Jump to content

மரிக்கார் ராம்தாஸ் காலமானார்


Recommended Posts

மரிக்கார் ராம்தாஸ் காலமானார்

 

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார்.

அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

asdsaa.jpg

http://www.virakesari.lk/article/8879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் மனங்களின் நீங்க இடம்பிடித்த சிறந்த நகைச்சுவை கலைஞர்.  

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

நான் கண்ட மரிக்கார் ராம்தாஸ்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்திலிருந்து எஸ் எம் வரதராஜன்:

13 ஜூலை 2016
Bookmark and Share
 

 

நான் கண்ட மரிக்கார் ராம்தாஸ்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்திலிருந்து  எஸ் எம் வரதராஜன்:
1974 ஆம் ஆண்டு டீ எஸ் சேனநாயக்க கல்லூரி மண்டபத்தில் ஓர் இளைஞர் அரை மணி நேர நாடகம்  ஒன்றை மேடையேற்றினார் .அ வர பின்னர் பல வானொலி நாடகங்களையும் எழுதி நடித்து மேடையுமேற்றினார் .இந்த நாடகத்தை மக்கள் வங்கியின் விளம்பரத்திற்காக அமரர்  சில்லையூர் செல்வராசன் வானொலிக்கு எழுதித் தரும்படி கேட்க -அதுவே -கோமாளிகள் கும்மாளமனது.
இதனை எழுதிய அந்த இளைஞர் தான் அமரர் எஸ் ராம்தாஸ் .
 
 
90 வாரங்கள் வானொலியில் வெற்றிகரமாக ஒலித்த இந்த நாடகம் பின்னர் "கோமாளிகள் "திரைப்படமானது ராம்தாஸ் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார் .அதுவே அவருக்கு மரிக்கார் என்ற இடுகுறிப் பெயரையும் கொடுத்தது .
 
யாழ்ப்பாணத்தில்  "கோமாளிகள் "திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் திரும்பிப் போன அதிசயம் ஈழத்துத் தமிழ்த் திரைப்படம் ஒன்றிற்கு நிகழ்ந்தது  (மல்லிகை) . 
 
கோமாளிகள் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை விட அதிக நாட்கள் ஓடியது .
 
படம் ஒரு நகைச்சுவைப் படமெனினும் ஈழத்தில் இனிமேல் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கலாம் என்ற தெம்பை ஏற்படுத்தியது எனப்படும் 
 
ஈழத்துத் தமிழ்த் திரைப்பட உலகில் கோமாளிகள் ஒரு புதிய நம்பிக்கையை  ஏற்படுத்தியது (சுதந்திரன் ) 
 
கோமாளிகளைத் தொடர்ந்து ஏமாளிகள் திரைப்படத்தை ராம்தாஸ் தயாரித்து  வெளியிடடார் .இதன் கதைவசனம் உதவி நெறியாள்கை   ஆகிய பணிகளையும் இவரே மேற்கொண்டார் .
 
அமரர் வீ பீ கணேசனின் புதிய காற்று ,நான் உங்கள் தோழன் , நாடு போற்ற வாழ்க ஆகிய திரைப்படங்களுடன் குத்து விளக்கு ,மாமியார் வீடு , Blendings, நொமியன   மினிசு - ஷர்மிளாவின் இதயராகம் 
  • ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் .
 
  • புரோக்கர் கந்தையா,சுமதி,காதல் ஜாக்கிரதை,கலாட்டா காதல் போன்றவை அவர் நடித்த நாடகங்கள் 
 
 
காலங்கள் ,எதிர்பாராதது  காணிக்கை , மலையோரம் வீசும் காற்று , அதிர்ச்சி வைத்தியம் என்பன இவர் நடித்த  தொலைக் காட்சி நாடகங்கள் .
 
நடிப்பதில் கடினமான விடயம் பெண்ணாக நடித்தல் என்பர் .ராம்தாஸ் பெண் பாத்திரத்தில் அருமையாக  நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார் .
 
பல குணசித்திரப்  பாத்திரங்களில் நடித்த ராம் தாஸ் ஒரு மரிக்கார் என்ற நகைச்சுவைப் பாத்திரமாகவே மக்கள் மனதில் நிறைந்தார் .
 
