்னதும், 'அப்படியொன்றும் நடக்க நான் இடமளிக்க மாட்டேன் தேரரே' என்று நாட்டுத் தலைவரும் பதிலளிச்சிவிட்டு வெளியேறினாராம்.

- See more at: http://www.tamilmirror.lk/178392/இரகச-ய-சந-த-ப-ப-#sthash.WPtCo3Vu.dpuf
Link to comment
Share on other sites

அப்படி என்னாதான் பேச்சோ...?
 
01-08-2016 12:07 PM
Comments - 0       Views - 58

article_1470033877-Keheliya.jpg

நல்லாட்சி அரசாங்கத்துக்கு தினமும் ஏச்சு கொடுத்துக்கிட்டு இருக்கிற, கடந்த அரசாங்கத்தோட ஆட்சிக் காலத்தில, ஊடகங்களோட தலைவர் என்ற நினைப்பில் ஒருத்தர் இருந்தாரு. மத்திய மாகாணத்தில போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான இவரு இப்போ, ஒன்றிணைஞ்ச எதிரணியில தான் இருக்காரு.

கொஞ்ச காலமாக, யானைக் கட்சியில இருந்த இவரு, பிறகு வெற்றிலைக் கட்சியோட சேர்ந்துக்கிட்டாரு. அரசாங்கத்தில பதவியொன்று கிடைக்காததாக தத்தளிச்சிக்கிட்டு இருக்கிற இவரு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாசம் 8ஆம் திகதி, அவர் இருந்த அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, திரும்பவும் யானைக் கூட்டத்தில சேர்ந்துக்க ரொம்ப ட்ரை பண்ணாராம். இருந்தாலும், அவரோட விண்ணப்பத்தை, யானைக் கட்சி ஏற்றுக்கொள்ள இல்லையாம்.

அதனால, எதிரணியோட சேர்ந்துக்கிட்டு, இந்த அரசாங்கத்துக்கு தலையிடியைக் கொடுத்துக்கிட்டு இருக்கிற இவரு, அண்மையில, மத்திய மாகாண அமைச்சர் ஒருத்தரோட அம்மா இறந்ததும், துக்கம் விசாரிக்கிறதுக்காக, அந்த அமைச்சர் வீட்டுக்குப் போனாராம். அப்போ அங்கிருந்த, அரசாங்கத்தோட தலைவர்கள் சிலர் கூட இவரு, பல மணித்தியாலங்களாக ரகசியம் பேசிக்கிட்டு இருந்தாராம். இந்த தகவல், கொழும்பு வரைக்கும் போயிருக்காம்.

கடந்த அரசாங்கத்தப்போ செஞ்சதாகக் கூறப்படுற பல தேவையில்லாத வேலைகளால, வழக்குகளிலயும் சிக்கிக்கிட்டு இருக்கிற அவரு, மீசையில மண் ஒட்டின பிறகு, அதைத் துடைச்சிக்கொள்ள வழி தேடிக்கிட்டு இருக்கிறதாக, துக்க வீட்டில இருந்த பலரும் பேசிக்கிட்டாங்களாம்.

- See more at: http://www.tamilmirror.lk/178396/அப-பட-என-ன-த-ன-ப-ச-ச-#sthash.UxeQ6z4A.dpuf
Link to comment
Share on other sites

  • 3 months later...
ஓடர் பிளீஸ்!
 
 

article_1479472714-parliament.jpgவணக்கமுங்க, என்னடா புது ஆளுனு பார்க்கின்றீர்களா.. நான் புது ஆளு இல்லைங்க உங்க மணியாட்டி.. அடபோங்க, சங்கதி...சங்கதியாய் எழுதி, அதையெயெல்லாம் வெட்டி, ஒட்டி அனுப்பினேனில்ல. அதுக்கு 2015ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில.., விழாவில், பத்திஎழுத்தாளர்களின் வரிசையில் ஒரு அவாட், (சான்றிதழ்) கிடைச்சது. அந்த மெரசலில இருக்குறப்போ... நீங்கள் எல்லாம் டீரீட் கேட்டுவிடுவிங்களோனு நினைச்சிக்கிட்டே, மணியை ஆட்ட (சங்கதியை எழுத) மணியாட்டி மறந்தேவிட்டது.  

இல்ல...இல்ல... நாங்க சங்கதினு ஒன்ன ஆரம்பிக்க, மத்தவங்க எல்லாம் யோசித்து யோசித்து மண்டையை போட்டு பிச்சிக்கிட்டு தலைப்பை தேடுவாங்கதானே. அவுங்களுக்கு ஏம்பா, கஷ்டத்தை கொடுக்கனுமுனு நினைச்சிக்கிட்டு, மணியாட்டியே கொஞ்சநாளைக்கு ஆடாமல் நின்றுவிட்டது.  

சரி... சரி கிசுகிசு கேட்பதற்கு யாருக்குதான் ஆசையிருக்காது. ஏதாவது ஒருவிசயத்தை கடல போடாட்டி, தலை, கால், மூக்கெல்லாம் வைத்து பேசாட்டி சிலருக்கு தூக்கமே வராது.  

என்னதான் வரவு-செலவுத்திட்ட (பாதீடு) விவாதமாக இருந்தாலும், யதார்த்தமான சம்பவங்களுடன் கோர்த்து, பாதீடு விவாதத்தை ஆரம்பிப்பதில், அவையில் இருக்கின்ற பலர் கில்லாடிங்கோ... கார்த்திகை மாதம் வேற, கொஞ்சம் கூதலாகதான் இருக்கும். மணியாட்டிக்கு என்னமோ சூடாதான் இருக்கு, ஏன்னா மெட்டர் கெடச்சிருச்சியே!  

