Jump to content

தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் *


Recommended Posts

2009 மஏ 17,18ம் திகதிகள் மனசுடைந்து தொடர்ந்து சிந்தியும் சினந்தும் சிவந்த கண்களோடு 2009 மே மாத இறுதி ஜூன்மாத ஆரம்பங்களில் எழுதி முடித்த கவிதை.

1000 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப் படப்போகிற எனது கவிதைகளுள் இக்கவிதை முக்கியமானதாக இருக்கும்.

தோற்றுப் போனவர்களின் பாடல்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

*
எல்லா திசைகளில் இருந்தும்

எழுந்து அறைகிறது

வெற்றி பெற்றவர்களின் பாடல்.

பாடலின் உச்சம் எச்சிலாய்

எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும்

அவர்கள் அஞ்சவே செய்வார்கள்.

ஏனெனா?

அவர்களிடம்

தர்மத்தின் கவசம் இல்லையே..

எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில்

துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல

தோற்றுப் போன எங்களுக்கும்

பாடல்கள் உள்ளன.

உரு மறைந்த போராளிகள் போன்ற

எங்கள் பாடல்களை

வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம்.

காவிய பிரதிக்கிணைகள் பல

புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது.

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

செல்வத்தைத் தேய்க்கும் படை என்று

சொல்லப் பட்டுள்ளதே

தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற

மாகாவியங்களில்

முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன.

காலம்தோறும் தோற்றுப்போன நீதியில் இருந்தே

புதிய வரலாறு ஊற்றெடுத்திருக்கிறது.

நாங்கள் இன்று தோற்றுப் போனவர்கள்.

இந்த நாட்க்களை

அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

தாராளமாக எலும்புத்துண்டுகளை வீசியபடி.

அவர்கள் போதையும் உற்சாகமும்

அச்சம் தருகிறது.

இரவு எந்த முகாமில் இருந்து

விசாரணைக்காக தமிழிச்சிகளை

இழுத்துச் செல்லப் போகிறார்களோ.

அல்லது ஒரு வேடிக்கைக்காக

எந்தக் கடலில் இந்திய தமிழர்களைச்

சுடப் போகிறார்களோ.

நாங்கள் அடக்கியே வாசிக்கிறோம்.

ஒன்பது முகத்தது இராவணனல்ல.

ஐந்து முகத்தது முருகனல்ல.

மூன்று முகத்தது ஒருபோதும் பிரம்மா அல்ல.

நாங்கள் வடக்குக் கிழக்காக

இருபுறமும் பல முகங்களைக் கொண்ட

அர்த்த நாரீஸ்வரர்கள்.

இதில் எந்த முகம் குறைந்தாலும்

அது நாங்களல்ல.

தேர்ந்தெடுத்தாலும்கூட தப்பாகிவிடும்.

சிறைநீங்கி எங்கள் மக்களும்

புத்தளத்துக்கு விரட்டப்பட்ட

முஸ்லிம் சகோதரர்களும்

வீடு திரும்பவேணும்

ஒரு புதிய சகாப்தத்தைப் பிரசவிப்பதற்க்காக.

2

வென்றவர்களின் பாடல்கள் தளர்கிறது. அவர்கள் இப்பவே களைத்துப் போனார்கள்.

ஏனெனில் அதர்மம் ஒரு நோய்க்கிருமி.

எங்களிடம் தின்னக் கூடிதை எல்லாம்

தின்று விட்டார்கள்.

இனி ஒருவரை ஒருவர் தின்பார்கள்.

சுண்ணாம்பு மஞ்சளைச் குங்க்மமாக்குமாப்போல

சுயவிமர்சனம் தோல்வியை மருந்தாக்குமாம்.

எங்கள் முடக்கும் நோகளுக்கான மருந்து.

அதுதான் எங்களுக்கிருக்கிற ஒரே தெரிவு.

சுயவிமர்சனத்தால் தோல்விகளுக்கு மந்திரத்தன்மையாம்.

நம்மைச் சுற்றி நாமும் சேர்ந்து

எழுப்பிய சுவர்கள்போய் எதிரியைச் சூழுமாம்.

பெயர்ந்த புலம் ஆகாசம்.

களம் மட்டுமே நிலம்.