வானொலி வர்த்தக விளம்பரசேவையில் அவரது பணி குறிப்பிடத்க்கது ."அங்கிள் எனக்கு இன்னைக்கு மனசு நல்லால்ல " என்று இவரது மகள் பிரியா சொல்வதும் அதனைத் தொடர்ந்து மரிக்கார் கதைப்பதுமான ஸ்டார் விளம்பரம் எங்கள் பாடசாலை நாட்களில் வானொலியில் ஒலித்து பள்ளி மாணவர்களும் சொல்லித் திரிந்த ஒன்றாகும் .
 
செய்மதித் தொலைக் காட்சிகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முன்னர்,  இலங்கைத் தொலைக்காடசி வரலாற்றில்  ஆதிக்கம் செய்த ஒரு "பெரும் கோள்" மறைந்த கலைஞர் மரிக்கார் எஸ் ராமதாஸ் அவர்கள் என்று  சொல்லமுடியும் .
 
1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடங்கிய ரூபவாஹினி, அதன் முக்கிய தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக '"பொன் மாலைப் பொழுது " என்ற நிகழ்ச்சியை -தமிழ் பேசும் குடும்பங்கள்   தமது அன்றாடக் கடமைகளை ஒத்திவைத்துப் பார்க்கும் வகையில் தென்னிந்திய திரைப்படப் பாடல் களை  அவை அங்கு வெளியிட்ட கையோடு இலங்கையில் ஒளிபரப்பிய சேவையைப் புரிந்தவர் ராம் தாஸ்  .விளம்பர நிகழ்ச்சியெனினும் மக்கள் ரசனையைப்  புரிந்து வாராவாரம் அவற்றை அழகுறத் தொகுத்து வழங்கி வந்தவர் அவர் .
 
நடிகை ராதிகாவின்  கன்னிப   படைப்பான பெண்  ( ஓரங்கத் தொடர்கள்) பாலசந்தரின் தொடர்கள் ,அகிலனின் சித்திரப்பாவை போன்ற ஆரம்பகால தொலைக்காடசித் தொடர்கள்  தமிழகத்தில் வெளிவந்தபோது அவற்றை விளம்பர உதவியுடன் இலங்கைத் தமிழ்பேசும் இரசிகர்கள்  சுவைப்புக்கு   வழிசெய்தவர்  ராம்தாஸ் .
 
இலங்கை அரசின்கட்டுப்பாட்டிலுள்ள அரச கூட்டுத்தாபனம் தமிழ் பேசும் ரசிகர்கள் மீது உள்ளார்ந்தமான அக்கறையைக் காட்டுமாக இருப்பின் தனது அதிகாரிகளில் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி நல்ல நிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்து தனது பணியில் முக்கிய பணி யாக நாட்டின் ஒரு பகுதி மக்களுக்குத்  தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டியது அதன் கடனாகும். ரூபவாஹினி தொடங்கிய  காலம் முதல் தகுதி வாய்ந்த தமிழதிகாரிகள் அங்கு பணியாற்றி வருகின்ற்னர் . ஆனால் அரச நிறுவனம் அந்தச் சேவையை செய்யவில்லை . தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று நியமிக்கப்படட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் எண்ணவில்லை .
 
ராம்தாஸ்  இந்த இடத்தை நிரப்பினார் .இதனால்  இலங்கை தமிழ் ரசிகர்களின் இரசனையையும்  அவரே நிரப்பவேண்டியவரானார்.
 
செய்மதித் தொலைகாட்சிகளின் வருகையும் தனியார் தொலைக்காடசியின் செய்மதித் தொடர்புகளும் மேவும் வரையிலும் ராம்தாஸ் இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் ஓர்  இணைகரமாக இயங்கியவர் .பெரும்பாலுமே .
ரூபவாஹினியின் ஒளிபரப்பு விதிமுறைகளுக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தொகுத்து ,தயாரித்து வழங்கினார் .
 
 
நான் சக்திக்கு முகாமையாளரான பின்னர் ஒருநாள்  சக்தியில் ஒரு சினிமாப் பாடல்  
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தவேளை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது .மறுமுனையில் ராம்தாஸ் அண்ணர் "வரதா வணக்கம் ...என்று சுகம்விசாரித்துப் பேச்சைத் தொடங்கியவர் .இப்போ போய்க்கொண்டிருக்கும் பாடல் நினைவிருக்கிறதா ?" என்று  கேட்டார் .
 
ரூபவாஹினியில் அந்தப் பாடலை அவர் "பொன் மாலைப் பொழுது" நிகழ்ச்சியில் இட்டு வந்தபோது அதில்  இரண்டு "செக்கன்ட்ஸ் "கால அளவுள்ள காட்சியை  எடுத்துவிட்டு அனுப்பும்படி நிகழ்ச்சியை -ஒளிபரப்பிற்கு முதல் பார்வையிட்ட  நான் அவரிடம் கேட்டிருந்தேன் .
 