அதிலையும், குழுக்களின் பிரதித்தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான செல்வம் அடைக்கலநாதன், அக்கிராசனத்துக்கு வந்துட்டா போதும், கலரியில் இல்ல, பத்திரிகையாளர்களுக்கான அறையில் இருக்கின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் எல்லாம். ‘ஆய்... நம்ம ஆளு’ என்று ரொம்பவும் பிரயாசனப்பட்டுக்கொள்வர். செல்வத்தின் சம்பாஷணை மட்டுமல்ல கண்டிப்பும் சுவாரஸ்யமாய் தான் சிலநேரங்களில் இருக்கும்.   

செவ்வாய்க்கிழமை விவாதத்தின் போது, கூட்டமைப்பின் எம்.பியான, சிவசக்தி ஆனந்தன், இது கார்த்திகை மாதம் என்பதனால், 30 வருட யுத்தத்தில் மரணமடைந்த உறவுகளுக்கும், போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நாடாளுமன்றமும் நல்லாட்சி அரசாங்கமும் அனுமதியளிக்க வேண்டுமென வினயமாகக் கேட்டுக்கொண்டார். எனினும், விவாதம் நிறைவடையும் வரையிலும் அக்கோரிக்கைக்கு, அரசாங்கத் தரப்பிலிருந்து பதிலே வழங்கவில்லைங்கோ.   

தனதுரையை இடைவிடாத உதய கம்மன்பில, எனக்கு பேச தெரியும் ஆனால், நரிகள் மற்றும் கலவெத்தோ போன்ற மிருகங்களின் மொழிகள் தெரியாது. ஆகையால், உங்களின் கூச்சலுக்கு பதிலளிக்க முடியாது. ஆகையால், உங்களுக்கு பதிலளிப்பதற்கு நரி மொழியை கற்றுக்கொண்டு வருகின்றேன் என்றும் சொல்லிட்டாரு போங்க, அப்படி சொன்னவர், நத்தார் வரவில்லை எனினும் நத்தாருக்கு முன்னரே, நத்தார் பாப்பா பரிசு கொண்டுவந்துவிட்டாரு... ஆனால், பரிசுலதான் ஒன்னுமே இல்லையென்று சொல்லிட்டாரு.   

அது நம்ம ஆளு (குழுக்களின் பிரதிதலைவர்) அக்கிராசனத்துக்கு வந்தாலே ஒரே குசும்புதான், அவரென்னமோ, உறுப்பினர் ஒருவர் தன்னுடைய உரையை நிறைவுசெய்வதற்கான நேரம் நிறைவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னரே, அறிவுறுத்தி விடுவார். அவ்வாறே சித்தார்த்தன் எம்.பியை பார்த்து கூறிவிட்டார்.  

இம்..இருக்காதே... என சித்தார்த்தன் கூற, இல்ல...இல்ல.. முடித்துகொள்ளுங்கள் என்று செல்வம் கூறிவிட்டார்.   
அவைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! எனக்கு 25 நிமிடங்கள் கிடைத்தன என சித்தார்த்தன் பதிலளிக்கையில் அப்போது இடம்பெற்ற சம்பாஷணையே சுவாரஸ்யமாகதான் இருந்தது.  

எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட சித்தார்தன் எம்.பி, சரி...சரி...பார்த்து செய்யுங்களேன் என வினயமாகக் கேட்க, ம்..ம்.. சரி...சரி பார்த்துசெயிறேன். நீங்கள் பேசுங்களேன் என்று செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார். அப்படியான சுவாரஸ்யங்கள் இடம்பெறும் சபையில், சபையமர்வு ஆரம்பிக்கும் முன்னர் அவைக்கு தலைமைத்தாங்க வருகின்ற சபாநாயகராக இருந்தால் என்ன, பிரதி சபாநாயகராக இருந்தாலென்ன, குழுக்களின் அவைத்தலைவராக இருந்தால் என்ன, அக்கிராசனத்தில் இருந்தவுடன் ‘ஓடர் பிளிஸ்’ என்றுதான் கூறுவர். அப்பொழுத்து சபையே கப்சுப்பென்று இருக்குமுங்கோ.  
- மணியாட்டி

- See more at: http://www.tamilmirror.lk/186242/ஓடர-ப-ள-ஸ-#sthash.I5Yqz0ka.dpuf
Link to comment
Share on other sites

வெளவாலுக்கு கிடைத்த வயகரா
 
 

article_1479780969-5AA.jpgதிடீருனு செத்துபோன ஒருவருடை பொடியை பொறுப்பேற்க, மூன்று பெண்கள் நீதிமன்றுக்கு வந்திருந்தாங்க... அதுவும் ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டு குழந்தைகள், ஆறு குழந்தைகளுடனேயே வந்திருந்தாங்க... எனினும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவருடைய பொடியை, மனைவிமார்களிடம் கையளிக்காத நீதிமன்றம், பொடியை அம்மாவிடமே கையளித்த சம்பவமொன்று கம்பஹாவில் அண்மையில் இடம்பெற்றது தெரியுந்தானே! 

ஆக, அந்த கல்யாண இராமன், வேலிபாய்ந்து மாட்டிக்கிட்டாரு, இல்லாடிங்க... மூன்று பெண்களையும் ஏமாற்றியிருக்காரு, எப்படியோ...குழந்தைகள் அறுவரும், மூன்று தாய்மார்களின் எதிர்காலம்தான் கேள்விகுறியாகிட்டுங்கோ. இந்த வேலிபாய்தல் விவகாரம், நாடாளுமன்றத்திலும் சூடுபிடித்ததுங்கோ. 