புத்திசாலியின் கோட்டை

எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து

ஆகாசத்துள் உயர்கிறது.

தோற்றவர்களோ இரத்தத்திலும் சேற்றிலும் குல தெய்வங்களைத் தேடுகிறார்கள்.

அவர்கள் முள்ளி வாய்க்காலில்

எரி நட்சதிரமான தீபனைப் போன்ற

கருப்ப்சாமியை காத்தவராயனை

மதுரைவீரனை கண்டெடுப்பார்கள்.

இது புதிய குலதெய்வங்களின் காலம்

பால்வதையுண்ட பெண்களின் கோபம்

அம்மன்களாய் அவதரிக்கும்.

எரிந்த காடு துளிர்ப்பதுபோல

அடங்கிய வாசிபாய் நிகழ்கிறது என் பாடல்.

ஏனேனில் முதலில் நாம் வீடு சேர்ந்தாகவேண்டும்.

இரண்டாவதகவும் மூன்றாவதாகவும்கூட

நாம் வீடுபோய்ச் சேர்ந்தாக வேண்டும்.

3

எரிக்கப்பட்ட காடுநாம்.

ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது

எஞ்சிய வேர்களில் இருந்து.

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்

தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்

இல்லம் மீழ்தலாய்

மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்

சுதந்திர விருப்பாய்

தொடரும்மெம் பாடல்.

இது என் சொந்தப் பாடலல்ல என்பதை

நாழைய விமர்சகன் துப்பறிந்திடலாம்.

உஸ்…!

தேம்ஸ் நதிக் கரைகளில்

இலையுதிர்ந்த செறி மரங்கள்

ஒத்திகை பார்க்கும்

வசந்தக் கனவுப் பாடலை

சுட்டே நான் இப் பாடலைப் புனைக்கிறேன்.

4

கலங்காதே தாய் மண்ணே.

வடக்குக் கிழக்காய் வீழ்ந்து கிடக்கிற

உன்னைக் காக்க

கள பலியான நம் பெண்களின் மீது

சிங்கள பைலா பாடியும் ஆடியும்

பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்

உடைந்து போகாமல்

நாளைய வழ்வின் பரணியையே பாடுக மனமே.

எரிந்த வேர்களிலும் உயிர்ப்பை

சேர்க்கிற பாடல் அது.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்

எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது.

ஆதலினால் இந்தக்

கருமேகச் சாம்பல் வெளியில் இனி

வானவிலாய் அரும் பென்று

பல் பூக்களை அழைக்கும்

பட்டாம் பூச்சிகளின் பாடலையே பாடுக மனமே.

உறவுகளின் ஓலங்கள் அமுங்க

இரங்கி ஒலிக்கும்

தோழ தோழியரின் முரசுகளே

இனி வாழ்வின் பரணியை இசையுங்கள்.

அம்மா

ஈழத்து மண்ணும் நீரும் எடுத்து

இன்பப் பொழுதொன்றில்

நீயும் எந்தையும்

அழகுற என்னை வனைந்தீர்களே.

இதோ என் ஐம்பூதங்களால்

உனக்கு வனைவேன் ஒர் அரண்.

உன்னை உதைக்கிற

கால்களை சபிக்காமல்

என்ன மசிருக்கு இந்த பாடல்.

5

சிதறிக் காட்டினுள் ஓடிப் பதுங்காமல்

மாயக் குழலூதி பின்னே

ஆற்றுக்குச் சென்ற எலிகளின் கதையில்

குழந்தைகளை இழந்த

ஹம்லின் நகரின் ஒப்பாரி

என் தாய் மண் எங்கும் கேட்கிறதே

என் தளரா நெஞ்சும் உடைகிறதே.

அல்லல் படும் மக்கள்

ஆற்றாது அழுத கண்ணீரின்முன்

எது நிலைக்கும்?

துளிர்க்கும் விடுதலைக் கனவைத் தவிர

எது நிலைக்கும்?

இன்றைய தேசங்கள்

முன்னைய சாம்ராச்சியங்களின் குப்பை மேட்டில்

மனிதர்களால் கட்டப் பட்டவை.

இங்கு ஆயிரம் வருசத்து எல்லைகள்

எதுவும் இல்லை.

இந்த தேசங்கள் சிலதின் புதைகுழியில்

நாழைய தேசங்கள் முழைக்கும்.