ஆனால் நான் முகாமையாளராக பணியாற்றிய தனியார் ஊடகத்தில் அது போகிறதே என்பதை எனக்கு நினைவூட்டவே எனக்கு அவர் தொலைபேசி எடுத்தார் .
 
"ஒரு "இரண்டு செக்கன்ஸ்(விநாடிகள்)காட்சிக்கு"  --என்னை  "எடிட்டிங்" புக் பண்ண வைச்சு என்ன வேலை செய்தீர்கள் ...இப்ப பார்த்தீர்களா .சன்னில(Sun) வாற எல்லாம் இனி எப்பிடி எடிட் பண்ணி போட போறீர்கள் என்று நானும் பார்க்கத்தானே போறேன் "...என்று பகிடியாகச் சொன்னார்.
 
சில நாட்களுக்கு முன்னர் ராம் அண்ணர் தொடர்பான சில படங்களைத் தேடினேன்.
 
 அவர் பிரதி எழுதி -அவசரமாய் ஒரு புதுவருடத் திருநாளுக்கு நான் தயாரித்த "அதிர்ச்சி வைத்தியம் " நகைச்சுவை நாடகத்தின் shooting shots படங்களைத் தான் நான்  தேடினேன் .
 
அந்தப் படங்களை  வைத்தே ராம் அண்ணரைப் பற்றி ஒரு குறிப்பு எழுத நினைத்தேன்  அவர்  மகன் சதீஷ் உள்ள படம் ஒன்று கிடைத்தது . அதனை வைத்து (அமரர் கே எஸ் பாலச்சந்திரனுடன் அவர் நிற்கும் படம் ) முகநூலில் எழுதியிருந்தேன்.
 
சதீஷ் ராமதாஸ் அதற்கு குறிப்புரையும் எழுதியிருந்தார்.
 
நெல்லியடி மத்திய  மகா வித்தியாலயத்தில் "கிரேஸி கோமாளிகள் "நாடகம்  மேடையேறியபோது ராமதாஸை  முதலில் நேரில் பார்த்தேன் . அன்று  பத்தோடு பதினொன்றாக  ஒரு  ரசிகனாக இருந்தேன் .கதைக்கமுடியவில்லை .ராமதாஸ் நாடகம் முடிந்து மேடையை விட்டிறங்கி வித்தியாலய வாசல் வரைக்கும் செல்லும் வரை நாமும் பின்னால் சென்று அவரை வழியனுப்பினோம். அது எம் பாடசாலைக் காலம் .
 
பின்னர் ரூபவாஹினிக்கு வந்தபின்னர் தான் அவருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்தது .பொன் மாலைப் பொழுது "கசட் " டை வாரம் தோறும் கொண்டுவார் .ரூபவாஹினி வரவேற்பு மண்டபம் , வர்த்தகப் பிரிவு என்பன அவரின் நினைவுகளைச்  சுமக்கும்.
 
மலையோரம் வீசும் காற்று தொலைக்காட்சி தொடர் நாடக ஒளிப்பதிவில் நான் உதவித் தயாரிப்பாளர் . ஹட்டன்- " டின் சின்" பெருந்தோட்டப்  பயிற்சி மண்டபத்தில்  ஒளிப்பதிவுக் குழுவினர் ,கலைஞர்கள் தங்கியிருந்தோம்  . ராம்தாஸ் அண்ணரின் நகைச்சுவைகளும் அவர்  
நடித்த திரைப்படங்களின் ஒளிப்பதிவின்போது ஏற்படட சுவையான அனுபவங்களும் இரவில் அங்கு தங்கியிருந்த கலைஞர்களை மகிழ்ச்சியில் குளிக்க  வைத்தன . 
 
பெருநாள் ஒளிபரப்பு ஒன்றிற்கு விளம்பர அனுசரணையுடன்  ஒரு தொலைக்காடசி நாடகம் தருவதாக ராம் உறுதியளித்திருந்தார் .
 
ஆனால் அதனைத் தருவதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது . பணிப்பாளராக இருந்த திரு விஸ்வநாதன்  
-"ராம்தாஸிடம் ஒரு பிரதி  இருக் கிறது . நகைச்சுவை நாட கம் தான் . ஏற்கனவே ஒதுக்கப்பட்ட் நேரம் உள்ளது .அதனை விடவும்  முடியாது . செய்கிறீர்களா ?  .".என்று கேட்டுக் கொண்டார்.
 