அவருனா தயாராகுவதற்கு இரண்டு, மூன்று மணிநேரம் எடுக்கும். எனக்கு அப்படியில்லைங்க, அவசரமாக இருந்தது, நான் வேலிபாய்;ந்துவிட்டேன் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், சபையில் சிரிபொலி எழுந்தது. 

பிரதமருக்கு கீழுள்ள விடயதானங்கள் குறித்துதானுங்கோ நேற்று விவாதிக்கப்பட்டதுங்கோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமையன்று முழுநேரம் இருந்தது போலவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பகல்போசனம் வரையிலும் அவையிலேயே இருந்து, வாதப்பிரதிவாதங்களுக்கு பதிலளித்துவிட்டு சென்றாருங்கோ. 

ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல உரையாற்றும் போதுதான் ‘வேலிபாய்தல்’ விவகாரம் சூடுபிடித்திருந்தது. ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளுந்தரப்பில் சிலர், உங்களுக்கு கால் உடைந்ததல்லோ, அதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலட்சக்கணக்கில் காசு கொடுத்ததல்லோ, வேலிபாய்ந்தா? கால் உடைந்தது என்று வினவினர். 

இதேகேள்வியை, இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் கேட்டுவிட்டார். சற்று சூடேறியிருந்த கெஹலிய எம்.பி, ஆண் விபசாரியாக இருப்பதை விடவும் வேலிபாய்தல் நல்லதென்று நான் நினைக்கிறேன் என்று சட்டென்று கூறிவிட்டாரு. அவையே கப்சுப்பென்று அமைதியடைந்துவிட்டது. 

எனினும், திடீருனு அவைக்குள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பி, நானும் இவரும் (கெஹலிய) ஒரே மாவட்டங்கோ, அவருக்கு ஏன் கால்முறிந்தது, அவ்வளவு அவசரமாகவா வேலிபாய்ந்தார் என்று கேட்டக்கொண்டே போனார். 

வேலிபாய்தல் கேள்விகளுக்கு பதிலளித்து, பதிலளித்து சற்றும் சளைத்து களைத்திருந்த கெஹலிய, அதுக்கு....இங்க...அதுக்குனுனா? நீங்கதான் (ஆனந்த அளுத்கமகே) இரண்டு, மூன்று மணித்தியாலயங்கள் தயாராகவேண்டும். எனக்குன்னா அப்படியில்லிங்க, சொற்பநேரத்தில் மெட்டர முடிச்சிடுவேன். அவசரமாக இருந்துச்சி, வேலியை பாய்ந்துவிட்டேன் என்று பதிலளித்த இரண்டொரு நிமிடங்களில் அவருக்கான நேரமும் நிறைவடைந்துவிட்டதுங்கோ... 

ஆண் விபசாரி, வேலிபாய்தல் மற்றும் விபசாரம் ஆகியன, இந்த வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் என்னமோ, கூடுதலாக கேட்கக்கூடியதாக இருக்கு, உங்க மணியாட்டி என்னமோ, மணியை ஆட்டிவிடாம அடக்கி அமுக்கி வாசிக்கிறாரு, அதாவது தேவையில்லாதவற்றை கட்பண்ணி, கட்பண்ணி எழுதுறாரு. எனினும் சபை நடவடிக்கைளை நேரலையாக காட்டுனா, கிஷ்ணகிரி கிளிஞ்சதுங்கோ. 

இந்த விவாதத்தில், பிரதமர் ரணிலும் பதிலளித்து கொண்டிருந்தமையால், சபையே பகல்போஷனத்துக்கு முன்னமே கிளுகிளுப்பாக இருந்தது மட்டுமல்ல, சுவாரஷ்யமான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றதுங்கோ. 

இந்த விவாதத்தில, முன்னரே உரையாற்றிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான, எக்டர் ஹப்புஹாமி, ராஜபகஷவின் ஆட்சிகாலத்தில், மஹிந்த ராஜபகஷ, பசில் ராஜபக்ஷ ஏன்? சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷவுக்கும் ஆகக்கூடுதலான நிதியானது வரவு-செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. ஏனையவர்கள் வாயை பார்த்துகொண்டிருந்தனர் என்று பொசுக்குன்னு கூறிவிட்டார். 

வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நேற்றுடன் எட்டுநாட்கள் விவாதம் நடந்துமுடிச்சிருச்சிங்கோ, அதுவரையிலும் எந்தவொரு வசனமுமே பேசாது இருந்த, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் என்றால், யாரு, இந்த சபாநாயகரையா? சொல்லுறிங்க, பெயர்களை சொல்லும்போதுங்க, கொஞ்சம் பொறுப்புடன் சொல்லவேண்டு என்று வினயமாகக் கேட்டுக்கொண்டார். 

கேள்விக்கேட்ட உறுப்பிரான ஹப்புஹாமியோ, பிரதிவாதஞ் செய்யாது அமைதியாகவே இருந்துவிட்டார். எனினும், பிரதமர் விடவே இல்லை, பெயரை குறிப்பிட்டு சொல்லியதற்காக நடவடிக்கை எடுக்கவேணுமுனா...மொதல்லுல வாசுதேவ எம்.பிக்கு எதிராகதான் எடுக்கவேண்டும். என்பெயரையே பலத்தடைவ கூறியிருக்காருங்கோ என்று சுட்டிக்காட்டினார். 

இதன்போது, சபையில் கோஷா சத்தம் கேட்டக்கொண்டிருந்தது. சபையை கட்டுப்படுத்துவதற்கு சபாநாயகர் முயன்றுக்கொண்டிருந்தார். எனினும், சத்தம் காதை பிய்த்துகொண்டு சென்றது. எனினும், பதிலளிக்கவந்த பிரதமர், நானொன்றும் கூறவில்லை சபாநாயகர் அவர்களே! வயதான வெளவாலுக்கு வயகரா கிடைத்ததுக்கு நானென்ன செய்வதுனு கூறியமர்;ந்துவிட்டாரு. 

