Jump to content

புனைவு என்னும் புதிர்: ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம்


Recommended Posts

புனைவு என்னும் புதிர்: ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம்

 

 
ஷோபாசக்தி
ஷோபாசக்தி

கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது.

ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகின்றன.

ஷோபாசக்தியின் ‘வெள்ளிக்கிழமை’ என்ற கதையில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றுக்கொன்று நேரடியாய்த் தொடர்பற்ற சம்பவங்களை அடுக்குகிறார். அதன் மூலம், ஒரு தேசத்தின் அவலக் கதையை இன்னொரு தேசத்தில் வைத்து, சொல்கிற விதத்தில் தேசங்களின் எல்லைகளைக் கலைத்து ஒட்டுமொத்த மானுடத்துக்கான கலையாக்கிவிடுகிறார்.

கலைகளின் தாயகம் எனப் போற்றப்படும் ஃபிரான்ஸில், லா சப்பல் மெத்ரோ ரயில் நிலைய நடைமேடையில், வயலின் வாசிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் கையேந்தாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாள் ஏதோ ஒரு வெளிநாட்டுப் பெண். அவளுக்கு அன்னா என்று பெயர் வைக்கிறார்.

அன்னா கரீனினா நாடகத்துக்குச் செல்ல நண்பரின் வருகைக்காகக் காத்திருக்கிறார் ஆசிரியர். ஏதோ ஒரு நாடகம் என்றில்லாமல் ஏன் அதை அன்னா கரீனினாவாக வைக்கிறார் என்பதில் இருக்கிறது, டால்ஸ்டாய் நாவலின் இறுதிக்கும் இந்தக் கதையின் முடிவுக்குமான இணைப்புக் கண்ணி. இரண்டிலும் பிரதான பாத்திரங்கள் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்கின்றன. இது தற்செயல் ஒற்றுமை இல்லை; வெளிப்படுத்துதலின் விசேஷம்.

நாடகத்துக்குச் செல்ல, கூட வரவிருக்கிற நண்பரை டெலோ சாம்சன் என்று குறிப்பிடுகிறார். அவரைப் பற்றிய விவரணையில், அன்னா கரீனினா நாவலில் சொல்லப்படுவதை மேற்கோள் காட்டி அதைப் போல எல்லாவற்றையும் மறுக்க மட்டுமே தெரிந்தவர் என்றும் கூறுகிறார்.

அவர் இந்தக் கதையைப் படித்துவிட்டு, ‘நீங்கள் எப்படி அந்த மனுசனைக் கொலை செய்ய ஏலும்’ என்று கேட்கிறார். அவர் பெயர் டெலோ சாம்ஸன் என்பதையும் கவனமாக இணைத்துப் படிக்கையில், கருத்து மாறுபாடு காரணமாக டெலோ என்கிற ஒட்டுமொத்த இயக்கமே, அதன் தலைவர்கள் மட்டுமன்றி, ஒன்றுமறியாப் பொடியன்கள் உட்பட முழுவதுமாகப் புலிகளால் அழித்து ஒழிக்கப்பட்ட 80களின் வரலாறு நினைவில் எழுவதைத் தவிர்க்க முடியாது.

கதை தொடங்குவது, மேலிருக்கும் லா சப்பல் மெத்ரோவில். அங்கிருந்து பார்த்தால் கீழே வன்னியோ மன்னாரோ எனத் தொற்றமளிக்கும் வகையில் தமிழர்களாய்த் தெரியும் பாரீசின் லா சப்பல் கடைவீதி. வெள்ளிக்கிழமை எனப் பெயரிடப்பட்ட நலிந்த உருக்கொண்ட அகதி வெவ்வேறு மனிதர்களிடம் பிச்சை கேட்கிறார்.

எவரிடமும் கையேந்தாமல் வயலின் வாசித்தபடி நடைமேடையில் அமர்ந்திருக்கும் ஐரோப்பியப் பெண்ணான அன்னாவுக்கு எவரெவரோ உதவி செய்வதையும் வெள்ளிக்கிழமை பிச்சை கேட்கிற அனைவரும் இலங்கைத் தமிழர்களாக மட்டுமே இருப்பதையும் இணைத்துப் பார்க்கிற வாசகனுக்கு, யதார்த்தத்தின் இன்னொரு அடுக்கு வெளிப்படக்கூடும்.

இப்படிப் பல இழைகளை இணைத்து ஒரு கதையைச் சொல்லிச் சென்றாலும் எந்த இடத்திலும் கதைச் சம்பவங்களில் வாசகனை நெகிழவைக்கும் அதீத நாடகீயம் இல்லை.

பிச்சை எடுக்கிற மனிதர், எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி எப்படி அணுகுகிறார் என்பதையும் அவர்கள் ஒவ்வொருவராலும் அவர் எப்படி நடத்தப்படுகிறார் என்பதையும் பச்சாபத்தை உருவாக்கும் விதமாகவன்றி, பகடியாக விவரித்துச் செல்கிறார்.

கதையின் ஆதாரக் கேள்வி. ‘வழியில்லாதவன், பிச்சை எடுக்கிறவன், குடிகாரன் சாகத்தான் வேணுமா’.

மெத்ரோ முன் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வெள்ளிக்கிழமைக்கு ஐரோப்பிய அன்னா சாட்சியாக இருப்பதும் அடுத்த வாரம் எதிர்ப்படும் வெள்ளிக்கிழமையை இன்னொரு நபராக எடுத்துக்கொண்டு அதே அன்னா புன்னகைப்பதும் இலக்கிய வெளிப்பாட்டின் எல்லைகள் வாசக மன விரிவுக்கேற்ப விஸ்தரிக்கப்படக்கூடியவை என்பதற்கான சாட்சியம்.

http://tamil.thehindu.com/general/literature/புனைவு-என்னும்-புதிர்-ஷோபா-சக்தி-வெள்ளிக்கிழமையின்-விசேஷம்/article8803760.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.