பொதுவாகவே அந்நாளில் ஒரு அரை மணி நேர தொலைக்காட் நாடகத்திற்கு -ஒளிப்பதிவுக்கு - ஐந்து  நாட்கள்  சராசரி தேவைப்படும் . ஆனால் கமரா -சாதனங்கள் வழங்கற்  பிரிவில் அந்தளவு நாட்களுக்கு கமரா இருக்கவில்லை.  மூன்று நாட்களே இருந்தன.
 
ராம்தாஸ் சொன்னார். "நீங்கள் book  பண்ணுங்கள் .நான் செய்து  தருகிறேன் " என்று. 
 
ரூபவாஹினியில் Programme budget (Drama) அனுமதிக்கு  பிரதியையும் இணைத்தல்  வேண்டும் என்ற வழமையிருந்தது. .
 
ராம்தாஸ் பிரதியைத் தரவேயில்லை . அதனால் அனுமதிக்கு தாமதாயிற்று .நிதிப்பிரிவில் உள்ளவர்களுக்கு  தமிழ் மொழி விளங்காததால் - அவர்களைச் சமாளிப்பது சுலபமாக  இருந்தது . எப்படியும் பிரதியை ஒளிப்பதிவுக்கு முன் தந்துவிடுவேன் -என்ற  உறுதியுடன் அனுமதியைப் பெற்றுவிடடேன் . அப்போதான் செலவுக்கான முற்பணத்தைப் பெறமுடியும் .
 
ராம்தாஸ் - பிரதியைத் தந்தது ஒளிப்பதிவு ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னராகும் .
 
நான் "டென்சனாக " இருந்தாலும் அவர்  வழமைபோலவே எவ்விதமான குழப்பமுமில்லாமல் இருந்தார் .
 
 
ஆயினும் Location survey  விடயங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் யோசிக்கவேண்டாம் என்றும் தான் எல்லாம் பார்த்துள்ளதாகவும் சொல்லியிருந்தார் . எனினும் நான் இயக்குனர் என்ற வகையில் முதல் நாள் இரவில் தமது வாகனத்தில் கூட்டிச்சென்று காட்டினார் .
 
இவருடன் அதில் நடித்தவர்கள் உபாலி செல்வசேகரன் விஜயாள் பீட்டர் ,ஸ்ரீதர் ,நிலாமதி  ,ஒரு பாம்பு .
 
ஒரு பாம்புக்காக மூன்று பாம்புகள் நடிக்கவேண்டியிருந்தன.ஏனெனில் ஒளி வெளிச்சம் , எமது  தயாரிப்பு வேலைகளின் சத்தம் என்பவற்றில் பாம்பு களைத்துவிடும்..கோபம் வந்து பலமாய்ச் சீறும் இரவில் பாம்பு "சீன் "எடுப்பதால் அடுத்த இரண்டு வீடுகளுக்கு கேட்கும் . ஒளிப்பதிவாளர் , ஏனையவரளுடன்  நானும் தளர்ந்திடுவேன் .செய்து முடித்து "எடிட் பண்ணி" ம்யூஸிக்  எல்லாம் போட்டு எப்போ முடிக்கப் போகிறேன் என்று ...
 
 அவரது வலது  கரமான  உபாலி கூடத்  தளர்ந்து போய் விடுவார் .ராம் தளரமாடடார் . அவரில் எந்தவிதமான "சுருதி " மாற்றமும் இருக்காது 
 
"வரதா ..இந்த Field இல எத்தனையோ பாம்பைக் கண்டவன்  .நாளைக்கு  களணியில சிங்களப் படங்களுக்குப் பாம்பு  மிருகம் கொடுக்கறவன் ஒருத்தன் இருக்கான் .அவனிடம் காலையில போய் கூட்டி வாறேன் " என்று சொன்னபடியே நேரம் சற்றுப் பிந்தினாலும் பாம்புடனும் பாம்புக்கு காரானுடனும் வந்திறங்கினார் ராம் அண்ணர் .
 
கலைஞர்களுக்கான உணவு சிற்றுண்டியை விட பாம்புரிமையாளரின் " முட்டைத் தொல்லை " (பாம்புக்கு உணவு) ஒரு புது அனுபவம் .
 