அவ்வளவுதான் சபையில் இருபக்கங்களிலும் சிரிபொலியோ... சிரிபொலி... நேரமும் கடந்துபோக, பகல்போசணத்துக்காக சபை ஒத்திவைக்கப்பட்டதுங்கோ... ஒங்க மணியாட்டிக்கு என்ன? மணியடிச்சா சோறு மாமியாரு வீடுனு... கொட்டிக்கிட்டாருங்கோ!   

மணியாட்டி

- See more at: http://www.tamilmirror.lk/186621/வ-ளவ-ல-க-க-க-ட-த-த-வயகர-#sthash.OE05IbN9.dpuf
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'மெத்தையில் வைத்து சுகம் அனுபவிக்கும் கைதி யார்?'
 
07-12-2016 04:08 AM
Comments - 0       Views - 631

article_1452337077-87.jpg-அழகன் கனகராஜ்

“கையில் பணம் இல்லாத கைதிகள் பலர், சிறைச்சாலைகளில் பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், பணம் படைத்தவர்கள் தங்களுடைய பிறந்த நாளையும் குடும்பத்தினருடன் சிறைச்சாலைக்குள்ளேயே கொண்டாடி, சுகபோகமான வாழ்க்கை நடத்திகொண்டிருக்கின்றனர்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர். அவ்வாறான கைதிகளில், பண செல்வாக்குள்ள கைதியை சந்தித்த வைத்தியர் ஒருவர், அவருக்கு வழங்கிய, அலைபேசி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட விவரங்களைப் புட்டுப்புட்டு வைத்தார்.

இதனால் கோபங்கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வீட்டுப் பிரச்சினையை பேசுவதற்கான இடம் இதுவல்ல என்று சுட்டிக்காட்டியதுடன், ஒழுங்குப்பிரச்சினையையும் கிளப்பினர். தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் நிறைவடைய, நிறைவடைய சக உறுப்பினர்களிடமிருந்து நேரத்தை கடனாகப் பெற்று காரசாரமாக உரையாற்றினார்.

விடயங்களை புட்டுப்புட்டு வைத்ததையால் அடுத்தடுத்து உரையாற்றுவதற்கு இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய நேரங்களையும் வாரிவழங்கினர்.

உரையை தொடர்ந்த ஹிருணிகா, “இரத்தம் வெளியேற்றம், இடுப்பு வலி, கழுத்து வலி ஆகிய உபாதைகள் காரணமாக, அவதிப்படும் கைதிகள் இருக்கின்றனர். எனினும், எவ்விதமான வருத்தங்களும் இல்லாத கைதி, மெத்தையில் உறங்கி, மெத்தையிலிருந்தே எழும்பி சுகத்தை அனுபவித்துகொண்டிருக்கின்றார் இது எந்தவகையில் நியாயமானது.

கடும் வருத்தங்களுடன், பல கைதிகள் இருக்கின்றனர். எனினும், அவர்கள் ஒரேயொரு நாள் மட்டுமே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். ஆனால், தன்னுடைய அந்தரங்க உறுப்பை அந்த மெத்தையில் வைத்து சுகம் அனுபவிக்கும் கைதியும் இருக்கத்தான் செய்கின்றார்” என்றும் தெரிவித்தார். இதன்போது சபையில் இருந்தவர்கள் கெக்கென்று சிரித்துவிட்டனர். அவர், இந்த சபையில் இல்லையென்று தனது உரையை ஹிருணிகா தொடர்ந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான துமிந்த சில்வா, சிறையில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு ஞாபகமறதியே நோயாக இருக்கின்றது எனினும், அவர் மெத்தையில் படுத்துறங்கி எழும்புகின்றார். டிசெம்பர் 3ஆம் திகதி அவருடைய பிறந்தநாளாகும். அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம், சிறைச்சாலையிலேயே அதுவும் குடும்பத்தாருடன் இடம்பெற்றது என்றும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/187579/-ம-த-த-ய-ல-வ-த-த-ச-கம-அன-பவ-க-க-ம-க-த-ய-ர-#sthash.eFIXtwSn.dpuf
Link to comment
Share on other sites

  • 5 months later...
ஓபர் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள்

image_fe1b3348ab.jpgஅரசாங்கத்துக்கு மகாணசபைகளின் பலத்தை காப்பாற்றிக்கொள்ள திரைமறைவில் பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஷயமறிந்த சிலர் சொல்கின்றனர்.

அதன்காரணமாக நாற்காலி கட்சியில் இருந்து விலகி மஹிந்தவை சரணடைந்தவர்களுக்கு இப்போது சிறந்த ஓபர் கிடைக்க ஆரம்பித்துள்ளதாம்.

பெரிய சைஸ் உறுப்பினர்கள் பலர், மயில் தாள்களின் ஊடாக ஏலம் எடுக்கப்படுவதாக தகவல்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

  • 2 months later...
ஆளுநரின் புதிய அவதாரம்
 

image_cff023ee2c.jpg

இலங்கையின் உச்சியில் ஆளுநராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் அண்மையில் நடந்துகொண்ட விதம் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பொலிஸ் சீருடையணிந்து, விடுதியொன்றில் அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் கண்டபடி திட்டியிருக்கிறார். அவரைச் சுற்றி மேலும் பல பொலிஸாரும் கடமையில் இருந்துள்ளனர்.

இதனைக் கண்ணுற்ற பொதுமக்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “நம்ம ஆளுநர் பதவியை மாற்றிவிட்டாரோ?” என்றும் சிந்தித்துள்ளனர்.