தன் மக்களை மண்ணிலும் கடலிலும்

வேட்டையாடும் தேசங்களுக்கு ஐயோ.

தன் மக்கள் மண்ணிலும் கடலிலும்

வேட்டையாடப் படுகையில்

பிடில் வாசிக்கும் தேசங்களுக்கும் ஐயோ.

இன்றும் உங்களுக்குச் சந்தர்ப்பம் உள்ளது.

நாளை பசித்த செம் பூதங்கள்

இந்துக் கடலிலும் கரைகளிலும் எழும்.

சின்ன மனிதர்கள்தானே என

சூழப் பகை வளர்ப்பவருற்கு ஐயோ

அவர்களோ அச்சப்பட்ட சிறியோர் கூடிக்

கட்டிப் போட்ட கலிவர் போன்றவர்.

6

நீதியற்ற வெற்றியில்

களி கொண்ட வீடுகளில்

நாளை ஒப்பாரி எழும்.

ஆனால் வெண்புறாக்களாய்க்

கொல்லப் படுபவர்

புலம்பி அழுத தெருக்களில்

நாளை குதூகலம் நிறையும்.

தீப்பட்ட இரும்பென்

கண்கள் சிவந்தேன்

சபித்துப் பாடவே வந்தேன்.

முகமூடிகளும் ஒப்பனையுமற்ற

உருத்த்ர தாண்டவப் பாடலிது.

என் தமிழின் மீதும்

என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு

நான் அறம் பாடுகிறேன்.

நான் எனது சமரசங்களிலாத

சத்தியதின் பெயரால் சபிக்கிறேன்

எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே

உங்களுக்கு ஐயோ.

தர்மத்தின் சேனையே

என்னை களபலியாக எடுத்துக்கொள்.

தர்ம தேவதையே

எப்பவுமே எதிரிக்கும் போராளிக்கும்

பணியாத தலை பணிந்து

உன்னை பாடித் தொழுதிரந்தேன்.

இனக் கொலைகளுக்குத் தண்டனை கொடு.

கொன்றவர்கள்,

கத்தி கொடுத்தவர்கள்

தடுக்காதவர்கள்

தடுத்தவரைத் தடுத்தவர்கள் மீதெல்லாம்

தர்ம சங்காரம்

ஊழித் தீயாய் இறங்கட்டும்.

7

ஆதித் தாயே கலங்காதே,

இனியும் தோற்றுப்போக

எங்கள் வரலாறு

முள்ளிவாய்க்கலில் கட்டிய

மணல் கோட்டையல்ல.

அது வட கிழக்கு மக்களின் வாழும் ஆசை.

மடியாத கனவுகள்

உன் கூப்பிட்ட குரலுக்கு

மெல்போணில் இருந்து

ரொறன்ரோ வரைக்கும்

ஏழு சமுத்திரங்களிலும்

தமிழர்கள் விழிக்கின்றார். .

உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும்

உனது விடுதலைக் கனவுதான் தாயே.

8

சூழும் வெட்டு முள் வேலிகள் அதிர

பகலில் எங்கள் இளைஞரின் அலறலும்

இரவுகள்தோறும் இழுத்துச் செலப் படுகிற

எங்கள் பெண்களின் ஓலமும்

உயிரை அறுக்குது.

சிங்களப் பயங்கரம் தாளாத முத்துக்குமரனாய்

தமிழகம் தீக்குளிக்கையில்,

இனக்கொலையின் சாட்சியங்களை

உலக மன்றுக்கு

சிங்கள பத்திரிகையாளரே கடத்திச் செல்கயில்,

ஏன் ஏன் எங்கள் தாயாதிகள்

நாடு நாட்டாய் சென்று

இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கினர்?

இந்தக் கொடுமையை எங்குபோய் உரைப்பேன்..

இந்தக் கயமையை எங்கனம் செரிப்பேன்.

“அவர் அறியாத்தே செய்யுன்னதன. அவர்க்கு மாப்பு நல்குக.”

9

மொழியில் வேரூன்றி

நினைவுகளில் படர்ந்து

கனவுகளில் வாழ்கிற

புலம்பெயர்ந்த தமிழன்நான். இனி ஒரு இணையச் சொடுக்கில்

கோடி கோடியாய்

நம் கைகள் பெருகி உயர்கிற

நாட்க்கள் வருகுது.

