Jump to content

லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை


Recommended Posts

லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை

 

 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது.

ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது.

இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாது மூழ்குவது குறித்து கூறும்போது, "முகம் தெரியாதவர்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு மனம் விட்டு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு முகநூலைப் பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்களின் அருகாமை இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்.

தாய், தந்தை இருவருமே வேலைக்கு செல்வதால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வரும் பிள்ளைகளிடம் பேசுவதற்கு வீட்டில் யாரும் இருப்பதில்லை. முன்பு போல் தாத்தா பாட்டியுடன் சேர்ந்திருக்கும் கூட்டுக் குடும்ப அமைப்பும் தற்போது இல்லை. சில வீடுகளில் அம்மா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாலும் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தவுடன் டியூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் என்று எங்காவது அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் வீடியோ கேம்ஸ், லேப்டாப், மொபைல் ஃபோன் போன்ற நவீன பொருட்களை வாங்கி தந்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர தன் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது எவ்வளவு முக்கியம் என்று உண்ர்வதில்லை. பிள்ளைகளின் நெருங்கிய நண்பர்களாக முதலில் இருக்க வேண்டியது பெற்றோர்களே. அப்படி இருந்தால் பிள்ளைகள் தன்னை சுற்றி நடப்பதையும் அவர்கள் மனதில் இருப்பதை பெற்றவர்களிடமே மனம் திறந்து பகிர்ந்துகொள்வார்கள்.

ஆனால், இங்கு பல பெற்றோர்கள் குறிப்பாக அப்பாக்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. இப்படிபட்ட சூழலே பிள்ளைகள் முகம் தெரியாதவர்களிடமும் நட்பு ஏற்படுத்திக்கொள்ள காரணமாக அமைகிறது. அதனால் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர வேண்டும்" என்றார் மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி.

ஃபேஸ்புக்கில் வலம் வரும் இளம் தலைமுறையினர் - குறிப்பாக இளம்பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய அம்சங்கள் என அவர் பட்டியலிட்ட 10 அம்சங்கள்:

* தூங்குவது, சாப்பிடுவதற்கு என நேரம் ஒதுக்குவது போல சமூக வலைதளங்களில் இயங்குவதற்கு என்றும் தனியாக ஒரு நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்துக்கு மேல் சமூக வலைதளங்களில் இருக்க கூடாது. இதை கடைப்பிடித்தால் ஃபேஸ்புக்குக்கு அடிமையாவதை தடுக்கலாம். மேலும் ஃபேஸ்புக்கிலேயே பல மணி நேரம் வீணாவதையும் தடுக்கலாம்.

* ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் தேவையில்லாமல் நேரம் செலவழிப்பதுடன் பாதிக்கப்படுவது நமது உடல் நிலை, மனநிலையும்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

* சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குடும்பத்துடன் அல்லது நண்பர்களோடு செலவழித்தால் அதிக மகிழ்ச்சியும் உறவுகளுடனான நெருக்கமும் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் லைக்குகளை விட குடும்பத்தில் கிடைக்கும் கமெண்ட்ஸ் உங்களை வளர்க்க உதவும். இதன் மூலம் வீட்டில் உங்களுக்கு மதிப்பும் கூடும்.

* நேரடியாகத் தெரிந்தவர்களிடம் மட்டும் சாட்டிங் செய்யுங்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்வது உங்கள் தனிப்பட்ட விஷயங்களை சாட்டிங்கில் திறந்த புத்தகம் போல பகிர வேண்டாம்.

* நட்பு பட்டியலில் அதிமானவர்களை காட்ட வேண்டும், அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் இல்லாதவர்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கவும் வேண்டாம்; அக்செப்ட் பண்ணவும் வேண்டாம். ஃபேக் ஐடி என்று தெரிந்தால் அதை தவிர்த்து விட வேண்டும்.

* ஃபேஸ்புக்கில் பெண்கள் நட்பு வட்டத்தில் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்வதை தவிருங்கள்.

* வாழ்க்கை முழுவதும் உடன் வரும் துணையை ஃபேஸ்புக்கில் தேட வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அப்படி அமைந்தாலும் நேரில் பார்த்து பேசி பழகி முடிவெடுங்கள்.

* ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன் பலமுறை பல நோக்கில் யோசிக்கவும். அதிக லைக் வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் எதிர்மறை விளைவுகளை யோசிக்காமல் புகைப்படங்களை பகிர வேண்டாம்.

* சமூக வலைதளங்கள் என்பது நமது முன்னேற்றத்துக்கு தேவைப்படும் ஒரு தொழில்நுட்பமாகவும், தகவல் பரிமாற்ற தளமாகவும் மட்டுமே பார்ப்போம். அது வாழ்க்கையில் ஒரு பங்குதான். அதுவே வாழ்க்கை இல்லை.

* தெரியாமல் அல்லது தெரிந்து செய்த தவறுகள் என்று வருந்த முடியாது. விளைவுகளை உடனே கொண்டு வரும் ஆபத்து நிறைந்தது இணையதளம். ஆனால் எது நடந்தாலும் வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு செல்லாமல் மீண்டு வருவதிலும் கவனம் தேவை.

rajamene_2925016a.jpg

மனநல ஆலோசகர் ராஜமீனாட்சி

http://tamil.thehindu.com/opinion/blogs/லைக்ஸ்-டூ-பேக்ஸ்-பேஸ்புக்-நண்பர்களுக்கு-10-ஆலோசனை/article8824299.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.