இது பற்றி எப்படியோ கொழும்பில் உள்ள பொலிஸ் உயரதிகாரியின் காதுக்கு தகவல் கிடைத்துவிட்டது.

உடனடியாக அந்த உயர் அதிகாரி ஆளுநருக்கு அழைப்பை மேற்கொண்டு, “நீங்கள் அப்படி நடந்துகொள்ள காரணம் என்ன?” என வினவியிருக்கிறார்.

அதற்கு ஆளுநர், இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

மக்களுடைய பாதுகாப்பு பற்றிய ஒரு குறுந்திரைப்படத்தில் நடிக்கிறேன். அதில் எனக்கு பொலிஸ் பாத்திரம். அதற்கு முன்னோட்டமாகத்தான் நடித்துப்பார்த்தேன். எப்படியும் அரசியல்வாதிகள் நமக்கு நடிப்பு நன்றாக வரும்தானே” என்றாராம்.

அரசியல் என்றால் நடிப்பு என்பதை அவரும் ஒத்துக்கொள்கிறார் போல!

http://www.tamilmirror.lk/tm-gossip-news/ஆளுநரின்-புதிய-அவதாரம்/356-202073

Link to comment
Share on other sites

மான் தலைவரின் யோசனை!
 

image_0c577b2963.jpg

நம்ம நாட்டில பெண் ஜனாதிபதியோட வாரிசை அடுத்த தேர்தல்ல களமிறக்க முயற்சிகள் நடக்கின்றனவாம். பாரிய கொண்டாட்ட ஏற்பாடுகளோட மக்களை கவரும் முயற்சியில இப்போதிருந்தே இறங்கியிருக்காங்களாம்.

இதை கேள்விப்பட்ட மலையகத்தின் மான் தலைவர், தன்னோட வாரிசையும் அடுத்த தேர்தல்ல களமிறக்கனும் என்று முடிவுபண்ணி இருக்கிறார்.

அதற்காக இலண்டன் சென்று, அங்க சட்டப்படிப்பில் ஈடுபட்டிருக்கிற மகனோட பேசியிருக்கிறார் அவர். ஆனாலும் அங்கே ஒரு சிக்கல்.

அரசியல்ல ஈடுபட விருப்பம் இல்ல, வர்த்தகத் துறையிலேயே முதலீடு செய்து முன்னேறலாம் எனச் சொல்லியிருக்கிறார் அந்த வாரிசு.

தனக்குப் பிறகு கட்சியை கொண்டு செல்ல வாரிசு அரசியல்தான் செய்யணும் என்று விடாப்பிடியா தலைவர் சொல்லியிருக்கிறார். எனினும் அந்த வாரிசு கேட்கவேயில்லையாம்.

அதனால மனமுடைஞ்சு போயிருக்கிறாராம் மான் தலைவர். எப்படியாவது வாரிசை களமிறக்கியே ஆகனும் என்று யோசிக்கிறாராம்.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

பதவி துறந்த விதம்

image_9d0f4f448a.jpg

வெளிநாட்டு அலுவல்களுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சரின் இராஜினாமாவின் பின்னணியில் நடந்த விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அந்த அமைச்சர், யார் என்ன சொன்னாலும் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என ஐ.தே.க.வின் இரண்டாம் நிலை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு நெருங்கிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளதுடன் ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.

இந்த விடயம் எப்படியோ மேலிடத்துக்கு கசிந்திருக்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய பெண்மணியொருவர் மேலிடத்தின் சிபாரிசின் பேரில் அந்த அமைச்சரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

மேலிடத்திலிருந்து செய்தியொன்றை எடுத்து வந்ததாகச் சொல்லிய அந்தப் பெண்மணி, இராஜினாமா செய்யுங்கள், அல்லது பதவி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.

அதன்பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், இராஜினாமா செய்வதற்கு சம்மதம் வெளியிட்டிருக்கிறார்.

அவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் “இளம்” பெண்மணியொருவர் தான் தூதுவராக செயற்பட்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

http://www.tamilmirror.lk/tm-gossip-news/பதவி-துறந்த-விதம்/356-202587

Link to comment
Share on other sites

அடுத்த அமைச்சர் எப்போது வருவார்?

புதியவருக்கு வந்த சோதனை

 
அடுத்த அமைச்சர் எப்போது வருவார்?
 

‘‘நான் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளேன். சிறிது நேரத்­தில் அமைச்­சுக்கு வரு­வேன். தயா­ராக இருங் கள்’’ என்று புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட அமைச்­சர் ஒரு­வர் அமைச்­சுச் செய­லா­ள­ருக்கு கூற, அந்த அமைச்­சுச் செய­லா­ளரோ, ‘‘அப்ப அடுத்த அமைச்சர் எப்ப வருவார்?’’ என்று பதில் கேள்வி எழுப்­பி­னார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சிலர் புதி தா­கப் பத­வி­யேற்ற அமைச்­சர் ஒரு­வரை மாகாண சபை­யில் நேற்று ‘வறுத்­தெ­டுத்­துள்­ள­னர்’.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் தேநீர் இடை­வே­ளை­யின் போது மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சபா மண்­ட­பத்­தை­விட்டு வெளியே வந்து கலந்­து­ரை­யா­டி­னர். அப்­போது ஆளும் கட்சி உறுப்­பி­னர் சக உறுப்­பி­ன­ரைப் பார்த்து, புதி­தா­கப் பத­வி­யேற்ற அமைச்­சர் தனது அமைச்­சுக்கு அலை­பேசி அழைப்பு எடுத்­துப் பேசி­யுள்­ளார்.