வாழ்த்தாய் எழுக

நாழைய கவிஞரின் பாடல்கள்.

நான் இன்றைப் பாடும் நேற்றைய கவிஞன்

நாளையைப் பாடும் இன்றைய கவிஞர்காள்

எங்கள் அரசன் கட்டியதென்பதால்

கடற்கரைஓரம் இடிந்து கிடக்கும்

பிழைபடக் கட்டிய

புதை மணல் கோட்டையை

அதன் பிழையோடு

மீழக் கட்டிக் குடிபுகும் அரசியல்

எந்த வகையில் விடுதலையாகும்?.

தவறிய வழியில்

தொடர்ந்து செல்வோம் என்கிற விடுதலை

எந்த வகையில் அரசியலாகும்?

முஸ்லிம் என்று

புத்தளக் களரில் வீசப்பட்ட நம்

அகதிகளுடைய முன்றில்களிலும்

தமிழர் என்று வதைக்கப் பட்டு

வன்னி விழிம்பில் சிறைபட்டிருப்பவர்

வாசல்களிலும்

கோழி காகத்தை முந்தி நான் சென்று

குடு குடுப்பையை ஒலிப்பதைக் கேளீர்.

இது கோவில் மணியும் பள்ளிவாசலின் பாங்கும்

தேவாலயத்துப் பூசைப் பாடலும்

மீண்டும் ஒலிக்க

நல்லகாலம் வருகுது வருகுது என்று

குறி சொல்லிப் பாடுகிற

கடைச் சாமத்தின் பாடல்

இனி பல்லியம் இசைத்தபடி

விடியலின் கவிஞர்கள் வருவார்.

10

சிறைப்பட்ட என் தாயே

தப்பி ஓடலில்லையம்மா.

ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு

பின் போடப் பட்ட விடுதலைப் போராட்டம்.

நாம் உயிர்த்தெழுகிற பாடல் இதுதான்.

நாங்களும் வாழ்வோம்.

தமிழர் என்பதால் கால் நூற்றாண்டாய்

சேதுக் கடலில்

நாய்கள் போலச் சுடப்படுகிற

நாதியற்ற இந்தியர்களையும் காக்கவேணும்.

அன்னை மண்ணே

விடியல்கள் தோறும்

தொடைகளில் இரத்தம் சிந்தச் சிந்த

மரங்களின்கீழே குந்தியிருந்து

மூண்டெரிகிற நம் பெண்களுடைய

அன்னை மண்ணே,

எதிரிகளாலும்

இன்னும் திருத்தாத தவறுகளாலும்

தோற்கடிக்கப் பட்டு

வெட்டு முள்வேலிச் சிறைகளுள் வீழ்ந்த

அன்னை மண்ணே.

இனக் கொலை வெறியோடு

எம்மைத் துரத்தும்

சிங்கள எதிரியை மட்டுமல்ல

குறித்துக் கொள்

தப்பி ஓடிய நம் மக்களைத் தடுத்தவர்

எம் மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர்

நம் அண்ணன் தம்பி ஆயினும் சபிக்கின்றேன்

உலகின் எந்த மூலையில் ஒழித்தாலும் ஐயோ.

என் மக்களுள்ளிருந்து ஊற்றெடுக்காத

அதிகாரங்களை நிராகரிக்கிறது என் பாடல். .

கழைத்தும் பசித்தும் தாகித்தும் இருக்கிற

புண்பட்ட தாயே

முதலில் நீ வீடு திரும்ப வேண்டும்.

உனக்கு இப்ப என்ன வேண்டும் என்பதை

ஆகாயத்தில் இருக்கிற நாங்களல்ல

களத்தின் சவால்களை எதிர்கொள்ளுகிற நீ மட்டுமே அறிவாய்.

நாளை என்ன வேண்டும் என்பதையும்

நாளை நீதான் காணுவாய்.

தாயே உன்னைப் பீடித்த பிசாசுகள் அல்ல நாம்

இனி என்றும் நாங்கள் உனது கை

அற்புத விளக்குகள் மட்டுமே.

11

நினைவிருக்கிறதா தாயே

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

இன்றும் அப்பாடலை பாடுக என் மனசே.

20 நவம்பர் 2009

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.