Jump to content

Germany Hamm ஆலயத் தேர்த்திருவிழாவில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Germany Hamm ஆலயத் தேர்த்திருவிழாவில் நடந்தது என்ன?

 

Link to comment
Share on other sites

குடி, கும்மாளம், நக்கல்கள், நையாண்டிகளுடன் ஹீரோவாக வலம் வரும் மக்கள் மத்தியில், சமூக சிந்தனையுடன் சில சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கும் துணிவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயத்தில் பக்தர்கள் அன்பர்கள் அடியார்கள் வருடா வருடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அலசியிருக்கின்றார். நல்ல விடயம் வரவேற்கத்தக்கது.

இப்படியான பிரச்சனைகளுக்கு  முதலாவது காரணம் ஆலய நிர்வாகத்தாலோ

அல்லது வேறு அமைப்புக்களாலோ எந்தவிதமான ஒழுங்குபடுத்தல் இல்லாமையே.

நிர்வாகம் இப்படியான பிரச்சனைகளைக் கண்டுகொள்ளும் என்று என்னால் நினைக்கமுடியவில்லை.

ஏனென்றால் அவர்களுக்கு தங்களுடைய நோக்கம் நிறைவேறினால் காணும் என்று இருப்பார்கள்.

மக்கள் அதிகம் வரவேண்டும். உண்டியல் நிறைய வேண்டும் மற்றதெல்லாம் அதன் பின்னரே. மக்கள் வரவேண்டும் என்பதற்காகவே திருவிழாத் திகதியை மாற்றும் நிர்வாகம் இருக்கும்போது யாம் என்ன செய்வது.
நானும் சாப்பாடு கொடுக்கும் இடம் வரை வந்துவிட்டு அங்கு திரண்டிருந்த கூட்டத்தையும் நெரிசலையும் கருத்தில் கொண்டு திரும்பிவிட்டேன்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thangam.jpg

மக்களுக்கு, ஓசி என்றால்.... அடிபடத்தான் செய்வார்கள். அது, எமது இனத்தில் மட்டுமல்ல... எல்லா இனத்திலும் உண்டு.
அதனைத்  தவிர்ப்பதற்கு, ஒரே வழி... கோவில் பிரசாதத்தை, ஹம் அம்மன் கோவில் படத்துடன் உள்ள பெட்டிகளில்,  
பக்குவமாக பொதி செய்து.....  அதற்கு ஒரு விலையை நிர்ணயித்து, விற்கலாம். 
அந்த வருமானத்தில்...... "ஹம் அம்மனுக்கு, மனம் இருந்தால்...."  ஈழத்தில் பாதிக்கப் பட்ட  மக்களுக்கு எத்தனையோ உதவி செய்யலாம்.

ஒரு தனிப் பெண்ணாக.... போரின் மத்தியிலும், பல உதவிகளை அம் மக்களுக்கு...  உதவிகளை  செய்த, 
"தங்கம்மா அப்பாக் குட்டியால்......"  முடியும் என்றால்,  "ஹம் அம்மனாலும்" முடியும்.

மற்றவன் நம்மைப் பார்த்து... சிரிக்க முதல், திட்டமிட்ட ஒழுங்கமைப்பை  ஆலய நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது ஹம் அம்மனுக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து எம்மவர் கோவில்களுக்கும் பொருந்தும் (ஊரில் இருந்து காவப்பட்ட பிரச்சனைகளில் இவையும் அடங்கும்). வேல்ஸ் முருகன் ஆலயம்.. போன்ற நல்ல உயர்தர பராமரிப்பும்.. ஒழுக்கமும் உள்ள கோவில்களும் உள்ளன. அவற்றில் இருந்து எம்மவர்கள் பாடம் படிச்சுக் கொள்ள வேண்டும். எம் மக்களும் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்ளக் கூடாது. அந்தந்த இடத்துக்கு தர வேண்டிய மதிப்பு மரியாதையை அளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.