நான் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளேன். சிறிது நேரத்­தில் அமைச்­சுக் வரு­வேன். தயா­ராக இருங்­கள் என்று சொல்­லி­யுள்­ளார். அதற்கு அமைச்­சுச் செய­லர், அது சரி அடுத்த அமைச்­சர் யார்? என்று கேட்­டுள்­ளார்.

இந்­தக் கதையை இரு உறுப்­பி­னர்­க­ளும் பேசிக் கொண்­டி­ருக்­கும்­போது புதி­தா­கப் பத­வி­யேற்ற அமைச்­சர் அந்த வழி­யாக வந்­துள்­ளார். பேசிக் கொண்­டி­ருந்த இரு உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வர், அந்த அமைச்­சரை அழைத்து வந்து, உங்­க­ளைப் பற்றி இப்­ப­டிச் சொல்­கின்­றார்­கள் என்று கூறி­ய­தும் அவர் சிரித்­துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்­றுள்­ளார்.

லெர்­ர­பார்ட் நீண்­டு­விட்­டது
அனந்தி பெரு­மி­தம்

அமைச்­சுப் பதவி தனக்கு சுமை­யாக இருக்­கின்­றது என்று திரு­மதி அனந்தி சசி­த­ரன் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தார். புதிய அமைச்­சுப் பொறுப்பு நேற்று முன்­தி­னம் கைய­ளிக்­கப்­பட்ட பின்­னர் சபை அமர்­வில் நேற்­றைய தினம் சக உறுப்­பி­னர்­க­ளு­டன் பேசும் போது, எனது அமைச்சு கடி­தத் தலைப்பு இப்­போது நீண்டு விட்­டது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/22668.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
’’அடக்கி வாசியுங்கள்’’
 

image_a014c17420.jpgபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட “மார்ஷல்” அமைச்சரால் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன.

அவை, அவரது தனிப்பட்ட கருத்துகளேயன்றி அரசாங்கத்தின் கருத்து அல்ல என அறிவித்தபோதிலும் கூட அவர், மேலும் கருத்துகளை வெளியிட்டார்.

இதன்பின்னர் அரசாங்கத்தின் தலைமைகள் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன. கலந்துரையாடலின்போதே “மார்ஷலுக்கு” அழைப்பினை மேற்கொண்டு, தயவு செய்து அடக்கி வாசியுங்கள் எனக் கூறியிருக்கிறார்கள்.

"தேர்தல் நெருங்குவதால், உங்களுடைய கருத்துகள் எதிரணியினருக்கு சாதகமாக அமைந்துவிடும். நாட்டுக்கும் அபகீர்த்தியாகிவிடும். தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இது தருணமல்ல" எனச் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையான எச்சரிக்கையும் கூட!
(மூலம்: தேஷய)

http://www.tamilmirror.lk/tm-gossip-news/அடக்கி-வாசியுங்கள்/356-203577

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
ஊடக சந்திப்பு கைவிடப்பட்டது ஏன்?
 

image_baa4a85fff.jpg

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான நபர்கள் இருவர், சர்வதேச ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை அழைத்து நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கத் தீர்மானித்தார்களாம்.

அதற்காக நாளொன்றும் தீர்மானிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதாம். எனினும் இறுதி நேரத்தில் அந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணத்தைத் தேடியபோது இவ்வாறானதொரு தகவல் கசிந்தது.

இப்போது ஒவ்வொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கதையைக் கூறி வருகிறார்கள். அவை அத்தனை விடயங்கள் பற்றியும் பதிலளிக்க வேண்டிவரும். அத்தோடு முன்னாள் இராணுவத் தளபதி குறித்து கட்டாயம் கேள்வி எழுப்புவார்கள். அதில் ஒரு வார்த்தை மாற்றிக் கதைத்துவிட்டாலும் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதால் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாம்.

ஒரு வகையான பயமும் உள்ளதுதான் போல!

http://www.tamilmirror.lk/tm-gossip-news/ஊடக-சந்திப்பு-கைவிடப்பட்டது-ஏன்/356-204173

Link to comment
Share on other sites

சேலை வழங்கும் முதலமைச்சர்
 

image_0f2f3f8d98.jpgநாட்டில் முக்கியமான பகுதியின் முதலமைச்சர் ஒருவர் பெண்களுக்கு சேலைகளை விநியோகித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தலை நோக்காகக் கொண்டே இவ்வாறு செயற்படுவதாக ஒன்றிணைந்த எதிரணியினருக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

சேலைகளை வழங்கும்போது முதலில் தமக்கு நெருக்கமான மாதர் சங்கங்களை தெரிவு செய்துகொள்கிறாராம். அவர்களுக்கு விலையுயர்ந்த சேலைகளை கொடுத்து அசத்துகிறார் என்றால் பாருங்கள்.

அதற்கு அடுத்தபடியாக, தேர்தலில் இருபக்கங்களையும் சாராத அமைப்பினருக்கும் அவர் சேலைகளை பரிசாக வழங்கி வருகிறார். இது பற்றிக் கேள்வியுற்ற ஒன்றிணைந்த எதிரணியினர், அந்த முதலமைச்சர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

