Jump to content

மாணவர்கள் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்றுங்கள்:


Recommended Posts

மாணவர்கள் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்றுங்கள்:

 

புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களிடம் சி.வி.கோரிக்கை. - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம்

மாணவர்கள் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்றுங்கள்:

வடபகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது பகுதியிலிருந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும் ஓய்வு பெற்றமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப் படாமையினால் எமது மாணவர்கள் கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் பெறுவதில் இடர்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கணித , விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவம் இன்று காலை யாழ்.இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசலைகளில் நிலவிய தமிழ், புவியியல், பொருளியல், கணக்கீடு ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு 111 பேருக்கும், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவிய சிங்களம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு 8 பேருக்குமாக மொத்தமாக 119 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் 11.03.2016ல் வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 79 பேருக்கு (தமிழ் மொழி மூலம்) பட்டதாரி ஆசிரியர் நியமனம் இவ்வருடம் ஜூன் முதலாந் திகதி வழங்கப்பட்டது.

தற்போது மூன்றாம் கட்டமாக இன்று 01.07.2016 வடக்கு மாகாண பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரை நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்குப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீPழ் 315 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படுகின்றது.

கணிதம்     86
விஞ்ஞானம்    152
ஆங்கிலம்    77
மொத்தமாக 315

கடந்த காலங்களில் வடபகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது பகுதியிலிருந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும் ஓய்வு பெற்றமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப் படாமையினால் எமது மாணவர்கள் கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் பெறுவதில் இடர்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களது இந்த இடரினைப் போக்கும் முகமாகத் தற்போது நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களுக்கு கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதனூடாக எதிர் காலத்தில் சிறந்த கணித, விஞ்ஞான, ஆங்கில துறையில் வல்லுனர்களை உருவாக்குவதுடன் எமது பகுதிக்கும் நாட்டுக்கும் தேவையான விரிவுரையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்களைப் பெற்றுக் கொள்ள நீங்கள் வழி அமைப்பீர்கள்.

அதுமட்டுமல்ல. எமது கல்லூரிகளின் சாதனைகள் அண்மைக் காலமாகச் சரியத் தொடங்கியுள்ளன. அவற்றைத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு. மேலும் ஆங்கிலம் கற்பிப்போர் முறையாக, உரியவாறு, பிழையின்றி ஆங்கில மொழியைப் பேசக் கற்றுக் கொடுத்தல் அவசியம்.

பிரித்தானியர் காலத்தில் ஆங்கிலத்தை முறையாகவும் அழகாகவும் பேசியதாகக் கருதப்பட்டவர் ஸ்ரீநிவாச சாஸ்திரி என்ற தமிழர் ஒருவரே. ஆங்கில வெண்கலப் பேச்சாளராகக் கருதப்பட்டார். நீங்கள் ஆங்கிலத்தை முறையாக உச்சரித்தால்த்தான் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்பதை மறவாதீர்கள்.

தற்போது க.பொ.த (உயர் தர) பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் 18 வீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். இனிவருங் காலங்களில் இதனை 40 வீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 எனவே மாணவர்களுக்குக் குறித்த பாடத்துறைகளில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான கற்பித்தல், கற்றல் கருவிகளைப் பயன்படுத்தி கற்பிப்பதனூடாக இவ் அடைவுமட்டத்தை விரைவில் எட்டமுடியும் என்று நம்புகின்றோம்.

இன்று எம் இளைஞர்களின் மனம் ஒருநிலையில் இல்லை. வெளிநாடு செல்வதா வேண்டாமா என்பதே பலரின் மனதில் எழும் எண்ணம். இவ்வாறான எண்ணத்துடன் வாழ்வதால் எம் மகக்ளுக்குச் சேவை புரிய உங்களுக்குக் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டிவரும். உங்கள் மனம் வேற்று நாட்டைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் எம் மாணவ மாணவியருக்குத்தான் அதன் பாதிப்பு தெரியவரும்.

உங்கள் பணியானது மகத்தானது. வருங்காலத் தலைவர்களை உருவாக்கும் பணி உங்களுடையது. எனவே இன்று பதவியேற்கும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உங்கள் பணிகளில் சிரத்தையையும், சிறந்த செயற்பாட்டையும், செய்தொழிலில் அக்கறையையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பலர் வேலையின்றி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள். வேலை கிடைத்துள்ளது.

அந்த அதிர்ஷ்டத்தை உதாசீனம் செய்யாது மாணவ சமுதாயம் உருமாற உன்னத நிலையடைய, உலகில் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்ற நீங்கள் முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133656/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.