Jump to content

அவுஸ்திரேலிய கிரிக்கெட் கல்வியகத்தின் ஆலோசகராக இலங்கையின் சமரவீர


Recommended Posts

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக இலங்­கையின் சம­ர­வீர
 

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்கள் சில­ருக்கு இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சம­ர­வீர துடுப்­பாட்ட பயிற்சி அளித்து வரு­கின்றார்.  அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி விரைவில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் திலான் அங்கு பயிற்சி அளித்து வரு­கின்றார். 

 

17728Thilan-samaraweera.jpgஅவர் உண்­மையில் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா செல்­ல­வில்லை. மாறாக அவுஸ்­தி­ரே­லிய தேசிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக குறு­கிய கால அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

 

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த கிரிக்கெட் கல்­வி­ய­கத்தில் அவர் ஆலோ­ச­க­ராக பணி­யாற்­றுவார். 

 

இக் காலப்­ப­கு­தியில் அவுஸ்­தி­ரே­லிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு திலான் சம­ர­வீர ஆலோ­ச­னை­களை வழங்­க­வுள்ளார்.

 

அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், ஜெக்சன் பேர்ட் ஆகி­யோ­ருக்கு ஆலோ­சனை வழங்கும் பணி­களை திலான் சம­ர­வீர ஏற்­க­னவே ஆரம்­பித்து நடத்­தி­ வ­ரு­கின்றார்.

 

‘‘பிறிஸ்­பேனில் அமைந்­துள்ள தேசிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்­துடன் இணைந்து நான் தற்­போது பணி­யாற்­று­கின்றேன். நான் சில டெஸ்ட் வீரர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்கி வரு­கின்றேன். அவர்கள் இங்கு பயிற்சி பெற வரு­கின்­றார்கள்’’ என திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

 

இலங்­கைக்கு செல்லும் அவுஸ்­தி­ரே­லிய அணி­யி­ன­ருடன் இலங்கை செல்லும் எண்ணம் இல்லை என மெல்­பர்னில் வாழ்ந்­து­வரும் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.  

 

இலங்­கையில் சுழல்­பந்­து­வீச்­சுக்கு சாத­க­மான ஆடு­க­ளங்­களின் தன்­மைக்கு அவுஸ்­தி­ரே­லிய வீரர்­களை பழக்­கப்­ப­டுத்­திக் ­கொள்ளும் வகையில் சுழற்சி ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இரண்டு ஆடு­க­ளங்­களை கிரிக்கெட் அவுட்ஸ்­ரே­லியா தயா­ரித்­துள்­ளது.

 

இந்த ஆடு­க­ளத்­தி­லேயே அவுஸ்­தி­ரே­லிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு திலான் சம­ர­வீர ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­கின்றார்.

 

தொழில்­நுட்­பத்­தி­ற­னுடன் துடுப்­பெ­டுத்­தாடும் ஆற்றல் கொண்ட திலான் சம­ர­வீர இலங்­கைக்­காக 81 டெஸ்ட் போட்டிகளில் 5,462 ஓட்டங்களைப் பெற்றதுடன் 14 சதங்களையும் குவித்துள்ளார்.

 

அத்துடன் 53 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்களுடன் 862 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17728#sthash.nDq4KnpA.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.