எனினும் காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தனது ‘இந்த’ நிகழ்ச்சித் திட்டம் குறித்து அறிவித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

http://www.tamilmirror.lk/tm-gossip-news/சேலை-வழங்கும்-முதலமைச்சர்/356-204359

Link to comment
Share on other sites

உரிமை கோரப்படாத சொகுசு வாகனம்
 

image_805a17f7bb.jpg

இலங்கையில் பிரபலமான வாகன இறக்குமதி நிறுவனம், 10 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு ஜீப் ஒன்றை இறக்குமதி செய்துள்ளது. அதன் உரிமையாளராக சாதாரண வருமானம் பெறும் ஒருவரின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பெறுமதிவாய்ந்த இந்த வாகனத்தை அரசியல்வாதி, பணம்படைத்த வர்த்தகர் யாராவது கொள்வனவு செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்த வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாக பெரும்பாலானோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் இதுவரை அந்த வாகனத்துக்கு உரிமைகோரி யாரும் வருகை தரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஊடகவியலாளர்களும் அரசியல்பிரமுகர்கள் சிலரும் மிக அவதானத்துடன் கவனித்து வருகின்றனர்.
இந்த வாகனத்தை உரிமைகோரி யாரும் வருகை தரும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம்.

http://www.tamilmirror.lk/tm-gossip-news/உரிமை-கோரப்படாத-சொகுசு-வாகனம்/356-204434

Link to comment
Share on other sites

நவராத்திரியாக மாறிய தீபாவளி
 

தீபாவளியை முன்னிட்டு, கொழும்பு நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் நேற்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

பிரதமர் அங்கு சுமார் 12 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதன்போது தீபாவளி பண்டிகை பற்றியும் அஞ்ஞானம், மெஞ்ஞானம் பற்றியும் சிங்கள மொழியில் உரையாற்றினார். குறிப்பாக தீபாவளியையும் நாட்டின் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தின்போது அனைவரினதும் பங்களிப்பு குறித்து பல்வேறு கருத்துகளை அங்கு பகிர்ந்துகொண்டார்.

அவரது உரையின் பின்னர், அதனை மொழிபெயர்த்து தமிழில் கூறுவதற்கு பெண்மணியொருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமரின் மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை உடனடியாக உரைபெயர்ப்பது கடினமானதுதான். ஆனாலும் தீபாவளியைப் பற்றி அவர் கூறிய கருத்துகளை இலகுவாக மொழிபெயர்க்கலாம்.

இருப்பினும், பிரதமரின் உரையை மொழி பெயர்த்த அந்தப் பெண்மணி, தீபாவளியை, நவராத்திரியாக மாற்றிவிட்டார். நவராத்திரியை முன்னிட்டுதான் நிதியுதவி வழங்கப்படுவதாக மொழிபெயர்த்தார்.

அங்கே சிங்களம் தெரிந்த தமிழர்கள் பலருக்கு ஆச்சரியம் மாத்திரமே மீதமிருந்தது.

ஏனென்றால், பிரதமர் எந்தவொரு இடத்திலும் நவராத்திரி என்ற வாரத்தையைப் பிரயோகிக்கவேயில்லை.

http://www.tamilmirror.lk/tm-gossip-news/நவராத்திரியாக-மாறிய-தீபாவளி/356-204593

Link to comment
Share on other sites

சில கதைகள், பல இரகசியங்கள்!
 

image_f214101d28.jpg

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை வளாகத்தில் நடைபெற்ற சுவாரஷ்யமான சம்பவம் குறித்து இப்போது தகவல் கசிந்திருக்கிறது. முன்னாள் தலைவர், சிற்றுண்டிச்சாலையில் தனக்கு நெருக்கமான சகாக்களுடன் சுவாரஷ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்துள்ளார்.

அந்த வேளையில் அங்கு வந்த தேர்தல்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர், முன்னாள் தலைவரிடம் ஏதோ சில விடயங்களைக் கலந்துரையாடியிருக்கிறார். இதை, சற்றுத் தொலைவில் இருந்து மலைநாட்டு சேவல் தலைவர் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

தேர்தல் அமைச்சர் அவ்விடத்திலிருந்து சென்றவுடன், முன்னாள் தலைவரிடம் மெதுவாக நெருக்கமாகிப் பேசியிருக்கிறார் அந்த சேவல் தலைவர்.

“என்னவாம் சேர்? அவர் என்ன சொல்கிறார்? அவரிடம் கவனமாக இருங்கள். எனக்குச் செய்த செயலைப்போலவே உங்களுக்குச் செய்தாலும் ஆச்சரியமில்லை” என்றாராம் அவர்.

அதற்கு, முன்னாள் தலைவர் “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டாராம்.

“என்ன சேர் உங்களுக்குத் தெரியாதா? அவர் என்னுடைய கட்சியிலிருந்துதான் அரசியலுக்கு வந்தார். பின்னர் உங்களோடு இருந்தார். இப்போது வேறு இடத்தில், அதாவது இங்கே இருக்கிறார். அவருக்கு உயரிடத்திலிருந்து அவ்வளவு சாதகமான ஆதரவு கிடைப்பதில்லையாம். படகும் அங்குமிங்கும் அசைவதாக நாம் அறிகிறோம் தானே? அதனால்தான் உங்களை நினைவு வந்திருக்கிறது போல. அதைத்தான் நினைவூட்டினேன்” என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாராம் சேவல் தலைவர்.

அதைக்கேட்ட முன்னாள் தலைவர், வாய்விட்டுச் சிரித்தாராம். தலைவர்கள் எங்கெங்கெல்லாம் கண் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்! சில கதைகளில் பல இரகசியங்கள் உண்டு என இதனை நேரில் கண்டோர் சொல்லிக்கொண்டனராம்.

http://www.tamilmirror.lk/tm-gossip-news/சில-கதைகள்-பல-இரகசியங்கள்/356-204786

Link to comment
Share on other sites

‘தடை ஏதும் இல்லை, சென்றுதான் பாருங்களேன்’
 

image_ec25496f92.jpgநாட்டின் பிரதானமானவர் தலைமையில், ‘கை’ சின்னத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் காலியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டம், மிக இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. அங்கே, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூட அனுமதிக்கவில்லையாம்.