ராம்தாஸ் அண்ணருக்கு இந்த ஒளிப்பதிவுடன் வேறு பல அலுவல்களுமிருந்தன. இலங்கை  வானொலி விளம்பர  நிகழ்ச்சிகள் ரூபவாஹினியின் விளம்பர நிகழ்ச்சிகள் - என்பன அவை .
 
அவற்றுக்கு மத்தியிலும் இந்த ஒளிப்பதிவில் சொன்ன நேரத்துக்கு வந்து செய்து தந்துவிடுவார் .
 
இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் - பிரதியை ஒருதரம் பார்ப்பார் ; அதிலுள்ள (அவரே எழுதிய) கதை வசனத்தை 
அவர் சொல்லாமல் தமக்கு வந்ததை ஒளிப்பதிவின்போது சொன்னாலும் -அதனையே வேறு Takes தடவைகள் எடுக்கும்போதும் சொற்கள் ஒழுங்கு மாறாமல் சொல்வர் .
 
நகைச்சுவையில் வசனங்கள் இப்படி ஒரே மாதிரியாகவே சொல்வது என்பது சிரமமான விடயமாகும் .நடிப்பவர்கள் ஒவ்வொரு கோணத்திலும் சொற்களின் ஒழுங்கை மாறி மாறிச் சொல்கையில் பின்னர் தொகுப்பின்போது மிகவும் சிரமப் படவேண்டியிருக்கும் . ராம் அண்ணருடன் இந்த விடயத்தில்  வேலை செய்வது சுலபமானதாகும் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.  
 
 
அவர் சொன்னது போலவே  மூன்று நாட்களில் ஒளிப்பதிவை முடித்தோம் இதற்கு அவரது பல்வகைமையான திரையனுபம் எனக்குத் துணையாக இருந்தது .   
 
 
 இந்த அவசரங்களில் ஓரு காடசியில் வீட்டினுள்ளே மூக்குக் கண்ணாடியுடனும் வெளியே கண்ணாடியில்லாமலும் காட்சியை எடுத்து  விட்டோம் .
 
எடிட்டிங் மேசையிலிருந்தபோதுதான் அது தெரிந்தது.
 
ராம் அண்ணருக்கு இதை நான் மறுநாள் சொன்னபோதும் அவர் "அப்படியா? அதுக்கு யோசிக்காதீங்க ...ஆட்கள் சிரிப்பிலேயே அதனைக் கவனிக்க மாட்டார்கள் " என்று சாதாரணமாகவே சொன்னார்.
 
ரசிகர்களை நன்க றிந்து வைத்த கலைஞர் அவர் .
 
அதனால் தான்   பல தசாப்தங்களாக தமக்கென்று ஒரு ரசிகர் கூடடத்தையே தமக்கென அவர் வைத்துக்கொள்ள முடிந்தது !
 
சுகவீனமுற்றிருந்த வேளையில் கூட  ஏதாவது கலைப்பணி செய்யவேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனிருந்தவர் அவர் !
 
நிம்மதியின் கரங்கள் அவரை நித்திய உறக்கத்தில் ஏந்தட்டும் !

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134024/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Marikar Ramdas-1

Marikar-Ramdas-2.jpg

1970 களில்.... கொடி கட்டிப் பறந்த கலைஜர்களில், மரிக்கார் ராமதாசும் ஒருவர். 
அன்னாரின் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்:..... .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 
கோமாளிகள்

இந்த பாட்டு நினைவு உள்ளதா மரைக்கார் ராமதாசின் சொந்தக் குரலில் பாடிய பாடல் தவில் அடிப்பது யார் தெரியுமா ? வி .எச் . அப்துல் ஹமீத் ( இன்று அவரின் பிறந்த தினம் ) இதில் ஜூவால் என்ற சொல் இப்போதும் பழக்கத்தில் உள்ள சொல் .... இந்த பாடல் நினைவு உள்ளவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள் நினைவில் நீங்காத இலங்கை சினிமா பாடல் .....

Posted by Subathiran Thambi on Dienstag, 12. April 2016

 

இந்த பாட்டு நினைவு உள்ளதா மரைக்கார் ராமதாசின் சொந்தக் குரலில் பாடிய பாடல் 
தவில் அடிப்பது யார் தெரியுமா ? வி .எச் . அப்துல் ஹமீத் ( இன்று அவரின் பிறந்த தினம் ) இதில் ஜூவால் என்ற சொல் இப்போதும் பழக்கத்தில் உள்ள சொல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.