Jump to content

பதவி விலகினார் நைஜல் ஃபராஜ்


Recommended Posts


பதவி விலகினார் நைஜல் ஃபராஜ்
 

article_1467633630-g2vniso2.jpgஐக்கிய இராச்சியத்தின் தேசியவாதக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் பராஜ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு, முக்கியமான இருவரில் ஒருவரான பராஜ், அவ்வாறு விலகி இரு வாரங்களுக்குள், தனது கட்சித் தலைமையிலிருந்து விலகியுள்ளார்.

எப்போதுமே, முழுநேர அரசியல்வாதியாக இருப்பதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்த பராஜ், ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகியுள்ள நிலையில், அரசியல்வாதியாகத் தன்னால் அடையக்கூடியவற்றை, தான் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். "விலக வேண்டுமென்ற தரப்பு, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, எனது அரசியல் குறிக்கோள், அடையப்பட்டுவிட்டது" என அவர் தெரிவித்தார்.

தற்போதைய பிரதமரான டேவிட் கமரோன், பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பராஜ், ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமராக, விலக வேண்டும் என்ற தரப்பினை நீண்டகாலமாகப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவரே தெரிவுசெய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/176221/பதவ-வ-லக-ன-ர-ந-ஜல-ஃபர-ஜ-#sthash.j3tJc6Kd.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு நின்றவர்கள் ஒவ்வொருவரhக அரசியல் அரங்கில் இருந்து வெளியேறுகிறார்கள். இனிமேல்தான் பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் கோழைத்தனமாகப் பின்வாங்குகிறார்கள். இந்தவாக்கெடுப்பு பிரித்தானியாவில் கட்சிகளுக்கிடையில் குழப்பங்களையும் முதுகில் குத்தும் துரோகங்களையும் நிச்சயமற்ற தனமையையுமே வளர்த்து விட்டிருக்கின்றது.பிரிய வேண்டும் என்று விளம்பரப்படுத்திய ஊடகங்கள் அதன்பின்னால் உள்ள சிக்கல்களைச் சொல்லவில்லை. இப்பொழுதும் அவர்களுக்கு கட்சிகளுக்கிடையாலான குழப்பங்களால் செய்திப்பஞ்சம் இல்லை.இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும்1.2மில்லியன் மக்களையும் சேர்த்து 4.2 மில்லியன் மக்கள் பற்றிய முடிவு வராத சூழ்நிலையில் தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒற்றைச் சந்தை உரிமை வேண்டும் என்று பிரிட்டன் விரும்புகின்றது. ஜேர்மனியோ பிரித்தானிய மக்கள் தீர்ப்பை மதிக்கும் வேளையில் பிரித்தானியா ஐரோப்பாவில் செரிப் பழங்களைச் சும்மா பிடுங்க முடியாது. வியாபாரம் வேண்டுமெனில் ஐரோப்பிய மக்களின் சுதந்திர நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிறது.மொத்தத்தில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி  கதையாகி விட்டது.ஐரோப்பியர்களுக்கு எதிரான சிறு இனவாதப்போக்கும் ஆங்காங்கே காணப்படுகின்றது. ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.

http://www.dailymail.co.uk/news/article-3673558/It-s-annual-resignation-Internet-jokers-field-day-hilarious-memes-Nigel-Farage-stepping-Ukip-leader.html

'It's his annual resignation!' Internet jokers have a field day with hilarious memes over Nigel Farage stepping down as Ukip leader

Read more: http://www.dailymail.co.uk/news/article-3673558/It-s-annual-resignation-Internet-jokers-field-day-hilarious-memes-Nigel-Farage-stepping-Ukip-leader.html#ixzz4DSnEasSd 
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

எப்போதுமே, முழுநேர அரசியல்வாதியாக இருப்பதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்த பராஜ், ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகியுள்ள நிலையில், அரசியல்வாதியாகத் தன்னால் அடையக்கூடியவற்றை, தான் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். "விலக வேண்டுமென்ற தரப்பு, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, எனது அரசியல் குறிக்கோள், அடையப்பட்டுவிட்டது" என அவர் தெரிவித்தார்.

நல்லதொரு நொண்டிச்சாட்டு :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.