கூட்டம் ஆரம்பித்தபோது, "உங்களுடைய குறைகளைச் சொல்லுங்கள்" எனப் பிதானமானவர் கேட்டுள்ளார்.

அதற்கு, ஒரு சில உறுப்பினர்கள், "கட்சி இரண்டாகப் பிரிந்திருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். பிரதானமானவருக்கு ஒரே ஆத்திரமாம். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாராம்.

அதுமாத்திரமல்லாது, "நாங்கள் தூது சென்று கதைத்துவிட்டு வருகிறோம்" என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு, பிரதானமானவர் இப்படிப் பதில் கூறியிருக்கிறார்.

“நீங்கள் சென்று கதைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. சென்றுதான் பாருங்களேன். கடந்த ஆட்சியிலும் இப்படிக் கதைத்துக்கொண்டிருந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். நான் அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருக்கிறேன்”

இந்தப் பதிலுக்குப் பிறகு, தூது செல்வது குறித்து யாரும் வாய்திறக்கவில்லையாம்!

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

இரவில் திருட்டுத்தனமாக நாடு தாவும் அமைச்சருக்கு சிக்கல்
 

மாதம் ஒரு தடவை மாத்திரம், இரகசியமான முறையில், ஓர் இரவை மட்டும் கழிக்க வெளிநாடு சென்று விட்டு நாடு திரும்பும் அமைச்சர் ஒருவர் தொடர்பில், இராஜதந்திர மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அமைச்சர், வௌிமாவட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஒன்றின் தலைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, சிங்கள ஊடகமொன்று வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“குறித்த அமைச்சர், தமது இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, இரகசியமான முறையில் ஒவ்வொரு மாதமும் சென்னைக்குச் சென்று, இரவைக் கழித்துவிட்டு, மீளவும் மறுநாள் நாடு திரும்பியுள்ளாரென, முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

“இரவு வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் விமானத்தில் சென்னைக்குச் சென்று, மறுநாள் பகல் நேர விமான சேவையில் நாடு திரும்புகிறாரெனவும் தெரியவந்துள்ளது.

“இப்பயணம் தொடர்பில், அரசாங்கத்துக்கோ, தூதரகத்துக்கோ, இராஜதந்திர ரீதியில் எவ்வித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை” என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜதந்திர சட்டத்திட்டத்தின் படி, அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, அறிவிக்க வேண்டியது அவசியமாகும். தனிப்பட்ட விஜயம் என்றாலும், குறித்த நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது அவசியமானது. அவ்வாறு அறிவித்தால் மாத்திரமே, அவரது பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குறித்த அமைச்சர், எவ்வித அறிவிப்பையும் விடுக்காமல் சென்றுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது. சில சமயங்களில், அவரது பணயங்களுக்கு, உதவியாளர் ஒருவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது இரகசியப் பயணம், கடந்த மாதம் இந்திய பாதுகாப்புத் தரப்பினருக்கு கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர்களது ஒரு நாள் பயணம், எந்நோக்கத்துக்கானது என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

உஷ்… இது ரகசியம் : இந்த தலைவருக்கே சோதனையா

உஷ்… இது ரகசியம் : இந்த தலைவருக்கே சோதனையா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரபல தமிழ் கட்சியின் பாராளுமன்றத்தில் முக்கிய பதவி வகிகும் அந்த மூத்த அரசியல்வாதி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளினால் ஸ்கேன் இயந்திர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த இயந்திரத்தை அவர் முதலில் கடந்த போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதுடன் பின்னர் மீண்டும் அவரை இரண்டாவது தடவையாக அந்த இயந்திரத்தை தாண்டுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன்படி மீண்டும் அந்த இயந்திரத்தை அவர் கடந்தே உள்ளே சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சில சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளதுடன் சிலவேளை அவர் யாரென தெரியாது பாதுகாப்பு அதிகாரிகள் அப்படி செய்தார்களோ என அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.
எவ்வாறாயினும் அவர் பக்குவமான அரசியல்வாதியென்பதனால் அதனை அவர் பெரிதாக கருதாது இருந்ததாக அதனை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.samakalam.com

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
கடும் தொனியில் எச்சரிக்கை!
 

image_e7abebf187.jpg

யானை கட்சியின் தலைவர், கொழும்பில் உள்ள பிரதான அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப் பிரதான அரசியல் பிரமுகர், பின்வரிசை பிரமுகர்கள் பலரை அழைத்து அவ்வப்போது விருந்துபசாரம் கொடுத்து வந்துள்ளார். இதன் பின்னணியில் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதே நோக்கமாக இருந்துள்ளது.


இதனை அறிந்துகொண்ட தலைவர், அந்தப் பிரதான அரசியல் பிரமுகரை அழைத்து, நேர்மையாக நடந்துகொள்ளுமாறு கடிந்துகொண்டுள்ளார். சூழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதாக அறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

அதிரடி தமிழ்த் தொலைக்காட்சி

 

பிரபல தமிழ்த் தேசிய பத்திரிகை நிறுவனமொன்று தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக உள்வீட்டு செய்திகள் சொல்கின்றன.

ஒன்லைனில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் தொலைக்காட்சி சேவையானது கொழும்பில் புதிதாக அமையவுள்ள தாமரைக்கோபுரத்திலிருந்து இயங்கவுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்பப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தியான அந்தத் தொலைக்காட்சியில் பணியாற்றி வெளியேவந்த சிலரும் இப்போதைய வாராந்த வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருக்கும் ஒருவருமென பலர் இதில் பணியாற்றவுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றின் முக்கியமான தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுடன் இதற்காக இவர்கள் கைகோக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது... வாழ்த்துக்கள்.

http://www.sudaroli.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.